மலர்விழி போன் இன்னும் ஆனில் இருக்கவே "ஏய் யார் நீ அவனை கூடவே கூட்டிட்டு வந்து இப்ப தெரியாத போல நடிக்கிறியா ?" என சாரதி கேட்க
"ஐயோ சத்தியமா இல்லங்க .இவன் என்னுடைய ஸ்டூடென்ட் தான் . இவன்
எதுக்கு இங்க வந்தான்னு தெரியல இவன் எங்க என்ன பார்த்தான்னும் தெரில நம்புங்க " என்றாள்.
" இல்ல இல்ல நீ சரி பட்டு வர மாட்ட இப்போவே எல்லாத்தையும் நெட்டில்
போட்டுடறேன்."
" ஐயோ அப்படி ஏதும் செஞ்சிடாதீங்க... போலீஸ் கிட்டயே நான் போகலை.
இவனை போய் கூப்பிட்டு வருவேனா? இருங்க அவனை
அனுப்பிவிட்டு உங்க கிட்ட வரேன் . ப்ளீஸ் சார்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க "
"அப்படியா சரி அவன் தற்செயலாக வந்ததா இருக்கட்டும் ஒருவேளை
அவன் நீ சொல்லி வந்திருந்தா உன்னை
தொலைச்சிடுவேண்.. அவனும் இங்க இருந்து
திரும்பி போக மாட்டான்., போனை ஆன்ல வெய்யி"
" சார் என்னை ஏன் சார் சித்திரவதை பண்றீங்க? அதான் எல்லாத்துக்கும் ஒத்துகிட்டேனே.."
"முதல்ல அவனை அனுப்புடி"
மலர் சுரேஷை பார்த்து கை காட்டினாள்.
"ஹேய்ய் சுரேஷ்..."
"ஹாய் மேடம்" சுரேஶ் அருகில் வந்தான்.
" மேடம் ஐ அம் சுரேஷ்"
" தெரியும். இங்கே என்ன
பண்ற? எதுக்கு என் பின்னால்
வந்து உயிரை வாங்குறே?" என எரிந்து விழுந்தாள்
."ஐயோ சாரி மேடம் ! எனக்கு வேற வழி தெரியல. அதான் உங்க
பின்னாலேயே வந்தேன் . உங்களை பாலோ பண்ணி வந்ததுக்கு சாரி..."
"ஃபாலோ பண்ணியா?"
"ஆமா மேடம் . அடுத்த வாரம் நடக்க போற எஸ்ஏபி ஃபைனல் எக்ஸாம்க்கு
எனக்கு அப்ரூவல் டிக்கெட் இதுவரைக்கும் வரல . பாண்டியன் சாரை கேட்டதுக்கு நீங்க
தான் பிளாக் பண்ணி வச்சு இருக்கீங்கன்னு சொன்னாரு. உங்களுக்கு பல தடவை நான் போன் பண்ணேன் நீங்க
எடுக்கவே இல்ல. நீங்க ஒன் வீக்கா
செண்டர்க்கு வரலை.. உங்க நம்பர்க்கு கால் பண்ணா எடுக்கவும் இல்ல. இன்னிக்குள்ள என்
அப்ளிகேஷனை அன் ப்ளாக் பண்ணா தான் எக்சாம்
எழுத அப்ருவல் லெட்டர் ஜெர்மனியிலிருந்து
கிடைக்கும்.. "
"அதுக்கு?"
"அதுக்குதான் உங்களை காண்டாக்ட் பண்ன ரொம்ப டிரை பண்ணேன். நேர்ல
பாத்து ரெக்யூஸ்ட் பண்ன உங்க வீட்டுக்கு வந்தேன்.
நீங்க அவசரமா அப்போ காரில் கிளம்பி போனீங்க. சரி வெயிட் பண்ணலாம்.
வீட்டிலேயே வெயிட் பண்ணலாம்னு பார்த்தேன். ஆனா நீங்க எப்போ வர்ரீங்கன்னு. எனக்கு
தெரியல. அதனால உங்க கார் பின்னாடியே வந்தேண்.
ரெண்டு மூணு தடவை உங்க கார் ஓவர்டேக் பண்ணி முன்னே வந்து கை
காட்டினேன். ஆனா நீங்க என்ன கொஞ்சம் கூட
கண்டுக்கலை . ஏதோ யோசிச்சிக்கிட்டே வந்தீங்க. சரி ஏதாவது ஒரு இடத்துல நின்னு தானே
ஆகணும். உங்க பின்னால வந்தேன் . இங்கே இங்கே வந்தா நீங்க காரைவிட்டு இறங்கி நிக்கறீங்க.."
"........."
"இங்கே.., இங்கே ஏன் மேடம் வந்திருக்கீங்க? எதனாச்சும் ஃபிளாட் புக்கிங் பண்ண போறீங்களா ? அப்படியே பண்ணனும்னா இங்க வர தேவை இல்லையே ..கிராண்டனி ஆபீஸ்க்கு
தானே போகனும்"
"நோ நோ சுரேஷ்., பிளாட்
வாங்க வரலை,. ஒரு பர்சனல் விஷயத்து க்காக வந்திருக்கேன்
"
"என்கிட்ட சொல்லுங்க. இவங்க எனக்கு தெரிஞ்ச
பில்டர்தான். .இன்பாக்ட்
இது...எங்க...."
" சுரேஷ் சொன்ன புரிஞ்சுக்கோ. ஆர் யு மேட்" அவள் கத்த,.
"மேடம்" அவன் அதிர்ச்சியானான்.
"நான் எ..எ..எனக்கு ஒரு பர்சனல் வேலை ஆக வேண்டி இருக்கு., நீங்க , நீ
போ, உன் கிட்ட அப்புறம் பேசுறேன். எனக்கு முக்கியமான
வேலை இருக்கு" என உளறினாள் .
"சரிங்க மேடம். இன்னைக்கு மிட்நைட்க்குள்ள நீங்க என்னோட அப்ளிகேஷனை
அப்ரூவலுக்கு மெயில் அனுப்பலன்னலனா என்னுடைய பெயரை பைனல் லிஸ்ட்ல ஆட் பண்ண
மாட்டாங்க . ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க " என சுரேஷ் கேட்க
"சுரேஷ் உனக்கு புரியவே இல்லையா? நான் ஒரு பெரிய பிரச்சனையில இருக்கேன். நீ முதல்ல இங்கிருந்து போ. நாம் அப்புறம்
பேசலாம் "
"அப்புறம் எப்போ மேடம்? தயவுசெஞ்சி எனக்கு
ஹெல்ப் பண்ணுங்க. இந்த தடவை மிஸ் ஆயிட்டா இன்னும் ரெண்டு வருஷம் நான் இங்கேயே சென்னையில கிடந்து சாகணும் .நான் எக்ஸாம் எழுதினா தான்
எஸ் ஏ பி சர்டிபிகெட் கிடைக்கும். அது
கிடைச்சா தான், எங்க கம்பெனில ஜாயின்
பண்ண முடியும்.. கொஞ்சம் மனசு வெய்யிங்க மேடம். காசு செலவானாலும்
பராவாயில்ல ப்ளீஸ்"
"சுரேஷ் உனக்கு அறிவே கிடையாதா ? எங்க வந்து இதை
கேட்கிறே? இப்படித்தான் ஒரு சென்டர் சேர்மனை ஃபாலோ பண்ணி கிட்டே வந்து
விசாரிப்பியா? “
"சாரிங்க மேடம் . நான் உங்க வீட்டுக்கு
போறேன் உங்க வீட்டு வாசல்லயே காத்துட்டு இருக்கேன்” என சொன்னான்
"செஞ்சு தொலை. முதல் இந்த இடத்தை விட்டு போ "என்றாள்.
“எனக்கு எப்படியாச்சும் இன்னைக்கு என் நம்பரை ஆட் பண்ணுங்க மேடம்.”
“ஆர் யூ மேட்? முதல்ல இங்கிருந்து
போ. நான் அப்புறம் உன் கிட்ட
பேசுறேன்" என்றாள். சுரேஷ்க்கு ஒன்றும் புரியவில்லை.
மலர்விழி எரிந்து விழ
கூடியவள் தான் . ஆனால், அவளை இந்த அளவிற்கு
டென்ஷனாகி அவன் பார்த்ததில்லை.
"சாரி மேடம் " சுரேஶ் பின்வாங்கினாள்.
"கெட் அவுட் ஃபிரம் ஹியர்..." அவள் கையை ஆட்டி நீட்டி பேசுவதை மேலிருந்து சாரதியும் பார்த்தான்.
"யெஸ் மேடம்" சுரேஷ் பின்வாங்கினான்.
" இங்க எங்குமே நீ நிக்க கூடாது. கிளம்பு"
"யெ..யெஸ் மேடம்.."
சுரேஷ் அடிபட்ட மனதுடன்
பைக்கி கிளப்பி போக.,அவன் தெருமுனை தாண்டி பிராதான சாலையில் திரும்பும் வரை பார்த்து இருந்து விட்டு ., பின் அவசரமாய் கட்டடம் நோக்கி பதட்டமாக
ஓடினாள்.
காருக்குள்ளே அவள்
வணங்கிய பெருமாள் பொம்மை கோபமாய் காற்றில் படபடத்தது,.