மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, June 2, 2026

காமப்புனல் ஏழாம் பாகம்

 காமப்புனல் ஏழாம் பாகம்

இந்த  வார இறுதியில்,. 


SORRY FOR THE DELAY

காமப்பெரு நதி பாகம் 1 எபிசொடு - 59

 

பெண்ணாசை போலவே பொன்னாசையும் மிகவும் பொல்லாதது.

டாக்டர் சாரங்கன் ஏற்றிவிட்ட காம நெருப்பு எப்படி சந்திராவின் உடல் எல்லாம் பற்றி எரிந்ததோ அதுபோலவே பணத்தின் மீதான ஆசையும் அவளுக்கு பெரும் சுடராக பற்றி எரிந்தது .

இந்த வீட்டுக்கு எவ்வளவு உழைத்தாலும் சம்பளம் வருஷத்திற்கு இரண்டு லட்சம் காணவில்லை.  இந்த டாக்டர் அப்பப்போ கூப்பிட்டு ஐயாயிரம் பத்தாயிரம் கொடுக்கிறான். ஒருவேளை இவன் சொல்வது படி நாம் நடந்து கொண்டால், சௌமியாவின் சொத்தில் ஒரு பெரிய பகுதி நமக்கு கிடைத்தாலும் கிடைக்கும்.

 நம்முடைய ஆத்திர அவசரத்திற்கு ஒரு ஆண் மகனுடன் படுத்திருந்ததை எப்படி எல்லாம் கேவலப்படுத்தி எள்ளி நகையாடி என்னை அற்பமாக்கி திட்டினாள் அந்த சௌம்யா? ஒழுக்கம் கெட்டவளுக்கு இங்க என்ன வேலை?' ன்னு வெளிய போடி ன்னு துரத்தினாளே?

 இப்போது அவளே ஒரு ஆணுடன் படுத்து கிடந்தால், அதற்கு நான் சாட்சியாக இருந்தால்? வாடி.. அவள் மனதில் குரோதமான எண்ண அலைகள் ஓடின. ஆம் டாக்டர் சாரங்கன் சொல்வது தான் சரி.

காலம் இப்படியே இருந்து விடாது. மாறிக்கொண்டே இருக்கும்.

' நம்மை அந்த வீட்டில் கேட்க யாரிருக்கிறார்? எல்லாம் நாம் ராஜ்ஜியம் என நினைத்தோம். திடீரென பி.ஏ என சொல்லிக்கொண்டு ஒரு பெண்  நுழைந்து விட்டாள். நாம் பார்த்து வைத்த பெண் தான். ஆனால், மெல்ல மெல்ல அந்த அபர்ணா சௌமியாவையும் இந்த வீட்டையும் கையில் போட்டுக் கொண்டு ஆட்சி செய்ய ஆரம்பித்து விட்டாள்.

இப்போதெல்லாம் பல வேலைகளை அபர்ணாதான் நம்மை கூப்பிட்டு சொல்கிறாள். சௌம்யா அம்மாகிட்ட கடன் கேக்க போனால்.,

"மேடம் தூங்கறாங்க. இப்ப டிஸ்ட்ரப் பண்ணாத போ' என்கிறாள். இவள் யார் இதை எனக்குச் சொல்ல?, ஒன்ட வந்த பிடாரி, ஊர் பிடாரியை துரத்தியது போல் ஆகிவிட்டது என் நிலைமை. இப்படி ஆகும் என நான் கனவு கண்டேனா? அது மட்டுமா?

 ஒரு மாதத்திற்கு முன்பே கிட்டத்தட்ட க்ருபா விவகாரத்தில் சிக்கி, இந்த வீட்டை விட்டு வெளியே போகும் சூழல் வந்தது .சௌமியாவின் கையில் காலில் விழுந்து கெஞ்சி கூத்தாடி இந்த வேலையை தக்கவைத்து கொண்டேன்.

நல்லவேளை அவள்,  என்னுடன் இருந்தது முருகேசனின் நினைத்துக் கொண்டு  முருகேசனை வீட்டுக்கு அனுப்பி விட்டாள். இல்லையென்றால் என் ஆசை காதலன் கிருபா இந்த வீட்டை விட்டுப் போக வேண்டியது.

 அப்படி என்றால் இப்படி ஒரு எஜமானுக்கு கீழே வேலை செய்யும் வேலை எப்போதும் நிரந்தரமல்ல. எப்போது வேண்டுமானாலும் என்னை வேலையை விட்டு இவள் தூக்கலாம். அல்லது கோபப்பட்டோ,  மனசு மாறியோ நானே கூட இந்த வேலையை விட்டு போகலாம். எங்கே போவேன்? இது போல ஒரு சொகுசான வேலை எங்கு கிடைக்கும்? தரமான சாப்பாடு எங்கே கிடைக்கும்? அதுமட்டுமா  சௌமியா இப்படியே இருப்பாளா?

சௌமியாவும் சின்ன பெண் தான்.  அவள் இப்படியே இருந்து விடமாட்டாள். நாளை பின்னே மும்பை பெங்களூரு அமெரிக்கா போகும்போது எவனோ  ஒருத்தனை பார்த்து மயங்கி விழுந்து விட்டால், அத்துடன் நமது சாப்டர் க்ளோஸ். அப்படி முன்னே பின்னே தெரியாத எவனையோ கட்டிகொண்டு, அவனுடன் கூடி கலவி பிள்ளை பெற்று அவர்கள் நம்மை  ராஜ்ஜியம் செய்வதை விட டாக்டர் சாரங்கனை சௌமியாவுடன் சேர்த்து வைத்து அவளை நம்முடைய முழுக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்.

இந்த கணக்கில்லாத பணத்தை கூறு போட்டுக் கொள்ள வேண்டும். அவள் மனம குரூரமாக யோசிக்க ஆரம்பித்தது. எப்போது நமக்கு சொந்தமில்லாதவற்றை  நமக்கு சொந்தமாக்க முயல்கிறோமோ அப்போதே பிரச்சனைகள் சொந்தமாகும். ஆனால் சந்திராவிற்கு அதெல்லாம் உறைக்கவில்லை.

என்னதான் ஒய்யாரமாக இருந்தாலும் காரில் போனாலும் வந்தாலும்  நான் வீட்டு வேலைக்காரி தான். பட்டுகுஞ்சமாக இருந்தாலும் விளக்குமாத்துக்கு கீழ தான் ஆட வேண்டுமா? என்ன? வீட்டு வேலைக்காரி என்ற பெயர் எப்படி தான் போகும்? அவள் மனம் ஒரு நிலையில் இல்லை.

 டாக்டர் சாரங்கன் சொல்வது போல பாவம் பார்த்தால் வேலை நடக்காது .எப்படியாவது சௌமியாவை இந்தாளுடன்  சேர்த்துவைத்து விட வேண்டும் . சௌமியா இவன்  காலையே கட்டிக் கொண்டிருந்தால், அது நமக்கு நல்லது. இதெல்லாம் பார்த்து அபர்ணாவும் போய் விடுவாள்.

அதன் பிறகு நமக்கு தேவையான பணத்தை சௌமியா கொடுப்பாள். சாரங்கனும் கொடுப்பான். நாம் வீடு கட்டி முடித்து, கிருபாவை கட்டிக்கொண்டு நாம் ஜாம் ஜாம் என வாழலாம். இதை விட்டால் சிறந்த வழி இருப்பதாக சந்திராவுக்கு தெரியவில்லை. கிருபாவை பின்னாளில் வற்புறுத்தி சொல்லி புரியவைக்கலாம்,. இப்போது தெரிய வேண்டாம். அவள் மனம் வேகமாய கணக்கு போட, 

'சந்திரா முழுவதுமாக கன்வின்ஸ் ஆகிவிட்டாள்' என்பதை சாரங்கனும் புரிந்து கொண்டார்

"சந்திரா ரொம்ப யோசிக்காத சரியா? நீ மனசு வச்சா தான் இது நடக்கும் "

"ம்ம்ம்ம் யோவ்வ்...  நான் யோசிச்சு சொல்றேனே"

" உனக்கு யோசிக்க எல்லாம் தேவையில்லை . முதல்ல இந்த காசைப் பிடி : டேபிள் டிராயரை திறந்து, ரூபாய் கட்டை எடுத்தார்.

"இது உனக்கு அட்வான்ஸ் "  சாரங்கன் நீட்ட அவளும் வாங்கிக் கொண்டாள் பணக்கட்டு மிக பாரமாக இருந்தது.

" ரெண்டு  லட்சம் இருக்கு" அவள் ஆடிப் போனாள்.

"இப்ப சௌம்யா எங்க இருக்கா? கிருபா எங்க?"

"கேரளா கச்சேரிக்கு எல்லாம்  போயிக்காங்க"

"சரி வந்தவுடனே.. நீ ரெசிபி ஸ்டார்ட் பண்ணிடு" அவர் சில மூலிகைகள், கிழங்கு, கீரைகளை ஒரு பையில் போட்டுக் கொடுத்தார்.

ஒன்றுக்கு பலமுறை விளக்கி சொன்னார்.

'அவளுக்கு டவுட் வரக்கூடாது சந்திரா.  ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் இதுல எதுனாச்சும் சேத்து கொடு.. ஒரேயடியாக கொடுத்துடாதே.. ஒரு வாரம் பத்து நாள் ஆனா கூட பரவால்ல., ஆனா அவளுக்கு டவுட் வரக்கூடாது..."

"ம்ம் நான் பாத்துக்கறேன்யா"

இன்று தான் அது ஆரம்பித்தது. சந்திரா போன பின்பு  லேட் நைட்டில் அவர் தன் காரில் கிளம்பினார். சௌம்யாவின் வீட்டை தாண்டும் போது சௌம்யாவின் கார் போர்டிகோவில் இல்லை. காரை ஓரம் கட்டிவிட்டு சந்திராவுக்கு சௌம்யா எஙே இருக்கிறாள்? என போன் செய்ய

"இன்னும் வரலய்யா. அவ வர்ர  நேரம் தான்" என்றாள்.

"சரி சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும் இன்னிக்கே ஆரம்பிச்சிடு.. இந்த விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது... கிருபாவுக்கு கூட"

'ம்ம்ம் சரி..."

" ஒரு வாரம் பத்து நாள்ள நல்ல ரிசல்ட் கிடைக்கும்.,  "

அவர் வீட்டுக்கு போக மனசில்லாமல்., எதிரே ரோட்டில் இருந்த சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்து அந்த பெரிய பங்களாவை கண்கள் விரிய பார்த்தார். கண்டிப்பாக இந்த வீடு, சொத்து, சௌம்யா எல்லாம்  ஒரு நாள் நமக்கு சொந்தமாகும்.

அவர் பெஞ்சில் சாய்ந்து உட்கார, 'கார் வெளிச்சம் பார்த்து திடுக்கிட்டார்.

'சௌம்யாவா? கேரள கச்சேரிக்கு போனவள் திரும்ப வந்துவிட்டாளா? அவர் பாய்ந்து பெஞ்சின் பின்னல மறைய, வந்தது சௌம்யா அல்ல., பிரசன்னா,. கூட ஷ்யாம். அவரால் டக்கென வெளியே வரமுடியவில்லை.

ஆனால், வந்தவர்கள் காரை ஓரம் நிப்பாட்டி தண்ணி அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். பேசினார்கள். இந்த இரண்டும் இரண்டு நாய்கள் சௌம்யாயாவை பங்கு போட துடிக்கின்றன.

அட..! ரொம்ப பேருக்கு சௌம்யா தான் குறி போல., பார்க்கலாம் .சௌம்யா அவர்களுக்கு கிடைப்பாளா? இல்லை எனக்கு கிடைப்பாளா? ம்ம்ம் பாத்துடலாம்.

'இது மட்டும் நல்லபடியாக முடிந்துவிட்டால் அய்யா இந்த டவுனில் பெரிய கோடீஸ்வரன் தான்'.

சாரங்கன் பெரிய பணக்காரன் குடும்பத்தில் இருந்தெல்லாம் வந்தவர் இல்லை .கஷ்டப்பட்டு தான் டாக்டருக்கு படித்தார்.

 ஓரிரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்தார் . புறாக்கூண்டு கோட்ரஸ்ஸில் எல்லாம் தங்கி வேலை குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்தார்.

அங்கே வேலை பார்த்த குண்டு  நர்ஸ் ஒருத்தி ரொம்ப வசதியான இடம் என்பதை தெரிந்து கொண்டு அவளையே கல்யாணம் செய்து கொண்டார்.

அவருக்கு இந்த கிளீனிக்கில் பெரிய வருமானம் இல்லை என்றாலும் ஓரளவு வசதியான வாழ்க்கையை தொடுவதற்கே 40 வயது மேல் ஆகிவிட்டது.

 சௌமியாவை போல பெரிய பணக்காரனாக ஆக வேண்டும் என்றால பரம்பர பணக்காரனாக வேண்டும் என்பதல்ல.

இப்படிப்பட்ட ஒரு பணக்கார எஜமானியை கையில் போட்டுக் கொண்டால் போதும் என குறுக்கு புத்தியில் யோசித்தார்.

அவர் இந்த ஊரில் வந்ததிலிருந்து சௌம்யாவின்  அழகை பார்த்து பலமுறை மயங்கி இருக்கிறார் .

பணத்தை  முக்கியமாக நினைத்து ஒரு தகர பேரலைக் கட்டிக் கொண்டேமே!

 

சௌம்யாவின்  திருமணத்திற்கு போனபோது கூட, இப்படிப்பட்ட பேரழகியை இந்த தேவாங்கு மாப்பிள்ளை கல்யாணம் செய்து கொள்ளப் போகிறானா?  என பொறாமையாக பார்த்தார்.

 கடவுளே! இந்த கல்யாணம் ஏதேனும் ஒரு வகையில் நின்று விட்டால் நன்றாக இருக்குமே இன்று கூட வக்ரத்தனமாய் யோசித்தார்.

அந்த ஆள் வேண்டுதலோ என்னமோ தெரியவில்லை அந்த கல்யாணமே திருஷ்டி வைத்தார் போல அடிக்கடி சண்டைகளுடனே நிகழ்ந்து முடிந்தது.

 அதற்கும் மேலே  முத்தாய்ப்பாய்  சில மாதங்களிலேயே அந்த திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது .

சௌம்யா தனியானாள். சௌம்யாவின் வாழ்க்கையில் பெரிய இடைவெளியும் தனிமையும்  வந்துவிட,  எப்படியாவது அந்த வீட்டில்  அவர் பல வழிகளில் பல நேரங்களில் முயற்சி செய்து கொண்டே இருந்தார்.

ஆனால் சௌமியா துளி கூட  அவரிடம் எப்போதும் முகம் கொடுத்து பேசவில்லை என்றாவது ஒரு நாள் இந்த திமிர்பிடித்த பேரழிகி சௌம்யா பழம் கனிந்து,  நம் கைகளில் வந்து விடும் என அவர் ஏங்கிக் கொண்டிருந்தார்.

சௌம்யா பிஏ வேண்டும் எனக் கேட்ட போது கூட, தன் உறவுக்கார பெண் அனுஷ்காவை அனுப்பி  உள்ளே நுழைக்க பார்த்தார். எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை,. எப்படியாவது நமது ஆள் பங்களாவில் நுழைய வேண்டும். அப்போது தான் நாம், நுழையமுடியும்.

 இப்போது சந்திராவின் தயவால் அது கைகூடும் போல இருந்தது . அவர் காரை  ஓட்டிக்கொண்டே உற்சாகத்தில் விசில் அடித்தார்.

சாரங்கனின் கார் சீரான வேகத்தில் டவுன் ரோட்டை தொட்டது.


 காமபெருநதி முதல் பாகத்தை படிக்க