மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Sunday, August 22, 2021

1501 ( திரும்புடி பூவை வைக்கனும்- பாகம் 26)

 

மலர்விழியின் முன்னாள் கணவன் ஜீவாவும், சாருனித்தி என்னும்  சாரதியும் மீட்டிங் முடிந்து வெளியே வந்தார்கள்.  சாரதி தன் சொகுசு காரில் ஏறப் போனான்.

ஜீவா டூவீலரில் வேற போக "என்னய்யா இன்னுமா நீ கார் வாங்கல?"  எனக் கேட்டான்.

ஜீவா சங்கோஜமாக சிரிக்க.,'  பரவால்ல விடு இந்த ப்ராஜெக்ட் வெற்றிகரமாக முடிஞ்சா ஹரிஷ் தயவால் நிச்சயம் உனக்கு கார் கிடைக்கும் இல்ல"  என்றான் ஜீவா சிரித்தான்.

சாரதியிடமிருந்து விடைபெற்று ஜீவா தன் வீட்டிற்குச் சென்றான்.,  தன் வீடு என்றால் அது அவன் வீடு அல்ல அவனது அண்ணன் வீடு.

அவனுக்கென்று ஒரு வீடு எப்போதும் இருந்ததில்லை.  அவன் அண்ணன் வீட்டிலேயே தான் வாழ்ந்து வந்தான்.அதில் அவனுக்கு முன்பு பாகமிருந்தது. அதெல்லாம் அப்போ. கல்யாண செலவுக்கு அண்ணனிடமே வீட்டை அடமானம்  வைத்து தாம் தூம்மென செலவு செய்து.,  பெரும் பணம் செலவழித்து இப்போது அவனிடம் ஏதுமில்லை... இந்த ஹரீஷி தவிர., மலர்விழியின வீழ்த்தும் திட்டம் தவிர..,

தனக்கு திருமணம் ஆகி மலர்விழியை அழைத்துக்கொண்டு தனியே ஒரு வீடு பார்க்கலாம் என அவன் நினைக்க.,  மலர்விழி தான் ' நானும் கல்யாணம் ஆகி உங்களுடன் வந்து விட்டால் என் அம்மாவுக்கு யார் துணை?  இங்கேயே இருந்து விடுங்கள் என கூறிவிட்டாள்.

அவளது  அப்பா ரிட்டயர்டு ஜட்ஜ் என்பதால் அவர் இறந்த பின்னும் கூட ஏதோ பென்சன் தொகையாக மலரின் அம்மாவுக்கு மாதம் மாதம் வருமானம் வர ஜீவாவும் தலையாட்டிக் கொண்டு அவளுடன் இருந்துவிட்டான் அப்போது மலர் இந்த அளவுக்கு பப்ளிக் பிகர் இல்லை. ஆனால் ஸ்கூல் டீச்சர். மாசம் 20 ஆயிரம் சம்பளம்.அது அவனுக்கு போதுமானதாக  இருந்தது

.ச்சே ஒழுங்கா இருந்திருக்கலாம்.. அவளை ஆண்டு அனுபவிக்க தெரியாம., வந்ததை வெச்சி வாழ தெரியாம.. ச்சே இப்படி ஒரு மானங்கெட்ட பொழப்பு நமக்கு..?

மலர் துரத்தி விட்ட பிறகு அங்கும் இங்கும் அலைந்து மறுபடியும் அண்ணன் வீட்டிலேயே ஐக்கியமாகி விட்டான்.வேறு வழியில்லாமல்  அவன் ஜீவாவை சகித்து கொண்டான்.

அண்ணன் என்றால் பாசக்கார சகோதரன் கிடையாது. அவனது அண்ணன் பிரபு எல்லாம் எந்த வகையிலும் பட்டியலிலும் அகப்படாத ஒரு கேரக்டர் . தன்னை விட 8 வயது அதிகமான அண்ணன் கூட ஜீவா  சகித்து கொண்டு இருந்ததெல்லாம் காலத்தின் கோலம். அவர்கள் வழக்கமான பங்காளிகள் இல்லை.. 

சிறுவயதிலிருந்தே எலியும் பூனையுமாக இருந்த அண்ணன் வீட்டில்தான் நாம்  பிற்காலத்தில் இருக்கப் போகிறோம் என்பதெல்லாம் அப்போது ஜீவாவுக்கு தெரியாது  ஏனென்றால் பிரபுவுக்கு ஒருநாளும் ஜீவாவை பிடிக்காது.  பிரபு கறுப்பு., லேசான வழுக்கை.,  ஜீவா செவப்பு., கட்டை சுருள் முடி..,   அதனால் இயல்பிலேயே ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையோ என்னவோ தெரியவில்லை.  ஜீவாவை சிறுவயதிலிருந்தே வெறுத்து வந்தான் பிரபு..

பிரபு பிறந்து நீண்ட நாட்களுக்கு பிறகு தான் ஜீவா பிறந்தான்.  அதனால் அவர்களுக்கு இடையே இருந்த வயது வித்தியாசம் கூட,  அவர்கள் இருவரையும் ஒரே சூழ்நிலையில் நண்பர்கள் வட்டாரத்தில் வளர விடவில்லை ஜீவா பிறந்த  கொஞ்சநாளில் அவர்களது அப்பா இறந்துவிட இருவருக்கும் ஒரே ஆதரவு அவர்கள் அம்மாதான் அம்மா பள்ளிக்கூடத்தில் ஒரு ஆசிரியையாக இருந்து இருவரையும் காப்பாற்றிக் கொண்டு வந்தாள்.  சொந்த வீடு என்பதால் வாடகை பிரச்சனை இல்லை .அதனால் வந்த வருமானத்தில் இருவரையுமே நன்றாக படிக்க வைத்தாள்.

அதில் அண்ணன் பிரபு விழுந்து விழுந்து படித்து சதா புத்தகமும் கையுமாக இருந்தான். ஒவ்வொரு பாடத்திலும் சென்டம் வாங்கி அசத்தினான்.  ஆனால் ஜீவாக்கோ படிப்பு என்பது வேப்பங்காயாக பாவக்காய் ஆக கசந்தது தட்டு தடுமாறி பன்னிரண்டாம் வகுப்பு வரும் போது இரண்டு பாடத்தில் பெயில் ஆகி விட்டான்.  அண்ணன் படித்துவிட்டு கைநிறைய சம்பாதிக்க துவங்கியபோது அம்மா லெதர் கம்பெனி  ஒன்றிலிருந்து ரிட்டையர்டு ஆகிவிட.,  வீட்டை காப்பாற்றுவது அண்ணன் காரன் பிரபுதான் என்ற நிலை ஆகிவிட்டது.

 இயல்பிலேயே ஆதிக்க மனப்பான்மை கொண்ட பிரபுவுக்கு ஜீவாவுக்கு நாம்தான் சோறு போடுகிறோம் என்பதாய் நடந்து கொண்டான். அவன் அம்மாவையும் எடுத்தெறிந்து பேசினான்.  ஜீவாவையும் ரொம்பவே அவமதித்தான்.

அண்ணன் இல்லாத போது அம்மா ஜீவாவை கூப்பிட்டு படிப்பு தாண்டா உன்னை காப்பாத்தும்.  எப்படியாவது இந்த தடவை பிளஸ்டூ படிச்சி பாஸ் ஆகி டிகிரி வாங்கு.. என சொல்ல ., வேறு வழியில்லாமல் பரங்கிமலை ஜோதி பிட்டு படங்கள் பார்ப்பது எல்லாம் கொஞ்ச காலம் ஒழித்துக் கட்டிவிட்டு தட்டுத்தடுமாறி படித்து பார்டரில் பாஸ் செய்தான்.

அவன் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படிக்க போகிறேன் என சொன்னபோது பிரபு சத்தம் போட்டு சிரித்தான் ' நாயே நீ எடுத்த மார்க்குக்கு பி ஏ  ஆர்ட்ஸ் டிகிரி  கூட கிடைக்காதடா மூடிகிட்டு ஒழுங்கா வேலை வேலைக்கு போற வழிய பாரு.,  இல்லனா நீயே பொருளாதாரம் படி என கிண்டல் செய்தான் .

ஜீவா மூன்று நாட்களாக அழுதபடியே இருக்க அம்மா மனசு இறங்கி வளையல்களைக் கழற்றிக் கொடுத்து விற்று காசாக்கி ஒரு சாராய வியாபாரி நடத்தும் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் சேர்த்துவிட்டாள். மின்னியல் பிரிவில் இடம் கிடைத்தது.

ஜீவாவிற்கு படிக்கவும் பிடிக்கவில்லை வீட்டுக்குப் போகவும் பிடிக்கவில்லை ஒரு தப்பான சூழ்நிலையில் தப்பான மன சிந்தனையில் அவன் வளர்ந்து வந்தான் தொடர்ந்து அவமதிக்கப்படும் ஒரு சூழ்நிலையில் அவன் மனதை எங்கு செலுத்துவது?  என தெரியாமல் விழித்தான்.

 நூலகம் போய் படிக்க பிடிக்கவில்லை நண்பர்களுடன் சேர்ந்து விளையாடவும் பிடிக்கவில்லை.  கிரிக்கெட் புட்பால் எதிலும் அவனுக்கு ஆர்வம் இல்லை . தனது மனதை தீவிரமாக இதிலாவது செலுத்த வேண்டும் என நினைத்தான் அவனுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் உள்ள தியேட்டர்களில் பலான படம் பார்ப்பது தான் .

என்னமோ தெரியவில்லை அதை பார்த்தால் தான் ஒரு புது உலகத்தில் இருப்பது போல அவனுக்கு தோன்றியது.  சென்னையில் அதற்கென பல தியேட்டர்கள் இருந்தன. அவன் அத்தனை தியேட்டரையும்  தெரிந்து வைத்திருந்தான்.  அம்மாவிடம் அடிக்கடி காரணம் சொல்லி பொய் சொல்லி பணம் வாங்கி ஏறக்குறைய எல்லா தியேட்டர்களிலும் பிட்டு படம் பார்த்தான். இன்னும் இன்னும் கெட்டு போனான். சதா காமமாக மாறிப் போனான்.

நாளாக நாளாக வாரம் ஒரு படம் பார்க்கவில்லை என்றால் கூட தலையே வெடித்து விடும் அளவிற்கு அவன் அடிமையானன் ஜீவா. அவனது இளம்பருவத்தில்  வளர்தியாக.,  கொஞ்சம் அழகாக கூட இருந்தான். ஆனால் சரியான நல்ல உடைகள் தான் அவனுக்கு இல்லை .

அண்ணன் ஆபீஸ் போன பிறகு அவனுக்கு தெரியாமல் அவனது சட்டைகளை ஒன்றிரண்டு எடுத்து போட்டுக்கொண்டு போக சுமாரான பெண்கள் அவனை திரும்பி பார்த்தார்கள்.  அண்ணனுக்கு தெரியாமல் சட்டை போடுவதை ஒரு நாள் அண்ணனை கண்டு பிடித்து விட்டான்.

" த்தா,., 500 ரூபா சட்ட உனக்கு கேக்குதா?  காலேஜ் போறதுக்கு எதுக்குடா இந்த பகட்டு?  இனிமேல் என் சட்டையை எடுத்து தொலைச்சிடுவேன் "  என சொல்லி கத்தினான் .

 ஒரு நாள் அவன் தன் சட்டையை போடுகிறனா? என பரிசோதிக்க.,  செக் செய்ய ஆபிஸிற்கு சீக்கிரமே கிளம்பி விட்டான்.  தெருமுனையில் ஒளிந்திருந்து பார்த்தான் பிரபு.

 இப்படிப்பட்ட ஒரு கேவலமான அண்ணனின் செய்கையை தெரியாத ஜீவா வழக்கம்போல அண்ணனின்  இருப்பதில் நல்ல சட்டை ஒன்றை அணிந்துகொண்டு காலேஜ்  போக எதிரில் வந்தான் பிரபு .பிரபுவை பார்த்ததும் ஜீவா ஸ்தம்பித்தான். .பிரபு  பைக்கை  விட்டு  இறங்கி நின்றான் ஜீவாவுக்கு குப்பென வியர்த்து விட்டது.  ரோட்டிலேயே கண்டபடி அடித்தான்.. திட்டினான்..  வீட்டுக்கு வாடா எனக் கூப்பிட்டான் பயந்துகொண்டே பிரபுவின் பின்னால் போனான் ஜீவா.

வாசலில்  பைக்கை நிறுத்திவிட்டு பளீரென அறைந்தான் பிரபு.  தட்டு தடுமாறி அம்மா ஓடிவந்து தடுக்க பார்க்க

 " அம்மா இங்க பாரு நான் செய்யிற வேலைக்கு நல்ல டிரஸ் முக்கியம் இவன் என் டிரஸ் எல்லாம் போட்டு பழாக்கிகிட்டா, அப்புறம் நான் எத போட்டுக்கிட்டு வீட்டுக்கு போவேன். இந்த நாய்க்கு எத்தனை தடவை சொன்னாலும் அறிவு கிடையாது " என திட்டி தீர்த்தான்.

ஜீவா வேதனையாக சட்டையை கழட்டி போட  பிரபு அந்த சட்டையை கொண்டுபோய்  ஒரு பக்கெட் தண்ணீரில் நினைத்தான்." ஏண்டா இப்படி செய்ற என அம்மா கேட்க,

"நான் போயிட்டா ., இவன் மறுபடியும் என் சட்டையை  போட்டுருவான்"  என சொல்லி அவனது ரூமையும் லாக் செய்தான்.

திகைத்து போய் நின்றான் ஜீவா.

: இனிமேல் நீ எப்படி  என் சட்டையை போடறேன்னு  நான் பாக்குறேன்டா " என்ன சொல்லி போனான்.  ஜீவாவுக்கு ரொம்பவும் அவமானமாக இருந்தது.  அந்த வெற்றுடம்பில் ரொம்ப நேரம் சோபாவில் உட்கார்ந்து இருந்தான். காலேஜுக்கு போகவில்லை.