மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, February 3, 2023

கள்வெறி கொண்டேன் 4 ஆம் பாகம் இப்போது..

'கள்வெறி கொண்டேன்' என்னும் இந்த நாவல், எனது திரும்புடி பூவை வைக்கனும்’ நெடு நாவல் போன்றே வரவேற்பைப் பெற்றிருக்கிறது,. கொச்சையான வார்த்தைகள், அருவெறுப்பான வசனங்கள் இன்றி மென் காமப் பெருக்கிற்கும் திரைக்கதைக்கும் முக்கியத்துவம் தந்து எழுதப்பட்டிருக்கும் எனது இரண்டாவது  நாவல் இது.

இதை முழுதும் எழுதி ஒரே பாகமாக் வெளியிடுவதென்றால் அதிக காலம் பிடிக்கும். அதனால் தான் எழுதிய வரைக்கும் ( 200, 250 பக்கங்கள் ஆன பிறகு) தனி பாகமாக வெளியிட்டு விடுகிறேன்.

இப்படி செய்வதில் என்ன சௌகரியம் எனில், அவசரம் அவசரமாக எழுத வேண்டியதில்லை. சுருக்கமாக சொல்கிறேன் என ஓட வேண்டியதில்லை.

ஏனெனில், உதாரணத்திற்கு ஒரு பெண்  அவளது மண உணர்வை ஒரு வரியிலும் சொல்லலாம், சில பேராக்களிலும் சொல்லலாம். ஆனால் அப்படி ஒரிரு பேராவில் சடெக்கென கடக்கும் போது கதையின் அழுத்தம் மற்றும் வீர்யம் இழந்து விடுகிறது.

அதனால் தான் எனக்கு அங்கே பல பக்கங்கள் தேவைப்படுகிறது.   எனது வாசகர்கள் அனைவருக்கும், என்  எழுத்தினை நன்றாக படித்து உணர்ந்தவர்களுக்கு இது தெரியும்,.

கதை நகர்ந்து  கொண்டே போகும். காட்சிகள் வேகமாக வந்து கொண்டே இருக்கும். முக்கிய திருப்பம் வரும் போது நகராமல் சுழலும். அடுத்த கட்ட நிகழ்விற்கு வாசகர்களை தயார்படுத்துதல் இது.

எதை ஒன்றையும் நியாயப்படுத்த, ஜஸ்டிபீகேஷன் செய்ய அவகாசம் தேவைப்படுதாலும், இன்னும் இன்னும் திரைக்கதைக்கு சுவை கூட்டுவதாலும் தான் கதை நீளமாகிறது. பாகங்கள் அதிகமாகிறது.

‘கள்வெறி கொண்டேன்’ பொறுத்தவரை, நான் யோசித்து வைத்திருந்த கதையை மாற்றவில்லை. எந்த கதாபாத்திரத்தையுமே புதிதாக அறிமுகப்படுத்தவில்லை. அரைகுறையாக எழுதக்கூடாது என்னும் எனது வைராக்கியமே நாவலை தடிக்க செய்து விட்டது.

எனக்கும் இதை முடித்து விட்டு தயாராக இருக்கும் பல கான்செப்டுகளை எழுத ஆசை இல்லாமல் என்ன? அதற்காக எடுத்த நாவலை ஆழமில்லாமல்  நுனிப்புல் மேய்ந்து விட்டு போய்விட முடியுமா?

அடுத்த நாவலை சீக்கிரம் எழுதவில்லையென்று இப்போது யார் அடித்தார்கள்?. பொறுமையாக  எழுதுவோம். செம்மையாக செய்வோம். அன்பு பரிமாற்றத்திற்கும், காமத்திற்கும்  நிதானமே வல்லிய ஆயுதம்,

‘பார்த்தேன்’ ‘அழைத்தேன்’ ‘படுத்தேன்’ ரக கதைகளை, விரும்பும் வாசகர்கள் அல்ல.,  நீங்கள்  எனபதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

 சரி கள்வெறி கொண்டேன்’  இந்த 4 ஆம் பாகம் பற்றி.,

இந்த பாகத்தை பொறுத்த வரை பிளாஷ் பேக், கரன்ட் சீக்வென்ஸ் என மாறி மாறி வரும். ஒன்றுடன் ஒன்று முடிச்சி போட்டு தனி தனி லேயராக கதை விரியும். படித்து முடித்த பின்பு தான் இந்தக் கதைக்கு அந்த உத்தி எத்தனை ஏற்புடையது என்பது புரியும்.

முதன் முதலாக, இந்த பாகத்தில் ஒரு காதலை கசிந்துருகி ரசிக்கும் படி சொல்லி இருக்கிறேன் . உங்களுக்கு  நிச்சயம்  பிடிக்கும்.

மற்றபடி படித்து பார்த்து கருத்து சொல்லுங்கள்.

முதல் மூன்று பாகங்களை படிக்காமல் இதை படிக்காதீர்கள்..

கள்வெறி கொண்டேன் 4 ஆம் பாகம்


பின் குறிப்பு :  இந்த நாவலை ஜனவரி 1 ஆம் தேதிக்குள் முன்பதிவு  முறையில் வாங்கி இருந்தவர்கள், இதற்கென தனியாக கட்டணம் செலுத்த தேவையில்லை. அவர்களுக்கு மட்டும் இப்பாகமும்  கட்டணமிண்றி மெயிலில் அனுப்பி வைக்கப்படும்.. அதேபோல்  மொத்தமாக ஸ்ட்ரைப்பில் வாங்கியோர்க்கும் 4 ஆம் பாகம் கிடைக்கும்.