அதே ஆகஸ்ட் பத்து. மணி 7.45.
சுரேஷ் . சஞ்சனா
வீடு இருக்கும் தெருவில் நுழைந்தான். சஞ்சனா வீட்டின் முன் பைக்கை
நிறுத்தினான்.
பரிசு பொருள்களோடு
வீட்டில் நுழைய,
“ஹாய்
வாங்க சுரேஷ்” வாசலில்
வரவேற்றாள் சுஜாதா.
சுஜாதாவின் அப்பழுக்கில்லாத முகத்தை
பார்த்தான். அடிப்பாவி
நீயாடி இவ்ளோ வேலை செஞ்சிருக்கே? என
மனதில் நினைத்துகொண்டே “ ஹாய்
ஆன்ட்டி” எண்றான்.
‘வாங்க
சுரேஷ்’ துள்ளி
குதித்து ஓடி வந்தாள் சஞ்சனா. அவனது
பிறந்த நாளுக்காகவே விசேஷமாக அலங்கரித்து கொன்டிருந்தாள்.
“எங்க
மலர்?” அவள் கேட்க.,
“வரா” என பொய் சொன்னான்.
“சரி
நீங்க வீட்டுக்குள்ள வாங்க” என்றாள் சஞ்சனா.
குழந்தைகளும் ஓடி வந்து அவன் மீது ஏறிக் கொண்டன.
அவன் வீட்டில் நுழைந்தான். அவன் வீடு அவனை உற்சாகமாய் வரவேற்றது.
சுரேஷின் பிறந்தநாள் என்பதால் சஞ்சனா அந்த வீட்டை மெனக்கெட்டு
பொலிவாக்கி இருந்தாள்.
மாவிலை, தோரணங்கள் கட்டி இருந்தாள், கதவு, ஜன்னல்களில் மஞ்சள், குங்குமம் தெளித்திருக்க
பல நாட்களாய் காணாமல் போயிருந்த கருப்பு கயிறு படிகாரங்களை
கொண்டு வந்து வாசலில் கட்டி இருந்தாள். பூஜை அறையை சாமந்தி
பூ போட்டு அலங்கரித்து இருந்தாள். சுஜாதா
சொல்லச்சொல்ல கேளாமல் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி இருந்தாள்.
எத்தனை வற்புறுத்தினாலும் சஞ்சனா
எல்லாவற்றையும் மீறி சுரேஷ் காக அந்த வீட்டை வெகு சுத்தமாக்கி இருந்தாள். வீடு
முழுக்க சாம்பிராணி வாசனை நறுமணமும் மூக்கை துளைத்தது.
சுரேஷ் உள்ளே நுழைய,
‘இப்பதான்
எங்க வீடு முதல்ல இருந்த வீடு
மாதிரி இருக்குன்னு நினைக்கிறேன். உங்க
பிறந்த நாளுக்காக’
என்றாள் சஞ்சனா.
சஞ்சனாவின் கணவனும் சுரேஷிற்கு
வாழ்த்துக்கள் தெரிவித்தான்.
ஆனால்
சுஜாதாவால் சுரேஷிடம் சகஜமாக பேச முடியவில்லை.
அவளுக்கு மனதில், ‘இந்த
சுரேஷ் எப்போது கிளம்பி செல்வான்?’
என இருந்தது.
இவன் கிளம்பிச் சென்றால் தான் இன்று
சஞ்சனாவை ஈஸ்வர் தொட முடியும் என நினைத்து அவன் புறப்பட
துடித்துக் கொண்டிருந்தாள்.
சுஜாதாவின் தவிப்பையும் துடிப்பையும்
தெரிந்துகொண்ட சுரேஷ், சஞ்சனா
கிச்சனில் இருக்கும் போது, சஞ்சனாவின்
கணவன் போனில் பேசிக் கொண்டும் போது மெல்ல பால்கனியில் இருந்த சுஜாதாவிடம் சென்றான்.
“ஹாய்
ஆன்ட்டி! என்ன
நெர்வசா இருக்கீங்க?”
“ஒ..ஒன்னுமில்ல.
சுரேஷ்.. ஹாப்பி
பர்த் டே” அவள்
கஷ்டப்பட்டு சிரித்தாள்.
“‘தாங்க்ஸ் ஆன்ட்டி., உங்க போனை கொடுங்க “
“ஏன்?
எதுக்கு?
“எனக்
கேட்க., அவன்
அந்த போனை வாங்கி சுவிட்ச் ஆப் செய்தான்.
“அய்யோ
சுரேஷ் ஏன் என் போனை ஸ்விட்ச் ஆப் பண்றீங்க. நான் அர்ஜென்ட ஒரு கால் பேசனும்..”
“என்ன
நான் வந்திருக்கிறதை அந்த ஈஸ்வர்க்கு போன் பண்ணி சொல்லனுமா?”
‘எ…என்ன்ன…?”
அவள் அதிர்ச்சியில் திகைத்தாள்.
‘“இ..இ ல்ல
எனக்கு கால் வரும் “என்றாள்
”தெரியும் ஆன்ட்டி. யார் கால் பண்ணுவாங்கன்னு.,
ஈஸ்வர் சந்திரன்
தானே”
“ஈ…ஈ
ஈஸ்வர்..பத்தி
உ .உனக்கு எப்படி
தெரியும்?”
என்று சொல்ல,
“ஆன்ட்டி., எனக்கு எல்லாம் தெரியும்.
அந்த ஈஸ்வர் சந்திரன் கொஞ்சம் கொஞ்சமா உங்க மூளையை மழுங்கடிச்சிட்டான்
இல்ல?”
‘……………….”
“உங்க்கிட்ட
அவன் தேவையை தீத்துகிட்டான்.”
‘…அய்ய்ய்..யோ.”
“முழுசா
கேளுங்க,
உங்க மூலமா உங்க
பொண்ணு சஞ்சனாவை அவன் இன்னைக்கு
தொடாமயே அனுபவிக்க போறான்றதும்
தெரியும்..”
“………ஆழே..நீ நீ?…..”
சுஜாதாவிற்கு அந்த
நீட்டு பால்கனி வட்ட பால்கனி போல சுற்றியது.
“அது
வரைக்கும் தான் அவன் உங்க கிட்ட சொல்லி இருக்கான்.
ஆனா., அவன்
அதுக்கப்பறம்..சஞ்சனாவை
தானா அவன் வீட்டுக்கு வரவழைச்சி. டைரக்டா…அவளை…”
“……அ
அய்யோ சொல்லாதீங்க…..”
“இப்படி
போய் அவன் கிட்ட ஏமாந்த்துட்டீங்களே ஆன்ட்டி?”
“……..சுரேஷ்…”
“அதையெல்லாம்
தடுக்கத் தான் நான் இங்க
வந்து இருக்கேன். இது ஒரு நேர்மையான ஸ்காலர் பரந்தாமன்’ங்க்கிற
ஒருத்தர் மூலமா தெரிஞ்சுகிட்டு அதை தடுக்கத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன் .” என
அவன் சொல்ல
சுஜாதா
தலையை பிடித்துக்கொண்டு,
“எனக்கு
நீங்க சொல்றது ஒன்னுமே புரியல”
என்றாள்
“எனக்கு
எல்லாம் புரிஞ்சிருக்கு ஆன்ட்டி.
நீங்க முதல்ல வர்ஷாவை அழைச்சிட்டு அந்த ஈஸ்வர் கிட்ட போய் இருக்கீங்க. அவரு உங்கள் இளமையையும்
அழகையும் பார்த்துட்டு..”
‘…………..” சுஜாதாவுக்கு அதிர்ச்சி மேல்
அதிர்ச்சி
“
உங்களை கொஞ்சம் கொஞ்சமா
அனுபவிச்சிருக்காரு. இப்போ அவரு உங்க மூலமா
உங்க பொண்னை அனுபவிக்க பிளான் போட்டு இருக்காரு.
அதுக்காக உங்களை மிரட்டி பணிய வச்சிருக்காரு. அவருடைய மிரட்டலுக்கு பயந்து கெட்டு
நீங்களும் அவர் சொல்ற வேலையெல்லாம் செய்றீங்க .நீங்க பண்றது சரியா?”
என கேட்க,
சுஜாதா
சுற்றுமுற்றும் யாருமில்லை என்பதை பார்த்துவிட்டு அவனிடம்
கைகூப்பி மன்னிப்பு கேட்டு குலுங்கி
குலுங்கி அழுதாள் .
“சுரேஷ்.. அவனை நல்லவன்னு நினைச்சிதான்…….”
“இதுல
என் தப்பு எதுவுமே இல்ல சுரேஷ் எனக்கு என்ன நடக்குதுன்னு தெரியல”
என்றாள்
“நீங்க
முதல்ல ஒரு தப்பான மாயையில் இருந்து வெளியே வாங்க ஆன்ட்டி
. நான்
உங்களை சேவ் பண்றேன்.. நீங்க, உங்க
டாட்டர், உங்க குடும்பம் எல்லாத்தையும்
நான் சேவ் பண்றேன். பழையபடி இந்த வீட்டுல சந்தோஷத்தை
கொண்டு வரேன்..”
“……………….”
“அது
மட்டும் இல்ல நீங்க இன்னிக்கு ஒரு நாள் நீங்க ஈஸ்வர் சந்திரனை
இந்த வீட்டுக்குள் நுழைய விடாம
தடுத்தா, இனிமே
உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. உங்க குடும்பத்துக்கு எந்தப்
பிரச்சினையும் இருக்காது.”
‘சுரேஷ்.. அதுக்கு நான் என்ன பண்றது? “
“நீங்க
எதுவும் பண்ண வேணாம் . நீங்க
இன்னிக்கி 11 மணி
வரைக்கும் தனியே இருக்காதீங்க., அவனால சஞ்சனாவை தொட முடியலன்னா, அடுத்து உங்க கிட்ட தான் வருவான். ஈஸ்வர்
சந்திரனுக்கு எதிரா நாங்க ஒரு வேலை செஞ்சுட்டு இருக்கோம். 11. மணிக்கு
அது முடியும், நீங்கள் அதற்கு ஹெல்ப் பண்ணுங்க.
போனை ஆப் பண்னியே வெச்சுக்குங்க.
அவன் கிட்ட பேசிடாதீங்க”
“கண்டிப்பா
நீங்க சொல்றபடி நான் செய்றேன் சுரேஷ்., அப்போ உங்க பிறந்தநாள்?
“
“அதெல்லாம்
சும்மா நான் இங்க வரத்துக்காக . “
“சுரேஷ்.. நீ
இந்த வீட்டுக்கு வந்தப்பரம் தான் எனக்கு தனி தெம்பு கிடைச்சிருக்கு. ஆனா என் விஷயம் ஏதும் சஞ்சனா
கிட்ட ..”
“ச்சே., கண்டிப்பா சொல்ல மாட்டேன்…”
“சுரேஷ்
என்றைக்கும் இந்த உண்மையை என் பொண்ணுக்கிட்ட,
மலர் கிட்ட நீங்க சொல்லக் கூடாது,
உங்கள கெஞ்சி கேட்டுக்குறேன்” என்றாள் சுஜாதா
.
வாசனையாக இருந்த அவளை கட்டிப்பிடித்து
முதுகு தடவி “ஆன்ட்டி
நான் சொல்றத நீங்க செஞ்சா
, கண்டிப்பா
நீங்க சொல்றதை நான் செய்றேன் “ என்றான்
மணி 9
மணிக்கு டின்னர்
எல்லாம் ரெடி ஆனது .
“இன்னும்
ஏன் இந்த மலர் அக்காவை
காணோம் . நான் வேணா போன் பண்ணட்டுமா?”
என்றாள் சஞ்சனா
“இல்ல
இல்ல நான் போன் பண்றேன்.,
நாட் ரீச்சபிள் வருது. நேரமானாலும் மலர்கிட்ட
காத்துக்கிட்டு இருக்கவேண்டியது தான். நான் கண்டிப்பா வரேன் ன்னு சொன்னா., “ என சுரேஷ் சமாளிக்க.,
சஞ்சனா கணவன் சுரேஷ் சொல்லியும் கேளாமல்
மலருக்கு போன் போட்டான். “ நாட்
ரீச்சபிள் னு வருதே”
என்றான்
“பெரிம்மாக்கு
போடுங்க” சஞ்சனா
சொல்ல.,
அவள் கணவன் மலரின்
அம்மா நம்பருக்கு போன் போட்டான்.
அதுவும் நாட் ரீச்சபிள்
என வந்தது .
சுரேஷ் கண்னன் சாருக்கு மானசீகமாக
நன்றி சொல்ல.,
“மலர்
அவங்க அம்மா கூட புக் புக் ரிலீஸ் பங்ஷனுக்கு போயிட்டு அப்படியே இங்க
வரேன்னு சொன்னா, இன்னும் கானோம். சரி
விடுங்க., ஒருவேளை
அந்த சிக்னல் கிடைக்கலையோ
என்னமோ தெரியல.
இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுவோம் என சொல்ல, மணி பத்தை போட்டது
அங்கே பரந்தாமன் சாஸ்திரியின் யாகம்
தொடங்க., சமரனின்
ஆன்மா முதல ஆளாய் வந்து உட்கார்ந்தது.
பரந்தாமன் சாஸ்திரி உச்சகட்ட வேகத்தில் மந்திரங்களைச் சொல்லி ஆன்ம சக்திகளை
ஒருங்கிணத்தார்.