மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, July 27, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1808

 ஈஸ்வர் சந்திரன்பேரைக் கேட்டதும்  சுரேஶுக்கு திக்கென்றானது. வர்ஷாவின் டாக்டராச்சே இவன்? பிரெய்ன் சென்டர் பற்றி அவனிடம் மலர் சொல்லி இருந்தாள்

ஈஸ்வர் சந்திரனா? ரேகா அடிக்கடி ஈஸ் ஈஸ் என சொன்னதற்கு என சொன்னதற்கு ஓரளவு அர்த்தம் வந்துவிட்டதாக சுரேஷ் நினைத்தான். ஆனால் ரேகாவின் அப்பாவிடம் அது பற்றி சொல்லவில்லை. அவனுக்கு ஈஸ்வர் சந்திரன் என்கிற பெயரை கேட்டதுமே உள்ளுக்குள் மணி அடித்தது.

ஏனென்றால் மலர்விழியின் தங்கையின் குழந்தை வர்ஷாவிற்கு ஏதோ ஒரு பிரச்சினை என சொல்லி ஈஸ்வரர் சந்திரன் என்கிற விர்ச்சுவல் ஸ்காலரிடம் அழைத்துப்போய் இப்போது குழந்தை படுசுறுசுறுப்பாக ஆகி இருக்கிறாள் என்பதை அவன் கேள்விப்பட்டிருந்தான்.

இங்கே ரேகாவின் பிரச்சினை என்னவென்று புரியும் போது சுரேஷ் , ரேகாவை ஈஸ்வர் சந்திரனிடம்தான் அழைத்துப் போக வேண்டும்., என மனதுக்குள் உடனே திட்டமிட்டு விட்டான்.  ஆனால் இப்போது என்னடாவென்றால் அந்த ஈஸ்வர் சந்திரனே இவள் கல்யாணத்திற்கு வந்திருக்கிறான். அவளையே சுற்றி சுற்றி வந்திருக்கிறான். ஒன்னுக்கு ரெண்டு தடவை மேடை ஏறுகிறான் என்றால்., ஏன் இப்படி இருக்கக்கூடாது? ஒரு ஸ்காலர் நல்லது மட்டும் தான் செய்யவேண்டுமா? கெட்டதும் செய்யலாம் இல்லையா? ஒருவேளை இவன் அந்த பெண்ணிடம் ஏதேனும் விளையாடி இருந்தால், அவனது உடல் மொழியும் ரேகாவை அவன் பார்க்கும் பார்வையும் ப்பப்பா படு பயங்கரமாக இருக்கிறது. அந்த மேடையில் அவன் இருக்கிற ஒன்றரை நிமிடங்கள் அவனது பார்வையை ரேகாவின் மேலே தான் இருக்கிறது.

அவள் மார்பையே பார்க்கிறான். நிச்சயம் இவன் ஏதோ விளையாடி இருக்கிறான். இப்போதும் விளையாடிக் கொண்டிருக்கிறான். இங்கு தான் வந்ததற்கு பாதி பதில் கிடைத்து விட்டதாக அவன் நம்பினான்.

என்ன தம்பி யோசிக்கிறீங்க இந்த ஆள் தான் எல்லா பிராப்ளத்துக்கும் காரணமா?”

மே..பீ.. “

ஆளை தூக்கிடலாமா?”

நோ.. இது ஜஸ்ட் கெஸ்ஸிங்க் தான். கொஞ்சம் டயம் கொடுங்க.., நீங்க ஒன்னும் பதட்டப்படாதீங்க ஸார். அதிகபட்சம் ரெண்டு மூணு நாளுக்குள் இதை  சரி பண்ணிடலாம். இது என் நம்பர்கொடுத்துவிட்டு அவன் ரஞ்சிதாவுடன் வெளியே வந்தான்.

ரஞ்சிதா என்னாச்சு என்னாச்சு ? ரேகாவை சரி பண்னிடாலாமில்ல?” என சுரேசை வழி முழுக்க கேட்டுக்கொண்டே வந்தாள்.

இப்ப எதுவும் என்னால் யோசிக்க முடிரஞ்சிதா, முதலில் நம்ம வீட்டுக்கு போவோம்என்றான்.

 வீட்டுக்குப் போனதும் ரஞ்சிதாவை கீழே விட்டுவிட்டு .,அவன் மேலே போக ரஞ்சிதா படியிலேயே பின்னால் வந்தாள்.

என்ன?”

ரொம்ப தேங்க்ஸ், என் கூட வந்ததுக்கு. இன்னிக்கி நைட்டு வரட்டுமா மேலே என்றாள்.

வேணாம். எனக்கு சில முக்கியமான வேலை இருக்கு. நீ போய் படு என்று சொல்லிவிட்டு அவன் மேலே வந்தான். வந்ததும் மலர்விழிக்கு போன் போட்டான்.

சுரேஷ் என்னாச்சு ஏதோ ப்ராப்ளமா? எந்த பிரச்சினையும் இல்லையே  உன் ஃபிரண்டுக்கு?”

யெஸ். ஆனா ஃப்ரண்ட்டுக்கு இல்ல., ஃப்ரன்ட் சிஸ்டருக்கு ப்ராப்ளம்

ஏன் என்னாச்சு?”

லேட்டஸ்டா அவங்களுக்கு மேரேஜ் ஆச்சு. அவங்களுக்கு ஒரு பிராப்ளம்என ஆரம்பித்து ரேகாவின் பிரச்சனையை சுருக்கமாக சொன்னான்.

என்ன சொல்றே? அதுக்கு தான் சொல்வாங்க கல்யாணமான புது பொண்ணுங்க, தனியா மொட்டை மாடிக்கு போக கூடாது, உச்சி வெயிலில் சுத்தக்கூடாதுன்னு.,, ஒரு வேளை ஏதாச்சும் காத்து கருப்பு ஏதாச்சும் தீண்டி இருக்குமா?”  என லர் சொல்ல

என்னால் அப்படி யோசிக்க முடியல., பட் சயின்டிபிக்கா இது பாசிபிள். மைன்ட் வேவ்ஸ் கன்ட்ரோல்னு நினைக்கிறேன். அவளை யாரோ மெண்டலா டிஸ்டர்ப் பண்றாங்க. ந்த டெக்னிக் பத்தி ஓரளவு நானும் கேள்விப் பட்டிருக்கேன்

அட  மைன்ட் வேவ்ஸ் கன்ட்ரோலா? அப்ப ஒண்ணு பண்ணுவோம் ஈஸ்வர் சந்திரன் கிட்ட,  அவளைழைச்சிட்டு போலாமா?” என சொல்ல .,

..இல்ல இல்ல மலர் ., நான் கூட முதல்ல அப்படித்தான் யோசிச்ஸேன். பட் வி டோய்ன்ட் டூ தட் இட்ஸ் எ பிக் மிஸ்டேக். பீகாஸ்..”

ஏன்? அவர் தான்  நம்ம வர்ஷா மைன்டை குணப்படுத்தி இருக்கார்.. தெரியும்ல?”

இல்ல மலர். அந்த ஆளு தான். மிஸ்டர் ஈஸ்வர் சந்திரன். அவன்..,அவன் இந்த பொண்ணோட கல்யாணத்துக்கு வந்திருக்காரு

ஸோ?”

ஸோ..இந்த பர்டிக்குலர் விஷயத்துல இந்த ஆளூ இன்வால் ஆகி இருக்கலாம்..”

நோ..நோ சான்ஸ் அவர் நல்லவர்., ஒன் கைன்ட் ஆப் டாக்டர்

ப்கோர்ஸ்., பட் அதுல கெட்டவனுங்களும் இருப்பாங்க இல்ல.. அந்த ஆளு கல்யாண ரிஷப்ஷன்ல வர வீடியோ கிளிப்பை அனுப்பறேன் பாரு. அவன் முகர கட்டை எப்படி இருக்குன்னு பாரு. உனக்கு வீடியோவை  வாட்ஸ் அப்ல அனுப்பி இருக்கேன் பாரு., பை தி பை நீ அந்த ஆளை பாத்திருக்கியா? என சொல்ல

நேர்ல இல்ல, வர்ஷா லாஸ்ட் டே ட்ரீட்மென்ட்ல அவ கூட செல்பி எடுத்து அனுப்பி இருந்தாங்க., அப்படித்தான் தெரியும்., ஸ்கொயர் பேஸ், டார்க் காம்ப்ளெக்சன். ஐ புரோல ஒரு தழும்புஃபார்ட்டி பிளஸ் ஏஜ்

யெஸ் அவன் தான்.. வீடியோ பாரு..” அவன் வீடியோவை அனுப்ப.,

அவள் பார்த்து விட்டு போன் செய்தாள்.

அட ஆமா .இவரு வந்த கல்யாணத்துல கல்யாண பொண்ணுக்கு இந்த பிராப்ளம்.  இந்த ஆளு வேற,. அந்த பொண்னையே ரூட்டு விட்டு டூ டைம்ஸ் ஸ்டேஜ்ல சுத்தி வரான்.. மே பீ ஹி இஸ் தி கல்ப்பிரிட்னு என்னோட உள்ளூணர்வு சொல்லுது.. அவனை விடாதே சுரேஷ்..”

பட் அவன் விர்ச்சுவலா பெரிய ஆள்,.ஹன்ட்ரட் பர்சன்ட் கன்பார்ம் பண்ணிட்டு தான் அவனை அப்ரோச் பன்ணனும்., “

ஹே ய் சுரேஷ்..வெயிட் வெயிட் ச்., சே எப்படி மறந்தேண் நான்..?”

ஏண் என்னாச்சு மலர்..?”

இப்பதான் எனக்கு ஒரு விஷயம் புரியுது சுரேஷ்.,  என் ஆபீஸ்ல ஸ்டாஃப் இருக்கா இல்ல? அகல்யா

ஆமா

அவளுடைய ஹஸ்பண்டு பாபு,  இதுக்கு முன்னாடி என்கிட்ட தான் அசிஸ்டென்டா வேலை பார்த்தான்.”

ஆமா சொல்லி இருக்கே

இப்போ அந்த பாபு ஒரு பெரிய ஆக்டரஸ் கிட்ட மேனேஜர் வேலை பார்க்கிறான். பத்மா மேனன் கிட்ட தான்

. ரியல்லி?”

யெஸ். அந்த பத்மா மேனனுக்கு கிட்டத்தட்ட  இதே மாதிரி ஒரு பிரச்சன வந்ததா.,  அந்த பாபு என்கிட்ட சொல்லி இருக்கான்

என்ன சொல்ற மலர்?”

ஆமா ஆனா அவன் டீடெய்லா சொல்லல., போன்ல தான் கன்வே பண்ணான். எதுக்குன்னா அவன் கிட்ட சஞ்சனா குழந்தை வர்ஷா பத்தி பேசனப்ப., ஏன்கா “நீலாங்கரைல ஒரு சாமியார் .,மெடிடேஷன், டெலிபதி . மெஸ்மரிசம்., ஹிப்னாடிசத்துல பெரிய ஆள் இருக்கார். பரந்தாமன் சாஸ்திரி பேரு. அவர்கிட்ட வர்ஷாவை கூட்டி காட்டுங்கன்னு சொன்னான்.. ஆனா அடுத்த வாரமே அவன் அவரை விட பெரிய ஆளு ஒருத்தர் ஆர் ஏ புரத்துல இருக்கார்னு சொல்லி, இன்பாக்ட் ஈஸ்வர் சந்திரனோட அட்ரஸ் கொடுத்ததே பாபு தான்”.

…”

ஆனா. ஆக்டரஸ் பத்மா பத்தி எதுவும் சொல்லாம சுருக்கமாக சொன்னான். மைமன்ட் டிஸ்டர்பண்ஸ் மட்டும் தான் சொன்னான். நானும் இதை டீடெய்லா கேட்டுக்கல. இது செக்ஸ் விஷயமா இருந்ததால அவன் என்கிட்ட டீட்டைலா சொல்லலை போல. ஒருவேளை அவன் என்கிட்ட சொல்ல சங்கோஜப்பட்டானான்னு தெரியல. ஆனா அந்த பத்மாவை முதல்ல நீலாங்கரையில் பரந்தாமன் சாஸ்திரிகிட்ட தான் பாபு அழைச்சிட்டு போய் இருக்கான்

..அப்படியா நான் அசிஸ்டென்ட் பாபுவை பார்க்கணுமே

நாளை காலையில வர சொல்லட்டுமா ?”

சரி ஆபீஸ் வரச் சொல்லு.  நானும் வரேன்

நோ நோ அவன் ஆபீஸ்க்கு வந்தா நல்லா இருக்காது., இந்த விஷயத்தை உங்க கூட உட்கார்ந்து நானும் டிஸ்கஷன் பண்ண முடியாது.”

சரி  பாபுகிட்ட என் நம்பர் கொடுத்து பேசிட்டு. நாளைக்கு காலைலை  வீட்டுக்கு வர சொல்லுஎன்றான்.

சரி சுரேஷ்.அவனே உங்கிட்ட கால் பண்ணி பேசுவான்.” என்றாள் மலர்.

---------

வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்