மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, March 12, 2022

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 27- 1693

தாங்கள் போட்ட திட்டம் ஒரு மில்லி மீட்டர் கூட தவறாமல் சரியானபடி நடக்கிறது .என இருவருக்குமே உற்சாகம் கொப்பளித்தது.

 சாரதி மீண்டும் மலருக்கு போன் செய்தான்.

" மலர் வர்ற சண்டே அஞ்சு மணிக்கு நான் சொல்ற இடத்துக்கு நீ வந்துடு . சீக்கிரம் முடிச்சிட்டு உன்னை அனுப்பிச்சுடுறேன்"  என்றான்.

 மலர்விழிக்கு வார்த்தை ஏதும் வரவில்லை. நாக்கு உலர்ந்தது "ப்ளீஸ் ப்ளீஸ்" என்று மட்டும் தான் அவளால் கெஞ்ச முடிந்தது

"மலர்விழி உனக்கு வேற ஆப்ஷனே இல்ல.. சண்டே நாலு மணிக்கு உங்க வீட்டில் இருந்து கிளம்பு. நாம எங்க மீட் பண்றோம் அப்படிங்கறத உனக்கு லொகேஷன் ஷேர் பண்ணுவேண் . நீ மட்டும் தான் அங்க வந்து சேரணும். உன் கூட போலீஸ்  இல்ல, சப்பொர்ட்டுக்கு கூடவோ இல்ல கொஞ்சம் டிஸ்டன்ஸ் விட்டு வேற யாராச்சும் வராங்கனு தெரிஞ்சது...  அடுத்த செகண்ட் உன் வீடியோ பலநூறு வெப்சைட்டில் பரவிடும். ஜாக்கிரதை .அப்புறம் யாருமே உனக்கு ஹெல்ப் பண்ண முடியாது. டோண்ட் ப்ளே ஸ்மார்ட் கேம்ஸ்"

" இங்க பாருங்க சார்! எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலஎன் மேல பரிதாபம் காட்டுங்கன்னு தான் கெஞ்ச முடியும். . என்னை இந்த மாதிரி வீடியோ எடுத்து யாராச்சும்உங்க மூலமா மிரட்ட சொல்லி இருக்காங்க  அது யார்னு சொல்லிடுங்க, அவங்க கால்ல கூட விழுறேன், இனிமேல் அவங்க பிரச்சினைக்கு மட்டுமல்ல எந்த பிரச்சினைக்கும் நான் போகமாட்டேன், "ப்ளீஸ் என் மேல கருணை காட்டுங்க இந்த தப்பெல்லாம் என்ன செய்ய சொல்லாதீங்க " மலர் அழ துவங்க

 

"அடடா மலர் உனக்கு புரியவே இல்லையே..  நீ பேசி பேசியே  டைம் தான் வேஸ்ட் பண்றே.  நீ எந்த பிரச்சனைக்கு போனாலும் எனக்கு கவலை கிடையாது. நீ யாரை எதிர்த்தாலும் எனக்கு பிரச்சினை கிடையாது.  எனக்கு தேவை நீ மட்டும் தான்.  சொன்ன நேரத்தில் சொன்ன இடத்திற்கு வந்து சேரு.போறப்போ அந்த வீடியோவையும்.போனையும் உனக்கு கொடுத்துடறேன்.  அதுக்கு அப்புறம் நீ யாரோ நான் யாரோ.  ஒரு நிமிஷம் லேட்டா  நீ வந்தா கூட உன் கற்புக்கு நான் உத்தரவாதம் இல்லை புரிஞ்சுதா? என சொல்லிவிட்டு போனை வைத்தான்.

ஜீவா, சாரதியை அதிசயமாய் பார்த்தான்.

"எழுதறது மட்டுமில்ல , நல்ல பேசுறப்ப நீ.. நல்ல மிரட்டுறே? நீ பேசறது ஹரீஷ் சாருக்கு செட் பண்ரா மாதிரியே இல்லை.. ஏதோ நீ போட கூப்பிடற மாதிரி இருக்கு...சூப்பர்ப்பா" என்றான்.

அங்கே., மலர் வீட்டில்

 மலரை இதுபோல யாரும் மிரட்டியது கிடையாது அவள் எந்த மிரட்டலுக்கும் மதித்தது கிடையாது.  ஆனால் இன்று ஏதோ ஒரு கொடிய குற்றத்தை செய்து விட்டு தண்டனைக்கு காத்திருக்கும் கைதி போல கூனிக்குறுகி நின்றாள்.

ஒரு பெண்ணுக்கு அவளது பெண்மை எத்தனை பலமான ஆயுதம் என சித்தரிக்கபடுகிறதோ அதே அளவிற்கு அந்தப் பெண்மையே சில சமயங்களில் பலவீனமான ஆயுதமாகவும்  மாறிவிடுகிறது.  இந்த இக்கட்டான சிக்கலான வளையத்தில் இருந்து வெளிவருவதற்கான பல வழிகளை அவள் ஆராய்ந்து விட்டாள். ஆனால் எதுவுமே அவளுக்கு தீர்வாக இல்லை. இனி வேறு வழி கிடையாது. யார் அந்த அயோக்கியன்? யார் அந்த காமுகன்? அவனை நேராக சந்தித்து அவனது காலில் விழுந்து கெஞ்சி மன்றாடி எப்படியாவது தப்பிப்பதற்கு வழியை ஆராய வேண்டியது தான், ஒருவேளை அவன் எதற்கும் மசியவில்லை என்றால் மலர்விழி  அவனுடன் படுத்தே தீரவேண்டும் என பிடிவாதம் பிடித்தால் மலர்விழிக்கு வேறு வழி தெரியவில்லை.

கட்டிலில் சரிந்து படுத்தபடி எதிரே நிற்கும் கண்ணாடியில் தனது இளமை ததும்பும் உடலையே வெறித்தபடி பார்த்துக்கொண்டிருந்தாள். இந்த அழகு தான் இத்தனை சிக்கலுக்கும் காரணம்.

அந்த வாரம் ஞாயிறு காலையிலேயே வந்து சேர்ந்து விட்டான் ஹரிஷ் . சில முக்கியமான  அலுவல்களை முடித்து விட்டு சாரதிக்கு  போன் செய்தான். மலர்விழி வருகிறளா? என்பதை உறுதி செய்து கொண்டான். மலர்விழி தனது மனைவி பவித்த்ராவின் தோழி சஞ்சனா மூலமாக தான் மலரை ஹரிஷ்க்கு தெரியும்.

பவித்ரா  அப்பாவின்  நகைக்கடை நிறுவனத்தில் சஞ்சனா ப்ரீ லேன்சர் ஜுவல் டிசைனராக வேலை பார்க்கிறாள்., அவளின் அக்கா தான் இந்த மலர்.. மலர்விழி தான் கம்ப்யூட்டர் செண்டர் இன்சார்ஜ், அவள் சைன் போட்டால் தான் சுரேஷ்க்கு எஸ் ஏ பி சான்றிதழ் கிடைக்கும்.

 சான்றிதழ் கொடுப்பதை  தடுக்க ஒன்றிரண்டு முறை ஹரீஷ் மலரிடம் போனில் பேசி இருக்கிறான். பட் மலருக்கு நம்மை ஞாபகம் இருக்குமா? இருந்தாலும் பரவாயில்லை.. இவளை அடிபணியவைக்க வேண்டும். கன்ஸ்ட் ரக்ஷன் தொழிலில் நிறைய இடைஞ்சலாக இருக்கிறாள்.

 ஆனால்இதுவரை மலர்விழி தன்னை நேரில் பார்த்ததில்லை. இதுநாள்வரை சாரதி தான் மலர் விழியை போனில் மிரட்டி இருக்கிறான்.   அதாவது சாரதி தனக்கு பதிலாக பேசி மலர்விழியை சொன்ன இடத்தில்சொன்ன நேரத்தில்  கொண்டு வருவதற்கு வேலை செய்திருக்கிறான் .

மலர்விழிக்கு தப்பிக்க  வேறு வாய்ப்புகள் கிடையாது.  கன்ஸ்ட்ரக்ஷன் சைட்டில்  வைத்து மலர்விழியை முடித்த பின், மலர்விழியை தனக்கே தனக்கென சொந்தமாக்கி கொள்ள வேண்டும். குடும்ப லட்சணம் மிகுந்த பேரழகி அவள். மலர்விழியை  அடைவதற்காக சாரதி சற்குணம் போன்றவர்கள் துடிக்கிறார்கள்.  யாருக்குமே நாம் வாய்ப்பை கொடுத்து விடக்கூடாது. மலர்விழி என்றுமே தனக்கே உரியவள்.  இப்படிப்பட்ட ஒரு பேரழகிகற்புக்கரசிஇல்லத்தரசி எனது படுக்கையை தான் அலங்கரிக்க முடியும்.  வீண் பதர்களுக்கு அல்ல

 இதற்குப் பிறகு சென்னையில் எந்த ஏரியை பொது இடத்தை வளைத்து கட்டிடம் கட்டினாலும் மலர்விழியிடமிருந்து எதிர்ப்பு இருக்காது. இதுநாள் வரை எத்தனையோ குடும்ப பெண்களை இல்லத்தரசிகளை படுக்கைக்கு வரவழைத்து பணம் கொடுத்தோ மிரட்டியோ அனுபவித்தோம் என்றால் அதன் பின்னணியில் உடல் தேவைக்கான காமசுகம் மட்டுமே மேலோங்கி நிற்கும்.  ஆனால் இந்த மலர்விழி நமக்கு படுக்கை சுகம் தாண்டி வேறு பல லாபங்களை நமக்கு கொடுக்க காத்திருக்கிறாள் .

இன்றைய நாள் மலர்விழியை படுக்கையில் சந்திப்பது மிகவும் முக்கியமானதாகும்..லேட்டஸ்டாக நமக்கு இல்லத்தரசிகள் மிஸ்ஸாகி கொண்டே இருக்கிறார்கள். மேனகா, ஷோபனா என நிறைய பெண்கள் மிஸ் ஆனார்கள்.  ஆனால் இன்றி மலரை மிஸ் செய்துவிடக் கூடாது.

ஹரிஷ் மாலை நடக்கப்போகும் மான் வேட்டைக்கு தயாரானான். நீலாங்கரை வீட்டுக்கு போகாமல்  ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ரூம் போட்டு மதியம் ஓய்வெடுத்தான்.

 

 இந்த 27 & 28 ஆம் பாகத்தை முழுதும் படிக்க