கோபால் கொல்கத்தா மைய பேருந்து நிலையத்தில் காமினியை டிராப் செய்துவிட்டு
கல்லூரி போனான்.
காமினி மாமியார் ஊருக்கு செல்லும்
பேருந்தில் ஏறி ஊர் போய் இறங்கி தன் லக்கேஜுடன் ஒத்தையாக போய்
அந்த மந்தமான வெயிலில் வீட்டில் நுழைந்தாள். வீட்டின் கதவு ஒருக்களித்து
சாத்தப்பட்டிருந்தது. அத்தை, மாமா இருவரும் வீட்டில் இருந்தால்
கதவை தாழ் போட மாட்டார்கள். அவள்
லக்கேஜுடன் வீட்டில் நுழைந்தாள் வீட்டில் யாருமில்லை.
கிச்சன் போனாள். அத்தை
அங்கேயும் காணவில்லை.
அருகே பாத்ரூமில் வித்யா குளிக்கும்
ஓசை கேட்க., குரல்
கொடுக்கலாமா? என
நினைத்து அவள் பிறகு பேசிக் கொள்ளலாம் என மீண்டும் கிச்சன் போனாள்., மீதம் வைத்திருந்த டிபனை சாப்பிட்டுவிட்டு தன் அறைக்கு போய்
மெத்தையில் படுத்தாள். பயணக்
களைப்பு அவள் கண்களை இழுக்க,. அவள்
உடலுக்கு ஒரு அவசரமாய் மதிய தூக்கம் தேவைப்பட்டது.,
காமினி மெல்ல
தூங்கிப் போனாள்.
சோனு வியர்வை வடிய தோட்ட்த்தில் வேலை
செய்து கொண்டிருந்தான்.
மஞ்சள் ரோஜா தோட்டத்தில்
ரோஜாக்கள் முழு வளர்ச்சியில் முக்காலுக்கும் மேலே எட்டி கொண்டிருந்ததாய் அவனுக்கு
பட்டது.
பூவை பறித்து அடிகாம்பை படக்கெக்ன உடைத்தான் சோனு,. வெள்ளைப் பால் வர,
‘இன்னும்
இந்த பாலின் நிறம் மாறவில்லை.’ தனக்கு
தானே சொல்லிக் கொண்டான். பால்
லேசாக மஞ்சள் நிறம் ஆகவேண்டும்.
அதற்கு எப்படியும் நாங்கைந்து வாரமாவது தேவைப்படும்.
பூவை விரித்து உள்ளங்கையில் போட்டான்.
அவன் உள்ளங்கை அளவிற்கு அது இருந்தது.
“இன்னும்
பூவின் விட்டம் ஒரு அங்குலம் கூட வளரும். எல்லாம்
என் உழைப்பு. என்
உரம் தயாரிக்கும் பக்குவம்’ என
நினைத்து கர்வமானான்.
செடியை சுற்றி இருந்த பதரை மண்வெட்டியால்
கொத்தி கொத்தி அகற்றினான். உச்சியிலிருந்து
சூரியன் சாய வேர்க்க விறுவிறுக்க வேலை
செய்துகொண்டிருந்த சோனு சற்று
தொலைவில் இருந்த தனது ஓய்வு பந்தலுக்கு போய்
இளைப்பாறினான். அங்கே
இருந்த பட்டன் வைத்த செல்போனை கையிலெடுத்து நேரத்தைப் பார்த்தான்.
மணி 12 ஐ
தாண்டி இருந்தது.
வாய் ஊதிப் பார்த்தான். நேற்று குடித்த சாராய வாடை இன்னும்
போகவில்லை. மூலிகை
செடி எடுத்து பல் துலக்கினான்.
அவனுக்கு பசித்தது. தூரத்திலிருந்த
கஞ்சி கலயத்தில் அடைத்து வைத்திருந்த கூழினை
மடக் மடக் என குடித்தான்.
வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் கடித்துக் கொண்டான்.
தனது கையில் இருக்க இருக்கிற
மண்வெட்டியை உதறி
அங்கேயே போட்டான்.
நேராக மோட்டர் ரூமுக்கு வந்து மோட்டரை போட்டு தண்ணீரை மொண்டு மொண்டு குளித்தான். அங்கேயே அவன் உபயோகிக்கும் சோப்பு
இருந்தது.
அதை போட்டு நன்றாக அழுக்கு தீர குளித்தான் .
பிடரி மயிரை சுத்தம் செய்து அப்படியே
கொண்டை போட்டு அங்கே இருந்த அந்தப் பொட்டை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டான். அங்கே
மாட்டியிருந்த ரசம் போன கண்னாடியில் பார்ப்பதற்கு அவன் துர்க்கை கோயில் பூசாரி
போல் இருந்தான்.
மெல்ல நடந்து தோப்பு பக்கம் எட்டி பார்த்தான்.
ஓரிரு ஆட்கள் தூரத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அங்கே சாய்வு நாற்காலியில் பெரியவர் சோம்தேவ் இல்லை.. இந்த நேரத்தில் அவர் ஊர் எல்லை
பஞ்சாயத்து பெரிய மனிதர்களிடம் வம்பு அடித்துக் கொண்டிருப்பார்.
‘உடம்பு
கொஞ்சம் தேறி விட்டால் இந்த பெரிசுக்கு கால் வீட்டுலயே தங்காது’ என முனுத்தான். இன்னும் கொஞ்சம் தோப்பில் முன்னேறி
போய் முதல் தென்னை வரை நடந்து சென்று பார்த்தான். அதுதான் அவனது எல்லை. அதை தாண்டி அவன் போகக் கூடாது. அவனுக்கு அங்கே கடுமையான ஜாதி
கட்டுப்பாடு.
அவன் தோட்டத்திற்கு திரும்பினான்.
மறுபடி தோட்டம் வந்து,. மோட்டார் ரூம்
போய் மோட்டாரை ஆப் செய்தான். ஆன்
செய்து ஆப் செய்தான். அங்கே
ஓரமாய் வைத்திருந்த வேட்டியை எடுத்து கட்டிக் கொண்டான். அதன்பின் அவன் மோட்டார் ரூமில் இருந்து, அந்த வீட்டின் கிச்சன் அறையின் பின் பக்கம்
வந்தான். அதற்கு
பக்கத்திலேயே ஒரு சிறிய கதவும்
இருந்தது.
அந்த கதவு அந்த வீட்டிற்கும் தோட்டத்திற்கும்
வழியை ஏற்படுத்துகிற இன்னொரு வாசல் ஆகும்.
சோனு அந்த
கதவை படபடவென பலமாக தட்டினான்.
உள்ள எந்த சத்தமும் கேட்கவில்லை. கொஞ்ச
நேரம் போனது. ஆனாலும்
அவன் காத்திருந்தான்.
பின் கதவை கை வைத்து அழுத்த கிச்சன் கதவு திறந்து கொண்டது. அவன் அந்த கிச்சனில் நுழைய
பக்கத்திலேயே இன்னொரு கதவு திறந்தது. அந்த
இன்னொரு அறைக்கன கதவு . அதையும்
அவன் தட்டினான். முற்றத்தினை
அடிக்கடி எட்டிப்பார்த்தான்.
கொஞ்சம் கழித்து
அந்த கதவு திறந்தது.
வித்யா தான் கதவை திறந்தாள்.
அவனைப் பார்த்ததும் “ குளிச்சிட்டியா?” எனக் கேட்டாள் வித்யா
--------
வாசகர்கள் மஞ்சள் ரோஜாவை இப்போதே முழுதாக படிக்க..
( பாகம் 29 & 30) இங்கே கிளிக் செய்யுங்கள்..
குறிப்பு 1. முழு வெர்சன் மெயிலில் மட்டுமே அனுப்பப் படும்)
2. பாகம் 29 இடைவேளை வரை ( 55 Episodes)
3. பாகம் 30 இடைவேளைக்குப் பிறகு ( 78 Episodes)