சௌம்யாவுக்கும் மனோகரனுக்கும் திருமணம்
நிச்சயக்கப்பட்டது .
மனோகரன் ஆணாதிக்க சாயலில் வந்தவன்.
அவனது அம்மாவை அப்பா போட்டு அடிக்கும் காட்சிகளை பார்த்து வந்தவன் . மேம்போக்காய் எப்படியோ
படித்து ஆளாகிவிட்டான். அவனுக்கு
சௌமியாவின் மேன்மை எல்லாம் ஒன்றும் புரியவில்லை. தானே அதிகாரம் மிக்கவன் என நம்பினான்.
அவனது நண்பர்களும் அதிகாரிகளும்
ஊழியர்களும்., நிச்சயதார்த்தத்தில்
'உங்க மனைவி ரொம்ப அழகா இருக்காங்க
சார்"
' பத்திரமா பாதுகாத்து
வெச்சுக்கோங்க'
' யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம்'
உங்களுக்கு கிடைச்சிருக்கு" என மாறி
மாறி சொல்ல அவன் குழப்பமானார். தான் இரண்டாம் பட்சமாய் இருப்பதாய் உணர்ந்தான்.
சௌமியாவுக்கு தான் ஏற்ற புருஷனா?'
என தெரியாமல் அவன் குழம்பினான். கார்த்திகையில் திருமணம் .
திருமணத்திற்கு மார்த்தாண்டமே
திரண்டு வந்தது.
சௌமியாவின் பக்கம் ஆயிரம் பேருக்கு மேலாவது
வந்திருந்தார்கள்.
முதல் பந்தியில் உட்கார்ந்து
உள்ளூர் ஆட்கள் சாப்பிட்டு விட.
மாப்பிள்ளை பக்கம் ஆட்களுக்கு சாப்பாடு போடுவதில்
தாமதமாக பிரச்சனையானது.
அவர்களது முதல் விரிசல் அங்கு தான் துவங்கியது.
மாப்பிள்ளை தாய் மாமன் சமையல்காரனை அதட்ட.,சௌமியாவின்
தோட்டக்காரன் முருகேசன் வந்து ஆக்ரோஷமாய் பாய்ந்து அடிவாங்கினான். அவனையும் அந்த
தாய் மாமன் தள்ளிவிட ,
சுதாரித்த முருகேசன் குரங்கு பிடி
பிடித்து, தாய்மாமன் முடியை பிடித்து ஆட்ட, சமையல் காரன் சாம்பார் வாளியை தூக்கி
மூஞ்சில் அடித்தான். அதன் பின் அடிதடி தான். யார் யாரை அடிக்கிறார்கள் என்றே
தெரியவில்லை.
விஷயம் பரவ கலவரமாகி பாலகிருஷ்ணன் கிச்சனுக்கு ஓடினார்.
"ஏய்ய்ய் சும்மா இருங்கடா. வெளிய
போங்கடா" பொதுவாய் அதட்டினார்.
" நீ யார்யா?"
"பொண்ணுக்கு அப்பா"
சொல்லி முடிப்பதற்குள் அவரின் வயிற்றில் ஒரு குடிகார நாதாரி குத்து விட்டான்.
"த்தா காராசேவு பொட்டலம்
கேட்டா. கொடுக்க மாட்டீங்களா? ன்னாடா
மயிர்ல கல்யாணம் பண்றீங்க" அடி
வாங்கிய வயோதிகர் பாலகிருஷ்ணன் வலி தாங்க முடியாமல் சுருள., இடமே ஸ்தம்பித்து
போனது.
"ஏய்ய் எங்கய்யாவையா
அடிச்சீங்க? செத்தீங்கடா இன்னிக்கு" முருகேசன் ஆத்திரப்பட்டான்.. பெரிய
இரும்பு கரண்டியால் சகலரையும் அடித்தான்.
சண்டை இன்னும் பெரிதானது. இடமே ரத்தக்களரியானது. சௌம்யா விக்கித்து
போனாள். சந்திரா தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.
அது பெரிய பிரச்சினை ஆகி, நடுநிசியில் காவல் நிலையம் வரை சென்றது. விடிந்தால்
முகூர்த்தம் அமைச்சர்கள், பெரிய விஐபிகள் எல்லாம் வர இருக்கும் திருமணம் இப்படி
சந்தி சிரிக்க., " கண் பட்டுவிட்டது ஊர் கண் பட்டுவிட்டது., சௌம்யாவுக்கு
திருஷ்டி ' என்றெல்லாம் சொன்னார்கள்.
‘தாலி கட்டமாட்டேன்’ என சொல்லி
காட்டுக்குள் தண்ணியடிக்க நண்பர் படை சூழ சென்ற மாப்பிளையை ஊர் பெரியவர்கள் கெஞ்சி
கூத்தாடி அழைத்து வந்தார்கள். இன்ஸ்பெக்டர் தலைமையில் விடிய விடிய பஞ்சாயத்து பேசி
சமரசம் ஆனது.
பிரச்சனைகள் ஒரு பக்கம் இருந்தாலும் கல்யாணம்
திட்டமிட்டபடி சரியான முகூர்த்தத்தில் நடந்தது. முக்கியமானவர்கள் எல்லாம்
வந்தார்கள். ஆனால் யாருக்குமே சந்தோஷம் இல்லாதது போல தோன்றியது .
கல்யாணம் முடிந்து மாலையில் மாப்பிள்ளை நட்புகள் தனி காரில், சென்னை திரும்பிய போது பாலகிருஷ்ணனின் வயிற்றில் குத்திய பையன் காரிலிருந்து வலுக்கடாயமாக இறக்கப்பட்டான்.
சமாரியாக தாக்கபட்டான்.
அந்த கலவரத்துக்கு உள்ளூர் முருகேசன் தலைமை
தாங்க.,
"வயசனாவங்க கிட்ட வீர்த்தை
காட்டுவியா?" தபதபவென அவர்களை முருகேசனின் ஆட்கள் சுத்தி போட்டு வெளுத்தனர்.
அவன் மாப்பிளையின் உயிர் நண்பனின்
தம்பியாம். விஷயம் மனோகருக்கு தெரிவிக்கப்பட அவன் குதித்தான். ஆர்ப்பாட்டம் செய்தான்.
மீண்டும் காவல் நிலையம். மீண்டும்
பேச்சு.. ஒரே குழப்பம்,. யாருக்கும் நிம்மதியே இல்லை. முருகேசன் லாக்கப்பில் அடைக்கப்பட்டான்.
அதன் வெளிப்பாடு அவர்களின் முதலிரவு
தேதி தள்ளி போனது . திருமணமாகி அவன் சௌமியாவிடம் சரியாக பேசக்கூட இல்லை. ஒரு வாரம்
கழித்து தான் சாந்தி முகூர்த்தத்திற்கு நேரம் குறித்து கொடுத்தார்கள்.
ஆனால், அந்த ஒரு வாரத்திலேயே
அவனிடம் நல்லதாக ஒரு விஷயம் கூட இல்லை என்பதை சௌமியா புரிந்து கொண்டு அழ
ஆரம்பித்தாள். சந்திரா தான் திடப் படுத்தினாள்.
'இல்லம்மா அந்த போலீஸ் ஸ்டேஷன்
பிரச்சினை தான் எல்லாருக்கும் மனசுல ஓடிட்டு இருக்கு. நாளான சரியாயிடும் .மாப்பிள்ளை
ரொம்ப நல்லவரும்மா எல்லார்கிட்டயும் தன்மையா பேசுறார் " என என்னென்னமோ சொல்லி
பார்த்தார் .
ஆனால், சௌம்யாவுக்கு மனசு கூடவில்லை.
அவனுக்கு சௌம்யாவின் அழகை போற்றவும்
தெரியவில்லை, ஆராதிக்கவும் தெரியவில்லை, ஆண்டு அனுபவிக்கவும் தெரியவில்லை .
இனிமையாக பேசி அவளை மயக்கவும் தெரியவில்லை.
"மன்னிப்பு கேக்குறாப்பல
கேட்டு, பசங்களை அடிக்க பின்னாடியே ஆளை அனுப்புறானா உங்கப்பன்?" அவளிடம் ஒரு எதிரி போல சண்டை தான் பிடித்தான்.
"என்னடி பெரிய அழகு? பெரிய
பாட்டு? என் படிப்பு என்ன தெரியுமா? என்
சைனுக்கு என்னா வேல்யூ' ன்னு தெரியுமா?"
அவன் கூட பதிலுக்கு பேசவும், சண்டை
போடவும் கூட அவளுக்கு தெரியவில்லை. அப்பா தான் மறுபடி வந்து மன்னிப்பு கேட்டார்.
சௌம்யாவையும் திடப்படுத்தினார்.
"சரியா தப்போ! தலையை
கொடுத்தாச்சு. சமாளிச்சு மீண்டு வந்தா உன் சமத்து" அவளின் கண்ணை பார்க்காமல்
பேசினார். அவள் எல்லாவற்றையும் மறக்க முயன்றாள். அவனிடம் கூட நினைத்தாள்.
சௌம்யாவை தங்க தேவதையாக சந்திரா அலங்கரித்து சாந்தி முகூர்த்ததுக்கு அனுப்பினாள்.
அன்று வானில் பௌர்ணமி.
நிலவு தங்க நிறத்தில் பெரு ஒளியை பொழிந்துகொண்டிருந்தது. வீட்டுத் தோட்டத்தில்
வேலியோர மிருந்த வேப்ப மரங்கள் பூத்துக் குலுங்கியிருந்தன. அதன் நறுமணம் கலந்த
மெல்லிய இளங்காற்று தோட்டமுழுதும் வீசிப் புத்துணர்ச்சியளித்தது. சந்திரா நமுட்டு சிரிப்புடன் சௌம்யாவை பார்த்துக்
கொண்டிருந்தாள்.அவள் தயக்கமாய் தன் படுக்கை அறைக்கு போனாள். காலம் காலமாய் இதில்
யாரும் நுழைந்ததே இல்லை. இப்போது இன்னொரு ஆள். புது ஆள். அவளுக்கு படபடப்பாய்
இருந்தது.
ஆனால் அவனோ., அவள் பாலுடன் உள்ளே
வந்த உடனே,
" ஏதோ பாட்டெல்லாம் பாடுவியாமே
நீ?" எனக் கேட்டு அவளை அதிர்ச்சி
அடைய வைத்தான் .
"சரி பாடு., கேட்போம். " அவன் வெறும் அரை நிக்கரை அணிந்து கொண்டு
கால்நீட்டி கட்டில் சாய்ந்து கொண்டு கேட்க , அவளுக்கு கர்நாடக சங்கீதமே மறந்து
விட்டது. கஷ்டப்பட்டு ஒரு ராகத்தில் அவள் பாடலாம் ‘என நினைக்க,
" அதெல்லாம் வேணாம் .. லேட்டஸ்ட் சினிமா பாட்டு பாடு. ‘ரௌடி பேபி’
தெரியுமா உனக்கு?" என சொன்னான்.
அவள் முறைக்க .,
"ஏண்டி அந்த கச்சேரி பாட்டெல்லாம் பாடுற ? அப்ப இந்த பாட்ட பாடுனா என்னடி? எல்லாம்
ஒன்னு தானே? பாடுறீ" என்றான் .
அவள் வாழ்க்கையே வெறுத்து வார்த்தைகளை கோர்த்து அந்தப்
பாட்டை பாடத் தொடங்க .,
"ஏ...ஏ.ய்...ய் கோ...லி
சோ........டாவே,...!"
"பாடுனா எப்படி? அப்படியே ஆடு" என்று அவளுக்கு அழுதையாக வந்தது .
என்ன இருந்தாலும் இன்று முதல் இரவு.
அவன் ஆயிரம் ஆசைகள் வந்திருப்பான் .அவனை
ஏமாற்றக்கூடாது ' என அவள் அந்த பாடலுக்கு நடனமாட நினைக்க, அவன் சிரித்தான்.
'பட்டுப்புடவை கட்டிட்டு இப்படி ஆடுறது நல்லா கிக்காதான்டி
இருக்கு.," அவன் பாய்ந்து அவள் புடவை முந்தானையை விலக்க அவளது மதமதத்த முலை கூம்புகள்; ரவிக்கைகுள் திமிற திமிற அவன்
அவளது மார்பழகை பார்த்து திகைத்தான்
"ஆஆஅ வாவ்இட்ஸ் செக்சி பூப்ஸ் " என்றான்
பாட்டெல்லாம் அப்புறம்., முதல்ல
படு" என்றான்
"விடுங்க.
விடுங்க...வேணாம்ம்ம்ம்ம்ம்".
அவளுக்கு அந்த கணமே கணவனும் கசந்தான் , காமமும்
கசந்தது.
அவன் சௌமியாவின் மேலே படுத்து உருண்டான். உடலெங்கும்
முகர்ந்தான். முகத்தை தேய்த்தான் . அந்த வாசனை அவனை வெறி பிடிக்க வைக்க.,
அவளது பட்டுப் புடவையும் பாவாடையும் முட்டிக்கு மேல் தூக்கப்பட
அந்தப் பளீரென வெளிப்பட்ட வெண் தந்த தொடை அழகை பார்த்த உடனே தனது ஆண்மையை
பறிகொடுத்தான் . ஆம் பறிகொடுத்தான்.
அவளது மாசுமருவற்ற தொடையில் முத்தமிடும் முன்பே அவனது ஆண்மை பீச்சி
அடித்தது. இவ்ளோ சீக்கிரமா ? அவனுக்கே
ஷாக்..! த்தா சூட்டை எக்கச்சக்கமா கிளப்பிட்டாளே.
நாம் ஏன் இவ்ளோ சீக்கிரம் எ’க்சைட்’ ஆகி
பலவீனமாக இருக்கிறோம். உணர்வுகளை கட்டுப்படுத்த தெரியவில்லையே. வெளியே தெரிந்தால்?
ச்சே போன வாரம் கூட ஸ்டெனோ கூட பண்றப்ப இப்படி தான் ஆச்சு....இதென்ன இப்படி ஒரு
பலகீனம்? உறுப்பு விரைக்குறதுக்குள்ள லீக் அவுட் ஆனா எப்படி? புதுப்பொண்னு என்ன
நினைப்பா?
அவன், தனது குறையை மறைப்பதற்கு
அவளை திட்டினான் .
'என்னடி., இப்படி கட்ட மாதிரி படுத்தா. எப்படி மூடு வரும்? த்தா எனக்குன்னு கட்டி வச்சாங்க பாரு " என சொல்லிக்கொண்டு
அவன் பாத்ரூம் போக , தனது வாழ்வில் இப்படி ஒரு உச்சக்கட்ட அதிர்ச்சியை எதிர்பாராத
சௌமியா நிலை குலைந்து போனாள்.
அவன் செய்த விஷயங்கள்
அவள் கன்னங்களில் யாரோ பளீர் பளீரென
அறைவதைப் போலிருந்தன. கொஞ்சங்கூட அன்பும், தூய்மையும் அற்ற பரிசுத்தமில்லாத
ஒருவனைக் கொண்டுவந்து வைத்து தன்னுடைய
அமைதியான வாழ்வை எல்லோரும் நாசம் செய்துவிட்டதாய் வெதும்பினாள்.
காமம் என்பது காட்டாறா?
சிறு நதியா? பொங்கும் அலையா எதுமில்லை அது நதி. ஆனால் பெரு நதி., சுனையில் உருவாகி,
மலை முகட்டில் ஓடி, அருவியில் தொபுக்கென குதித்து , பாறைகளில் பட்டு தெறிந்து பள்ளங்களை நிரவி., சமவெளிகளில் அமைதியாகி
வயலில் பாய்ந்து., சமுத்திரத்தில் கலந்து போய் சேரும் ஒரு பிரம்மாண்ட நதியைப்
போன்றது தான் ஒவ்வொரு உயிரில் தோன்றும்
காமமும். இது உடல்களை தேடி புறப்பட்டு துளைகளில் பொருந்தி நீர் சுரந்து
நீர் வழிந்து நீர் நிரம்பும் வெறும் அறிவியலா என்ன? மனோகரனுக்கு இதெல்லாம்
தெரியவில்லை.
தனக்குக் களங்கம்
உண்டாக்கப் புறப்பட்ட காலனைப் போல் அவன் தோற்றம் அவளுக்கு அச்சமூட்டியது. இவனும்
ஒரு மனிதனா? அவனை எரித்துவிடுவதுபோல் அவன்
முதுகை பார்த்துக்கொண்டிருந்தாள்.
உள்ளத்தில் தணலாய்த் தகித்திருந்த கோப அக்கினி தணிந்து கரையவோ என்னவோ அவளுக்கு அழுகையும் பீறிட்டுக்கொண்டு வந்தது. கடவுளே எனக்கு ஏனிந்த நிலைமை? அழகும் அறிவும் கொடுத்து வாழ்க்கையிய பறித்தாயோ? விம்மி வரும் அழுகையை உதட்டைக் கடித்து தாக்குப் பிடித்துக்கொண்டு குப்புற படுத்துக்கொண்டாள்.
அடுத்த நான்கு நாட்களிலேயே அவள் தனது இயல்பான
வாழ்க்கை மாறிப் போனதாக உணர்ந்தாள். அழுகை வேதனை துக்கம் அவளை சூழ., வீட்டில் பூஜை
புனஸ்காரம் இல்லை, பாடல் சாதகம் இல்லை, பழைய கலகலப்பு இல்லை. அவனும் அவளை
தேடவில்லை. அவளும் அவனை நாடவில்லை. அவன்
தொட்ட குறுகுறுப்பு அவஸ்தை இன்னும் போகவில்லை. அவள் முகமே கறுத்து போனாள்.
அந்த பழைய பொலிவும் அவள் முகத்தில்
இல்லை . எதையோ பறி கொடுததவள் போல் இருந்தாள். அவளின் நடைஉடை பாவனை எல்லாம்
மாறிவிட்டது . புதுக்கல்யாணம் ஆன பெண் போலவே அவள் இல்லை.
இவர்கள் நடுவே என்னவோ ஒரு பிரச்சனை
என்பதை கண்டு கொண்ட அப்பா பாலகிருஷ்ணன் மாப்பிள்ளை கூப்பிட்டு கேட்க, அவன்
அவரிடமும் அவன் மட்டு, மரியாதை இல்லாமல்
பேசினான்.
அன்று இரவு வெகு நேரம் கழித்து
வந்தான் . குடித்துவிட்டு தள்ளாடி உள்ளே
வந்தவனை தோட்டக்காரர்கள் கூட்டி வந்து ஹாலில் கடத்தினார்கள்.
சௌமியாவுக்கு ஜென்மமே
செத்துவிட்டது.
' அடப்பாவி அவ தனியாய் இருந்தப்பவே நல்லா இருந்தாளே., அவ மனச கெடுத்து, அவ வாழ்க்கை கெடுத்துட்டானே
இந்த பாவி ' என பாலகிருஷ்ணன் அவனை ஏக
வசனத்தில் திட்டுவதை அவன் குடிபோதையில் இருந்தாலும் கேட்டுக் கொண்டு தான் இருந்தான்
.
அதற்கு பதிலாக மறுநாள் காலை போதை தெளிந்த பிறகு, மாமனாரிடம் சண்டை போட்டான். அடிக்க போனான். வேறு வழியில்லாமல் வேலைக்காரர்கள் அவன் மீது கை வைக்க வேண்டியதாக, அந்த வீட்டில் இன்னுமொரு பெரிய சண்டை நடந்தது..
அவன் கோபத்துடன் காரை எடுத்துக்
கொண்டு போனான். சொல்லாமல் கொள்ளாமல் புது
மனைவியை விட்டு,அபச்சாரமாக அவன் புதுவை போனான்.
அங்கே அவன் தன் அலுவலகத்துக்கு போக அங்கேயும் அவனுக்கு
பிரச்சனை.
ஆற்றில் மண்ணை அள்ளுவதற்காக லஞ்சம் வாங்கிய வழக்கு ஒன்று
அவன் தலைக்கு மேலே தொங்கும் கத்தியாய் காத்துக் கொண்டு இருந்தது .
அந்த வழக்கை கையில் எடுத்த புதுவை காவல்
அதிகாரி தமிழக அரசோடு மிகவும் தொடர்புடையவர் . விஷயம் தமிழக அரசிடம் வர, யார்?
என்ன ஏது? என விசாரித்து சௌமியாவின் கணவர் என தெரியவர, சௌம்யாவை தொடர்பு கொண்டு
'விஷயம் இப்படி இருக்கிறதே மேடம்? என்ன செய்யலாம் ?" என்றார்கள்
"உங்களுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு
வாரம் தான் ஆகுது. அதுக்குள்ளேயே இப்படி
ஆயிடுச்சு. நீங்க என்ன சொல்றீங்க?"
சௌம்யா எதுவும் சொல்லவில்லை.
" சௌம்யா எவ்வளவு காசு ஆனாலும் பரவாயில்லை. நீ
பயப்படாதே. மாப்பிள்ளையை நான் கேஸ்லருந்து
கூட்டிட்டு வரேன்" என கிளம்பிய தந்தை பாலகிருஷ்ணனை கை பிடித்து தடுத்தாள்.
" அப்பா இவ்வளவு மோசமான ஆளு எனக்கு தேவையில்லை . அரசாங்கம் என்னவோ நடவடிக்கை
எடுக்கட்டும். நீங்க மட்டும் இதுல தலையிடாதீங்கப்பா" என்றாள்
" என்னம்மா இப்படி சொல்ற?
என்ன இருந்தாலும் அவர் இந்த வீட்டோட மாப்பிள்ளை யாச்சே? எனக்கப்புறம் அவர் தான்மா இந்த வீட்டுக்கு எஜமானர். உனக்கு பாதுகாப்பு ?"
" அவர் பாதுகாப்பல்லாம்
இல்லப்பா. எனக்கு அவன் கிட்ட இருந்து தான்பா பாதுகாப்பு வேணும் " என சொல்லி
அழுதாள்.
தந்துயும் மகளும் பேசாமல் இருந்தார்கள்.
அவன் மீது வழக்கு பாய, அவன் சில மாதங்களிலேயே ஜாமினில் வந்தான்.
உருக்குலைந்து இருந்தான். அப்பாவின் காலில் விழுந்து அழுதான். ஆனால் சௌமியா அவனை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.
அவுட் ஹவுசில் தான் தாங்கினான். தாடி வளர்த்து கண்கள் பஞ்சடைத்து, நலிந்து
சௌம்யாவின் பார்வைக்காக காத்திருந்தான்.
ஒவ்வொரு நாளும் அப்பாவும் சந்திராவும் மாறி மாறி
சௌமியா என்கிற மாணிக்க கல்லை பேசி பேசி கெஞ்சி கரைத்தார்கள் .
அவள் சந்திராவுடன் ஜெகதீஸ்வரி
கோயிலுக்கு போய் கும்பிட்டு வர , வழிமறித்த பூசாரி ஒருவர் சமியாடி,
' யார் பேச்சையும் கேக்க மாட்டியா? இனி மேலும்
அந்த ஆள இப்படி வைக்கிறது நியாயமா? புருஷன்தான்மா உன்னோட வருங்காலம்!'
என
பாடி ஆடினார். சௌமியா எதுவும் சொல்லவில்லை
. ஆனால் உள்ளுக்குள் பூசாரியின் வார்த்தைகள் உறுத்தின.
சரி. அவனை தண்டித்தது போதும். இன்று
அஷ்டமி, நாளை நவமி. இரன்டு நாள் கழித்து அவனிடம் பேசலாம். அவன் அற்ப பதர் தான்.
ஆனால் என்ன இருந்தாலும் தாலி கட்டியவன். மன்னித்து ஏற்கலாம்.
அழைத்து பேசுவோம் அவன் ஒத்து வருவானா
இல்லையா? என கேட்கலாம் என நினைத்துக்
கொண்டாள்.
அந்த முடிவைக் கூட அவள் யாரிடமும் சொல்லவில்லை.
ஆனால் அந்த இரண்டு நாள் கூட அவன் தாங்கவில்லை .
அவன் புத்தி பல்லிளித்து விட்டது.
-------