இந்தக் கதைகள் மானுட வாழ்வியல் முறையில் பலவீனப்பட்டிருக்கும் காம உணர்வுகளை நெறிபடுத்தும் நோக்கிலும்.ஒவ்வொரு ஆன்மாவுக்குள்ளிருக்கும் காம உணர்வை வெளிப்படுத்தி கொண்டாட வைப்பதற்காகவும் எழுதப்படுவதாகும்.மேலும்,இக்கதை முழுக்க முழுக்க ஆண் பெண் இரு பாலர்க்கும் இடையே தோன்றும் காமம் பற்றிய புரிதல்களில் உண்டாகும் பிழைகளை சுட்டிகாட்டுவதாகும். இக்கதையில் சொல்லப்படும் காம வர்ணனை, சம்பவங்கள், காம நிஜ வாழ்க்கையில் தொடர்புபடுத்தி பார்க்காதீர்கள்.
மின்னூலாக வாங்க.,
RESPECT WOMAN : PROTECT WOMAN
Announcement
Monday, March 21, 2022
திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 27 - 1702
மலர்விழியை காப்பாற்றலாம் என்பது அவன் திடீரென எடுத்த முடிவு. அந்த முடிவு ஒரு நல்வினையாகி விட்டது.
அந்த நல்வினையின் பயன் அவளது நெருக்கமான் சினேகம். அதுவும் சில மணி நேரங்களில்..
மலர்விழியின் நிழலை கூட தொட முடியாத ஆண்கள் பலபேர் இருக்க தான் மலர்விழி மேடத்தின் அருகில் இருக்கிறோம் மலர்விழி தன்னை பார்த்து வணங்குகிறான் என்பதே சுரேஷிற்கு பெருமிதமாக இருந்தது.
மலர்விழியை காப்பாற்றுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி அந்த கடவுளுக்கு நன்றி சொன்னான்.
மலர்விழியின் வீட்டு வாசலில் கார் நின்றது.
சுரேஷ் பைக்கை நிறுத்தினான்.
இன்னும் மலர்விழி இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. எந்த பெண்ணுகும் இது ஒரு அசாதரண நிகழ்வும் என்பதை சுரேஶ் புரிந்து வைத்திருந்தான்.
மலர்விழி அழுதது அழுதபடியே இருக்க “ஒன்றும் பயப்படாதீர்கள். இனிமேல் யாரும் உங்களை மிரட்ட மாட்டார்கள் .இதோ அந்த மூன்று பேரும் மண்டிபோட்டு நமக்கு கொடுத்த வாக்குமூலத்தை எனது அண்ணன் ஹரீஷ்க்கு அனுப்பி விட்டேன். இந்நேரம் அவன் அலறி அடித்துக்கொண்டு கதறுவான் . பாருங்கள் 15 மிஸ்ட் கால் அவனிடமிருந்து. . அவனது இந்த கேவலமான திட்டம் எனக்குத் தெரிந்துவிட்டது என்றவுடன் அவனுக்கு தூக்கமே இருக்காது. இனி உங்கள் வழிக்கு யாருமே வர மாட்டார்கள். நம்புங்கள்" என்றான்
"ரொம்ப தேங்க்ஸ் சுரேஷ் உனக்கு நான் எப்படி நன்றி சொல்றது என்பதே எனக்கு தெரியல . என்னுடைய மாஜிக் கணவனே எனக்கு துரோகம் பண்ணி இருக்கான் . ஆனா, நான் உனக்கு, எக்சாம் எழுத விடாம, துரோகம் பண்ணி இருக்கேன். உன் எதிர்காலத்தை பாழ் பண்ணிட்டேன். நீ என்னடான்னா என்னை காப்பாத்தி முழுசா பத்திரமா , என்னை வீட்டில் கொண்டுவந்து சேர்த்திருக்க. உண்மையிலேயே நீ ரொம்ப பெரியவன் சுரேஷ். உனக்கு நான் ஆயுசு முழுக்க நன்றிக்கடன் பட்டிருக்கேன்" என்றாள் மலர்விழி
"பரவால்ல மேடம் ரொம்ப பீல் பண்ணாதீங்க. திரும்பத் திரும்ப இதையே யோசிக்காதீங்க. கெட்ட கனவா நினைச்சு மறந்துடுங்க. நிம்மதியா போய் தூங்குங்க. மறுபடியும் ஏதாச்சும் அன் வாண்டட் கால்னா எனக்கு கால் பண்ணுங்க" என்றான்.
".ம்"
வரட்டுமா?'
"ம்ம் பத்திரம்..'
''ம்..."
அவன் பைக்கை கிளப்ப அதற்குள்ளாகவே வாசலில் லைட் எரிந்தது. மலர்விழி அம்மா தான் ஓடி வந்தாள். "
“என்ன மலர் எங்க போயிட்டே? யார் போன் பண்ணாலும் எடுக்க மாட்றே? சஞ்சனா சுஜாதா சித்தி எல்லாம் வந்து இருக்காங்க. குழந்தைங்க கூட வந்து இருக்கு” அம்மா மலரை பார்த்து பேச.,
" ஒன்னுமில்லம்மா, ப்ரண்ட் ஒருத்திக்கு பர்த் டே பார்ட்டி. நான் பார்ட்டிக்கு போயிருந்தேன்.. அங்க ஒரு சின்ன பிரச்சனை ஆயிடுச்சு.."
"அய்யோ என்ன ஆச்சு? யார் பிரச்சனை பண்ணது?"
'சில ரௌடீஸ்மா.. இவர்தான் என பத்திரமா கூட்டிட்டு வந்தாரு ' .என சுரேஷை கை காட்டினாள்
"அப்படியா தம்பி! ரொம்ப நன்றி தம்பி இவளுக்கு நிறைய எதிரிங்க தம்பி. ஒரு நாளைக்கு ஒரு பிரச்சனை. ஊர் பிரச்சினையே எடுத்து மேலே போட்டுகிறா. ரொம்ப நன்றி தம்பி " என சொல்லிவிட்டு
"உதவி பண்ண தம்பிய எதுக்கு வாசல்லயே அனுப்புறே. வீட்டுக்கு கூப்பிட்டு ஒரு வாய் காபி கொடுக்கிற தானே என்றாள்.
" இல்ல இல்ல பரவால்ல " சுரேஷ் சொல்ல
அப்போது தான் தன் தவறை உணர்ந்து “அச்ச்ச்சோ..சாரி சுரேஷ் உன்னை வீட்டுக்குள்ள நான் கூப்பிடவே இல்ல.,. ப்ளீஸ் உள்ள வா"
"இ.இலல மேம் நான்ன் போறேன்.."
"ப்ளீஸ் உள்ள வாயேன்...'
"மேடம்"
"வா சுரேஷ் வீட்டுக்குள்ள " மலர்விழி காரை போர்டிகோவில் நிறுத்தி விட்டு சுரேஷ்ஷை வரவேற்றாள் மலர்விழி வீட்டுக்குள் நுழைய சுரேஷ் தயக்கமாக மலர்விழியின் பின்னால் சென்றான்.
திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 27 - 1701
மலர்விழி காரை திருப்பி கொண்டு வர மலர்விழி கார் பின்னாலேயே சுரேஷ் தொடர்ந்து வந்தான். சில சமயங்களில் அவள் காருக்கு பக்கவாட்டில் வந்து அவளுக்கு வெகு அருகே இருந்தான். இன்னும் சில சமயங்களில் காருக்கு முன்னே ஒரு தேர்ந்த பாதுகாவலன் போல பைக்கில் சென்றான் .
கார் அடையார் வர...
பைககி நிறுத்தி விட்டு அருகே வந்தான் .
"சரி நான் கிளம்பட்டுமா மேடம்?"
"சுரேஷ் ரொம்ப தேங்க்ஷ் சுரேஶ் நீ மட்டும் வரலன்னா..அ அவனுங்க
என்னை..."
அவளுக்கு இன்னும் உடல்
உதறி கொண்டிருந்தது
"விடுங்க அப்படியெல்லாம் நடக்காது...."
"சுரேஷ்..நீ ஹரிஷ் கிராண்டனி பிரதர் தான் அப்படிங்கறது எனக்கு தெரியும். ஆனால் ஹரிஷ் ரொம்ப மோசமானவன்கிறது எனக்கு
இப்பதான் தெரியும். சொல்லப்போனா, ,உங்க அண்ணனுக்கு நான்
நிறைய ஹெல்ப் பண்ணி இருக்கேன். ஆனா அவன் என்னை போய் இப்படி சீரழிக்க
நினைச்சுட்டானே . அதைதான் என்னால கொஞ்சம் கூட அதை தாங்கிக்க முடியல சுரேஷ்"
என்றாள்
"சாரி மேடம்.. அவன் ரொம்ப மோசமானவன். அவன்கிட்ட இருந்து இந்த
கம்பெனியை காப்பாற்றத் தான் நான் போராடிட்டு
இருக்கேன். எனக்கு படிப்பு கம்மின்னு
எஸ்ஏபிபி படிச்சுட்டு வந்தால்தான் அந்த போர்டு ஆஃப் டைரக்டர்ஸ் என்ன வைஸ்
சேர்மன் ஆகவே எடுத்துப்பாங்க.
அதுக்குத்தான் நான் இவ்ளோ கஷ்டப்படறேன் மேடம்" என்றான் சுரேஷ்
" நீ ரொம்ப நல்லவன் சுரேஷ் .நான் பார் எந்த பக்கம் தப்புனு
தெரிஞ்சுக்காம உனக்கு துரோகம் பண்ணிட்டேனே.
சுரேஷ் ஹரிஷ் சொல்லி தான் நான் உனக்கு எஸ்ஏபி சர்ட்டிபிக்கேட் தராம
இழுத்தடிச்சி..ச்சே... நான் உனக்கு துரோகம் பண்ணிட்டேன் என்ன மன்னிச்சிடு என்றாள்
மலர்விழி
" பரவாயில்ல மேடம் நான் இதெல்லாம் எதிர்பார்த்ததுதான். ஆனா ஹரிஷ் உங்கள டார்கெட் பண்ணியிருக்கான்
அப்படிங்கறது தான் என்னால தாங்க முடியல, .அவன் பார்வையில்
நீங்க எப்படி இருக்கீங்க தெரியலையே" என்றான்
"எல்லாம் என் புருஷன் செஞ்ச வேலை தான். என் புருஷன், ஜீவா உங்க கிராண்டனி ப்ராஜெக்ட்ல எலக்ட்ரிக் வேலை செய்கிறவன்.
எப்படியோ என்னை பத்தி உங்க அண்ணன் கிட்ட தப்பு தப்பா சொல்லி போட்டு கொடுத்து
இருக்கான். இதுல என்னை புடிக்காத ஆளுங்க சாரதி, சற்குனம் ஜீவா
மாதிரி ஆளுங்கள ஒன்று சேர்ந்து இருக்காங்க.. ஐயோ சுரேஷ் நீ மட்டும் வரலைன்னா அந்த
இடத்தில் நான் என்ன ஆகி இருப்பேன்னு தெரியல "
"ரிலாக் ஸ் மேடம்.." அவன் சொல்ல அவன் கைகளை பிடித்து கொண்டாள்
'ச்சே..டாப்ஸ் அவிழ்க்க சொன்னானுங்க எனக்கு மானமே
போயிடுச்சி..."
":விடுங்க..இப்ப எல்லாம் ஓகே தானே?"
"ஐயோ நினைச்சாவே எனக்கு உடம்பெல்லாம் பதறுது. கடவுள்தான் ஒன்னு
உன்ன அனுப்பிச்சி இருக்காரு. நான் கும்பிடுற பெருமாள் தான் என்னை காப்பாத்தி
இருக்கார்.. நீ என்னை காப்பாத்த வந்த சாமின்னு தெரியாம உன்னையே திட்டி
அனுப்பிட்டேனே.. சாரி சுரேஷ்..." என அவனை பார்த்து கையெடுத்து வணங்கினாள் .
சுரேஷ்க்கு அவளைப் பார் பார்க்க அதிசயமாக இருந்தது. மலர்விழி மிடுக்கானவள்.,
கம்பீரமானவள். அதிகம் படித்தவள் . பல
மொழிகளில் புலமை பெற்றவள். மென்பொருளை
கரைத்து குடித்தவள். மிகப்பெரிய கவிஞ்ஞாயினி
.சமூக புகழ்பெற்ற இளம்பெண். பேரழகி.ஆனால் எப்படிப்பட்ட பெண்ணிற்கும் அவளது கற்பு
காப்பாற்றப்படும் அந்த தருணம் தான் மிகவும் உன்னதமான தருணமாக இருக்கும் என்பதை
அவன் புரிந்து கொண்டான். நம்மை நிருபிக்க நல்ல சான்ஸ் கிடைத்திருகிறது. கடவுளுக்கு
நன்றி
"சரி நான் கிளம்பட்டுமா மேடம்?"
'சரி வரேன் ..வண்டி எடுங்க.. வீடு வரைக்கும் வரேன்"
அவள் என்ன செய்வது என புரியாமல் விழிக்க "ஒன்னும் பிரச்சனை
இல்ல .உங்கள் கூடவே நான் வருகிறேன் "என்றான்