மனதில்
அந்த மண்டபத்து ஆசாமி சொன்ன வார்த்தை பலவற்றுக்கு அவனுக்கு அர்த்தம் புரிய
ஆரம்பித்து அவன் செயலற்று போக.,
சஞ்சனாவின் கணவரும், டிரைவர் மட்டுமே அந்த நான்கு பேரையும் எதிர்த்து
போராடினார்கள். ஆனால்
முடியவில்லை. பிள்ளைகளை காத்து கொண்டு,. பெண்கள்
போராட அவர்கள்
சுலபமாக நகைகளை பறித்தார்கள். சிலுவை வேனுக்குள் புகுந்து சுரேஷ்ஷை’ எடுத்து வெளியே
போட்டான்.
“ஏய்ய் அவரை விடு .. நகை
தானே தரோம்.. அவரை விடு” மலர்
கத்த.,
“மவனே. என்னையாடா
மாடியில இருந்து கீழ தள்ளீனே? இன்னியோட
செத்தடா நீ?” சுரேஷ் வேனில் இருந்து, பலமாக இழுக்கப்பட்டு தரையில் உருண்டான்.
கீழே விழுந்த சுரேஷ்ஷை மொத்த பேரும்
சேர்ந்து கைகளால் கால்களால் போட்டு மிதித்தார்கள்.
“அய்ய்யோ.. அய்யோ.. காப்பத்துங்களேன்…”. சஞ்சனா , சுஜாதா
கத்த..,
“ஹெல்ப்
ஹெல்ப்…” அவர்கள் கத்த .,
அவர்கள்டன் சண்டை போட்ட சஞ்சனாவின்
கணவன். டிரைவர்…இருவரும்
முட்டி போட்டு உட்கார வைக்கப்பட்டார்கள்.
ஒருவன் சுரேஷின் தலையில் கல்லைப் போட பெரிய பாறாங்கல்லை தேட ,
‘அதெல்லாம்’ வேணாம் வேணாம்., கைரேகை…பட்டுடும். ம்மாள. என
கத்தி எங்கடா?”
“தோ தல” அவன்
இடுப்பிலிருந்து எடுத்து கொடுக்க.,
‘”அய்ய்யோ
அவரை விடுங்கடா..”
“அடிங்க். சாவுடா… “சிபு பெரிய கத்தியை எடுத்து
வீச., சுரேஶின் இதயப்ப குதியில் அரை
அங்குல ஆழத்தில் கீறியது. சுரேஷ் வேரற்ற மரமாய் விழுந்தான்.
“அய்யோ.”. மலர் திமிற வர ., ஆதி
கையை வீச., அவள் உதடு கிழிந்து மயக்கமாக.,
“வயித்துல
குத்து தல” ஆதி சொல்ல.,
“அய்யோ
யாராச்சு ஓடி வாங்களென்..” பெண்கள்
கத்த., பிள்ளைகள் அச்சத்தில் பேச்சற்று போக., சஞ்சனாவின்
கணவனும், டிரவைர்ரும் தன்னிச்சையாக
அவர்களை தடுக்க பாய.,
சஞ்சனாவும், சுஜாதாவும்
துணிந்து ஓடி வந்து அவனை தடுக்க பார்க்க., அங்கே அந்த குடும்பத்திற்கும் அந்த முரட்டு தடியன்களுக்கும் பயங்கரமான
சண்டை நடந்தது.
சுஜாதா பிள்ளைகளை
தூக்கி கொண்டு கொண்டு பரபரவென வயல் வெளியிலிருந்து., தப தப வென சாலைக்கு ஓடி வந்து
“ஹெல்ப் ..ஹெல்ப்… அடிக்கறாங்க.. திருடறாங்க..” என கைகளைக் காட்டி ., நடு ரோட்டில் ..கத்த
“க்ரீக்க்க்க்க்கென” பிரேக் அடித்து அவசரமாய் நின்றன
அந்த கல்லூரி பேருந்துகள்.