கிருபாவும், ஷாமும் ஆலப்புழா போட் ஹவுஸில் பலத்த அடி வாங்கி,. காரில் தட்டு தடுமாறி தமிழ்நாட்டிற்கு திரும்பும் போது கேரள எல்லையிலேயே ஷாம் மேற்கொண்டு பயணிக்க மனமின்றி
காரிலிருந்து இறங்கி விட்டான் .
'இல்ல பிரசன்னா இனிமேல அந்த பொம்பள மூஞ்சில என்னால முழிக்க முடியாது.அந்த ஊருக்கும் என்னால வர முடியாது. என்னை இங்கேயே இறக்கி விட்டுடு., இனிமே என் கவனம் சினிமா
மேல தான்" என்றான்.
பிரசன்னா ஷாமை இறக்கிவிட்டு அவன் மட்டுமே தனியாக வீட்டிற்கு திரும்பினான்.
வீட்டு வாசலில் அப்பா இருந்தார். ' டேய்ய் வீட்டுக்குள்ளே
போகாதே?'என்றார்.
'அப்பா"
'என்னடா இது.. ? என்ன பண்ணி வெச்சிருக்கே? நீ தானே
இது ?"
அவர் கையிலிருந்த போனில்., போட் ஹவுசில் அவனும், ஷாமும் அடி வாங்கி, ஜட்டியோடு
இருந்த வீடியோ வைரலாகி இருக்க.,
அடபாவிகளா?
'அய்யோ யார் செய்த வேலை இது? ' அவனுக்கு கண்கள்
இருண்டு போக., அவனிடமிருந்து கார் சாவி பிடுங்கப்பட்டது.
'எங்கே போணே? என்ன வேலை செஞ்சே? நாயே திருந்தவே
மாட்டியா? சங்கீதம் பாடற வாய்ல சாக்கடை குடிக்கிறியா? போடா வெளியே?'"
அவன் வீட்டை விட்டு துரத்தப்பட்டான்.
அய்யோ என் லைபே போச்சே,. மலையாளத்தானுங்க வேலை
காட்டிட்டானுங்களே., எல்லாம் அபற்ணாவுக்கு நன செஞ்ச பாவம் தான்..
அவன் போன் அடிக்க., சோர்வாக எடுத்தான். போனில்
அபர்ணா.
அவன் கண்கள் அழுதது. இவளை ஏமாற்ற வேண்டாம். பேசாமல்
கட்டிக் கொள்வோம்.
" அ.அபர்ணா..."
:"ஏய்ய் பிரசன்னா என்னடா வேலை பண்ணி வெச்சிருக்கே?"
"அ.அபர்ணா.. நான்.." அவன் திகைத்தான்.
"உன் ஜட்டி வீடியோ தாண்டா எல்லார் டைம் லைன்ல
இருக்கு.. கூட ஆக்டர் ஷாம்... அய்யோ ஏண்டா? நீ என்னடா சௌம்யாவை பண்ண பாத்தே?"
"......................"
"ஏய்ய்., ஒழுங்கா சொல்லு., அது சௌம்யா தங்கி
இருந்த போட் ஹவுஸா?'
"..............."
"நீ அவளை தொடனும்னு நினைச்சியா?'
"..அபர்ணா.."
"மழுப்பாத சொல்லு'
"அபர்ணா.. நீ தானே அவளை அசிங்கப்படுத்தனும்னு
சொன்னே?'
'வாயை
மூட்றா., அவளை அசிங்கபடுத்த சொன்னா., நீங்க ரெண்டு பேரும் தான்
அசிங்கப்பட்டு ஜட்டியோட நிக்கறீங்க? அவளைக்
காணோமே '
"........................"
"உன்னை யார்டா அலைஞ்சிட்டு அவ கிட்ட போவச்
சொன்னது..? நான் ஷாமை தானே அங்க போவச் சொன்னே? ராஸ்கல்., நீ ஏன்டா போனே"
" அபர்ணா...."
" சோ நீ ஒரு உமனைசர்.. லோபர்... அந்த ஷாமும் அவ
கிட்ட லவ் சொல்ல போகல.. ரேப் தான் உங்க மோட்டிவ்.. யூ பிளடி சீட் "
"..................அபர்ணா அப்பா என்னை வீட்டுலயே விடலை .., வெளிய போவ சொல்லிட்டார்... மூஞ்சில முழிக்க வேணாம்னுட்டார்"
" நல்லது., இனிமே என் மூஞ்சிலயும்
முழிக்காத" அவள் படாரென வெடிக்க., அவனுக்கும் கோபம் வந்தது..
"ஏய்ய்ய்ய் என் கூட படுத்திருக்க
மறந்துட்டியா?"
"இதான்டா உன் சுயரூபம்... ச்சீ.. எனக்கும் இது
தண்டனைன்னு நினைச்சிக்கறேன் போடா
லோஃபர்...." அவள் போனை படாரென
வைக்க., அவன் விழித்தான். சௌம்யா வீட்டை
தாண்டி போனான்.
எங்கே போவது? என தெரியாமல் டவுனை நோக்கி
நடந்து போய் கொண்டிருந்தான்.
-----------
வெளி களேபரம் எதுவும் தெரிரியாத சௌம்யா.,
எப்போதோ கிருபாவுடன் காரில் வந்து விட்டிருந்தாள். உற்ற்ரென இருந்தாள். மனம் முழுக்க அந்த போட் ஹவுஸ் சம்பவம், தான் மத்தளம் வாசித்தது..
வீட்டில் வந்தால் சந்திரா இல்லை. உடனே சமையலுக்கு சௌமியா போன் செய்து வேறு சில சமையல்கார பெண்மணிகளை வீட்டுக்குள் கொண்டு வந்து விட்டாள்.
கிருபாவுடன் அவள் பேசவே இல்லை.
' என்ன செய்வது?' அறியாது விழித்த கிருபாவை கூப்பிட்டு உனக்கு வேணும்னா ஊருக்கு போயிட்டு வா " என்றாள். உத்தரவு போல சொன்னாள். பழையபடி அன்னியோன்யம் ஏதுமில்லை. அவளிடம்
வெறுமை., அமைதி.,
அவன் ஏதும் சொல்லாமல் சென்னைக்கு போகாமல், சந்திராவை தேடி பனங்குடி ஊருக்கு கிளம்பி விட,
சௌமியா அடுத்து வந்த நாட்கள் வழக்கமான உணவினை சாப்பிட்டு உடல் நலம் தேறினாள். அவளுக்கு முன்பு போல இருந்த காம உணர்வுகள் அலைகள் எதுவும் இப்போது இல்லை.
சந்திரா, கிருபா அங்கே இல்லாததால் அவளது உணவில் அவளுக்கு எந்த தவறான விஷயமும் கலந்து கொடுக்கப்படவில்லை.
மார்த்தாண்டத்தை விட்டு கிளம்பி போன கிருபா நேராக திருநெல்வேலிகு போகமும் வழியில் பனங்குடி என்னும் கிராமத்தில் சந்திராவை தேடி போனான்,.
அவளிடம் எல்லா விஷயத்தையும் சொன்னான். பிரசன்னாவின் ஜட்டி
வீடியோவை காட்டினான்.
" சரி பரவால்ல., ஒரு வாரம் அப்படியே இருக்கட்டும்.. நாம மறுபடியும் போய் சரி பண்ணிக்கலாம் . அபர்ணா வேலை விட்டு போனா பார். அது தான் பெரிய நிம்மதி" என்றாள்.
' அவனுங்க எப்படி அங்கே வந்தானுங்க ?. அதான் எனக்கு தெரியல" என சொல்ல,
" அந்த அபர்ணா தான் என்னை துருவி துருவி கேட்டா. ஒருவேளை அவ வேலையா இருக்குமா?" என சொன்னவுடனே பளீரென அடித்தான்.
"அய்யோ"
" நீ எதுக்குடி எங்க மேட்டரை ஊரெல்லாம் சொல்ற? அதுவும் போட் ஹவூஸ் நம்பர்
முதற்கொண்டு..."
" ஐயோ அபர்ணாவ வெறுப்பேத்த சொன்னேன்டா. அந்த தேவிடியா ஆளுங்கள அனுப்பி வைச்சிருக்கா.. அவ இங்க வரட்டும் அவளை என்ன பண்றேன் பாரு"
" அவ இனிமேல இங்க வர மாட்டாடி., சௌம்யா அவளை வேலை விட்டு நின்னுக்கன்னு சொல்லிட்டா. ஆனா. நீ சௌம்யாகிட்ட, இப்படி நீ அபர்ணா கிட்ட இந்த விஷயத்தை சொன்னேன்னு
தப்பித் தவறி கூட சொல்லிடாத" என்றான்.
அடி வாங்கிக் கொண்டு அழுதவளை சேர்த்தணைத்தான் .
எதிரில் அவள் கட்டி கொண்டிருந்த புது வீட்டின் பணிகளை
பார்த்தான். சந்திராவின் வீட்டிலேயே அவன் அன்று இரவு தூங்கினான்.
அவளது அம்மாவை வெளியே தூங்க சொல்லிவிட்டு சந்திராவுடன் கூடி கலவி புரிந்தான் .
"எப்போடி அந்த வீட்டிற்கு பூஜை வெச்சிருக்கே?" கேட்டான்.
" பிப்ரவரி 1ஆம் தேதி முகூர்த்த நாள்"
' சௌம்யா வராளா? அன்னிக்கு தான் அவங்கப்பா இறந்த
நாள்'
"தெரியும்.. இங்க வந்துட்டு தான் ஹாஸ்பிடல்,
அனாத இல்லம்லாம் போவேன்னு சொன்னா"
"ப்ச்.. ..அவ எங்கிட்ட முதல் மாதிரி பேச மாட்றாடி.. எங்கே என்னை விட்டு
விலகுவாளோன்னும் பயமா இருக்கு" அவன் விசனப்பட்டான்
"ஒன்னும் பயப்படாத,.. நான் இருக்கேன்ல? உங்க
ரென்டு பேரையும் கல்யாணம் கட்டி வைக்காம போவேனா?
"சரி வீடு கட்டி முடிக்க எவ்வளவு தேவைப்படுது. "
' இன்னும் ஒரு 10 லட்சம் தேவைப்படுது., வேலையெல்லாம் நடந்து முடிஞ்சிருச்சு. கான்டிராக்டருக்கு காசு பாக்கி.. கிரகப் பிரவேசம் முடிஞ்சப்புறம் சௌமியா மேடத்துகிட்ட வாங்கி தரலாம்னு இருக்கேன் ..அவ்ளோ குடுப்பாளா? "
"கொடுப்பா ..கொடுப்பா கொடுக்காம எங்க போறா... நீ காசு பத்தி கவலைப்படாத . நல்ல சூப்பரா வீடு கட்டு சரியா? எப்படி இருந்தாலும் நம்ம வாழ போற வீடு இல்ல " என்றான்.
மறுபடி சந்திராவின் பழையை வீட்டில் அவர்கள் புணரத் துவங்கினார்கள்.