மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, October 22, 2022

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 29 Episode No. 1890

கோபால் கொல்கத்தா மைய பேருந்து  நிலையத்தில் காமினியை டிராப் செய்துவிட்டு கல்லூரி போனான்.

காமினி மாமியார் ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏறி ஊர் போய் இறங்கி  தன் லக்கேஜுடன் ஒத்தையாக போய் அந்த மந்தமான வெயிலில் வீட்டில் நுழைந்தாள். வீட்டின் கதவு ஒருக்களித்து சாத்தப்பட்டிருந்தது. அத்தை, மாமா இருவரும் வீட்டில் இருந்தால் கதவை தாழ் போட மாட்டார்கள். அவள் லக்கேஜுடன் வீட்டில் நுழைந்தாள் வீட்டில் யாருமில்லை. கிச்சன் போனாள். அத்தை அங்கேயும் காணவில்லை.

அருகே பாத்ரூமில் வித்யா குளிக்கும் ஓசை கேட்க., குரல் கொடுக்கலாமா? என நினைத்து அவள் பிறகு பேசிக் கொள்ளலாம் என மீண்டும் கிச்சன் போனாள்., மீதம் வைத்திருந்த  டிபனை சாப்பிட்டுவிட்டு தன் அறைக்கு போய் மெத்தையில் படுத்தாள். பயணக் களைப்பு அவள் கண்களை இழுக்க,. அவள் உடலுக்கு ஒரு அவசரமாய் மதிய தூக்கம் தேவைப்பட்டது.,

காமினி மெல்ல தூங்கிப் போனாள்.

சோனு வியர்வை வடிய தோட்ட்த்தில் வேலை செய்து கொண்டிருந்தான்.

மஞ்சள் ரோஜா தோட்டத்தில் ரோஜாக்கள் முழு வளர்ச்சியில் முக்காலுக்கும் மேலே எட்டி கொண்டிருந்ததாய் அவனுக்கு பட்டதுபூவை பறித்து அடிகாம்பை படக்கெக்ன உடைத்தான் சோனு,. வெள்ளைப் பால் வர,

இன்னும் இந்த பாலின் நிறம் மாறவில்லை.’ தனக்கு தானே சொல்லிக் கொண்டான். பால் லேசாக மஞ்சள்  நிறம்  ஆகவேண்டும். அதற்கு எப்படியும் நாங்கைந்து வாரமாவது  தேவைப்படும். பூவை விரித்து உள்ளங்கையில் போட்டான். அவன் உள்ளங்கை அளவிற்கு அது இருந்தது.

இன்னும் பூவின் விட்டம் ஒரு அங்குலம் கூட வளரும். எல்லாம் என் உழைப்பு. என் உரம் தயாரிக்கும் பக்குவம்என நினைத்து கர்வமானான்.

செடியை சுற்றி இருந்த பதரை மண்வெட்டியால் கொத்தி கொத்தி அகற்றினான். உச்சியிலிருந்து சூரியன் சாய வேர்க்க விறுவிறுக்க வேலை செய்துகொண்டிருந்த சோனு சற்று தொலைவில் இருந்த தனது ஓய்வு பந்தலுக்கு போய் இளைப்பாறினான். அங்கே இருந்த பட்டன் வைத்த செல்போனை கையிலெடுத்து நேரத்தைப் பார்த்தான். மணி 12 ஐ தாண்டி இருந்தது.

வாய் ஊதிப் பார்த்தான். நேற்று குடித்த சாராய வாடை இன்னும் போகவில்லை. மூலிகை செடி எடுத்து பல் துலக்கினான்.

அவனுக்கு பசித்தது. தூரத்திலிருந்த கஞ்சி கலயத்தில் அடைத்து வைத்திருந்த கூழினை மடக் மடக் என குடித்தான். வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் கடித்துக் கொண்டான்.

தனது கையில் இருக்க இருக்கிற மண்வெட்டியை உதறி அங்கேயே போட்டான். நேராக மோட்டர் ரூமுக்கு வந்து மோட்டரை போட்டு தண்ணீரை மொண்டு மொண்டு குளித்தான். அங்கேயே அவன் உபயோகிக்கும் சோப்பு இருந்தது. அதை போட்டு நன்றாக அழுக்கு தீர குளித்தான் .

பிடரி மயிரை சுத்தம் செய்து அப்படியே கொண்டை போட்டு அங்கே இருந்த அந்தப் பொட்டை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டான். அங்கே மாட்டியிருந்த ரசம் போன கண்னாடியில் பார்ப்பதற்கு அவன் துர்க்கை கோயில் பூசாரி போல் இருந்தான். மெல்ல நடந்து தோப்பு பக்கம் எட்டி பார்த்தான். ஓரிரு ஆட்கள் தூரத்தில்  வேலை  செய்து கொண்டிருந்தார்கள். அங்கே சாய்வு  நாற்காலியில் பெரியவர் சோம்தேவ் இல்லை.. இந்த நேரத்தில் அவர் ஊர் எல்லை பஞ்சாயத்து பெரிய மனிதர்களிடம் வம்பு அடித்துக் கொண்டிருப்பார்.

உடம்பு கொஞ்சம் தேறி விட்டால் இந்த பெரிசுக்கு கால் வீட்டுலயே தங்காதுஎன முனுத்தான். இன்னும் கொஞ்சம் தோப்பில் முன்னேறி போய் முதல் தென்னை வரை நடந்து சென்று பார்த்தான்அதுதான் அவனது எல்லை. அதை தாண்டி அவன் போகக் கூடாது. அவனுக்கு அங்கே கடுமையான ஜாதி கட்டுப்பாடு.

அவன் தோட்டத்திற்கு திரும்பினான்.

மறுபடி தோட்டம் வந்து,. மோட்டார் ரூம் போய் மோட்டாரை ஆப் செய்தான். ஆன் செய்து ஆப் செய்தான். அங்கே ஓரமாய் வைத்திருந்த வேட்டியை எடுத்து கட்டிக் கொண்டான். அதன்பின் அவன் மோட்டார் ரூமில் இருந்து,  அந்த வீட்டின் கிச்சன் அறையின் பின் பக்கம் வந்தான். அதற்கு பக்கத்திலேயே ஒரு சிறிய கதவும் இருந்தது.

அந்த கதவு அந்த வீட்டிற்கும் தோட்டத்திற்கும் வழியை ஏற்படுத்துகிற இன்னொரு வாசல் ஆகும்.

சோனு அந்த கதவை படபடவென பலமாக தட்டினான். உள்ள எந்த சத்தமும் கேட்கவில்லை. கொஞ்ச நேரம் போனது. ஆனாலும் அவன் காத்திருந்தான். பின் கதவை கை வைத்து அழுத்த கிச்சன் கதவு திறந்து கொண்டது. அவன் அந்த கிச்சனில் நுழைய பக்கத்திலேயே இன்னொரு கதவு திறந்தது. அந்த இன்னொரு அறைக்கன கதவு . அதையும் அவன் தட்டினான். முற்றத்தினை அடிக்கடி எட்டிப்பார்த்தான்.

கொஞ்சம் கழித்து அந்த கதவு திறந்தது. வித்யா தான் கதவை திறந்தாள்.

அவனைப் பார்த்ததும் குளிச்சிட்டியா?” எனக் கேட்டாள் வித்யா

--------

 வாசகர்கள் மஞ்சள் ரோஜாவை இப்போதே முழுதாக படிக்க..

( பாகம் 29 & 30)  இங்கே கிளிக் செய்யுங்கள்..

குறிப்பு 1.  முழு வெர்சன் மெயிலில் மட்டுமே அனுப்பப் படும்)

2. பாகம் 29 இடைவேளை வரை ( 55 Episodes)

3. பாகம் 30 இடைவேளைக்குப் பிறகு ( 78 Episodes)

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 29 Episode No. 1889

அவள் தன் அறைக்கு வந்து ரகசியமாக படுத்தாள். இந்த அமர் பெரிய தொல்லையாக இருக்கிறானே. எப்படி அவனை தடுப்பது.

அதற்கு  பதில் காலையில் கிடைத்த்து.

மறுநாள் விடிய., அம்மாவிடமிருந்து போன்

காமினியின்  அம்மா மாப்பிள்ளையையும் பெண்ணையும் தன் வீட்டு மூன்றாம் மாத விருந்துக்கு அழைத்தாள்.

இப்ப தான் மாப்பிள்ளைக்கு செமஸ்டர் லீவாச்சேஒன்னு ரெண்டு நாள் இருந்துட்டு போயேன்..”அம்மா பிடிவாதமாய் கூப்பிட, அவளுக்கும் அமரை தண்டிக்க இது ஒரு சாக்காய் இருந்தது.,

வித்யாவிடமும், பெரியவர்  சோம்தேவிடமும் சொல்லிவிட்டு அவள் கிளம்பினாள். அமர் திண்ணையில் இருக்க.,

அமர் வரட்டுமா? மூனு நாள் லீவ்ல அம்மா வீட்டுக்கு போறோம்என எல்லாரும் பார்க்கும் போது பொதுவாக சொன்னாள். அமர் உர்ரென இருந்தான். கடுங்கோபத்தில் இருக்கிறான் என்பது பார்க்கும் போதே தெரிந்தது. ஆனால் காமினியும் கோபத்தில் தான் இருந்தாள்.

நல்லா காயட்டும் என நினைத்தாள்.

அவர்கள் கொல்கத்தா போனார்கள். அவள் கோபாலுடன் பல இடங்கள் சுற்றினாள். அமர் இல்லாத வீட்டில் கோபால் அழகனாய் தெரிந்தான். மூன்று நாள் என்பது ஒரு வாரமாக ஓடி போனது.

அவர்கள் வீட்டில் அருகில்தான் கோபால் பணிபுரியும் கல்லூரி இருக்கவே கோபால் அங்கிருந்தபடியே காலேஜுக்கு வேலைக்கு போக காமினிக்கு போரடித்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் அமரின்  நினைப்பு வந்து வந்து போனது. புதிய இடத்தில் கோபால் அதிகமாக காமினியை கண்டு கொள்ளாமல் போக.,  அமரிடம் ஆட்டம் போட்ட தருணங்கள் காமினியின் பெண்மையை மீண்டும் சீண்டியது.

நிறைய அமரை கோச்சுகிட்டோம்..’.. நமக்கு பிடிக்காமலயா அவன் கூட நைட்டெல்லாம் கட்டி புடீச்சி உருண்டோம். எல்லாம் ஒரு சாக்கு.. அவன் தான் தப்பு பண்ணிட்டான்.. நாம சரிங்கிற மாதிரிஎன அவளுக்கு தோன்றியது.

நாளாக நாளாக காமினிக்கு அம்மா வீட்டிலேயே ரில்லாமல் பொழுதே போகவில்லை என தோன்றியது. கோபாலுடன் மாலை நேரங்களில் என்ன செய்வது? ஏது செய்வது?  ஒன்றும் புரியவில்லை.

 கோபாலிடம் அதிகமாக பேசவும் அவளுக்கு பிடிக்கவில்லை. புகுந்த வீட்டிற்கு வந்த கொஞ்ச நாளில் முழு கட்டில் சுகம் என்றால் என்னவென்று இந்த அமர் காட்டி விட்டு போய்விட்டான். கோபால் என்ன செய்தாலும் போறவில்லை. காமினிக்கு உடல் பயங்கரமாக தினவெடுத்து ஆடியது.

இந்த தினவை எல்லாம் தீத்து வைக்கிற ஆளுமை கோபாலிடம் இல்லை.,கொஞ்ச நாள் வேறு எங்காவது இருந்திருந்தால் இந்த அரை மறக்கலாம் என பார்த்தால் அவன் நினைப்பு இன்னும் அதிகமாக வாட்டுகிறதே.

அவள் வைராக்கியத்தை மீறி அவனுக்கு போன் போட்டாள். அமர் போனை எடுக்கவில்லை.

அவளாகவே வாயை திறந்து ஊருக்கு போவதை பற்றி பேச., அவன் ஒரு குண்டை தூக்கி போட்டு அவளை பொடி பொடியாக்கினான்.

இப்ப அங்க  யாரு இருக்காங்கனு போக துடிக்கிறே..அமர் கூட இல்ல. உனக்கு போரடிக்கும்

...எ என்ன அமர் இல்லையா? எங்க போய்ட்டான்?” அவள் திடுக்கிட்டு கேட்க.,

ஏன் உனக்கு தெரியாதா? சித்தி சொல்லலியா? அமர் ட்ரீட் மெண்டுக்கு மும்பை போய்ட்டான். ஒரு மாசம் ஆகும்.”

“………………………….” காமினி எதையோ இழந்தது போல் உணர்ந்தாள்.

என்ன காமினி?”

..இல்லங்க.. ட்ரீட்மென்ட் நல்ல விஷயமாச்சே.. அவன் எப்பவோ போயிருக்கனும் இல்லே?”

அய்யோ அவனுக்கு பார்வை வந்துவிட்டால்.,? அவள் உள் மனம் என்னமோ சஞ்சலப்பட.,

இப்ப கூட எங்க பெரியம்மா தான் நம்ம வீட்டுக்கு வந்து சத்தம் போட்டு அவனை கூப்பிட்டு போயிருக்காங்க.., “

வித்யாவின் அக்கா., அமரின் பெரியம்மா அமர் மீது அதிக பாசமாக இருப்பாள். அதே சமயம் கோபாலை கண்டாலே அவளுக்கு பிடிக்காது.

தனது தங்கை மகன் அமரின் கண்களை இந்த பாவி தானே பாழ் செய்தான் என சதா குத்திக் காட்டிக் கொண்டே இருப்பாள்.

அவள் தான் அன்று அரை தனது மும்பை வீட்டிற்கு அழைத்துப் போய் வைத்தியம் பார்ப்பதாக சொன்னாள். தங்கை வீட்டில் பெருங்க்குரலில் கத்தி யுத்தம் நடத்தினாள். வித்யா எவ்வளவோ தடுத்துப் பார்த்தாள். ஸோம்தேவும் தன் பங்கிற்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்.

இன்னும் கொஞ்ச நாள் தான் அண்ணி.. இப்ப கொஞ்சம் பெட்டரா இருக்குன்னு சொல்றான். ஆறு மாசம் பாப்போமே அவர் சொல்ல,.

ஏன் சொல்ல மாட்டீங்க ?., உங்களுக்கு உங்க பெரிய  பையன் , அவன் கல்யாணம், அப்புறம் அவனுக்கு  குழந்தை., பேர் சூட்டு விழா., இப்படியே போவும்.. எங்க அமரை,. அமரோட கண்ணை நாங்க மறந்துட வேண்டியது தான்..’

அக்கா அவர் தான் சொல்றரில்ல?” வித்யா கேட்க.,

அந்த பெரியம்மா கேட்கவே இல்லை

 என்ன விளையாடுறீங்க ரெண்டு பேரும்? அவனுக்கு கண்ணு இப்படி ஆகி ரெண்டு வருஷம் ஆச்சு. என்னமோ 10% 20% பார்வைன்னு சொல்றீங்க.  எனக்கு தெரிஞ்ச நல்ல டாக்டர் மும்பையில் இருக்காரு. நான் அங்கு அழைச்சிட்டு போய் காட்டிம் அவனை சரி படுத்திட்டு போறேன். ஒரு மாசம் போதும். நீங்க ஒரு பைசா கொடுக்க வேண்டாம்என கோபமாக சொல்லிவிட்டு அமரை அழைத்துக்கொண்டு போனாள். அமரும் அவளுடன் போக சம்மதித்தான்.

அண்ணன் அண்ணி இல்லாத ஒரு மதிய வேளையில் அவன் அந்த கிராமத்தை விட்டு மும்பை போனான்.

கோபால் அந்த விஷயத்தை சொல்ல., காமினிக்கு நெஞ்சடைத்தது., அமர் நம்மிடம் கோபித்து கொண்டானா? எப்படியும் இங்க கொல்கத்தா ஏர்போர்ட்டுக்கு வந்து தான் மும்பை சென்றிருக்க வேண்டும். வந்து பார்த்திருக்கலாமே, தகவல் சொல்லி இருக்கலாமே.,

அதிகமாக திட்டி விட்டோமோ? ஒருவேளை, மூன்று நாள் என சொல்லி விட்டு ஒரு வாராம் அம்மா வீட்டில் தங்கியதற்கு  அவனுக்கு கோபம் வந்துவிட்டதோ,. இதற்கா இப்படி ஒரு கோபம்? அவள் நிலைகொள்ளாமல் தவித்தாள். ஏனோ அவளுக்கு அமரை பார்க்க மனசு தவித்த்து. அமரை எப்படி மும்பை சென்று பார்ப்பது? அந்த பெரியம்மா பெரிய கோவக்காரி.

பேசாமல் ஊருக்கு  போவோம். ரெண்டு, மூனு நாள் இருந்துவிட்டு அப்புறம் வித்யா, சோம்தேவை  வம்பு பண்ணி மும்பைக்கு அமரை பார்க்க போகலாமா? சரியாக வருமா? ஏன் வராது? டிரை பண்ணுவோம்.

அடுத்த வாரம்  திங்கள் கிழமை கோபால் காலேஜுக்கு கிளம்ப.,

என்ன நீங்க? இங்கயே மாமியார் வீட்டுல இருந்து காலேஜ் போய்க்கிட்டு இருக்க போறீங்களா?”

அவன் முறைத்தான்.

நீ தாண்டி கொஞ்ச நாள் இங்க இருக்கனும்னே?”

என்னை  நம்ம வீட்டுல கொண்டு  போய்  விடுங்க அவள் தீர்க்கமாய் சொல்ல .,

இங்க பார் காலேஜுக்கு டயமாச்சு., ஈவினிங்க் சீக்கிரம் வரேன். ரெண்டு பேரும் சேந்து ஊருக்கு போகலாம்,.”

ஏனோ அவளுக்கு அங்கே இருக்க பிடிக்கவில்லை.

“. நோ., ஈவினிங்க் வரைக்கும் இங்க இருக்க முடியாது. என்னை பஸ் ஏத்தி விடுங்க நான் போய்க்கிறேன்

ஆர் யூ ஷ்யூர்?”

யா ஷ்யூர்

அந்த வீடு அவளை பயமுறுத்த  காத்திருந்தது.

அது தெரியாமல் அவள் ஊருக்கு போக தயாராகினாள்.


 வாசகர்கள் மஞ்சள் ரோஜாவை இப்போதே முழுதாக படிக்க..

( பாகம் 29 & 30)  இங்கே கிளிக் செய்யுங்கள்..

குறிப்பு 1.  முழு வெர்சன் மெயிலில் மட்டுமே அனுப்பப் படும்)

2. பாகம் 29 இடைவேளை வரை ( 55 Episodes)

3. பாகம் 30 இடைவேளைக்குப் பிறகு ( 78 Episodes)