அவள் தன் அறைக்கு வந்து ரகசியமாக
படுத்தாள். இந்த
அமர் பெரிய தொல்லையாக இருக்கிறானே. எப்படி
அவனை தடுப்பது.
அதற்கு பதில் காலையில் கிடைத்த்து.
மறுநாள் விடிய., அம்மாவிடமிருந்து போன்
காமினியின் அம்மா மாப்பிள்ளையையும் பெண்ணையும் தன் வீட்டு மூன்றாம்
மாத விருந்துக்கு அழைத்தாள்.
“இப்ப
தான் மாப்பிள்ளைக்கு செமஸ்டர் லீவாச்சே? ஒன்னு ரெண்டு நாள் இருந்துட்டு போயேன்..”அம்மா பிடிவாதமாய் கூப்பிட, அவளுக்கும் அமரை தண்டிக்க இது ஒரு
சாக்காய் இருந்தது.,
வித்யாவிடமும், பெரியவர் சோம்தேவிடமும் சொல்லிவிட்டு அவள் கிளம்பினாள். அமர் திண்ணையில் இருக்க.,
“அமர்
வரட்டுமா? மூனு
நாள் லீவ்ல அம்மா வீட்டுக்கு போறோம்” என
எல்லாரும் பார்க்கும் போது பொதுவாக சொன்னாள்.
அமர் உர்ரென இருந்தான்.
கடுங்கோபத்தில் இருக்கிறான் என்பது பார்க்கும் போதே தெரிந்தது. ஆனால் காமினியும் கோபத்தில் தான்
இருந்தாள்.
‘நல்லா
காயட்டும் ‘
என நினைத்தாள்.
அவர்கள் கொல்கத்தா போனார்கள். அவள் கோபாலுடன் பல இடங்கள் சுற்றினாள். அமர் இல்லாத வீட்டில் கோபால் அழகனாய்
தெரிந்தான். மூன்று
நாள் என்பது ஒரு வாரமாக ஓடி போனது.
அவர்கள் வீட்டில் அருகில்தான் கோபால்
பணிபுரியும் கல்லூரி இருக்கவே கோபால் அங்கிருந்தபடியே காலேஜுக்கு வேலைக்கு
போக காமினிக்கு போரடித்தது. அவளுக்கு
கொஞ்சம் கொஞ்சமாய் அமரின் நினைப்பு வந்து
வந்து போனது. புதிய
இடத்தில் கோபால் அதிகமாக காமினியை கண்டு கொள்ளாமல் போக., அமரிடம் ஆட்டம் போட்ட தருணங்கள்
காமினியின் பெண்மையை மீண்டும் சீண்டியது.
“நிறைய
அமரை கோச்சுகிட்டோம்..’.. நமக்கு
பிடிக்காமலயா அவன் கூட நைட்டெல்லாம் கட்டி புடீச்சி உருண்டோம். எல்லாம் ஒரு சாக்கு.. அவன் தான் தப்பு பண்ணிட்டான்.. நாம சரிங்கிற மாதிரி’ என அவளுக்கு தோன்றியது.
நாளாக நாளாக காமினிக்கு அம்மா
வீட்டிலேயே அமரில்லாமல்
பொழுதே போகவில்லை என தோன்றியது. கோபாலுடன் மாலை நேரங்களில் என்ன
செய்வது?
ஏது செய்வது? ஒன்றும் புரியவில்லை.
கோபாலிடம்
அதிகமாக பேசவும் அவளுக்கு பிடிக்கவில்லை. புகுந்த
வீட்டிற்கு வந்த கொஞ்ச நாளில் முழு கட்டில்
சுகம் என்றால் என்னவென்று இந்த அமர் காட்டி விட்டு போய்விட்டான். கோபால்
என்ன செய்தாலும் போறவில்லை. காமினிக்கு உடல்
பயங்கரமாக தினவெடுத்து ஆடியது.
இந்த தினவை எல்லாம்
தீத்து வைக்கிற ஆளுமை கோபாலிடம்
இல்லை.,கொஞ்ச
நாள் வேறு எங்காவது இருந்திருந்தால் இந்த அமரை
மறக்கலாம் என பார்த்தால் அவன் நினைப்பு இன்னும்
அதிகமாக வாட்டுகிறதே.
அவள் வைராக்கியத்தை மீறி அவனுக்கு
போன் போட்டாள். அமர்
போனை எடுக்கவில்லை.
அவளாகவே வாயை திறந்து ஊருக்கு போவதை
பற்றி பேச., அவன்
ஒரு குண்டை தூக்கி போட்டு அவளை பொடி பொடியாக்கினான்.
“இப்ப
அங்க யாரு இருக்காங்கனு போக துடிக்கிறே..அமர் கூட இல்ல. உனக்கு போரடிக்கும்”
“எ...எ என்ன அமர் இல்லையா? எங்க போய்ட்டான்?” அவள் திடுக்கிட்டு கேட்க.,
“ஏன்
உனக்கு தெரியாதா? சித்தி
சொல்லலியா? அமர்
ட்ரீட் மெண்டுக்கு மும்பை போய்ட்டான். ஒரு
மாசம் ஆகும்.”
“………………………….” காமினி
எதையோ இழந்தது போல் உணர்ந்தாள்.
“என்ன
காமினி?”
“இ..இல்லங்க..
ட்ரீட்மென்ட் நல்ல விஷயமாச்சே..
அவன் எப்பவோ போயிருக்கனும் இல்லே?”
அய்யோ அவனுக்கு பார்வை வந்துவிட்டால்.,? அவள் உள் மனம் என்னமோ சஞ்சலப்பட.,
“இப்ப
கூட எங்க பெரியம்மா தான் நம்ம வீட்டுக்கு வந்து சத்தம் போட்டு அவனை கூப்பிட்டு
போயிருக்காங்க.., “
வித்யாவின் அக்கா., அமரின் பெரியம்மா அமர் மீது
அதிக பாசமாக இருப்பாள்.
அதே சமயம் கோபாலை கண்டாலே
அவளுக்கு பிடிக்காது.
“தனது
தங்கை மகன் அமரின்
கண்களை இந்த பாவி தானே பாழ்
செய்தான்’
என சதா குத்திக் காட்டிக் கொண்டே இருப்பாள்.
அவள் தான் அன்று அமரை
தனது மும்பை வீட்டிற்கு அழைத்துப் போய்
வைத்தியம் பார்ப்பதாக சொன்னாள். தங்கை வீட்டில் பெருங்க்குரலில் கத்தி
யுத்தம் நடத்தினாள். வித்யா
எவ்வளவோ தடுத்துப் பார்த்தாள். ஸோம்தேவும்
தன் பங்கிற்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்.
“இன்னும்
கொஞ்ச நாள் தான் அண்ணி.. இப்ப
கொஞ்சம் பெட்டரா இருக்குன்னு சொல்றான். ஆறு
மாசம் பாப்போமே”
அவர் சொல்ல,.
“ஏன்
சொல்ல மாட்டீங்க ?., உங்களுக்கு
உங்க பெரிய பையன் , அவன் கல்யாணம், அப்புறம் அவனுக்கு குழந்தை.,
பேர் சூட்டு விழா., இப்படியே
போவும்.. எங்க
அமரை,. அமரோட கண்ணை நாங்க மறந்துட வேண்டியது
தான்..’
“அக்கா
அவர் தான் சொல்றரில்ல?” வித்யா
கேட்க.,
அந்த பெரியம்மா கேட்கவே இல்லை
“என்ன விளையாடுறீங்க
ரெண்டு பேரும்?
அவனுக்கு கண்ணு இப்படி ஆகி ரெண்டு வருஷம் ஆச்சு. என்னமோ 10%
20% பார்வைன்னு சொல்றீங்க. எனக்கு தெரிஞ்ச நல்ல
ஐ டாக்டர் மும்பையில் இருக்காரு.
நான் அங்கு அழைச்சிட்டு
போய் காட்டிம்
அவனை சரி படுத்திட்டு போறேன். ஒரு
மாசம் போதும்.
நீங்க ஒரு பைசா கொடுக்க வேண்டாம்” என
கோபமாக சொல்லிவிட்டு அமரை அழைத்துக்கொண்டு
போனாள். அமரும்
அவளுடன் போக சம்மதித்தான்.
அண்ணன் அண்ணி இல்லாத ஒரு மதிய
வேளையில் அவன் அந்த கிராமத்தை விட்டு மும்பை போனான்.
கோபால் அந்த விஷயத்தை சொல்ல., காமினிக்கு நெஞ்சடைத்தது., அமர் நம்மிடம் கோபித்து கொண்டானா? எப்படியும் இங்க கொல்கத்தா ஏர்போர்ட்டுக்கு
வந்து தான் மும்பை சென்றிருக்க வேண்டும். வந்து
பார்த்திருக்கலாமே, தகவல்
சொல்லி இருக்கலாமே.,
அதிகமாக திட்டி விட்டோமோ? ஒருவேளை,
மூன்று நாள் என சொல்லி விட்டு ஒரு வாராம் அம்மா வீட்டில்
தங்கியதற்கு அவனுக்கு கோபம் வந்துவிட்டதோ,. இதற்கா இப்படி ஒரு கோபம்? அவள் நிலைகொள்ளாமல் தவித்தாள். ஏனோ அவளுக்கு அமரை பார்க்க மனசு
தவித்த்து. அமரை
எப்படி மும்பை சென்று பார்ப்பது? அந்த
பெரியம்மா பெரிய கோவக்காரி.
பேசாமல் ஊருக்கு போவோம்.
ரெண்டு, மூனு
நாள் இருந்துவிட்டு அப்புறம் வித்யா, சோம்தேவை வம்பு பண்ணி மும்பைக்கு அமரை பார்க்க போகலாமா? சரியாக வருமா?
ஏன் வராது? டிரை
பண்ணுவோம்.
அடுத்த வாரம் திங்கள் கிழமை கோபால் காலேஜுக்கு கிளம்ப.,
“என்ன
நீங்க? இங்கயே
மாமியார் வீட்டுல இருந்து காலேஜ் போய்க்கிட்டு இருக்க போறீங்களா?”
அவன் முறைத்தான்.
“ நீ
தாண்டி கொஞ்ச நாள் இங்க இருக்கனும்னே?”
“என்னை நம்ம வீட்டுல கொண்டு போய்
விடுங்க”
அவள் தீர்க்கமாய் சொல்ல .,
“இங்க
பார் காலேஜுக்கு டயமாச்சு., ஈவினிங்க்
சீக்கிரம் வரேன். ரெண்டு
பேரும் சேந்து ஊருக்கு போகலாம்,.”
ஏனோ அவளுக்கு அங்கே இருக்க பிடிக்கவில்லை.
“. நோ., ஈவினிங்க் வரைக்கும் இங்க இருக்க
முடியாது.
என்னை பஸ் ஏத்தி விடுங்க நான் போய்க்கிறேன்”
“ஆர்
யூ ஷ்யூர்?”
“யா
ஷ்யூர்”
அந்த வீடு அவளை பயமுறுத்த காத்திருந்தது.
அது தெரியாமல் அவள்
ஊருக்கு போக தயாராகினாள்.
வாசகர்கள் மஞ்சள் ரோஜாவை இப்போதே முழுதாக படிக்க..
( பாகம் 29 & 30) இங்கே கிளிக் செய்யுங்கள்..
குறிப்பு 1. முழு வெர்சன் மெயிலில் மட்டுமே அனுப்பப் படும்)
2. பாகம் 29 இடைவேளை வரை ( 55 Episodes)
3. பாகம் 30 இடைவேளைக்குப் பிறகு ( 78 Episodes)
No comments:
Post a Comment