மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, March 13, 2024

பாகம் 35 - எபிசோடு எண் : 42

 

ஒரு தந்தைக்கு தன் மகள் யாரோ ஒருவனுடன் திருமனத்துக்கு முன்பே சோரம் போய் சூலுற்றாள் என்பதைவிட  மிக வேதனையான விஷயம்  ஏதுமில்லை,. அப்படியே கூனி குறுகிப் போனார்.

"என்னடி சொல்றே?"

ரங்காவுக்கு தலையைச் சுற்றியது.  அப்படியே ஓரமாய் சீட்டில் சாய்ந்து கொண்டார்.  கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது .

'ஏன் இப்படி? எனக்கு ஏன் இப்படி நடந்தது ? நான் செய்த முன் வினையா? வயசுகாலத்தில் கண்ட நடிகைகளுடன் நான் அப்போ ஆடிய ஆட்டமா?  இந்த கர்மாவில் இருந்து யாரும் தப்பிக்க முடியாதா?  வயதுக்கு வந்த பெண்களை வைத்துக்கொண்டு, நான் சின்ன வயசு நடிகைகளுடன் போட்ட ஆட்டத்தின் விளைவா"

 அவர்  சினிமாவில் பைனான்ஸ் கொடுக்க ஆரம்பித்த  காலத்திலிருந்தே அவரது மடியில் கோலிவுட்டின் எத்தனையோ நடிகைகள் விழுந்தார்கள். நடிகைகளை நைட்டுக்கு அனுப்பினால் தன படத்துக்கு பைனான்ஸ்..

 அப்படி அந்த காலத்தில் சிக்காத ஒரு பெண் ஒரு நடிகை பானு. எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த ஆள் படத்தில்  நடிக்க மாட்டேன் என சொன்னதற்காகவே., அந்த நடிகையை மடக்குவதற்கு ஏராளமான திட்டம் போட்டார்.

 அவளுக்கு படவாய்ப்புகள் இல்லாமல் செய்தா.ர் அவளுடன் யாரும் நடிக்க கூடாது. என்றெல்லாம் தொந்தரவு கொடுத்தார் .ஆனால் எதற்கும் மசியாத அந்த நடிகை அந்த  பானு  ஒருகட்டத்தில் சினிமா விட்டு இப்போது சினிமாவை விட்டு போய் செட்டில் ஆகிவிட்டார்

ரங்கராஜுவை  பகைத்து கொண்டால் கேரியரே  இருக்காது என்பதை சிரிப்பில் உள்ள எல்லா நடிகரும் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தார்கள். இது போல பல நடிகைகள், துணை நடிகைகள். எக்ஸ்ட்ரா  நடிகைகள், டேன்சர்கள் . யாரும்  அவரிடம் வராமல் மிச்சமில்லை. 55 வயது வரை ஆட்டத்துக்கு குறைவில்லை;

 ஒருவேளை அந்த பாவங்கள் தான் சுத்தி அடிக்கிறதா? எனது மகளின் மானத்தை பறித்துவிட்டானே அந்த மாதேஷ்? ஏதோ லவ். கிவ்வு சமாச்சாரம் என  பார்த்தால் உள்ளே புகுந்து கொடியை நாட்டிவிட்டானே? பெருமூச்சு வாங்க்கியது.

நாம்  பீல்டில் இருக்கும்போதே இரு பெண்களுக்கும் கல்யாணம் செய்து விட வேண்டும் என சென்ற மாதம் கூட,  ஆக்டர் சத்யாவிடம் பேசியிருந்தேன்.  இரண்டு பெண்களையும் நல்ல இடத்தில் கட்டி கொடுத்து விட்டால் கடமை முடிந்தது என நினைத்துக் கொண்டிருந்தேன்.

திடமாக இருக்கும் போது இரண்டு பெண்களுக்கும் சிறப்பான முறையில் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் .ஆனால் ஒரு படம் முடிந்தால் இன்னொரு படம் இன்னொரு படம் என்று போய்க்கொண்டிருக்கிறது. படத்தை தயாரிக்கும் வாய்ப்பை விட்டு விட முடியவில்லை. அடுத்தடுத்த  நடிகர்களின் கால்ஷீட் வரிசையாக நின்று கொண்டே இருக்கிறார்கள் .

சும்மா இல்லை. ஒவ்வொரு படமும் 50 முதல் 80 கோடி பட்ஜெட். எப்படி விட்டுவிட முடியும்? ஆனால் ஒரு பக்கம் பணத்தை பார்த்தால்,  இங்கே ஒரு மகள் வயிற்றில், எவனுடனோ படுத்து கர்ப்பத்தை வாங்கிக்கொண்டு படுத்திருக்கிறாள் .

கடவுளே இனிமேல் நான் என்ன செய்வது? அவர் ஆத்திரத்தில் பல்லைக் கடித்துக் கொண்டு இருக்க.,  பெண்ணை  ஐசியூவீல் இருந்து பெட்டுக்கு மாற்றுவதாக சொன்னார்கள்.

அவனது மைத்துனன் தான் தனியே அழைத்துப் போய் சொன்னான். " ஒன்னும் சத்தம் போடாடீங்க மாமா.  பொண்ணு கசங்க்கி போச்சு. எப்படியோ ஏமாந்துட்டோம் . இதிலிருந்து எப்படி வெளியே வருவது என்பது மட்டும் யோசி. இனிமே நீ கத்தி கூப்பாடு போட்டு அதனால எதுவும் ஆகிடாது . உள்ள போய் பொண்ணு பாருங்க மாத்திரை எல்லாம் வெளியே எடுத்தாச்சு, இன்னும் கொஞ்ச நேரத்துல கண்ணு முழிச்சுடுவா" என ஏதேதோ சொல்லி தேற்றினான்.

ரங்கராஜூ அந்த அறையின் உள்ளே நுழையும்போது  சுஷ்மிதா கண் விழித்திருந்தால்

" அப்பா என்னை மன்னிச்சிடுங்கபா. தெரியாம்.. நான்.."

 என சொல்ல வாய் எடுத்தாள்.

 மகளின் பக்கத்தில் போய் உட்கார்ந்தார். " எனக்கு ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லு . உன் விருப்பத்துடன் நடந்ததா ? இல்லை பலவந்தமாக நடந்ததா ?"

அய்யோ ., எப்படிப்பட்ட சங்கடம்.,

"அதை மட்டும் சொல்லு. அவனை நடுரோட்டுல வெட்டி போடறேன்"

 என சொல்ல அந்தப் பெண் கண்ணை மூடி கொண்டாள் "பயப்படாத அப்பாகிட்ட சொல்ல பயப்படாதே.,  இந்த ஒன்னை மட்டும் சொல்லு"

 அப்பா நானும் ஆசைப் பட்டேன் பா என  நேரடியாக அவளால் சொல்ல முடியவில்லை.

"அவன் ரொம்ப நல்ல பையன்பா. " அது மட்டும் சொன்னாள்.

அவர் கண்ணை மூடிக்கொண்டார் . அவருக்கு எதுவும் பார்க்க பிடிக்கவில்லை.  இதுபோன்ற பல சூழ்நிலைகளை தனது படத்தில் அவர் பார்த்ததுண்டு.  ஆனால் நிஜத்தில் பார்த்தது கிடையாது.

 அவரது உடல் நடுநடுங்கியது.

சட்டென எழுந்து கொண்டார்.

' அந்த பையன் உன்ன கட்டிப்பானா? அவன் தான் பெரிய ஸ்டார் புடுங்கியாச்சே?'

"இல்லப்பா என் மேலே உயிரை வைச்சிருக்கான்பா.. நான் என்ன சொன்னாலும் செய்வான்பா.."

" சரி அவங்க வீட்டுக்கு போறேன்,.  உன் மேல உயிர் வச்சிருக்கானா? மயிர் வெச்சிருக்கானனன்னு  தெரிஞ்சுக்கிறேன் .

'சாரிப்பா .ப்ளீஸ்பா.."

'சரி., அவங்க வீட்டுக்கு இது தெரியுமா ?"

"இன்னிக்கு தான் தெரியும்"  என்றாள் ரங்காவின் மனைவி .,

அவர் தளர்ந்தார்.

"உனக்கு அந்த பையன கட்டிக்கணும் . அப்போ எனக்கு வேற வழி தெரியல . போயி செல்வராஜா கால்ல விழறேன்.."

"அப்பா...."

அவர் திரும்பி நடந்தார். இந்த காதலும் காமமும் சேர்ந்து என்ன பாடுபடுகிறது?  பருவ வயதிலேயே மிகச்சரியான வயதிலேயே கல்யாணத்தை பண்ணி விடவேண்டும் என பெரியவர்கள் தலையில் அடித்துக் கொள்வது இதுதான் போல. இவளை 26 வயசு வரைக்கும் விட்டு வைத்தது பெரிய தப்பு.

பெற்ற  பெண்ணை நம்பினோம் . ஆனால் அவள் வயதை நாம் நம்பாமல் போய்விட்டோம். அவள் வயதை நாம் கவனிக்காமல் போய் விட்டோம். அவளது ப்ரண்ட் வித்யா., செல்வராஜாவின்  மகள் என தெரிந்தும் அவளுடன் பழக விட்டோம். அவனது வீட்டுக்கு போக வர விட்டோம். அதுதான் பெரிய தவறு.

அறைக்கு வெளியே திரும்பினார். " டேய் நாகு எங்கடா?"  என கத்த, மனைவியின்  தம்பி ஓடிவந்தான்.

' சொல்லுங்க மாமா "

"வண்டியை எடு'

' சரிங்க மாமா'  

"செல்வராஜா  ஊர்ல இருப்பானா இப்போ ?"என்றான்

"அவருக்கு ஒன்னும் பெருசா படம் இல்ல,.  வீட்ல தான் இருக்கணும் "

"சரி,  வீட்டுக்கு வண்டி விடு..."என்றான்.

அவர்களது கார் ஹாஸ்பிடல் காம்பவுண்டை தாண்டிய அடுத்த நிமிடம் செல்வராஜா வீட்டுக்கு போன் பறந்தது.

 

" அங்க தான் வந்துட்டு இருக்காங்க " என தகவல் சொல்லப்பட்டது . சினிமாக்காரர்களின் வாழ்க்கை பட்டவர்த்தமானது .  தந்திரமானது. அது ஒரு கனவு உலகம் மட்டுமல்ல கண்ணாடி உலகம் கூட.

 அங்கே நடக்கும் ஒவ்வொரு விஷயம் அப்பட்டமாக எல்லோருக்கும் தெரிந்து கொண்டுதான் இருக்கும்.

துரோகங்கள் , காட்டிக் கொடுத்தல்கள்,  பழிவாங்கல்கள் போன்ற மனிதர்களின் அற்பங்கள் எல்லா துறைகளை விட அங்கே அதிகம்.