அடுத்த மூன்றாவது நாள் ஈஸ்வரின் நேர்காணல் ., டிவியில் ஒளிபரப்பானது.
அவனை ஒரு கோமாளியாக சிந்த்தரித்து ., மூட நம்பிக்கை பரப்பும் ., பில்லி, சூனிய ஆளாக பாவித்து செம்மை ஓட்டு ஓட்டி
இருந்தார்கள்.,
அதன் விளைவாக அவனது மையத்தில் வரக்கூடிய
ஆட்களின் எண்ணிக்கை வெகுவாக குறைய அவனுக்கு கடும் கோபம் வந்தது..
மெய்ஞ்ஞானத்தில் சுடர் வீச நினைக்கும்
ஆத்மாக்களுக்கு காமமும் கோபமும் வரகூடாது. ஆனால் ஈஸ்வருக்கு வந்தது.
அவளை போனில் அழைத்தான்..
"என்
கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கும்போது நாய் மாதிரி அலைஞ்சீங்க..இப்ப
என்னடான்னா..என்னை கேவலமா சித்தரிச்சி புரோகிராம்
பண்றீங்களே?"
'பின்னே
? நீங்க நடத்தறது என்ன?யோகா செண்டரா? தியானா மையமா? என்னமோ.. முதுகு தண்டு வடத்தை தடவிட்டு அடைபட்டு
கிடக்குற ஆதர்ஷ சக்தியை பெருக்கறேன் சொல்லி., சீட்டிங்க்
பண்ணிகிட்டு இருக்கீங்க"
"உங்களெக்கெல்லாம்..
ஆசிரமம் நடத்திட்டு சிடி போட்டு வித்துகிட்டு. கயிறு, கங்கா தண்ணி., தகடு வித்து மார்கெட்டிங்க் பண்றவன்தாண்டி...நல்லவன்..கோடி
கோடியா கொட்டி கொடுப்பீங்க.., ஹேய்ய்
முண்டம் ஆதர்ஷ சக்தின்னா உனக்கு தெரியுமா?"
"யோவ்வ்
மரியாதையா பேசு"
"வெளக்கெண்ணெய்
முண்டம்., எல்லாருக்கும்
உள்ளுக்குள்ள அதீத சக்தி எப்பவும் இருக்கு. ஒரு வெறி நாய் துரத்தும் போது ஒரு
மனுசன் பயத்துல 35
கிமி ஸ்பீட் ஓடறான்னா அந்த சக்தி அப்போ எங்கே இருந்தது..? அதான் ஆதர்ஷ சக்தி... ஒவ்வொரு பிள்ளைக்கும்
நல்லா படிக்கிற., மனப்பாடம்
செய்ற சக்தி உள்ளூக்குள்ள இருக்கு.. நான் அதை தூண்டி விடறேன்..."
"ஆனா.,நீங்க என்னமோ உலகத்தை சுத்தி
வந்துடுவேன்..இன்னொருத்தர் மூளையில
உக்காந்து ஆட்டி படைப்பேன்னு சொன்னா அது கொழுப்புதானே.?"
"கொழுப்பு
தாண்டி.. உன் கொழுப்பை குறைக்கிறேண்டி.."
"ஏய்ய்ய்ய்
அவ்ளொ தான்..நீ இதுக்கு மேல பேசுனே?.."
"இல்லடி
சில விஷயம் சொன்னா புரியது..செஞ்சி காட்டுறேன்'
"என்ன? சூனியம் வைக்க போறீயா? தலைமுடி வேணுமாடா?'
அவள் பயப்படவே இல்லை.
"அமுதா., எங்க மழை பொழியுதுன்னு என்கிட்ட கேட்டே இல்ல.,? ஒன்னு சொல்றேன் கேளு..உனக்கு
ரெண்டு பிள்ளை இல்லே..,?"
'டேய்ய்ய்ய்"
"அதுல
பெரிய பையன் இருக்கான்ல., நாளைக்கு
காலைல அவன் படுக்கையில இருந்து எழுந்தவுடனே. இன்னிக்கு அரிசு உப்புமா செஞ்சி
தான்னு கேப்பான்...அதை கேட்டுட்டு எனக்கு சொல்லு .,"
"ஹேய்ய்
ரஸ்கல்...'
" நாளைக்கு
சாயந்திரத்துக்குள்ள உன் புருஷனுக்கு கால் கட்டை விரல் அடிபடும்.."
"மிஸ்டர
ஈஸ்வர்.." அவள் மிரள.,
:அவன்
சிரித்தான்..
":ஏய்
சயின்ஸ் புடுங்கி... என்னடா இவன் நல்லதே சொல்லலயேன்னு நினைக்காதே..நல்லது
நடக்கும்..ஆமா உனக்கு நல்லது நடக்கும்.... "
'......................."
" நாளைக்கு நைட்டு உன் படுக்கையில உன் கூட நான்.."
"டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்"
******************************************************************
வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்.,