தன் வீட்டின் இரண்டாம் தளத்திலிருந்த படியே, சாலையில் ஆர்ற்றை பார்த்து குதித்த அபர்ணாவை பார்த்த சௌம்யாவுக்கு சிரிப்பு வந்தது. அவளையே பார்த்தாள். அவளின் சந்தோஷம் சௌம்யாவுக்கும் தொற்றிக்கொண்டது.
பாவம்
நடுத்தர குடும்பத்து பெண். இந்த சம்பளம் இவளுக்கு பெரிய ஜாக்பாட். அதான் இந்த
சந்தோஷம். அவள் வீடும் சந்தோஷப்படும். அபர்ணா
நல்லப்பெண். இயல்பானவள். பாசாங்கில்லாதவள்.
ஏனோ
தெரியவில்லை. இவளுடன் தோழியாக, எஜமானியாக, துணையாக நீண்ட காலம் பயணம் செய்வோம் என
சௌம்யாவுக்கு தோன்றியது.
சௌம்யாவுக்கு
சினேகிதகள் என யாருமில்லை. வீட்டுக்கு ஒரே பெண். பள்ளியிலும் கல்லூரியிலும் பல
பேர் வந்தார்கள் போனார்கள். ஆனால், யாரும் அவளின் சினேகிதத்தை பெரிதாக கவரவில்லை.
அவள் எல்லாவற்றிலும் விலகியே இருந்தாள். சௌம்யாவின் உலகம் வேறுவிதமானது. அம்மா,
அப்பா, வீடு,இசை, பாட்டு சொல்லித் தந்த அன்னமாள் வாத்திச்சி அவ்வளவு தான் அவளின்
உலகம்.
சௌம்யா பருவம்
எய்திய போது, அம்மா கருப்பை புற்றால் இறக்க., சௌம்யா இன்னும் தனியானாள். அவளின்
உலகம் இன்னும் சுருங்கியது
"சென்னை
போ.. உன் பாட்டுக்கு அங்க இருக்குற சபா தான் சரி. இன்னும் கர்னாடிக் கத்துக்க.,
உன்னோட குரல் ஒரு ஹைலி பெக்கூலியர்" பாட்டு வாத்திச்சி சொன்னாள்.
"இன்னும்
மூனு வருஷத்துல உன் அரங்கேற்றம் நடந்திடனும். சரியா?"
கல்லூரியில்
இளங்கலை படித்த பின், சென்னை மைலாப்பூரில் அம்மாவின் தங்கை வீட்டில் சில ஆண்டு
காலம் கர்னாடக இசையை சௌம்யா முழுமூச்சாக கற்க.,
அவளின்
அழகும் குரலும் கண்டு, திருமணமே வேண்டாமென இருந்த ஒரு நாற்பது வயது கர்ன்டாக இசை வாத்தியார் ஒருவன் இவளிடம் ரோஜாப்பூவை கொடுத்து மண்டியிட., அதைக்
காலால் மிதித்து போட்டு வந்துவிட்டாள்.
சென்னையில்
எல்லா சபாக்களில் பெரும் செல்வாக்கு படைத்த அவனை புறக்கணித்ததால், அவளின்
அரங்கேற்றம் சென்னையில் நடக்கவேயில்லை..
அவள் தந்தை ஏற்பாட்டில் ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றம் ஆனதும், புகழ் பெற்றதும்
வரலாறு. மீடியாக்கள் திரும்பி பார்த்ததும் டில்லி சபை இவளை அழைத்ததும் தனிக்கதை.
யாயும் ஞாயும் யார்
ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்? என அவள் பக்க வாத்தியங்களுடன் பாட, ஸ்ரீரங்க வித்துவான்கள்
அதிருந்து போயினர். சென்னை, திருச்சி, மதுரைக்கு செய்திகள் பறந்தன.
குரலா அது? என்ன ஜாலம்! என்ன
பாவம். அடடா விமர்சகர்கள் அதிசயித்து போயினர்.
அதன்பின் சில ஆண்டுகளிலேயே
சௌம்யாவின் மேடைஏற்றம் எவன் தடுத்தும் நிற்காமல் சென்னையில் எல்லா சபாக்களிலும்
அரங்கேறியது, ரோஜாப்பூ கொடுத்து சொந்தம்
கொண்டாட நினைத்தவன் பவ்யமாக ஒதுங்கி நின்று கை தட்டினான்.
அன்றுமுதல் எல்லா
டிசம்பரிலும் சென்னை சபாக்கள் சௌம்யாவின்
குரலை வைத்து தான் பிழைப்பை நடத்தின. அவள் புகழ் கேரளாவிலும் பரவியது. பெங்களூர், ஹைதராபாத் என ஓய்வில்லாமல் பறந்தாள். சௌம்யா
முப்பது வயதை தொடும் முன்னே பல விருதுகள் வாங்கி குவித்தாள்.
எல்லாம் சரியாகத்தான்
இருந்தது. அவளின் திருமணத்தை தவிர.,
அப்பா இருந்தவரை அவரை
இடைவிடாது துன்புறுத்திக்கொண்டிருந்த பெரிய கவலையும் அது தான்,.. அதுவே அவரை மேலே சீக்கிரம்
கொண்டு போனது.
மகளுக்கு திருமணம் ஆகும்
வரை ஆகவில்லையே என கவலை. ஆனபிறகு .,சே சும்மாவே இருந்து தொலைத்திருக்கலாமே என்ற மன உளைச்சல்
"பாலகிருஷ்ணங்கிறது......":
"நான்தான்"
"ஓ.. நாங்க அவ
ஆம்படையான்னு நினைச்சோம்..."
வெளியே பதில் சொல்ல முடியவில்லை. சும்மா
மழுப்பாலாக சிரிக்க வேண்டி இருக்கிறது.
அல்லது பேச்சை மாற்ற வேண்டி இருக்கிறது., அப்படியும்.,
"மேரேஜ்
ஆகிடுச்சிதானே.. உங்க டாட்டர் கழுத்துல சரடு இருக்கே?" ஒருவரின்
அந்தரங்கத்தில் இங்கிதமில்லாமல் நுழைவோர் சென்னையிலும் உண்டு, மார்த்தாண்டத்திலும்
உண்டு. பிளைட் ஏறி நியூயார்க் போனால் அங்கேயும் உண்டு.
சௌம்யாவின் குரல்
இரண்டாம் பட்சம்., அவளின் அழகு, கூந்தல்., செழிப்பான அங்கங்கள் தான் முதல் பட்சம். சொல்ல போனால் மாமிச
பட்ச்சினிகளுக்கான பட்சணம். முழு விருந்து.
ஆனால் சௌம்யா கவனமாக
விலகி இருந்தாள்,. பாதுக்காப்பாய் இருந்தாள். உருகி உருகி அழுது லவ் சொன்ன
யாரையுமே அவள் லட்சியமே செய்யவில்லை.
"அதான் புருஷன் தான்
இல்லியே., நமக்கேன் ஓகே சொல்ல மாட்றா.," ஒரு கோடம்பாக்கத்து இளம்
இசையமைப்பாளன் கத்தினான்.
"த்த் தா வரட்டும்
நாளைக்கு வருவா இல்ல., ரிக்கார்டிங்குக்கு" ஆனால் சௌம்யா வரவே இல்லை.
"யோவ்வ்..
என்னய்யா அட்வான்ஸ் வாங்கிட்டு ஓடறா..
அந்த அட்வான்சுக்கு.." அவன் இழுக்க.'
"தம்பி அது நேத்தே
ரீபே பண்னிடோமே" அப்பா சொல்ல.,
உண்மை தான் காசு திருப்பி
அனுப்பப்பட்டு விட்டது. இளம் இசையமைப்பாளன் தேவ்தத் திகைத்தான்.
ஒருவேளை அவனின்
பார்வையோ., உரசி உரசி பேசியதோ எதுவோ அவளை விலகச் செய்துவிட்டது.
இப்படித்தான் மைலாப்பூரிலும்
நான்கு முழ வேட்டியிலிருந்து ஜீன்ஸ்
வரை சௌம்யா போகிற போக்கில், உடைத்து போட்ட
இதயங்களுக்கு கணக்கில்லை.
ஆனால், இந்த சௌம்யாவோ
அப்பாவிடம் தன் இரண்டாம் திருமணம் பற்றி பேசவும் இல்லை. பேச அவளுக்கு நேரமும்
இல்லை. அப்பாவுக்கு தைரியமும் இல்லை.. அவளின் இந்த குழப்பமான முதல் திருமணம் தன்னால் தான் நடந்தது. அந்த
தப்பை அப்பா தான் செய்தார்.
சௌமியாவுக்கு அப்போது வயது பதினெட்டுக்குள் தான்
இருக்கும். குரல் அழகா உருவம் அழகா என பிரித்து பார்க்க முடியாத செழுமை அவளுக்கு.
அவள் அம்மாவை விட சௌம்யா நல்ல சிகப்பு, ஆளைக் கொல்லும் வில்லேந்திக் கண்கள்,
சாந்தமும் தெய்வீகமும் கொண்ட முகம், நீள
நாசி. குளித்து முழுகி கூந்தல் அலைபாய
வந்தால் வீட்டு வேலைக்காரர்களே தடுமாறுவார்காள்.
அந்த மாளிகைக்கு ஏற்ற
பேரழகு, அப்படியொரு தேவஅழகு, கோபமில்லாத சிரிப்பு முகம். இவளை திருமணம் செய்ய இந்த
லோகத்து ராஜாக்களுக்கு என்ன யோக்கிதை? என
தான் தந்தை பாலகிருஷ்ணன் யோசித்தார்.
பதினெட்டு வயசு ரொம்ப
சின்ன வயசாச்சேடா. அம்மா இல்லாத பொண்னை தள்ளி விட்டுட்டான் பாலகிருஷ்ணன்னு
சொல்றதுக்க" உறவுகள் அவரை கட்டி போட்டன.
"பாட்டு பாட்டுன்னு
அலையறா.. மயிலாப்பூர் போய் பாட்டு கத்துக்கட்டுமே"
சௌம்யா சென்னைக்கு போய் இசை கற்க, தன் இருபத்துயொரு
வயதில் இன்னும் புஷ்டியாக செழுமையாக அழகை
கூட்டிக் கொண்டு வந்து மார்த்தாணடத்துக்கு திரும்ப வந்து இறங்க,
கண்ணைப் பிடுங்கும் இந்த
பேரழகியை எந்த மகாராஜானுக்காகவாவது கட்டிக் கொடுத்து விட வேண்டும். பார்த்து
பார்த்து வரன் தேடினார்.
சௌம்யாவுக்கு பாட்டு தவிர
இலக்கியமும் உயிர். பக்தி இலக்கியத்தில் தான்
கர்னாடக இசையின் வீச்சு இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டாள்.
சம்பிரதாயம், கலாச்சாரம்,
பண்பு, அப்பற்ற தூய வாழ்க்கை என்று நெகிழ்வாக இருந்தாலும், பரம்பரை பரம்பரையாக
வந்த கணக்கிலடங்கா செல்வமும்., இரத்தத்திலேயே
கலந்துவிட்ட செல்வ மிடுக்கும் அவளை இன்னும் ராணியாக காட்டின.,
கச்சேரிகள் இல்லாத போது சௌமியா
வீட்டிலேயே கிடந்தாள். அதில் அலுப்போ
சலிப்போ அவள் அடையவில்லை. தினம் அதிகாலை எழுந்து குளித்து., பழச்சாறு அருந்தி, இரு
கையால அள்ள முடியாத அந்த ஈரத்தலையை அள்ளிச் செருகி பூஜை அறைக்குள்
நுழைந்துவிடுவாள். அதன் பின் பாட்டு தான். வீணையோ, அல்லது வாய்ப்பாட்டோ மனம்
லயித்துவிடுவாள். இதில பருவம் என்ன? காமம் என்ன? திருமணம் என்ன? இந்த பொன்னழகு
மேனியை ஓர் ஆண் தீண்டலாகுமோ?
சந்தனமும், வெண் தந்தமும்
சேர்ந்த ஒரு நிறத்திலான சரும அழகில் அளவான தனங்கள், அடங்காத வட்ட வடிவ புஷ்டியான பிருஷ்டங்கள்.,பொற்சிலை
தோற்கும் தொடை வடிவங்கள் வெளிப்பட., உடல் முழுக்கவே ., தும்பைப்பூவைப் போல் பளீரென வெண்பளிங்காய்த் துலங்க மாளிகை முழுக்க அவள் நடந்து வருவதே பார்க்க திகைப்பாக இருக்கும்.
அதிலும் கச்சேரிக்கு
போகிறாள் என்றால் இன்னும் விசேஷம். கோயில் கச்சேரி என்றால், கண்னுக்கும்
காதுக்கும் ஏன் மனசுக்கும் விருந்து தான்.
அவள் இசை கேக்காது
போனாலும் அவளை பார்க்கவே ஜனம் திரளும்.. என்ன இருந்தாலும் கன்னி தானே,. ஆண் தீண்டா
பழம் தானே, சூலுறாத வயிறாய் இருக்கிறாளே! தாய்மையும் வந்து குவிந்தால் என் மகள்
சௌம்யா பூரண நிலவை விஞ்சுவாளே,.
ஏழெட்டு ஆண்டுகள் உருண்டோடின.
மனைவி போன துக்கத்தை மகளை பார்த்து போக்கிக் கொண்ட
அந்த பெரும்., செல்வந்தர் முன்னாள் தாசில்தார் சௌம்யாவின் அப்பா பாலகிருஷ்ணனுக்கு
அவளுக்கு கல்யாணம் செய்து பார்க்க மும்முரமாக இறங்கினார்.
இந்த அழகிக்கு ஈடான ஒரு
பேரழகன் எங்கிருக்கிறானோ?
காலகாலத்தில் வீட்டில் ஒரு
குட்டி, மழலைப் பட்டாளம் ஓடி உருண்டு வீட்டு சாமான்களை உடைத்தால் தானே., இவ்வளவு
பெரிய செல்வ மாளிகைக்கு பெருமை?
அதெல்லாம் நினைத்து தான்
அவர் உலகச் சுற்றுலாவில் படு பிஸியாக சௌம்யாவை திருமணத்துக்கு நெருக்கினார்.
" வயசு இருபத்தியாறு
ஆச்சேம்மா.. பதினெட்டு வயசுலேயே முடிஞ்சிருக்க வேன்டியது. உங்கம்மா.,
இருந்திருந்தா"
"அப்பா
அமெரிக்கா போய்ட்டு வந்து சொல்றேன்பா., "
"அப்படிதான் கனடா
போறதுக்கு முன்னாடி சொன்னே? உன்னை கர்நாடக
மியூசிக் படிக்க வெச்சது தப்பா போச்சு"
"ஏன்பா? எல்லாரும்
தன் கல்யாணம் கட்டி, புள்ளை பெத்துக்கறாங்க., போய் சேருறாங்க.. நா ஒருத்தி இப்படியே இருந்துடறேனே"
"கண்டிப்பா.
செய்யலாம். ஆனா ., அதுக்கு., எனக்கு நாலைஞ்சி பொறந்திருக்கனும்..இல்லையே"
"இல்லையே"
அப்பாவை போலவே அவளும் சொல்ல., அந்த
அழகிலேயே அவர் சொக்கி போனார்.
'அம்மா பாரும்மா.. இது
ஒன்னு தான்மா,. நா கேக்குறது., அப்பா போனப்பறம் என்ன செய்வே? சௌமும்மா.."
"வந்து
சொல்றேன்பா."
" நீ சொல்லிட்டா, நான் பாக்க ஆரம்பிச்சிடுவேன்மா" அப்பாவை
பார்க்க பாவமாகத் தான் இருந்தது. ஆனால் கல்யாணம்., கணவன், அவனது அதிகாரம்., தன்
படுக்கையில் அவனுக்கு பங்கு கொடுத்து கூடி கலவி செய்து பிள்ளை பெற்று, அதற்கு மலம்
கழுவி சோறூட்டி, வாய் துடைத்து, தூங்க வைத்து, பெரிசாய் வளர்த்து, அதனிடம் திட்டு வாங்கி., இதெல்லாம் நமக்கு
ஏற்றதா? அவள் ரொம்பவே. யோசித்தாள்.
"சௌம்யா.."
அப்பா கெஞ்சினார்.
"படுத்தாதீங்கப்பா.. வந்து சொல்றேன்"
ஆனால், சௌம்யா.,
அமெரிக்கா., இங்கிலாந்தெல்லாம் போனாள். அடிக்கடி அப்பாவிடம் விடியோ காலில்
பேசினாள். நிறைய பரிசு பொருளோடு மார்த்தாண்டம் வந்து அப்பாவை
பார்த்தாள். அவருக்கு துளியும் சந்தோஷமில்லை என பார்த்தவுடனே தெரிந்தது.
ஆனால் வீட்டில் ஒரு புதிய
அறிமுகம்.
புது வரவு, பயந்து போய்
சமையலறை கதவின் போய் ஒட்டிக்
கொண்டிருந்த அந்த பெண்ணை பார்த்து
அசந்து போனாள்.
வேலைக்காரியா? இவ்ளோ
களையாக இருக்கிறாளே?
'இங்க வா"
கூப்பிட்டாள்.
"அவளூக்கும் உன்னை
விட ரென்டு மூனு வயசு தான்.பெருசு . பேரு. சந்திரா. " அப்பா தான்
அறிமுகப்படுத்தினார்.
'வணக்கம்மா" அவள்
பணிவு பிடித்திருந்தது.
" நம்ம கிட்ட விவசாய
பண்ணைக் கணக்கு பாத்தாரே வேலாயுதம்"
"ஆ.. ஆமா..
தவறிட்டாரே/"
" ஆமா. அவரு
பொண்ணு,. சிதம்பரத்துல கட்டி கொடுத்திருக்காங்க., ஆனா." அப்பா மேற்கொண்டு சொல்லலமா? என்பது போல
சந்திராவை பார்த்தார். அப்பெண் எந்த மறுப்பும் சொல்லவில்லை.
"புருஷன் மும்பை
பக்கம் வேலை செய்ய போயி, அங்கயே ஒரு துலுக்கப் பொண்ணை சேத்துகிட்டான் போல"
"........................."
"திரும்ப வரல. இவ
இங்கேய கிடந்து அல்லாடிட்டிருக்கா,. இவங்க அம்மா தான் வந்து இவளை இங்க வீட்டோட
வெச்சி வேலை கொடுக்க கேட்டுச்சி.. எல்லா வேலையும் செய்வா. உனக்கும் ஒத்தாசையாய்
இருப்பா.."
சந்திரா மிக பணிவாக
இருந்தாள். தான் இருப்பது எப்பேர்பட்ட
இடம் என்பது தெரிந்திருந்ததால் அடக்கமாய் இருந்தாள். படிப்பு குறைவாக இருந்தாலும்,
சூட்டிகையாய் இருந்தாள் . ஏற்கெனவே வீட்டு வேலை சமையலுக்கு இரு வயது முதிர்ந்த பெண்கள்
இருந்தாலும்., சௌம்யாவின் வேலைகளுக்கு ஒரு வெற்றிடம் நிரப்ப ஏதுவாக சந்திரா இருந்தாள்.
மற்ற பெண்கள் இரவானால்
வீட்டுக்கு போய்விட., ஆண்களில் செக்யூரிட்டி ஒருவரும், வயசான டிரைவர் ஒருவரும்.
அவுட் அவுசில் தங்குவார்கள். தோட்டக்காரன் முருகேசன் மாலை வீட்டுக்கு
போய்விடுவான். ஆண்கள் தங்குமிடம் என்பதால் .,சந்திராவை அவுட் அவுசில் அல்லாமல்
வீட்டோடு சமையலறைக்கு பக்கத்து சின்ன ரூமில் தங்கினாள்.
அவளை அவுட் ஹவுசில் தங்க
வைக்காததே சௌம்யா அவளுக்கு அளித்த முக்கிய இடத்தை சொன்னது. சௌம்யாவுடன் கடை,
டவுனுக்கு போய் வருவது அவளுக்கு ஒத்தாசையாக இருப்பதெல்லாம் சந்திரா தான்.
'அம்மா அம்மா ' எனக்
கூப்பிட்டாலும் சௌம்யாவிடம் உரிமை எடுத்துக் கொண்டு பழகினாள். வந்த கொஞ்ச நாளிலேயே வீட்டின் மூலை
முடுக்கெல்லாம் போய் வரும் உரிமை பெற்றாள். சௌம்யாவின் படுக்கையறை வரை சென்று
சுத்தம் செய்யக்கூடிய நம்பிக்கையை பெற்றாள் சந்திரா.
அந்த உரிமையில் தான் அவள்
அந்த கேள்வியை சௌம்யாவிடன்ம் கேட்டாள்.
"ஏம்மா கல்யாணமே
வேணாங்கறீங்க?"
"ஏன் உன் கல்யாணம்
என்ன ஆச்சு?"
"எல்லா
ஆம்பளைங்களூமே அப்படி இருப்பாங்களா?"
"ம்கூம் எனக்கு இசை
தவிர எந்த ஆசையும் இல்லை. எதிர்பார்ப்பும் இல்ல"
"ஏம்மா எவ்ளோ பேர்
கல்யாணம் பண்ணிகிட்டு அவங்க வேலையையும் செய்யலயா?"
"போடி"
"நீங்க எதுக்கோ
பயப்படறீங்க"
" ..அதெல்லாம்
ஒன்னுமில்லடி "
"அப்ப மேரேஜ்
பண்னிக்கங்க.. உங்க புள்ளையை தொட்டு தூக்க ஆசை இருக்காதா?'
"யாருக்கு?"
"எல்லாருக்கும்
தான். ஐயாவுக்கு., எங்களுக்கு"
"ம்கூம் நாப்பது
வயசு வரைக்கும் பண்றதா இல்ல"
"'சரியா போச்சு..
அதுக்கப்பறம் பண்ணா என்ன? பண்ணாட்டி
என்ன?'
" என்னவோ இப்ப
எனக்கு தோணல"
" இப்பவே இருபத்தியாறு ஆகிடுச்சி.. இதுவே லேட்தான்மா..
பாட்டு ஒரு பக்கம் இருக்கு. குடும்பம் ஒரு
பக்கம் இருக்கட்டும் . வீட்டுக்கு வந்தா ஒரு வாய் தண்னி கொடுக்க ஆளிருக்கனும்"
"அதான் நீ
இருக்கியே"
"ம்ம்
உங்களுக்குன்னு தனியறையில உங்களுக்குன்னு ஒரு தனி ஜீவன்.. இருக்கனும்மா..,
உலகத்துக்கே ராணியா இருந்தாலும். ரூமுக்குள்ள போய் கதவை பூட்டிட்டா நீங்க தனி
ஆளுதானேம்மா"
"..................."
"குடும்பம்னு ஒன்னு
இல்லாட்டி., இந்த பேர் புகழ் காசெல்லாம் எதுக்கு? யார் கொண்டாட? யார் மெச்ச?
யாருக்கு உபகாரம்? எதுக்கு துட்டு?"
சந்திரா சொல்வது சரிதான்
எனப்பட்டது. என்ன இருந்தாலும் தான் ஒரு பெண் தான் . ஒரு ஆணுக்கு அடங்கி அவனிடம்
கூடி குலாவி பிள்ளை பெற்று குடும்பத்தை
பெருக்கித்தான் ஆக வேண்டும். விதிவிலக்காக
இருப்பது அத்தனை சாதாரண காரியம் அல்ல. அதிலும்
வீட்டுக்கு ஒரே மகளாக பிறந்து கல்யாணமே வேண்டாம் என அடம் பிடிப்பது, பெற்ற அப்பாவை கொடுமைப்படுத்துவதற்கு போலானது .
35 வயதுக்கு மேல் கல்யாணம் செய்து
கொள்ளலாம்' என நினைத்தால் அப்போது அதற்கான வாய்ப்புகள் எப்படி இருக்கும்? என சொல்ல
முடியாது.
சந்திரா சொன்னது போல நமது இசைப் பயணம் ஒரு
பக்கம் இருக்கட்டும். குடும்பம் பக்கமும் கொஞ்சம் கவனத்தை திருப்பலாம் . அவள்
மெல்ல இளகினாள். சுற்றி இருந்தவர்கள் சொலி, சொல்லி, இடித்து இடித்து தன் 27 ஆம் வயதில் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தாள்
அந்த ஆவணி மாதம் அப்பா வரன் பார்க்க போனபோது அவள் எதுவும் தடை சொல்லாமல் இருந்தாள். அப்பா சௌம்யாவுக்கு வரன் பார்க்க சந்தோஷமாக தேடி அலைந்தார்.
புதுவை மாநிலத்தின் கலெக்டர் வரன் ஒன்று
வந்தது. பேர் மனோகரன். அழகன் தான். சிவந்த
நிறம். அடர் கேசம். வீட்டிற்கு ஒரே பையன் . நல்ல அந்தஸ்து என தேடி சலித்து அந்த
வரனைக் கொண்டு வந்தார். அது தான் அவர் மகளுக்கு செய்த தவறு,.
No comments:
Post a Comment