மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, August 25, 2021

1503 ( திரும்புடி பூவை வைக்கனும்- பாகம் 26)

 

வீணா அழகி , திருமணமானவள். அவள் கணவன் ஆனந்த்.  கெமிக்கல் படித்தவன். பெங்களூருல் ஒரு நிறுவனத்தில்  பெரிய வேலைக்காக முயன்று கொண்டிருந்தான். சுகன்யாவுக்கு வீணா உறவுக்கார பெண் மட்டுமல்ல, நெருங்கிய தோழியும் கூட. வீணா மட்டுமல்லாது சுகண்யாவின் சொந்தம் எல்லாம் சனி, ஞாயிறு என்றால் பிரபுவின் வீட்டிற்கு படையெடுத்து விடுவார்கள்.

இவர்களுக்கெல்லாம் ஏவல் செய்வதே ஜீவாவிற்கு ஒரு முக்கிய வேலை ஆகிவிட்டது.  அது இன்னும் அவனுக்கு அவமானமாக இருந்தது .

'வேலை இல்லாம வீட்லதானே இருக்கே.. செஞ்சா என்ன?'  என அண்ணியும் , அண்ணன் பிரபுவும் மாறிமாறி ஜீவாவை இடித்துக்காட்ட.,

அந்த பாழாய்ப்போன வேலைதான் இவனுக்கும் கிடைக்கவில்லை.  இன்ஜினியர் வேலைதான் என்றில்லை, எந்த வேலை இருந்தாலும் செய்வதற்கு அவன் தயாராக இருந்தான். அப்படி அவனுக்கு பல வேலைகள் கிடைத்தது. ஆனால் எந்த வேலையும் அவனுக்கு பிடிக்கவில்லை. எலக்டிரிக்கல் இன்ஜினியரிங் டிகிரி எல்லாம் ஓரம் வைத்துவிட்டு ஒரு ஆபீஸில் ஆபிஸ் பாயாக கூட வேலை கேட்டு சேர்ந்தான்.

ஆனால் ஒரே வாரத்தில் அவன் இன்ஜினியரிங் படித்தவன் என்பதை தெரிந்து கொண்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் .

தினமும் பேப்பரை பார்த்து ஆட்கள் தேவை விளம்பரத்தைப் பார்த்து வேலைக்கு போவான். ஆனால் மதியமே வீட்டுக்கு வந்து விடுவான். மதியம் வரும்போது வேலை செய்த இடத்தில் சாப்பாட்டுக்கு காசு வாங்கிக்கொண்டு வந்து விடுவான் . மறுபடியும் அந்த நிறுவனத்திற்கு செல்லவே மாட்டான்.  ஏறக்குறைய சென்னை முழுக்க எல்லா ஏரியாக்களிலும் அவன் வேலைக்கு போய் சேர்வதும் பாதி நாளில் திரும்புவதுமே பொழைப்பாக போய்விட்டது .

முதலில் எல்லாம் அம்மாவிடமும் அண்ணனிடமும் காசை திருடி செலவு செய்தான். இப்போது அம்மா இல்லை .அண்ணன் ரூமில் போகவே முடியாது. அண்ணி முறைத்து நிற்பாள். காசுக்கு படு திண்டாட்டம் ஆகிவிட்டது. அண்ணன் இல்லாத நேரத்தில் அண்ணியிடம் தான் அவன் காசு கேட்க வேண்டும்.  அதற்காக அவள் சொல்வதை எல்லாம் இவன் செய்துவந்தான். அவன் மார்க்கெட் போவது, மளிகைக் கடைக்குப் போவது, மொட்டை மாடியில் துணி காய வைப்பது என வேலைகள் ஏராளம் ஏராளம்..

கையில் துடைப்பத்தை கொடுத்து வீட்டை பெருக்க தான் சொல்லவில்லை . ஆனால் கண்டிப்பாக இவள் ஒருநாள் சொல்வாள் என்று தான் அவனுக்கு தோன்றியது . அதற்குள் ஒரு நல்ல வேலை கிடைத்தால். உடனே ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்கொண்டு இந்த ரூமில்செட்டில் ஆகிவிட வேண்டும் என நினைத்தான். மும்முரமாக வேலை தேடினான்

ஒரு தடவை சுகன்யாவை ஜீவா முறைத்து கோபமாக பேச

"என்ன முறைப்பு வேண்டி கிடக்குது உங்களுக்கு? எங்க வீட்டுக்காரர் சம்பளத்தில் தானே சாப்பிடுறே?  ஒரு வேலைக்கு இன்டர்வியூ போனா கூட,  நாங்க தானே உங்களுக்கு காசு கொடுத்து அழ வேண்டி இருக்கு. என பிரபுவின் எதிரிலேயே திட்டி முழங்க பிரபுவுக்கு குஷியாக இருந்தது . அய்யோ காலம் இப்படியே போய்விடுமா? பயந்தான் ஜீவா.

அவனுக்கு ஒரு வழி மிக லேசாக பிறந்தது... பாடி வீல்ஸ் இண்டியாவில் ஒரு சாதரண எலக்டீரிஷியன்  வேலையில் சேர்ந்தான். சுமாரான சம்பளம்.ஆனால் மோசமில்லை. சாப்பாட்டுக்கும் கவலையில்லை. ஒட்டிக்கொண்டான்

இந்தப் பிரபுவுக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைந்து விட்டதே , காரணம் படிப்பு. இப்பவே நாற்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறாள் . கட்டி கொண்டு வந்த அந்தப் பெண் 25 ஆயிரம் சம்பாதிக்கிறாள். கார் வேற வாங்க போகிறார்களாம். பிரபு ஜெகஜ்ஜோதியாக வாழ்கிறான்.. இப்ப குழந்தை வேண்டாமென தள்ளிப் போட்டு விட்டார்களாம்,

எப்ப பார்த்தாலும் ஒரேயடியாக இழைகிறார்கள்.  பைக்கில் அவளை கூட்டிக்கொண்டு அவன் போவதும் வருவதும் மல்லிப்பூ வாசமும் சீட் வாசமும் வீட்டையே தூக்குகிறது. ஒரே வீட்டில் வசிக்கும் அண்ணன் வசதியாக இருப்பதும்,  தம்பி காசில்லாமல் இருப்பதும் மிகவும் பெரிய கொடுமை . கொடுமையிலும் கொடுமை

கொஞ்சம் கூடசங்கோஜமில்லாமல் , வீட்டில் ஒரு கல்யாணமாகாத இளைஞன் இருக்கிறான்.. என்ற பிரக்ஞை இன்றி., பகல் நேரத்தில் கூட கதவை சார்த்தி கொண்டு.....ஆஹஹஹ ஹா என அலறிக்கொண்டு ச்சே...அண்ணி வாங்கி வந்த அந்த . கட்டில் ஆடும் சப்தத்தில்... ஜீவா ஆடி போவான்..  ஒரு பக்கம் பொறாமை., ஆதங்கம் இன்னொரு பக்கம் விரக்தி..

த்தா.. கடைசியில  இவங்க கூத்தை வேடிக்கை பாக்க வெச்சுட்டானே..

இரவு எப்பவாவது தண்ணீர் குடிக்க, அவன் ரூமை விட்டு ஹாலுக்கு வரும் போது அந்த ரூமில் கேட்கிற படுக்கை காம சப்தங்கள், இரைச்சல்கள்.,  மெல்லிய முனகல்கள்., மாடு., பன்னி.., நாயே.. மெல்ல செய்டா போன்ற திட்டுகள்.,  அவன் காதில் காமத்துடன் காரசாரமாக பாய்ந்து கொண்டே இருந்தது .

உச்சகட்டத்தில் அந்தக் கட்டில் ஆடுகிற சத்தம் கேட்டு அவனுக்கு மகா வெறுப்பாக இருந்தது.  காணாததை கண்ட மாதிரி  இப்படியா நடந்து கொள்வார்கள்?  ஒரு வயசு பையன் இருக்கும் வீட்டில் கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல்?  சே  பெட்ரூமில், நைட்டில் மட்டும்  நடந்து கொண்டால் கூட பரவாயில்லை.,  காலை விடிந்தவுடன் இவர்கள் கூத்துதான் .

பிரபுவுக்கு தலையை தட்டி விடுவதும், அவனுக்கு ஊட்டி விடுவதும் இதெல்லாம் ஜீவாவிற்கு பார்க்கவே பிடிக்கவில்லை,  அவனுக்கு வீடு நரகமாகிப் போனது. இது பிரபு மேல் இருக்கக்கூடிய பொறாமையா? என்பது அவனுக்கு தெரியவில்லை. ஆனால்,  பிரபு நம்மை வேண்டுமென்றே அவமானப்படுத்துகிறான்.  இப்படி எல்லாம் செய்தால் இந்த வீட்டில் இருக்க விடாமல் ., அவனே  துணியை எடுத்து கொண்டுகிளம்பிவிடுவான்

 என எதிர்பார்க்கிறான் போல .
x

தாய்மாமனிடம் போய் இதெல்லாம் நாம் சொல்ல முடியுமா?  என நினைத்துக் கொண்டு அவன் பல்லைக்கடித்துக்கொண்டு  பொ று த்துக் கொண்டிருந்தான் ஜீவா. அதெல்லாம் கொடுமையான  காலகட்டம்,.