சுஜாதாவிற்கு தெரிந்த விஜயா என்னும்
தோழி ஒருத்தி தன் கணவன் ஒரு முஸ்லிம் பெண்ணுடன் ஊர்
சுற்றுவதாகவும், விரைவில்
அவளை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் சுஜாதாவிடம் வந்து அழுது கொண்டே தனது
புலம்பலை தெரிவித்தாள்.
"என்னடி செய்யறது எனக்கு தெரிஞ்சு
ஆள வச்சி அந்த பொண்ணு கிட்ட பேசி பார்க்கலாமா ?" என சுஜாதா கனிவாக
கேட்க.,
"அதெல்லாம் நான் எவ்வளவோ
அவகிட்ட பேசிட்டேன், அந்த
பொண்ணு பேமிலி அதுக்கு ஒத்துக்க மாட்டேங்கிறாங்க
. என் வீட்டுகாரரரால மூனு தடவை அபார்ஷன்
பாண்னிட்டாளாம்"
"அடகடவுளே?"
"அது பெரிய கும்பல்லா இருக்கு.
நுங்கம்பாக்கத்தில் தான் அவங்க வீடு. அவங்களுக்கு பணம்தான் பெரிய குறியா
இருக்கு" என்றாள்
"சரி உங்க வீட்டுக்காரர் கிட்ட
பேசினியா ? அவர்
என்ன சொல்றாரு " என கேட்க
"எனக்கு ஒன்னுமே புரியலடி.
உனக்குதான் தெரியுமே அவரு டிராவல் ஏஜென்சி வச்சு இருக்காரு .ரிஷப்னிஸ்ட்
வேலைக்கு, இன்டர்வியூக்கு
அந்த பொண்ணு வந்து இருக்கா ., இன்டர்வியூ
எல்லாம் முடிஞ்ச அப்புறமா அந்த பொண்ணும் வெளிய போயிடிச்சி.. ஆனா அன்னிகு ஈவ்னிங்க்
அவர் நம்பருக்கு கால் பண்ணி உங்க கண்ணு, சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு., எனக்கு புடிச்சி இருக்கு'
அப்படின்னு சொல்லி கொக்கி போட்டிருக்கா
., உடனே
இந்த மனுஷனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை., அவ
நம்பரை வாங்கட்டு உடனே போய் பார்த்து
இருக்கா இருக்கார். இதுதான் எனக்கு ஆபீஸ்ல சொன்னாங்க"
'அட
பாவமே., சரியான
ட்ராப்"
"இது எல்லாமே அவங்க பிளான் பண்ணி
செய்ற பிசினஸ் போல ., எங்காவது
வாக் இன் இன்டர்வியூ இருந்தா அங்க போயிட்டு ஆளு சுமாரா இருந்தா ., காசு பார்ட்டியா இருந்தா இந்த மாதிரி பேசி
கொடுக்குறாளுங்க ., இது
தெரியாம அவர் அவகிட்ட .."
"சரி !இதெல்லாம் உங்கள்
வீட்டுக்காரர் கிட்ட சொல்ல வேண்டியது தானே"
"இல்ல சுஜா.,
எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நான் எதைச் சொன்னாலும் அவர் காதில்
வாங்க மாட்டார் எங்கேயோ வெறிச்சி பாக்குறாரு.. "
"அச்சச்சோ நீ என்ன நினைக்கிற ?"
"அவங்க ஏதோ இவருக்கு வசியம் மாதிரி
பண்ணி இருப்பாங்க ன்னு பயமா இருக்குடி., இது
ஏதோ பிரையினை கண்ட்ரோல் பண்ற வேலைன்னு நினைக்கிறேன்.,"
"...."
" எனக்கு ரொம்ப பயமா இருக்கு சுஜா.
என் புருஷ்னை நான் இழந்து விடுவேன்னு பயமா
இருக்கு சுஜாதா" என அந்தப் பெண் அழ.,
" இரு விஜி ஏன் கவலைப் படுறே? எவ்ளோ
சீனியர் லாயர் நீயே அழுவறே? " விஜயா
சொன்ன அந்த ‘பிரையின் கண்ட்ரோல்’ என்ற வார்த்தையைக் கேட்டவுடன்
சுஜாதாவிற்கு மூளையில் ஒரு மின்னல் கீற்று வெட்டியது.
" ஒன்னும் பயப்படாத விஜி., கைவசம் ஒரு ஆள் இருக்கு., உனக்கு
எந்த பிரச்சினையும் கிடையாது., நான் சொல்ற ஒரு அட்ரஸ்ல நேர்ல போய் பாரு., என்
பேரை சொல்லு " என்றாள்.
ஈஸ்வரின் செண்டர் விலாசத்தை தோழி விஜயாவிடம்
கொடுத்தனுப்பினாள்.
விஜயா நன்றி சொல்லி வாங்கி அன்று மாலையே போய் ஈஸ்வரை பார்த்தாள். தான்
சுஜாதாவின் உயிர் தோழி என தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு தனது பிரச்சனையை டீடெய்லாக
சொன்னாள்.
ஆனால் அவன் "இங்க பாருங்க மேடம்
இதெல்லாம் வசியம், செய்வினை
மாதிரி ரொம்ப லோக்கலான விஷயம்.. இது அது மாதிரி இடமில்ல. ப்ரெய்ன் டெவலப்மெண்ட்
செண்டர். விர்ச்சுவல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச்.. அதுவும் இல்லாம., அறிமுகமில்லாத
ஆளுங்க ப்ராப்ளத்தை நான் கையில எடுப்பதில்லை ., சாரி ., யூ மே கோ நௌ..' என சொல்லி அனுப்பினான்.
விஜயா கடும் ஏமாற்றத்துடன் அந்த
சென்டரின் வாசலில் நின்று சுஜாதாவிற்கு
போன் செய்தாள்.
"என்ன சுஜாதா அவரு இதெல்லாம் செய்ய
மாட்டேன் பார்க்க மாட்டேன்னு சொல்ராரு "
'வாட்?'
"ரெபரன்ஸ் இல்லாம கேஸ் அட்டென்ட் பண்ண
மாட்டாராமே?" என அவள் சொல்ல.,
" நீ சொல்ல வேண்டியது தானே சுஜாதா
பிரண்டு அப்படின்னு?"
"சொன்னேன்டி அப்போ கூட அவரு அதை
ஒரு மேட்டரா எடுத்துக்கலடி... எவ்வளவு பணம் வேணாலும் கொடுக்கிறேன்னு சொன்னேன் ., அப்ப
கூட அவர் எதுவுமே காதுல வாங்கல., என் கணவருக்கு என்ன பிராப்ளம்? என்ன
பண்ணி இருக்காங்க? அப்படிங்கறதை
டீடைய்லா சொல்றேன்., எதுவுமே
அவரு காதுல கேட்டாப் போல இல்லை ., "
"அச்சச்சோ"
"ஒப்புக்கு தலையாட்டிட்டு ,சாரி என்னால முடியாதுன்னு அனுப்பிட்டாரு
சுஜா இப்ப என்ன பண்றது சுஜாதா?., நான் ரொம்ப நம்பிக்கையா இருந்தேண்"
அவள் புலம்புவதை கேட்க சுஜாதாவிற்கு குழப்பமாகவும் இருந்தது ., அதே
சமயம் ஆத்திரமாகவும் இருந்தது.
இவன் வேண்டுமென்றே நம் பெயரை கேட்ட பிறகு அவளை துண்டித்து இருக்கிறான் என்ன
செய்வது?
என யோசித்தாள். விஜி
தொடர்ந்து நச்சரிக்க.,அவனுக்கு
போன் செய்யலாமா? என
நினைத்தாள் .,
வேண்டாம்
அவனே பத்து நாளாக போன் செய்யாமல் இருக்கிறான். இப்போது இதற்காக நாம் பேசினால் அது
தவறாகும் என்றெல்லாம் குழம்பினாள்,
நேரிலேயே போய் பார்க்கலாம்., "சரி
விஜி நீ கிளம்பு நாளைக்கு மார்னிங்க் போய்
பாப்போம்.." என்றாள்
'என்னடி
சொல்றே? அவன்
தான் முடியாதுங்க்கிறானே?"
"இல்ல .. நீ வா நாளைக்கு காலைல.,"
-------------------------
வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்.,
Awesome. Through suja, eswar got three ladies. 1. Sanjana 2. Vijaya 3. muslim girl
ReplyDeleteஇந்த விஜயா மட்டும்தான் ஈஸ்வர்கிட்டயும் சுரேஷ் கிட்டயும் மாட்டாம தப்பிச்சுட்டாள்
ReplyDelete