மறுனாள் அவள் அந்த விசிட்டிங்
கார்டை எடுத்து அந்த நம்பருக்கு, போன் செய்தாள். யாரோ ஒரு சேல்ஸ் கேர்ள் தான்
எடுத்து பேசினாள். இவள் சொன்ன ஆர்டரை குறித்துக் கொண்டாள்.
“கேஷ் அன்ட் டெலிவரி
மேடம்” என்றாள். அடுத்த நான்கு மணி நேரத்தில் மீசை கூட முளைக்காத ஒரு சின்ன பையன்
எடுத்து வந்து சவுண்ட் பாரை கொடுத்துவிட்டு காசு வாங்கிக் கொண்டு போனாள்.
அவ்வளவுதான்
பிரச்சினை தீர்ந்தது. இதற்கு போய் இவ்வளவு பயந்தோமே! என நினைத்துக் கொண்டு சவுண்ட் பார் கனெக்ட் செய்ய
முயற்சிக்க, அந்த சவுண்டு பார் அந்த ஹோம் தியேட்டருக்கு ஏற்றதாக இல்லை. விட்டு
விட்டு கேட்டது. சரவுன்டிங்க், ஊஃபர்
எதுவும் வேலை செய்யமாம் போக.,
“என்னம்மா இது
இப்படி படுத்தறே?” பார்கவி அலுத்து கொண்டாள்.
மறுபடியும் சங்கீதா
அந்த எண்ணுக்கு போன் செய்ய, இப்பொழுது ஆண் குரல் கேட்டது. அது அதை பொறுக்கின்
குரல் தான் .
“சொல்லுங்க சங்கீதம்
மேடம் ஏன் அந்த சவுன்ட் பார் ஒர்க் ஆகலியா? ஏன் என்னாச்சு? அந்த மாடல் கரெக்டான
மாடல் தானே”
சங்கீதாவுக்கு பக்
என்று இருந்தது. மறுபடியும் இவனே பேசுகிறானே.
“ சரி இருங்க வேற
மாடல் ஸ்பெக் இருக்கான்னு நான் செக் பண்ணிட்டு சொல்லட்டுமா? வேற மாடல்னா காசு
எக்ஸ்ட்ரா ஆகலாம்.. ஒரு டூ தவ்சன்ட்” அவன் பக்கா பிசினஸ்மேன் போல பேச., ‘சரி
பரவாயில்லை.” என சொன்னாள் சங்கீதா.
நீங்களே எடுத்து
வந்து மாத்துறீங்களா?இல்லநாங்க வரணுமா? “
அவர்களை வர
சொல்லலாமா? வேண்டாமா? என அவள் சங்கீதா தவித்தாள். சரி கடைப்பையன் தானே வரட்டும்’
என சொல்லி,
“ம்ம்ம் நீங்களே எடுத்து வந்து மாட்டிடுங்க”
என்றாள். அதுதான் தப்பாப் போய்விட்டது ஏனென்றால் இந்த முறை சவுன்டபார் பெட்டியை கொண்டு வந்தது அர்ஜுன்.
ஆனால், அந்த அர்ஜுன் ஜென்டில்மேன் போல
கீழே இருந்தே கால் செய்தான். ‘மேடம் சவுண்ட் பார் கொண்டு வந்து இருக்கேன், நீங்களே
வாங்கி பிக்ஸ் பண்ணி இருக்கீங்களா? இல்ல நான் வந்து பிக்ஸ் பண்ணனுமா?’ என்றான்.
அவளுக்கு என்ன சொல்வது?’ என
தெரியவில்லை. இந்த சமயத்தில், அதுவும் பார்கவி வீட்டில் இருக்கும் சமயத்தில் இவன்
வருவது பேராபத்து. அவள் டென்ஷன் ஆனாள்.
மறுபடியும் வாசலை எட்டிப் பார்த்தாள்.
கண்டிப்பாக அவனுக்கு பார்கவி இங்கே தான் இருக்கிறாள் என்பதெல்லாம் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை. அவன் கேசுவலாக தான் வந்திருக்கிறான்.
“ வாட்ச் மேனிடம் கொடுத்து விட்டு போக
சொல்லலாம்” என நினைத்தாள்.
“ நாங்களே பிக்ஸ் பண்ணிக்கறோம். நீங்க வாட்ச்மெண்
கிட்ட பாக்ஸ் குடுத்துடுங்க. நாங்க வாங்கிக்கிறோம்”
“சரிங்க மேடம்! பட் இந்த மாடல் 1800 ருப்பீஸ்
எக்ஸ்ட்ரா ஆகும்
“ பரவாயில்ல அதை இந்த நம்பர்க்கு ஜிபே பண்றேன்” என்றாள்
“சரி பண்ணிடுங்க ஆனா இந்த நம்பருக்கு
இல்ல. இது என் பிரைவேட் நம்பர். ஆபிஸ் ஜி பே இந்த நம்பர் இல்ல. இன்னொரு
நம்பர் சொல்றேன். நோட் பண்ணிக்கறீங்களா?”
“ம்ம் ஒரு நிமிஷம் இருங்க” என அவள் டீபாயில் பேனா எடுத்துக் கொண்டு பேப்பரை
தேடினாள். எந்த பேப்பரும் கிடைக்கவில்லை.
சங்கீதா பார்கவியின் ரூமுகு போக அவள் அங்கே இல்லை. அவள் கிச்சனில்
இருந்தாள் . அவள் கிறுக்கி கிறுக்கி கிழித்துப் போட்ட பேப்பர் ஒன்று
கிடைத்தது. அதை எடுத்தால் ஒரு ஓரமாக அவன் சொல்லும் நம்பரை எழுதினாள்.
நம்பர் எழுதிய பிறகு, ‘பேர் என்னன்னு வரும்?” என கேட்டாள்.
“ அர்ஜுன் “ என அவன் சொன்னான்.
அவள் ஜி
பே நம்பருக்கு கீழே அர்ஜுன் என அந்த பேரை எழுதப்போக,
அங்கே அவளுக்கு பயங்கர ஷாக்!
அங்கே ஏற்கெனவே “அர்ஜூன்” என
எழுதப்பட்டிருந்தது.
ஒன்றல்ல இரண்டல்ல நூறு முறை குட்டி
குட்டியாய் அர்ஜூன், அர்ஜூன்.. என கிறுக்கி தள்ளி இருந்தாள் . அடிபாவி மவளே
பார்கவி. கிராதகி.. நீ அவளை மறக்கலியா?
‘இதை தான் எழுதி எழுதிகிட்டே இருந்தியா?”
“அவ்ளோ ஆசையா? அவன் கூட, முதல் காதலை
., முதல் முதலா உடம்பை தொட்டவனை மறக்க முடியுமா?
இவன் தான் உன் உயிரா? பார்கவி? எனக்கு தெரியாம போச்சே? இவனுக்கு உன்னை
கட்டி கொடுத்திருக்கலாமே? பொறுக்கினு தப்பா நினைச்சேனே.. வேற ஜாதின்னாலும் நல்லா
பெருசா கடை கட்டி சீர்பட்டுட்டானே? சங்கீதா வேதனையில் துடிக்க.,
“மேடம்.. ஹலோ பேர் எழுதிட்டிங்களா?’
“இ..இருங்க .. ஒரு நிமிஷம். “
சங்கீதா வெலவெலத்து போனாள். அனிச்சையாக
கண்ணாடியை பார்க்க., கண்ணாடியில் ஸ்டிக்கர் பொட்டு ஒட்டப்பட்டிருந்தன. கோலம் அல்ல அது பேர். அர்ஜூன். அய்யோ இதென்ன கோலம்.. டாய்லெட்டில் தேடி
பார்த்தாள். மாடம் முழுதும் மஞ்சள் தொட்டு அர்ஜூன். அர்ஜூன்.
அர்ஜூன். அடிப்பாவி மூனு வருசம்
கழிச்சி., கூட இவ்ளோ காதலா? இல்ல காமமா? ஏதோ ஒன்னு? ஆனா அவன் மேல தான் இவ
இன்னும் உயிரா இருக்கா. இது தெரியாம நான் வெக்கம் கெட்டு ஜாக்கியை சேர்க்க
இருந்தேனே. இவன் தானே சரி”.
“ஹலோ மேடம் 1800 ரூபா போட்டுடறீங்களா?”
“..........ம்”
கீழே இருந்த டேபிள் முழுக்க பென்சிலால்
பார்கவி கிறுக்கி இருந்த பேரை படித்தாள். அர்ஜுன் அர்ஜுன் அர்ஜுன் என பல இடங்களில்
கிறுக்கி இருந்தது. சங்கீதா அதிர்ச்சியாகி திடுக்கிட்டு அப்படியே நின்றாள்.
அவள் கையில் இருந்த பேனா நடுவில் கீழே
விழுந்தது.
” ஹலோ மேடம் நீங்களே சவுன்ட் பார் கனெக்ஷன் பண்ணிடுவீங்களா?”
என கேட்க., அவளால் என்ன பதில் என்ன சொல்வது?’ என தெரியவில்லை
“ஆனா, இந்த மாடலும் ஃபிட் பண்ணி செட்
பண்ணி பார்த்துட்டு சரியா வரலைன்னா என்ன பண்றது?”
“ நீங்கதான் சொல்லணும்?”
‘கொஞ்சம் நீங்களே வந்து பிக்ஸ் பண்ண முடியுமா?” சங்கீதாவிற்கு இந்த தைரியம்
எங்கிருந்து வந்தது என தெரியவில்லை.
“நானா?”
“...................”
‘ நான் மேலே வரவா? “
‘ம். ஏற்கனவே நாம் ஒரு தடவை மிஸ்டேக் பண்ணிட்டேன். மறுபடியும் நான் மிஸ்டேக்
பண்ண கூடாதுன்னு நினைக்கிறேன்” என்றால் சங்கீதா பொதுவா அவன் அமைதியாக இருந்தான்.
“நானே வந்த போட்டுவிட்டு போகட்டுமா?”
“ ஆமா நீங்களே போட்டா தான் சரியா
இருக்கும்”
“சரி. எந்த வீடு ஏ 6, முதல் மாடி “
“சரி
வரேன்” என்றான்.
அவன் பைக்கை விட்டு மேலே வர,
சங்கீதாவிற்கு கையும் காலம்
ஓடவில்லை, உடல் முழுக்க பதட்டமானது.
‘அய்யோ கடவுளே என்னை மன்னித்துவிடு
புருஷணே மன்னித்துவிடு! ஐயோ என் சொந்தங்களே”
உறவுகளே., எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள்! எது சரி? எது தப்பு?
என்றால் யோசிக்க எனக்கு நேரமில்லை. ஏதோ ஒன்று என்னை வழிநடத்திப் போகிறது. நான்
இங்க இருக்கக்கூடாது. ஓடிவிட வேண்டும். அவனை பார்கவி பார்க்க வேண்டும்.”
அவள் வேகமாய ஹாலை தாண்டினாள்.
“பார்கவி..” கத்தினாள்.
“ஏய்ய் நான் மொட்ட மாடிக்கு போறேன்டி .துணி
எடுத்துட்டு வரேன். ஹோம் தியெட்டர் ரிப்பேருக்கு ஆளு வந்தா காட்டு” என சொல்லி அவள் பதிலை கூட கேட்காமல் அவள் விறுவிறு
என வாசல் கதவை திறந்து ஓடினாள்.
அவள் படிக்கட்டில்
ஏறி மொட்டைமாடிக்கு போக, முதல் தளத்தில் வந்து நின்றான் அர்ஜுன் .
கள்ளம் கபடம் காமம்- 1 - 6