“என்னங்க இப்படி சொல்லிட்டான்?” வேகமாய்
ஓடிக் கொண்டிருந்த கிரான்டனி மனைவி டக்கென
நின்று விட.
கிழவர் அவளை கும்பிட்டார்.,
“அட
என்னங்க சின்னபிள்ளை மாதிரி”
“ஏன்
தாயே உனக்கு தெரியாதா? இது தான் முடிவுன்னு..
அவள் சிரித்தாள்.
“இந்த
கிரான்டனியை தூக்கி நிறுத்தனதும்., என்னை
கரை சேத்ததும் என் ஃபிரண்ட் கண்ணன் தான்.. ஆனா.. என்னால
அவனுக்கு எந்த நன்மையும் செய்ய முடியல., இப்பவாச்சும்
சுரேஷ் மூலமா செய்ய முடிஞ்சதே”
“ இந்த
ஆர்த்தி கொடுத்து வெச்சவ இல்ல?”
“ம்ம்
சுரேஷ் தான் கொடுத்து வெச்சவ”
“உண்மையிலயே
நம்ம பிரார்த்தனையில்தான் , அழுகையில தான் அந்த உயிரு
பிழைச்சதா?”
“ம்ம்ம்
அப்படி சொல்ல முடியாது.. அந்த கோயில்ல சுத்தி பாத்து
இந்த கோயிலை சீரம்மைப்பு பண்ணன்னும். ஏழைங்களூக்கு ஏதாச்சும் நல்லது பண்ணனும்னு தோணப்பவே ., பானசங்கரி
உச்சி குளுந்துட்டா., நாம என்ன பண்ணோம்..? நாம
வெறும் கருவி தானே”
“சரி… இனிமே
அவனுக்கு எந்த கெட்ட நினைப்பும் வராதா? எந்த
பொம்பள மனசையும் கெடுக்க மாட்டானா?”
“மாட்டான்னு
தான் தோனுது. அப்படி பண்ண அவ ஒத்துக்கமாட்டா.. அவன்
நிழலு அவன் கூடவே இருக்கும்”
“யாரு.. பான சங்கரி
நிழலா?’
“இல்ல., ஆர்த்தி” என்றார்
கிழவர்.
அம்மா ஆனந்தப்பட்டார்
“இந்த அழகு, நடை, உடை, வாசனை. அலங்காரம், திருமணம், பந்தா
வெட்டி கூச்சல், ஆசை, இச்சை, தளுக்கு
மினுக்கு எல்லாம் அந்த ஒன்னுத்துக்குதான். அது இன
பெருக்கம் செய்யத்தான்.. அந்த பேரண்டத்தில் ஒரு ஒரே துளி
விந்து துளி போய் சேரதுக்கு தான் இங்க இத்தனை ஆட்டம். இவ்ளோ
இடியாப்ப சிக்கல் வாழ்க்கை., சம்பவங்கள்..,
கருப்பைக்குள்ள போன செல்லுல
ஆனும் பெண்ணும் ஒன்னா இருந்துட்டு அப்பறம் அது மொத்தமும் ஆணாவோ , பெண்னாவோ
மாறி போய்டுது.. அப்பதிலருந்து வெளியே பிறந்தப்பறம் தன் கிட்ட இருந்த ஆணையோ அல்லது பொண்ணையோ சதா இன்னொரு செல்
தானாவே தேடிக்கிட்டிருக்கு. அதான் இயல்பு, அதான்
காமம்.,
இவ்வளவு மென்மையான்னு ஆண் ஏங்க., இவ்ளோ
முரடான்னு பெண்ணு தேட..
இப்படியே கோடிக்கணக்காக வருஷம்
போய்கிட்டிருக்கு. இன்னும் போகும்., இது
நிக்கறப்ப இங்க உயிரோட தேவை இருக்காது .,
ஆனா., ஒவ்வொரு
ஆணுக்குள்ளும் பெண் இருக்கு. ஒவ்வொரு பெண்ணு இருக்குன்னு
தெரியறப்ப, அங்க
காமம் ரென்டாம் பட்சம் ஆகிடும்” கிராண்டனி
கிழவர் சொல்ல அம்மா கைதட்டி சந்தோஷப்பட்டார்.
அவர் கண்கள் அங்குமிங்கும் எதையோ தேடிக் கொண்டிருந்தன.
“,, என்ன தேடுறீங்க, உச்சிக்கு வந்துட்டோமே.. இனிமே
நகர வேணாம்.. அப்படியே அடிச்சிகிட்டு
போய்டும்.. அந்த சுழல்ல போய்
நின்னுக்குவோமா? “
“இல்ல
தாயே., எங்க இருந்தோ மகிழம் பூ வாசனை
வருது” அந்த ஆன்மா பூவாசனைக்கு
ஏங்கியது.
“இதோ
இங்கேயே இருக்கே? மகிழம்பூ மரம்” பார்த்து
விட்டு பூ பறித்தார்..
“ ஐயோ இப்ப எதுக்கு இந்த
மகிழம்பூ?”
“ இப்போ., இந்த
நேரத்தில் எதுக்கு எனக்கு?” அம்மா
அலுத்துக் கொள்ள.,
“அந்த வாசனை எனக்கு ரொம்ப புடிக்கும். நீ திரும்பி
நில்லு”
“எதுக்கு?”
“திரும்புடி பூ
வைக்கணும்” என்றார்.
(முற்றும்)
(திரும்புடி பூவை வைக்கனும் முடிந்தது)
இரண்டு மாதங்களுக்கு பிறகு
·
ஓசூர்
சந்திரசேகர் மருத்துவமனையில்
இருந்து பூரண குணமாகி
சுரேஷ் கிராண்டனி பங்களாவிற்கு திரும்பினான். அங்கு
அவனுக்கு பெரிய அளவில்
வரவேற்பு கொடுக்கப்பட்டது.
ஏல் எல் எஃப் நிறுவனத்திற்கும்,
கிராண்டனி
நிறுவனத்திற்கும் புதிய
பகை மெல்ல
வளர்ந்தது.
(அடுத்த பதிவில் பின்னுரை வெளியாகும்)
---------------------------------------------
ஏறத்தாழ நான்கரை ஆண்டுகள் பிளாக்கரில் திபூவை பயணம் இன்றோடு இனிதே முடிந்தது..
இத்தொடர் முழுதாக முடிந்து விட்டபடியால், திபூவை யில் விடுபட்ட கீழ்கண்ட தனி டிராக்குகள் மட்டும் இனி பிளாக்கரில் தொடராது..என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.
வேண்டுவோர் தனி விற்பனையில் பெற்றுக் கொள்ளவும்
1. அபிஷேக்- சுரேஷ்- நிவேதா- தாமஸ் ( பாகம் 32)
2. ரஷீதா- பரீனா- ரியாஸ்- சந்திரா- சல்மா ( பாகம் 33)
3. வீணா- சுமதி- கௌதம்-விஜய் (பாகம் 34)
4. சுரேஷ், பத்மா, ஷ்யாம், பாபு, அகல்யா , நிர்மலா, விஜயலட்சுமி, ரேனுகா, சுஷ்மிதா, சந்தியா, மாதேஷ்
ஆகிய திபூவை தொடரில் விடுபட்ட பாகங்களை தனியே தான் பெற்றுக்கொள்ளவேண்டும்.
வாசகர்கள் கவனத்திற்கு
35 பாகங்கள், 2500 எபிசோடுகள் 20 ஆயிரம் பக்கங்கள் கொண்ட திரும்புடி பூவை வைக்கனும் மின் நூல்கள் இந்த இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டன.
திபூவை மின் நூல்கள் முழுதாக வேண்டுவோர் naveenavathsayana@gmail.com அல்லது authornavi@gmail.com மின் அஞ்சல் அனுப்பி கேட்கலாம். சப்ஜெக்டில் TPV E Book All Parts என குறிப்பிடவும்.
நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா
(விரைவில் "கள்வெறி கொண்டேன் " முழு நீள நாவல் இதே பிளாக்கரில் துவங்கும் )