மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, March 12, 2024

பாகம் 35 - எபிசோடு எண் : 41

 

சில நாள்கள் கழித்து பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பிலிம் சிட்டியில்  ரங்கராஜன் இருந்த போது, தான் அந்த  போன் வந்தது.

" என்ன?"

அவளது மனைவிதான் பேசினார் .விஷயத்தை சொன்னாள் . அந்தாள் கோபத்தில் பல்லைக் கடித்தார்.  கண்கள் சிவந்தன. யூனிட் ஆட்கள் என்ன? என்னவென்று விசாரித்தார்கள்.

" ஒன்றுமில்லை என சொல்லிவிட்டு சூட்டிங்க் ஸ்பாட்டில் இருந்து , ஃபிளைட்டில்  சென்னைக்கு வந்தார்.

"சுஷ்மிதாவா?  இப்படி செய்தது.  அடிப்பாவி நான் என்னவெல்லாம் கோட்டை கோட்டை கட்டி இருந்தேன் .  மொத்தமாய்  இடிந்து விட்டது.  நான் கவனித்திருக்க வேண்டும் . மகள்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ? என்பதை நான் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்.  எங்கே போகிறாள் ? எப்போது வருகிறாள்? என, உளவு பார்த்திருக்க வேண்டும் .

ஐயோ சினிமா, பணம், வியாபாரம் என இருந்து விட்டேனே ! குடி கெடுத்து விட்டாளே பாவி. போயும் போயும் அந்த செல்வராஜன் பையனுடா? ஐயோ ஒட்டுமொத்த புகழைக் கெடுக்கும் ஒரு விஷயம் எனது வீட்டில் நடந்து விட்டதே.

 சுஷ்மிதாவா  இப்படி செய்தாள்? அய்யோ எனக்கு யாரும் சொல்லவில்லையே?  ஒரு சின்ன  க்ளூ கூட எனக்கு கிடைக்கவில்லையே . எப்படியோ நான் ஏமாந்து விட்டேனே.

அந்த ஹோட்டல் பார்ட்டியில் மாதேஷுடன் நடந்த பர்த் டே டிரிங்க்ஸ் பார்ட்டி மேட்டரிலேயே நான் உஷாரகி இருக்க வேண்டும். மாதேஷை மல்லாக்க போட்டு தோலை உரித்திருக்க வேண்டும்.

 வேறு யாராக இருந்தாலும் பரவில்லை,  போயும் போயும் செல்வராஜாவின் பையன் . நாம் கால் செருப்பை துடைத்து விடு என்றால் துடைப்பான். காத்துல எச்சில் இலை கோபுர கலசத்தின் மீது உட்கார்ந்தாற் போல என்ன ஒரு விபரீதம் இது?

அவருக்கு மயக்கம் வரும் பொல இருந்தது. “ கடவுளே! காதலுக்கு கண்னில்லையா? சுஷ்மிதாவா இப்படி செய்தாள்? எப்படி ஏமாந்தாள்?  பழக்கம் மட்டும் தான? இல்லை அது முற்றி........

ஐயோ இது என்ன விபரீதம்? அந்தப் பையன் அவன் எல்லாம் ஒரு ஆளா ? ஜனங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை . உயிரைக்கொடுத்து நடிக்கக்கூடிய கலைஞர்கள் பல பேர் இருக்க , அந்த தேவாங்கு போல இருக்கும் ஒரு நடிகனை  தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் .

இந்த திடீர் புகழில் இவர்கள் தலைகால் தெரியாது தெரியாது ஆடுகிறார்கள், அந்த நாய் எனது வீட்டுப பூஜை அறையில் வாய் வைத்து விட்டான் .

ஐயோ இந்த அசிங்கம் எத்தனை காலம் ஆனலும் போகாதே, அவனை என்னவென்று சொல்லி அடித்து விரட்டுவது ? இல்லை ஃபீல்டை விட்டே மாதேஷ் முடித்து விடலாமா ?

 இதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்று தெரிய வில்லையே?  எனது மூத்த மகள் சுஸ்மிதா போயும் போயும் மாதேஷிடம் சிக்கி கொண்டாளே?

அந்த ஆக்டர்  அன்பு தான் சுஷ்மிதாவை விரும்புகிறான் என கேள்விப்பட்டு., சுஸ்மிதாவை விசாரிக்க

"எல்லாம் ரூமர் டாடி., அவனை போயி நானா?" என சொன்னாளே? இப்போ மாதேஷ் எப்படி?

 செல்வ மகளை இப்படி வாரி கொடுத்து விட்டேனே? இது எங்கே போய் எங்கே நிற்கும்? இந்த பாவி மகள்  இப்படி ஒரு பெரிய சிக்கலில் கொண்டு வந்து வைத்து விட்டாளே?

அவர் கோபத்தில் தனது வீட்டிற்கு செல்ல, அங்கே அவருக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.

' பெண்ணை மலர் ஆஸ்பிடலில் சேர்த்திருக்கிறோம் " சொன்னான் மனைவியின் தம்பி நாகு,. மச்சான்.,

"ஐயோ என்ன ஆச்சுப்பா நாகு?'

"மருந்து குடிச்சிட்டா..  "

"அதையேன் சொல்லல? "

" ஐயோ.  யாருக்கும்  இப்ப தெரியாது , நீங்க சத்தம் போட்டு ஊரைக்கூட்டி பெரிய நியூஸ் ஆக்கிடாதீங்க. மலர் ஹாஸ்பிட்டல சொல்லி பின் வாசல் வழியாதான் அட்மிட் பண்ணியிருக்கோம். இப்ப ஐசியூவில இருக்கா. அக்கா கூட இருக்கா.. நீங்க வாங்க.."

 வீட்டின்  பின்வாசல் வழியே , சாதாரண அம்பாஸிடர் காரில் ரங்கராஜுவின்  கார் மைத்துனர நாகுவோடு  மலர் ஹாஸ்பிட்டல் நோக்கி விரைந்தது.

 

காரில் போகும்போது தான்  நாகு மெதுவாக சொன்னான்.

" ஹாஸ்பிட்டல்ல சுஷ்மிதாவை யாருக்கும் தெரியாது.  உங்கள பாத்தா தான்.."

"என்னடா இழவு .இது. லவ் மேட்டர்னா எங்கிட்ட சொல்ல வேண்டியது தானே.  நான் வர வரைக்கும் வெயிட் பண்ண வேன்டியது தானே.. இப்படி தான். முதல்ல அந்த அன்பு பையன் கூட இவளை சேத்து வெச்சி பேசினீங்க. அப்புறம் அப்படி நடக்கவே இல்லை"

 நாகு எதுவும் சொல்லவில்லை.

ஹாஸ்பிடலில் தொப்பி கன்னாடி அணிந்து, தன்னை மறைத்து கொண்டு வேகமாய் ஐ சியூக்கு போனார்.

வாசலில் சின்ன மகளும் , மிக மிகமுக்கியமான நெருக்கமான உறவினர்களும் இருந்தார்கள் . மனைவி அவரை பார்த்ததும் எழுந்து வந்தாள்.

"ஏமாந்துட்டோங்க..."

"என்னடி ஆச்சு"  அவர் பதற

" பயப்பட வேணாம். அவ கண்ணு முழிச்சிட்டா. பவர் கம்மி மாத்திரை..யாம்"

"எங்கடி அவ?"

"ரொம்ப சத்தம் போட்டு பேசாதீங்க. திட்டாதீங்க.அடிச்சிடாதீங்க உங்களுக்கு என்ன வேணுமோ அதை என்கிட்ட செஞ்சுடுங்க'  என இரண்டாக வெட்டி போடுங்க . உங்க கால்ல விழறேன். அவள் அவரை கட்டிகொன்டு அழ.

"ஏய் இப்போ அதுக்கென்னடி ஆச்சு?"

அவள் அழுகையை பார்த்து அவர் அஞ்சினார்.  அவர் இன்னும் கலவரமாகி மனைவியை பார்த்தார்

" நம்ம பொண்னு கசங்கி போச்சுங்க"

'...................என்னது?"

"ஆமாங்க ., சுஷ்மிதாவுக்கு  இப்போ  நாப்பது நாள் தள்ளி போயிருக்கு."