ரேகா கண்விழித்துப் பார்க்க மணி 6 ஐக் காட்ட அவளுக்கு
தூக்கி வாரிப் போட்டது. ‘அட எல்லாம் கனவா? எவ்வளவு நேரமா நான் தூங்கி இருக்கிறேன்?” எழுந்து நின்றாள். அடேயப்பா உடம்பே மசாஜ் பிடித்து
எண்ணெய் குளியல் செய்து வெந்நீரில் குளிப்பாட்டி எடுத்தது போல அத்தனை பிரஷ்ஷாக இருக்கிறது
.
தலையில் சதா எப்போதும் இருக்கும் அந்த விறுவிறு குத்தல்
வலி சுத்தமாக இல்லை. நல்ல மாத்திரை தான். அவள் அவசரமாக இருந்து உடைகளை சீராக உடுத்தினாள்.
பிள்ளைகள் வந்து போன அடையாளம் இருந்தது. டியூஷனுக்கு போயிருக்க வேண்டும். எப்போதும்
இப்படி தூங்கவில்லையே? ஆனால், இன்னுமும் அந்த மாத்திரையின் வீரியம் தனது உடலுக்குள்ளே
இருப்பது போலவே அவள் உணர்ந்தாள். மணி எட்டாக அவளது கணவன் வந்தான். அவன் பேசியது சிடுசிடுத்தது
எதையுமே அவள் பொருட்படுத்தவில்லை. அவள் ஏதோ தனி உலகத்தில் இருப்பது போல தோன்றியது.
இரவு மீண்டும் படுக்க நல்ல தூக்கம் தூங்கி எழுந்தாள்.
காலையில் எழுந்து கண்ணாடியில் பார்க்க முகமே பிரஷ்ஷாக
இருந்தது. அவள் பெற்ற மகள்களே ‘என்னம்மா
இவ்ளோ பிரஷ்ஷா இருக்க?” என கேட்டு விட்டார்கள் .அவளுக்கு எதுவும் சொல்ல தோன்றவில்லை
.
அன்று மதியமும் அந்த மாத்திரையை போடலாமா?’ என நினைத்தாள்.
ஆனால், போட அவளுக்கு மனது வரவில்லை. இன்னும் மீதி இருப்பது இரண்டே மாத்திரைதான்.
அதையும் தவிர, நேற்று நடந்த அந்த திடீர் உற்சாகம் எதனால் நிகழ்ந்தது?
மாத்திரையாலா?’ என தெரிந்து கொள்ள விரும்பினாள். அன்று அவள் மாத்திரை போடாமலே இருந்தாள்.
எதுவும் நிகழவில்லை.
அதற்கு மறுநாள் துணிந்து அந்த மாத்திரையை போட்டாள். கதவை
இறுக்கமாக தாழிட்டு விட்டு அவள்
மெத்தையில் படுக்க அவள் உடலில் முந்தா நாள் நடந்த அதே மதனகாமராஜ ஆட்டம் மறுபடியும்
தினவெடுத்து ஆடியது. அவள் நெடு நேரம் மீளா போதையில் சென்றாள். அவளுக்கு அந்த போதையில்
இருந்து விடுபட மனசே வரவில்லை . மனம் லேசாக உடல் லேசாக.இனம் புரியாத மகிழ்ச்சியில்
ரேகா புரண்டு புரண்டு படுத்தாள். தான் ஒரு தினசாக இருக்கிறோம் என்பது அவளுக்கே நன்றாக
புரிந்தது .
“ என்னம்மா
நீ ஒவ்வொரு நாளைக்கு ஒரு மாதிரி இருக்கே? “ என மகள்கள் கிண்டல் அடித்தார்கள். கண்டிப்பாக இந்த மனநிலை, இம்ரான் தந்த மாத்திரை
செய்யும் மாயம்தான். இது ஒரு சாதாரண தலைவலி மாத்திரை தான். ஆனால், அதில் இருக்கும்
ஒரு சில கெமிக்கல்கள் நமது உடலை இன் பேலன்ஸ் செய்கிறது என்பது மட்டும் அவள் குத்துமதிப்பாக
தெரிந்து கொண்டாள்.
மூனாவது மாத்திரையை இன்று போட்டுவிட்டால், மொத்தமும் காலி
ஆகிவிடுமே? என யோசித்தாள். காலியானால் என்ன?
போய் வாங்கிக் கொண்டால் போகிறது. காசு கொடுத்தால் மாத்திரை தர போகிறார்கள். அவளால்
அந்த மனமகிழ்ச்சியை விடவே முடியவில்லை. எனவே, அந்த மாத்திரையும் அவள் போட்டாள். அந்த
அளவிலாத போதை தரும் சுகத்தை அன்றும் அனுபவித்தாள்.
நான்காவது நாள், விடிந்த உடனையே அந்த மாத்திரைக்கு அவள்
அலைந்தாள். திரும்ப நாமே ராதா மெடிக்கலஸ் போவது
நன்றாக இருக்காது. அது சரி ஏண் ராதா மெடிக்கல்ஸ் தான் போகவேண்டும்? ஜாக்கியை கூப்பிட்டு
அந்த தலைவலி மாத்திரையின் பெயரை எழுதி மெடிக்கல்ஸ் ஷாப் போய் வாங்கி வர சொன்னான். அவன்
வடபழநிலியோ வேற எங்கேயோ போய் 10 டாப்லெட்ஸ் வாங்கி வந்தான். மாத்திரையை பார்த்ததும் அவளுக்கு உற்சாகம் பீறிட்டது.
எல்லாவேலையும் முடித்துவிட்டு காத்திருந்து மதியம் 2:30 மணிக்கு மணிக்கு ஒரு
மாத்திரை போட்டாள் . ஆர்வமாக படுத்தாள். பெரிய ஏமாற்றம் ஒன்றுமே நிகழவில்லை போன தலைவலி
திரும்ப வந்துவிடும் போல இருந்தது என்னாச்சு? என்னாச்சு? எதுவும் நடக்கவில்லையே?
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. மாத்திரையை மாற்றி வாங்கி வந்து விட்டானா இந்த சோம்பேறி?’
என்பதாய் மருந்து பட்டையை திருப்பி திருப்பி பார்த்தாள். அவள் கடும் கோபம் அடைந்தாள்.
அவளுக்கு என்ன தேவையோ அந்த மாதிரி ஏதும் அதில் கிடைக்கவில்லை.
அன்று முழுவதும் அவள் எரிச்சலாக இருந்தாள். வீட்டுக்கு வந்த மகள்களிடமும் கணவரிடமும்
எறிந்து எரிந்து விழுந்தாள்..
ஜாக்கி வாங்கி தந்த மாத்திரையில் ஏன் எந்த மாற்றமும் இல்லை.
அதே மாத்திரை தான். ஆனால் வேறு மெடிக்கல்சில் வாங்கும் போது அது சாதாரணமாக இருக்கிறது.
ஒருவேளை ராதா மெடிக்கல்சில் மட்டும்தான் இது போல மாத்திரை கிடைக்குமா? சரி அங்கேயே வாங்கலாம்.
மறுநாள் காலையில்
கணவனிடம் சீட்டை கொடுத்து ராதா மெடிக்கல்சில் இந்த மாத்திரை கண்டிப்பாக வாங்கி வர வேண்டும்’
என உத்தரவிட்டாள். அதை அடிக்கடி அவனுக்கு போன் செய்து ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தாள்.
இரவு கணவன் கிளம்பு கிளம்பும்போதும் மறுபடியும்
ஞாபகப்படுத்தினாள். .ராதா மெடிக்கல்ஸில் மட்டும் தான் வாங்கனும். புரியுதா?’ அவன் ராதா
மெடிக்கல்சில் அதே மாத்திரை வாங்கிக்கொண்டு ஸ்கூட்டரில் கிளம்பும்போது, டேப்லட்
வாங்கியாச்சு’ என சொன்ன போதுதான் அவளுக்கு உயிரே வந்தது.
இரவு யாருக்கும் தெரியாமல் 9:00 மணிக்கு அந்த மாத்திரையை
போட்டாள். ஆனால் அந்த மாத்திரையையும் எந்த பலனையும் தரவில்லை. அவளுக்கு கடும் எரிச்சலாக
இருந்தது. ஏதோ ஒரு தப்பு நடக்கிறது. என்னவென தெரியவில்லை. ராதா மெடிக்கல்சில் இம்ரான்கொடுத்த
மாத்திரை தான் கணவனும் வாங்கி வந்திருகிறான். ரென்டுமே பிங்க் கலர் டேப்லட். யெஸ் அதே
மாத்திரை தான். ஆனால், நாம் போட்ட மாத்திரை போல இது இல்லை. என்ன நடக்கிறது? இதை யாரிடம்
கேட்பது?
ஒன்றுமே புரியாமல்
திகைத்தாள். இம்ரானுக்கு போன் பண்ணி கேட்கவும் பயம். ஏற்கனவே அந்த மாத்திரையை மூன்று
நாள் போடாமல் அவள் வெகுவாக மாறிவிட்டிருந்தாள். அவளது பொறுமையான இயல்பு அவளை விட்டு
போயிருந்தது. அந்த மாத்திரை போட்டால் தான் அவளால் இயல்பு நிலைக்கு வர முடியும் என தோன்றியது.
ஐயோ இதுதான்
அடிக்ஷன் என்பார்களா? எனக்கு அடிக்க்ஷனா?
இந்த மாத்திரையை போடுவதை விட்டு விடலாமா?’ என அவளுக்கு
தோன்றினாலும் அந்த மாத்திரை தந்த அந்த மூன்று மணி நேரம் சுகத்தை அவளால் மறக்கவே முடியவில்லை
.
நோ.. நோ.. கண்டிப்பாக அந்த மாத்திரை வேண்டும். என்ன செய்வது?’
அவள் பொறுத்து பொறுத்து பார்த்து இம்ரானுக்கு கால் செய்தாள். அவள் செய்த பல தவறுகளில்
இதுவும் ஒன்று..
இம்ரான் ரேகாவின் போன்காலை கடந்த சில நாட்களாக எதிர்பார்த்து
காத்துக் கொண்டிருந்தான் , டேப்லட் போட்டாளா? இல்லையா? அவன் எதிர்பார்த்தது போல ரேகா
5 நாள்கள் கழித்து அவனை கூப்பிட்டு விட்டாள்.
“ஹலோ யாருங்க சொல்லுங்க” என்றான் தெரியாது போல.
“ நா நான் ரேகா பேசுறேன்..”
“ ரேகா.. எந்த ரேகா?”
“ அன்னைக்கு நான் மாத்திரை வாங்கிட்டு போனேனே “
“‘ஐயோ ஒரு நாளைக்கு நிறைய பேர் மெடிசன் வாங்கிட்டு போறாங்க.
நீங்க என்ன மாத்திரை ? எப்ப வாங்கிட்டு போனீங்க?”எனக்கு தெரியலையே மேடம்” படுத்தறானே?
“ இல்லங்க நான் கூட அன்னைக்கு ................
வாங்கினேணே..’ என யோசித்தாள். என்ன சொன்னால் அவனுக்கு ஞாபகம் வரும் என தெரியவில்லை.
“ நீங்க கூட சொன்னீங்களே என்னை பாக்குறதுக்கு பவித்ரா
லோகேஷ் மாதிரி இருக்கீங்கன்னு” அவள் வெட்கத்தை
விட்டு சொல்ல., அவன் சிரித்தான்.
“சொல்லுங்க சொல்லுங்க ஞாபகம் இருக்கு., உங்களை மறக்க
முடியுமா? யப்பா என்ன பார்வை.. அது ? ஐ மீன் முறப்பு.. சொல்லுங்க ரேகா மேடம்? எப்படி
இருக்கீங்க? நான் கொடுத்த மாத்திர உங்களுக்கு நல்ல வேலை செஞ்சுச்சா?’
“........அ...அ...அது.... நல்லதா இருந்துச்சு.. அந்த தலைவலி
மாத்திரை இருக்குல்ல..? ஆமா அது மட்டும் காலி
ஆயிடுச்சு”
‘ ஆமா. அன்னைக்கு மூணு தாணே வாங்குனீங்க?”
“ ஆமா காலி ஆயிடுச்சு எனக்கு அது வேணுமே”
“ ஐயோ மேடம் அதுல பெரிய சிக்கல் ஆயிடுச்சு, அதான்
நீங்களே கால் பண்ணுவீங்கன்னு வெய்ட் பண்ணேண்... மேடம் “
‘ எ..எ... என்னங்க ஆச்சு ?” அவள் படபடப்பாக கேட்க,.,
“ அதாவது அது வேற மாத்திர. ஒரே மாதிரி இருந்ததால நான்
தெரியாத்தனமா மாத்திரை மாத்தி கொடுத்துட்டேன்”
“எ..எ..என்னது?”
“ஆ ஆமாங்க .,அது காஸ்ட்லி டேப்லட்.. எங்க ஓனர் அடி பின்னிட்டாரு”
“ அய்யய்யோ என்னங்க சொல்றீங்க?”
“ ஆமாங்க இது வந்து எதுக்குன்னா.., தாங்க முடியாத உடம்பு வலி இருக்கிறவங்க., தலைவலி இருக்கிறவங்க ரொம்ப எக்ஸ்ட்ரீமா டிப்ரஷன்ல
இருக்கிறவங்க ., சாப்பிடுற மாத்திரை இது.. இதை போட்டா உடம்பு தெம்பா இருக்கும். ரொம்ப காஸ்ட்லியான மாத்திரை., நான் உங்களுக்கு 30 ரூபாய்க்கு கொடுத்துட்டேன்னு’ சொல்லி
எங்க ஓனர் என பயங்கரமா திட்டிட்டாரு.
“ அடடா அந்த மாத்திரை எவ்வளவு? ” பயத்துடன் கேட்க,
“ அது ஒரு மாத்திரை மட்டுமே முன்னூறு ரூபா. நான் தெரியாத்தனமா
உங்களுக்கு நஷ்டத்தில் கொடுத்துட்டேன் மேடம்”
‘ அடடா சரி! அந்த மாத்திரை எனக்கு வேணுமே ?”
“ம்ம் இது உங்களுக்கில்ல உங்களுக்கு சாதாரண டேப்லட்
போறுமே ரேகா மேடம்.எதுக்கு இந்த டேப்லட்?.”
“ம்ம்ம் இதுவே தாங்க... எனக்கும் டிப்ரஷன்லாம்
இருக்கு:”
“ அப்படியா இந்த அழகான முகத்தில டிப்ரஷனா? சரி எத்தனை
மாத்திரை வேணும்?’
“ ஒரு பத்து மாத்திரை?” ஓ பத்து மாத்திரை வேணுமாடி
உனக்கு?.
“ பத்து டேப்லட் மூவாயிரம் ஆயிடுமே பரவாயில்லையா மேடம்?”
“பரவால்ல., ஏதாச்சும் விலை குறைக்க முடியுமா?’
“சரி ஈச் டூ ஃபிப்டி தாங்க.. பட், இப்ப கைவசம் மூனு டேப்லட் தான் இருக்கு...ஸ்டாக் இல்ல. சரக்கு
வந்தாதான்....”
“ஓ... சரி இப்போதைக்கு மூனு தாங்க.
மீதி அப்புறம் வாங்கிக்கறேன்”
“சரி ஓகே,...செவன் பிப்டி ரூபீஸ் ஜி பே பண்ணுங்க.
எனக்கு?”
“ம்ம் இப்பவே பண்றேன்.. நீங்க எப்ப தருவீங்க?”
“”ஏண் இவ்ளோ அவசரம்...ரொம்ப தலைவலியா உங்களுக்கு?’
“இ..இ..இல்ல.. பட்., மதியம் வேனும் எனக்கு?”
“ம்ம்ம் ஓகே... ரெடி பண்னிட்டு கூப்பிடட்டுமா? நேர்ல வந்து
வாங்கிக்கறீங்களா? “
“ நோ..என்னால,நேரில்லலாம் வர முடியாது, நீங்க வேணா வீட்டில்
வந்து கொடுக்க முடியுமா? அட்ரஸ் லொகோஷன் அனுப்பட்டுமா?”
“ உங்க வீட்டுக்கு நான் வரலாமா?”
“ வாங்க ., எப்ப எப்ப வருவீங்க”
“ உங்களுக்கு எப்ப வரணும் ?”
“ என தம்பி வீட்ல
இருப்பான். அவனுக்கு இந்த மாத்திரை எல்லாம் வாங்கி போட்டா பிடிக்காது. அவன் மூணு மணிக்கு ஜிம்முக்கு கிளம்பிடுவான் நீங்க
மூணு மணிக்கு மேல வரிங்களா? ரெய்ன்போ அபார்ட்மென்ட்ஸ், தேர்ட் ஃபுளோர் சி2 நம்பர்” என்றாள் .
“சரி ., நீங்க ஜி பே பண்னப்பறம் நான் மாத்திரை எடுத்துட்டு
வரேன்”
“ ப்ச்.. அமௌன்ட் இப்பவே பண்ணிடறேன். கன்பார்மா நீங்க
எடுத்து வாங்க”
‘”ம்ம்ம்..சரிங்க மேடம்” த்தா குட்டி வலையில் விழுந்துட்டா.. ஆனா
அவசரபடக்கூடாது. டைம் வேணும்.. எப்படியும் 10 டோஸ் வரைக்கும் அவளுக்கு
கன்டியூனிட்டி இருக்கனும்.. அவன் இரைக்கு காத்திருக்கும் கழுகு போல
காத்திருந்தான்.
அடுத்த நொடியே அவனது ஜி பேவில் பணம் வந்து உட்கார, ஸ்டோர் ரூம் போய் விசில் அடித்தபடி பத்து
மாத்திரை கொண்ட பட்டையை எடுத்து அதில் மூனு
மாத்திரை மட்டும் கிழித்தான்.
மணி இரண்டாக ரேகாவின் வீட்டிற்கு மாத்திரைகளை கவரில் போட்டு எடுத்துக் கொண்டு கிளம்பினான்
இம்ரான்.