மறுநாள் காலை சுஜாதா ஈஸ்வரின் செண்டருக்கு போக., விஜயா வாசலில் நின்றிருந்தாள்.
"உள்ள வாடி'
விஜயாவுடன் லைனில் கூட காத்திருக்காமல்
விறுவிறுவென அவன் அறைக்குள் சென்றாள்
சுஜாதா. அவள் பின்னாலேயே சிப்பந்திகள் 'மேடம் மேடம் 'என ஓடி வர., அவள் அறைக்குள் நுழைந்ததுமே அவளை
பார்த்து முகம் மலர்ந்த ஈஸ்வர் பின்னால் வந்த ஆட்களை என சைகை காட்டி போகச்
சொன்னான்.
"ஹாய் சுஜா"
"சார்.."
' சொல்லுங்க
மேடம் எப்படி இருக்கீங்க?" என கேட்டான்.
" என்ன சார் ஒரு பிரச்சினை
என்றதால் தானே இந்த மேடத்தை உங்களை பார்க்க சொன்னேன். நீங்க அவங்களை என்ன ஏதுன்னு கேட்கவே இல்லையாமே ?"
"நான் கேட்கலன்னு யார் சொன்னது
மேடம்.. இவங்க ஹஸ்பண்ட் ட்ராவல் கம்பெனி
வச்சிருக்காரு. அங்க வந்த ஒரு லேடி அவர்
கிட்ட பேசி இம்ப்ரஸ் பண்ணி இருக்கு, இவரு
அவளைத் தேடி போக., அவ யாரோ ஒரு லோக்கல் ஆள் கிட்ட வாங்கின
வசியமருந்து ஜூஸ்ல போட்டு கலந்து கொடுத்து இருக்கா., இப்போ
அந்த மருந்து அவர் உடம்பெல்லாம் பரவி இருக்கு, அதனால அந்த பொண்ணு நசிமாவையே அவர்
சுத்தி வந்திருக்காரு. இதுவரைக்கும் 34 லட்ச ரூபாயை அந்த பொண்ணோட அக்கவுண்ட்ல
போட்டிருக்கார். இன்னும் அவங்க பெருசா
எதிர்பார்க்கிறாங்க. அந்த குடும்பத்தில் மொத்தம் ஆறு பேர். அந்த ஃபேமிலி ல அப்பா
கிடையாது.
"சார்.." அவர்கள் திகைப்பு மாறாமல்
பார்க்க.,
"இதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சது., தெரியாதது
என்னன்னா., அந்த
கும்பலுக்கு இவங்க புருஷன் 15 ஆவது
பிராஜெக்ட். அவங்களுக்கு இந்த வேலை எல்லாம் செஞ்சு கொடுக்கிறது கோடம்பாக்கத்துல
முஸ்தபான்னு ஒரு பாய், அவனை
கூப்பிட்டு ஒரு அறை போட்டு பார்க்கிங்க்ல
உக்கார வெச்சிருக்கேண். அவன் பண்ன எல்லாத்தையும் டிஸ்மாண்டில் பண்ண சொல்லி
இருக்கேன். இவங்க வீட்டுக்காரரு இரண்டு
நாள்ல கம்ப்ளீட்டா சரியாயிடும் .அப்புறம்
வேற என்ன விசேஷம்? சுஜாதா" என கேட்க., விஜயா
விழிகள் விரிய ஈஸ்வரை பார்த்தாள். கண்ணீர்
ததும்ப நன்றி சொன்னாள்.,
சுஜாதாவிற்கு ஈஸ்வர் சந்திரனின் விஸ்வரூபம்
புரிந்தது .இவன் சாதாரண ஆள் இல்லை. விர்ச்சுவல் விஷயத்தில் இவன் தாதா. பயங்கரமான
வலிமை பொருந்திய ஆள் என்பதை புரிந்து தலை குனிந்தாள் .
"விஜயா மேடம் உங்க பிரச்சினை ஓவர்.
நீங்க வெளிய கவுண்டருக்கு போனீங்கன்னா பில்லு தருவாங்க .பணத்தை கொடுத்துட்டு
போகலாம் " என்றான் விஜயாவிற்கு ஒன்றும் புரியவில்லை .
"ரொம்ப நன்றி சார்.."
"ஆக்சுவலா இதெல்லாம் நான்
செய்யறதில்ல. சுஜா கேட்டங்கன்னு தான்....."
"ரொம்ப நன்றி சுஜாதா.."
விஜயா நன்றி சொல்லி
அமைதியாக எழுந்து வெளியே நடந்தாள்.
அவள் போன பின்னும் இன்னுமும் சுஜாதா தலைகுனிந்தபடி தான்
உட்கார்ந்து இருந்தாள். அவளுக்கு மகிழ்ச்சியில் தண்ணீர் கசிந்தது.
" சொல்லுங்க மேடம்.,
உங்களுக்கு வேற எதாச்சும்
பிரச்சனையா ? வர்ஷா
பேபி நல்லா தானே இருக்கு?" என
கேட்டான்.
அவள் குனிந்தபடியே தலை ஆட்டினாள். அவள் அழுகிறாள் என ஈஸ்வர் ஊகித்தான் .
"கொஞ்சம் முகத்தைக் காட்டுங்களேன்
நான் கொஞ்சம் பார்க்கிறேன் " என்று
சொல்ல அவள் முகத்தை நிமிர்ந்தாள்.
ஓரிரு கண்ணீர் துளிகள். அது ஆனந்தக் கண்ணீரா நெஞ்சை நெகிழவைதத்தால் உண்டான கண்ணீரா?
என்பதற்கெல்லாம் அவளிடம் பதிலில்லை.
" என்னாச்சு சுஜாதா.. ஒய் டியர்ஸ்? "
"ரொ..ரொம்ப..ரொம்ப
தேங்க்ஸ்.."
"ஸோ..
இப்படி ஏதாச்சும் ஒரு பிரச்சனை வந்தால் தான் என்னால் பார்க்க வரூவீங்கல்ல?"
"இ..இல்ல., ரொம்ப
சாரிங்க நான் உங்கள தப்பா நினைச்சிட்டேன்., ஆக்சுவலா உங்க மேல ரொம்ப கோபமா
இருந்தேன். நம்ம பேரை சொல்லி கூட இவரு நம்ப பிரண்டுக்கு ஹெல்ப் பண்ணலையேன்னு நெனச்சேன் ., உங்கள மனசுக்குள்ளே திட்டிகிட்டு
இருந்தேன் " என்றாள்.
"தெரியுமே நீங்க என்னென்ன சொல்லி திட்டுனீங்கன்னு சொல்லட்டுமா?" என அவள் திட்டியதெல்லாம் அவன் வார்த்தை
மாறாமல் சொன்னாள். அவளுக்கு ஆச்சரியப்பட்டு ஆச்சரியப்பட்டு புத்தி வலித்தது.,
" ஐயோ போதும் .சாரி சாரி சாரி
ஆயிரம் தடவை சாரி.." அவள் சின்ன பெண் போல சிணுங்கியது அவனுக்கு அதிகம்
பிடித்தது.,
"பை தி பை விஜயா மேடம் வந்தப்ப ஏன்
கண்டுக்கலன்னா..."
"தெரியும்"
"என்ன தெரியும்?"
"என்னை உங்க கிட்ட வரவழக்கிற
ட்ராப் இது"
'ஹஹஹ்ஹஹா"
அவன் சிரித்தான்...
"லாயர்ல? கண்டு பிடிச்சிடீங்க... சரி.. நான் கேட்டதுக்கு பதிலே
சொல்லலியே"
"...................." அவள்
அவனையே பார்க்க.,
"ஹலோ..உங்களை தான்'
"நீ நீங்க தான் போன் பண்ணவே இல்லையே "
"அப்ப நேர்ல சொல்லலாமே.,”
“என்னால
நேர்ல எல்லாம் சொல்ல முடியாது " மீண்டும் அவள் சின்னப் பெண் போல அறையைத்
திறந்து கொண்டு அதுவரை ஓடியதைப் பார்த்து புன்னகைத்தான் .
யெஸ். இப்படித்தான் நேர்மையாக ஒரு பெண்ணை கவிழ்க்க வேண்டும்.. அவன் முஷ்டி உயர்த்தி தன் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டான்.
-------------------------
வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்.,