மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, May 24, 2023

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 33 Episode No. 2070 ( திபூவை இறுதி பாகம்)

 

என்னங்க இப்படி சொல்லிட்டான்?” வேகமாய் ஓடிக் கொண்டிருந்த கிரான்டனி  மனைவி டக்கென நின்று விட.

கிழவர் அவளை கும்பிட்டார்.,

அட என்னங்க சின்னபிள்ளை மாதிரி

ஏன் தாயே உனக்கு தெரியாதா? இது தான் முடிவுன்னு..

அவள் சிரித்தாள்.

இந்த கிரான்டனியை தூக்கி நிறுத்தனதும்., என்னை கரை சேத்ததும் என் ஃபிரண்ட் கண்ணன் தான்.. ஆனா.. என்னால அவனுக்கு எந்த  நன்மையும் செய்ய முடியல., இப்பவாச்சும் சுரேஷ் மூலமா செய்ய முடிஞ்சதே

இந்த ஆர்த்தி கொடுத்து வெச்சவ இல்ல?”

ம்ம் சுரேஷ் தான் கொடுத்து வெச்சவ

உண்மையிலயே நம்ம பிரார்த்தனையில்தான் , அழுகையில தான் அந்த உயிரு பிழைச்சதா?”

ம்ம்ம் அப்படி சொல்ல முடியாது.. அந்த கோயில்ல சுத்தி பாத்து இந்த கோயிலை சீரம்மைப்பு பண்ணன்னும். ஏழைங்களூக்கு  ஏதாச்சும் நல்லது பண்ணனும்னு தோணப்பவே ., பானசங்கரி உச்சி குளுந்துட்டா.,  நாம என்ன பண்ணோம்..?   நாம வெறும் கருவி தானே

சரிஇனிமே அவனுக்கு எந்த கெட்ட நினைப்பும் வராதா? எந்த பொம்பள மனசையும் கெடுக்க மாட்டானா?”

மாட்டான்னு தான் தோனுது. அப்படி பண்ண அவ ஒத்துக்கமாட்டா.. அவன் நிழலு அவன் கூடவே இருக்கும்

யாரு.. பான சங்கரி நிழலா?’

இல்ல., ஆர்த்திஎன்றார் கிழவர்.

அம்மா ஆனந்தப்பட்டார்

இந்த  அழகு, நடை, உடை, வாசனை. அலங்காரம், திருமணம், பந்தா வெட்டி கூச்சல், ஆசை, இச்சை, தளுக்கு மினுக்கு எல்லாம் அந்த ஒன்னுத்துக்குதான். அது இன பெருக்கம் செய்யத்தான்.. அந்த பேரண்டத்தில் ஒரு ஒரே துளி விந்து துளி போய் சேரதுக்கு தான் இங்க இத்தனை ஆட்டம். இவ்ளோ இடியாப்ப சிக்கல் வாழ்க்கை., சம்பவங்கள்..,

கருப்பைக்குள்ள போன செல்லுல ஆனும் பெண்ணும் ஒன்னா இருந்துட்டு அப்பறம் அது மொத்தமும் ஆணாவோ , பெண்னாவோ மாறி போய்டுது.. அப்பதிலருந்து  வெளியே பிறந்தப்பறம் தன் கிட்ட  இருந்த ஆணையோ அல்லது பொண்ணையோ சதா இன்னொரு செல் தானாவே தேடிக்கிட்டிருக்கு. அதான் இயல்பு, அதான் காமம்.,

இவ்வளவு மென்மையான்னு ஆண் ஏங்க., இவ்ளோ முரடான்னு பெண்ணு தேட..

இப்படியே கோடிக்கணக்காக வருஷம் போய்கிட்டிருக்கு. இன்னும் போகும்., இது நிக்கறப்ப இங்க உயிரோட தேவை இருக்காது .,

ஆனா., ஒவ்வொரு ஆணுக்குள்ளும் பெண் இருக்கு. ஒவ்வொரு பெண்ணு இருக்குன்னு தெரியறப்ப,  அங்க  காமம் ரென்டாம் பட்சம் ஆகிடும்கிராண்டனி கிழவர் சொல்ல அம்மா கைதட்டி சந்தோஷப்பட்டார்.

அவர் கண்கள் அங்குமிங்கும் எதையோ தேடிக் கொண்டிருந்தன.

“,, என்ன தேடுறீங்க, உச்சிக்கு வந்துட்டோமே.. இனிமே நகர வேணாம்.. அப்படியே அடிச்சிகிட்டு போய்டும்.. அந்த சுழல்ல போய் நின்னுக்குவோமா? “

இல்ல தாயே., எங்க இருந்தோ மகிழம் பூ வாசனை வருதுஅந்த ஆன்மா பூவாசனைக்கு ஏங்கியது.

இதோ இங்கேயே இருக்கே? மகிழம்பூ மரம்பார்த்து விட்டு பூ பறித்தார்..

ஐயோ இப்ப எதுக்கு இந்த மகிழம்பூ?”

இப்போ.,  இந்த நேரத்தில் எதுக்கு எனக்கு?” அம்மா அலுத்துக் கொள்ள.,

அந்த வாசனை எனக்கு ரொம்ப புடிக்கும்.   நீ  திரும்பி நில்லு

எதுக்கு?”

திரும்புடி பூ வைக்கணும் என்றார்.

(முற்றும்)

(திரும்புடி பூவை வைக்கனும்  முடிந்தது)


இரண்டு மாதங்களுக்கு பிறகு

·         ஓசூர் சந்திரசேகர் மருத்துவமனையில் இருந்து பூரண குணமாகி சுரேஷ் கிராண்டனி பங்களாவிற்கு திரும்பினான். அங்கு அவனுக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

 ·         ஹரிஷ் தான் செய்த தவறுக்கு கண்ணன், பெரியப்பா, ஆர்த்தி, சுரேஷிடம் மன்னிப்பு கேட்க குடும்பத்தில் காலம்காலமாக நீடித்த அண்ணன் தம்பி பகை முடிவுக்கு வந்தது.

 ·         சுரேஷ் -  ஆர்த்தி திருமணம் விமரிசையாக நடைபெற்றது.

 ·         ஓசூரில் தாக்கப்பட்ட வழக்கில் லிங்கப்பாவை சேர்க்க வேண்டாம் என சுரேஷ் கண்டிப்பாக சொல்லிவிட்டான்.  பவித்ராவின் தந்தைக்கு அவமானம் என்றால்,  அது நமக்கும் அவமானம் என்பதால் லிங்கப்பா விஷயம் வெளீயே வராமல், அந்த நான்கு பேர் மட்டுமே வழக்கில் சேர்க்கப்பட்டனர். பவித்ரா சுரேஷ்க்கு நெகிழ்ந்து போய் நன்றி தெரிவித்தாள்.

 ·         சுரேஷ் கிராண்டனி குடும்பத்தின் ஜே எம் டி யாக பொறுப்பேற்றான் . ஒட்டுமொத்த இந்தியாவின் அனைத்து புராஜக்ட்டும் சுரேஷின் கண்காணிப்பின் கீழ் வந்தது.

 ·         இந்தியாவைத் தவிர அனைத்து நாடுகளிலும் புராஜக்ட்களை மேற்கொள்ளும் வேலையை  ஹரீஷ் பார்த்துக் கொண்டான்.

 ·         தனது மகளை மணமுடிக்க சுரேஷ் மறுத்த காரணத்தால்

ஏல் எல் எஃப்  நிறுவனத்திற்கும்,  கிராண்டனி  நிறுவனத்திற்கும்  புதிய பகை மெல்ல வளர்ந்தது.

 

 ·         சுரேஷும், கீர்த்தனாவும் அந்த கடைசி ஒரு வாரத்தில் தாங்கள் செய்த எல்லை மீறிய தவறுகளையும், அதனால் உண்டான இன்பத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க தொடங்கினார்கள்.

 ·         இந்த கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைவருமே அந்த கொஞ்ச நாள் தடுமாற்ற வாழ்க்கைக்கு பின் புதிய வாழ்க்கையை வாழ துவங்கினார்கள் .

 ·         மலர்விழி மட்டும் , சுரேஷை மறக்க முடியாமல் வெகு நாள்கள் தவித்தாள். என்றாலும் யாதார்த்ததை புரிந்து கொண்டு அவனை விட்டு விலகினாள். எழுத்து பணிகல், சமூக சேவைகளில் கவனம் செலுத்தினாள்.

 அடுத்த சில ஆண்டுகளில் ..

 ·         கீர்த்தனா மனோவின் குழந்தையை பெற்றெடுத்தாள். அந்த பெண் குழந்தைக்கு பான சங்கரி என பெயரிட்டாள்.

 ·         மனோ தென்னிந்தியாவின் திட்ட இயக்குனர் பொறுப்பேற்க., கண்னன் சார்  வட இந்தியாவின் திட்ட இயக்குனராக பொறுப்பேற்றார்.

 ·         சுரேஷின் பெரியப்பா மரணமடைந்து விட, பெரியம்மா கிராண்டனி பங்களாவில் வந்து தங்கி குடும்பத்தை பார்த்துக்கொண்டார். ஹரிஷ் சேர்மன் ஆனான். சுரேஷ் எம் டி ஆக பொறுப்பேற்றான். ஆர்த்தி நிறுவனத்தின் ஜே எம் டி ஆனாள்.

 ·         கிராண்டனி பங்களாவின் வளாகத்தில் பவித்ரா மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டது. பவித்ரா ஹாஸ்பீடல் சேர்மன் ஆனார்.

 ·         அந்த மருத்துவமனையில் பெண்கள் ஆண்களுக்கான கருத்தரிப்பு மையம் இலவசமாக தொடங்கப்பட்டது.

 ·         ஓசூர் பானசங்கரி அம்மன் கோயில் கிரான்டனி குடும்பம் சார்பாக 200 கோடி செலவில் அனைத்து வசதிகளோடு பிரம்மாண்டமாக கட்டப்பட்டு மறு சீரமைக்கப்பட்டது. மாநிலத்தின் முதல்வர் குடமுழுக்கு விழாவிற்கு பங்கேற்றார்.

 ·         அங்கு ஏழைகளுக்கு தினமும் 3 வேளை அன்னதானம் போடும் பொறுப்பையும் கிராண்டனி குடும்பம் ஏற்றுக் கொண்டது.

 ·         பானசங்கரி கோயிலுக்கு அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டு பவித்ரா அதன் தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றாள்.

 ·         சுரேஷூம் ஆர்த்தியும் மாதம் ஒரு முறையாவது அந்த கோயிலுக்கு வந்து நிர்வாக பணிகளை மேற் கொண்டார்கள் . வரும் மக்களுக்கெல்லாம் கை வலிக்க, வலிக்க சோறு போட்டு  மகிழ்ந்தார்கள்.

 ·         சுரேஷுக்கு அதன்பிறகு அலுவலகத்தில் வெளிநாடுகளில் தொழில் நிமித்த பயணங்களில் எத்தனையோ அழகான பெண்கள் வந்தாலும் அவர்கள் எவரையமே ஏறெடுத்து பார்க்காத, காமவயப்படாத முதிர்ச்சி அடைந்த ஆண்மகனாக மாறி இருந்தான்.

 ·         எல்லாருமே கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்று ஒழுக்கமான வாழ்க்கைக்கு, பாதைக்கு திரும்பினார்கள்.

 ·         சுரேஷ் - ஆர்த்திக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது,  அந்த குழந்தைக்குகீர்த்தனா என பெயரிட்டான்.

(அடுத்த  பதிவில் பின்னுரை வெளியாகும்)

---------------------------------------------

ஏறத்தாழ   நான்கரை  ஆண்டுகள்  பிளாக்கரில் திபூவை  பயணம் இன்றோடு இனிதே முடிந்தது..


இத்தொடர் முழுதாக  முடிந்து விட்டபடியால், திபூவை யில் விடுபட்ட  கீழ்கண்ட தனி டிராக்குகள் மட்டும் இனி பிளாக்கரில்  தொடராது..என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

வேண்டுவோர் தனி விற்பனையில்  பெற்றுக் கொள்ளவும்


1. அபிஷேக்- சுரேஷ்- நிவேதா- தாமஸ் ( பாகம் 32)

அவள் ஏன் அப்படி?


2. ரஷீதா- பரீனா- ரியாஸ்- சந்திரா-  சல்மா ( பாகம் 33)

 அந்தந்த நேரத்து காமங்கள்.


3.  வீணா- சுமதி- கௌதம்-விஜய் (பாகம் 34)

அனுமதிக்கபபட்ட துரோகங்கள்


4. சுரேஷ், பத்மா, ஷ்யாம், பாபு, அகல்யா , நிர்மலா, விஜயலட்சுமி, ரேனுகா, சுஷ்மிதா, சந்தியா, மாதேஷ்

மாயத்திரை


ஆகிய  திபூவை  தொடரில் விடுபட்ட பாகங்களை  தனியே  தான் பெற்றுக்கொள்ளவேண்டும். 



வாசகர்கள் கவனத்திற்கு

35 பாகங்கள், 2500  எபிசோடுகள் 20 ஆயிரம் பக்கங்கள் கொண்ட  திரும்புடி பூவை வைக்கனும் மின் நூல்கள் இந்த இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டன.  

திபூவை மின் நூல்கள் முழுதாக வேண்டுவோர்   naveenavathsayana@gmail.com  அல்லது  authornavi@gmail.com  மின் அஞ்சல் அனுப்பி கேட்கலாம். சப்ஜெக்டில் TPV  E Book All Parts  என குறிப்பிடவும். 


நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா

(விரைவில் "கள்வெறி கொண்டேன் " முழு நீள நாவல் இதே பிளாக்கரில் துவங்கும் )