மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, January 22, 2024

பாகம் 35 - எபிசோடு எண் :4

 ஷ்யாம் ., இப்போது ஆளே மாறி விட்டிருந்தான். பயபக்தியாக இருந்தான். எல்லாம் அவனது உதவியாள் பாலாவின் வழிகாட்டல்.,

"அண்ணே.. இங்க கொஞ்சம் பேரு ஆல்ரெடி இருக்கானுங்கண்ணா. அவனுங்க சொன்னது தான் சட்டம்.. நியாயம்... கொஞ்சம் மிஸ்ஸானா., எக்கு தப்பானா., சொதப்பிடுவானுங்க."

"புரியுது. நீ மட்டும் என் கூட இரு..."

"இங்க சைலஜா மாதிரி டிவி ஆக்ட்ரஸ் யாராசும் தட்டலாமுன்னு நினைக்காதீங்க.., அலேக்கா தூக்கிடுவானுங்க.. "

"என்னடா நீ அதையே நினைச்சு கிட்டு இருக்கே.. சைலஜா பிரியாவெல்லாம்  நான் எப்பவோ மறந்துட்டேண்டா"

"இல்லண்ணே.. தாஸ்னு ஒருத்தன். அதன பெங்களூர் மொபைல் ஷாப் ஓனர் பொன்ட்டடடியை  ரைட்டு கொடுக்க., அவளை ஹோட்டலுக்கு கூப்ட்டு அந்த சுரேஷ் கிட்ட அடி வாங்கி அசிங்கமாச்சே.." அவன் ஞாபகபடுத்த.,

"டேய்ய்ய்ய் டென்ஷன் பண்ணாதே.. என் லைப்ல ரெண்டு லட்சியம் இருக்குடா. ஒன்ணு சுரேஷை போட்டு பொளக்குனும்.. இல்லண்ணா. அவனுக்கு ஒரு டிராப் வெச்சி வகையா மாட்டி வுடனும். இப்ப அவன் சென்னையில தான் இருக்கானாம்"

'சரி ரெண்டாவது?"

"அவன் அண்ணி இருக்காளே. பவித்ரா. ரொம்ப  திமிர் பிடிச்சவ.,  அவளை எப்படியாச்சும் போட்டு கழட்டனும்.."

" பட பூஜை பன்னிட்டு தமிழ்ல முதல் சீன் நடிக்க ரெடியா இருக்கற ஆளு பேசற பேச்சா இது?"

"தப்பு தப்பு .சாரி சாரி..ஆனா. இந்த ரெண்டையும் நான் பண்ணி தான் ஆவேன்டா. ஒரு ரெவஞ்ச் எடுத்தா,. செய்யனும் அவன் தாண்டா ஹீரோ..."

"இந்த விஷயத்துக்கா ரெவஞ்ச்?"

"ஆமா பாலா

 பாலாவுக்கும் ., இந்த ஷ்யாமிடம் எடுக்க வேண்டிய பல ரெவஞ்சுகள் இருந்தது. ஆனால் அதற்கெல்லாம் சமயமில்லை. இன்றைய தேதிக்கு மாதம் பிறந்தல் ரெண்டு லட்சம் கொடுக்கும் நடிகன் எந்த ஸ்டேட்டிலும் இல்லை. . ஷ்யாம் தருகிறான். அது மட்டுமல்ல., ஷ்யாமுடன் இருக்கும் வரை தான் பாலாவுக்கு ஃபீல்டில் மரியாதை..

" நீ சொல்லு பாலா  டமில் பீல்டு பத்தி ஓரளவு தெரியும். பிக்கர் ஸ்டார்ஸ், பிக்கர் பினான்சியர்ஸ். பிக்கர் பேனர்ஸ். தெரியும்..  நான் பட்டும் படாம  நடந்துக்குவேன். "

"பெரிய ஸ்டார்ஸ் பத்தி நமக்கென்ன..? இங்க ரெண்டு  இளவட்டங்க இருக்கானுங்க. ஒருத்தன். மாதேஷ்.. டைரக்டர் செல்வராஜா பையன்.. இன்னொருத்தன் அன்பு ..இவனுங்க தான். இப்ப  தெர்டி பிளஸ் யூத். இவனுங்க தான் எதிர்கால சூப்பர் ஸ்டார்ஸா இருப்பானுங்க"

"அப்ப நாங்க"

"தமிழ்னாட்டு ஜனங்க எப்பவும் அவங்க ஆளுக்கு தான் இம்பார்டன்ஸ் தருவானுங்க. நீங்க பொறுமையாய் இருந்தா , நிறைய ஹிட் கொடுத்தா அவங்க மனசு மாறுவாங்க.. அம்பதுக்கு  முன்னாடி அதர் ஸ்டேட்டுல வந்தவங்க தானே பீல்டுல கொடி கட்டி பறந்திருக்காங்க..? ஆனா நீங்க கையையும்., 'அதை' யும் கொஞ்சம் அடக்கி வைக்கனும் "

"அதெல்லாம் பாத்துக்கலாம்.. எப்பவாச்சும் ஒன்னு ரெண்டை தள்ளிகிட்டு போறேன்"

" நீங்க மாற மாட்டீங்க பாஸ்"

ஷ்யாம் அழகான இளைஞனாக இருந்த காரணத்தாலேயே உடலில் வலுவேற்றிக் கொண்டு, டான்ஸ், ஃபைட் கற்றுக் கொண்டு மும்பைக்கு சினிமாவுக்கு வந்தான். துவக்கத்தில் லோக்கல் டிவி ஆட் மாடல்.,அப்புறம் ஹிந்தி சீரியல்.,ஒன்னும் பெரிதாக போனியாகவில்லை.

"சீன் படம் நடிக்கிறியா? வாடா மச்சி." ஒரு நண்பன் கூட்டி கொண்டு போனான். லட்டு லட்டாய் பெண்கள்., ஏகத்துக்கும் கிடைத்தார்கள். படத்தில் நடிக்க தேவையில்லை.,   நடிகைகளுடன் படுத்தால் போதும். புரண்டு, புரண்டு .உருட்ட வேண்டும். சம்பளம் குறைவு தான், ஆனால், அவன் உடலுக்கு தீனி கிடைத்தது.

'ரொம்ப பிசையறப்பா?' என திட்டி வெட்கப்பட்ட பெண்கள் கூட., இரவு அவனை படுக்க கூப்பிட்டார்கள்.

"இப்படி திரண்டு திரண்டு முன்னாடி வந்து நின்னா நல்லது இல்லையாமே.. முழுசா எடுத்துடனுமுனு சொல்றாங்களே" அவர்கள் திக்கி திக்கி திணறி பேச., அவன் அவர்களை தேடி போனான், "எங்கடி காட்டு? இன்னுமா வருது?" அவன் காமவெறி மிகுந்து கேட்க.,

அவனுக்கு அவனது இலக்கு எதுவென புரியாமலயே., காமத்துடன் நடிகைகளை மேய்ந்தான். திரையில் தனக்கு பிடித்த ஒரு நடிகையை இந்த பையன் பிடித்து அவளது அந்தரங்க இடங்களிலெல்லாம் கை வைக்கிறானே என பொறாமையால் ரசிகர்கள் பொரும., கை மட்டுமில்ல மக்களே., " இதுவே" வைப்பேன். என அவன் அந்த  செக்ஸ் துணை நடிகைகளை தினம் தினம் தன் வலையில் விழ வைத்து வேட்டையாடினான்.

அதனாலேயே அவனது தப்பான டிராக் ரொம்ப காலம் மாறாமல் இருந்தது. நிறைய அடுத்தடுத்து கசமுசா படங்கள் நடித்தான்,

அதன் பிறகு அவனது போட்டோ தற்செயலாக ஒரு இயக்குனர் கண்ணில் பட., கன்னடத்தில் ஒரு பெரிய ஹீரோவை.. எதிர்த்து சண்டை போடும் காலேஜ் பையனாக நடிக்க வைத்தார்.

இவனது சுறுசுறுப்பான மாறுபட்ட நடிப்பு வித்தியாசமான  நடிகனாக உணர வைக்கப்பட்டது.

ரஷ் பார்த்து விட்டு படத்தின் டைரக்டர்.,

"என்னப்பா., நிறைய இடங்களில் பையன்., ஹீரோவை தள்ளி ஸ்கோர் பண்றானே. கத்தரி போடலாமா?" எனக் கேட்க,

எடிட்டிங்க்  டேபிளில் படத்தை பார்த்த அனுபவஸ்தர் . "வேணாம் சார். நெகடிவ் ரோல் சூப்பரா இருந்தா தான் ஹீரோ கேரக்டர் எடுபடும்.." படத்தில் ஷ்யாம் சீன்கள் கத்தரிக்கப்ப்டவில்லை. ஹீரோவின் தங்கச்சியை ஷ்யாம் தள்ளி கொண்டு போய் காரில் வைத்து போடும் சீன்கள் மட்டும் ஆங்காங்கே சென்சார் ஆனது.

ஆனால் அதற்கே இளசுகள் பெருமூசுச் விட்டார்கள்.

"வாழ்றான்பா" என அங்கலாய்த்தார்கள். திரையில் பெண்களுடன் உறவாடும் காட்சிகள், அப்போது பருவ பெண்களை கட்டிப் போட்டது. அவன் பெரிய ஹீரோவானான். மூன்று மாதத்திற்கு ஒரு படம் ரிலீஸ் ஆனது.

கன்னட சினிமாவில் வளர்ந்து வரும்போதே பெரிய தயாரிப்பாளரின் மகளை வளைத்து போட்டு கல்யாணம் செய்து  கொண்டான். அவனது மனைவி சீதாவும் அழகி தான். ஆனால் அவனுக்கு தான் மனம் ஒட்டவில்லை. அடுத்தடுத்து என தாவிக் கொண்டே இருந்தான்.

இவன் ஒரு கட்டுப்பாடற்றவன் என்பதை தாமதமாக தெரிந்த .,அவனது மாமனார் இவனை திருத்த பல முயற்சிகள் எடுத்தார்,. அடிக்கடி அவன் படத்துக்கு பைனான்ஸ் பண்ணும் புரட்யூசர்களை வைத்து மிரட்டி வைத்தார். அதில் கிடைத்த பலன் பூரணமில்லை என்றாலும்,  தன் ஒரே மகளை கொடுத்த அவனது மாமனாருக்கு வேறு வழியுமில்லை.

இந்த 20 ஆண்டுகளில் அவனது கேரியர் கிராப் எப்படியோ உச்சத்தில் வந்து விட்டது. கன்னடத்தில் முன்னணி நடிகர்களில் 3 இடத்திற்குள் வந்து உட்கர்ந்து விட்டான். அம்பது வயது தாண்டினால்.,  ஒரு பெரிய கட்சியில் சேரக் கூட அவனிடம் திட்டம் இருந்தது. ஆனால் என்ன வயசானாலும், பேர், புகழ், பணம் வந்தாலும் அவனுக்கு பெண்கள் மீதான மோகம் குறைய வில்லை.

இந்த  நிலையில் தான் ஷியாம் தமிழ் பீல்டுக்கு வந்திருக்கிறான். இங்கே வருவதற்கு முன் ஒரு மாத காலம், சினி பீல்டை பற்றி பலதும் தெரிந்து கொண்டு தான் பிளேன் ஏறினான். தமிழும் பேசக் கற்று கொண்டான்.

"ஒரு ஹிட் போதும் பாஸ்., அப்புறம் நாம தான் இங்க".. பாலா தான் பக்க பலமாய் இருந்தான்.

“நீ மட்டும்  கூட இரு பாலா

"பாலா..இங்க யாரு டான்? யாரை முதல்ல அடிக்கனும்?" ஷ்யாம் கேட்டான்.

"அதெல்லாம் நம்ம வேலை இல்ல.., நாம நம்ம வேலையை சிறப்பா செஞ்சா போதும்.. என்ன ஒன்னு அடிக்கடி நம்மளை சுத்தி என்ன நடக்குதுன்னு தெரிஞ்ச்சுக்கனும். அவங்க எப்படி டாப்ல வந்து உக்காந்தாங்கன்னு தெரிஞ்ச்சுகனும்"

"அவங்கன்னா?"

"டாப் ரோ ஆக்டர்ஸ்.. உங்க காம்படிட்டர்ஸ்.."

"..ம்ம்.."

"இப்ப நீங்க ரொமான்டிக் கலந்த ஆக்ஷன் ஹீரோ.. அதுக்கு நிறைய நடிகைகளை நட்பு வளையத்துல வெச்சுக்கனும்.. "

"இருக்காளுங்களே"

"டமில் ஆக்டர்ஸ்.. " அவன் மட மடவென பெயர்களை சொன்னான்.

"அப்புறம் ரொம்ப கலகலப்பா இருக்கனும்.. புரட்க்ஷன் மேனஜேர், பாய்ஸ் பேர் வரைக்கும் நல்லா தெரிஞ்ச்சு வெச்சுக்கனும்.. அவங்களுக்கு ஏதாச்சும்,. மணி ஹெல்ப்னா உடனே யோசிக்காம பண்ணனும்.. அவங்க பிராப்ளத்தை கவலையா கேக்கனும்.."

"..ம்"

"பெரிய பெரிய புரட்யூசர்ஸ்., பைனான்சியர்ஸ் நல்லா தெரிஞ்சு வெச்சுக்கனும். இந்தாங்க இந்த ., டைரில எல்லார் போட்டோவும் .புரொஃபைலும் இருக்கு. டைம் கிடைக்கறப்ப ஸ்டடி பண்ணுங்க.. பின்னாடி உதவும்..

" என்னடா இதுல முதல் பக்கத்துலயே ரெண்டு கம்பெனி லோகா போட்டிருக்கு "

"ஹஹா. பாஸ் இன்னி தேதிக்கு இவங்க ரென்டு பேர்தான் சினிமா உலக டான்.. இவங்க ஆளும்கட்சி, எதிர்கட்சியோட சினிமா கம்பெனி. எந்த தேதில எந்த படன் எத்தினி ஸ்கிரீன் .,வரனும்னும் முடிவு பண்றது இந்த ரென்டு கம்பெனி தான்.. உங்க படம் புடிச்சிருந்தா., உடனே விலைக்கு வாங்கி இவங்களே ரிலீஸ் பண்னிக்குவாங்க,. நமக்கு காசு பழுதில்ல. மார்கெட்டிங்க் புரோமஷன் செலவு மிச்சம்"

"கர்னாடகா மாதிரி இல்லையா இங்க? டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் என்ன பண்றாங்க இங்க"

"எல்லாம் இங்க டம்மிதான்.  நீங்க  அவங்களை எதுத்து வாய்ஸ் எழுப்பினா, படம் பொட்டிகுள்ள தான் இருக்கும். கதை என்னோடதுன்னு குப்பத்துல இருந்து ஒருத்தன் வருவான்,. கேசு, பஞ்சாயத்துன்னு ஆகும். சோ. நமக்கென்னன்னு இருக்கனும். காவிரி தண்ணிக்கு.,மத்த பொது பிரச்சனைக்கு குரல் கொடுக்க ஆரம்பிச்சா உன்னை கட்டம் கட்டிடுவானுங்க.."

"என்னடா சொல்றே..? எனக்கு பாலிடிக்ஸ் வேனுமே.."

"அதுக்கு வயசு இன்னும் இருக்கு. அம்பது தாண்டுங்க.. இப்ப அதுக்கு  இங்க நிறைய ஆளுங்க இருக்கானுங்க. ..பாலிடிக்ஸ்லாம் அப்புறம் பாத்துக்கலாம். முதல்ல ரசிகர் மன்றம்,. இயக்கம்னு நிறைய ஆரம்பிச்சு  இங்க ஸ்டடியாவுங்க.. சரியன சமயத்துல குரல் கொடுங்க.. இப்ப எதுவும் வேணாம்.. மீறி ஏதாச்சும் பண்னா மொத்தமும் ஊத்திக்கும்.. பாஸ் அஞ்சாறு வருசம் வெயிட் பண்ணுங்க.. ரூலிங்க் பார்ட்டி வீக்கா தான் இருக்கு.. இப்ப உங்களுக்கு சினிமா தான் டார்கெட்.. ஹிட் கொடுங்க..இப்ப குரல் கொடுத்து பவிஷூ காட்ற ஆளுங்கல்லாம் சினிமாவுல சாதிச்சவங்கதான் "

அவன் அந்த உச்ச நட்சத்திரத்தின் பேரை சொன்னான்.

" முப்பது வருச சர்வீஸ். உங்க ஊர் தான். இன்னும் ஹீரோ தான்.  ஏகப்பட்ட ஹிட் கொடுத்தாச்சு.. அவரே அரசியல் வரதுக்கு யோசிச்சுகிட்டு இருக்கார். அவரை புரிஞ்ச்சுகிட்ட ஆளுங்க.. அவரு  வந்தா யாருக்கெல்லாம் பாதிப்புன்னு நினைச்சாங்களோ அவங்கல்லாம் சேந்து ஒரு பெரிய அமௌன்ட் கொடுத்து லாக் பண்ணதா கேள்வி."

"ஓ"

"இப்ப அவரு அவுட் ஆப் சிலபஸ். அதுக்கப்பறம் ஒரு பைனான்ஸியர். பேரு ரங்கராஜர். மதுரைகாரு. ஆனா இன்னிக்கு சினிமாவுல இவரு தான் பவர்புல் ஆளு. “

“ஓஹோ

“என்ன பிசினஸ் பண்றதுண்னு முழிச்சிகிட்டு மதுரைல வட்டிக்கு காசு கொடுத்து பெரிய ஆளானான். அப்படியே சினிமால பூந்துட்டான்ன. 20 வருஷத்துல பெரிய ஆளாயிட்டான். “

‘பேரு என்னசொன்னே?

“ரங்கராஜன்.. இவருக்கு ரெண்டு பொன்னுங்க., இந்த ஆளுகிட்ட போனா எதுவும் நடக்கும். எப்படியும் காப்பாத்துவார். ஒரு பெரிய நடிகை குடிபோதையில ஒரு ஆட்டோ மூனு பேரை காரில ஏத்தி கொன்ன கேஸ்ல மாட்டிகிட்டா.. இவரு தான் காம்பரமைஸ் பண்ணி வெச்சாரு.. சினிமா சம்பந்தப்பட்ட எந்த கேசையும் இவரு உடைச்சிடுவார். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவருக்கு வாய்ஸ் இருக்கு."

"அவரை பாக்கனுமே"

"அதுக்கு நீங்க இனும் உயரனும்...அதுமட்டுமில்ல. ஒரு பெரிய ஆக்டர்.  ராம்குமார். அந்தாளுக்கு ரென்டு பொண்டாட்டி. ஒரு நாள் சண்டைல முதல் பொண்டாட்டியை கட்டையால கோவத்துல அடிச்சி கொன்னுட்டான். பேச்சு மூச்சில்ல,. என்ன பண்றதுன்னு தெரியாம இந்த ரங்கராஜுக்கு போன் பண்ணான். அப்புறம் அந்த நடிகை கட்டில்ல இருந்து கீழ விழுந்தாத மாத்தி கேஸ் எழுதி குளோஸ் பண்ணிட்டாங்க. கட்டில்ல இருந்து கீழ விழுந்து ஒருத்தி சாவளா? ண்னு யாரும் கேள்வி கேக்கல. மறு நாள் அரஸ்ட் ஆகவேண்டிய ராம்குமார் . இந்த ஆளால தப்பிச்சுட்டான் "

“ஓ ஆனா அந்தாளு ஏண் கொன்னான்?

“ அந்தம்மாவும் நடிகை தன. சிக்ஸ்டில டாப் ஆக்டர்ஸ். அப்புறம் இந்த ஆளை மூணாம் தாரமா கட்டிகிச்சு. இந்த ஆளு சரியா போறதில்ல. காசும் கொடுக்கறதில்ல. அந்தம்மா என்ன பண்ணும்? தெரிஞ்ச ஆளுங்களை வெச்சி பிராஸ்டிடியூஷன் பண்ண ஆரம்பிச்சி. பேப்பர்காரன் கட்டம் கட்டி நியூஸ் போட்டுட்டான். ; விபசாரம் பண்ணும் மார்கெட் போன  தமிழ் நடிகைகள்னு தலைப்பு வெச்சுட்டான்.. போட்டோவோடு போட்டான். புருசனுக்கு மானம் போச்சி. இதெல்லாம் யார்டி உன்னை பண்ண சொன்னாங்கன்னு அந்தாளு கத்தி, அதுவே சண்டையாகிடிச்சி

"அச்சோ ..பாவம். இதெல்லாம் உனக்கு யாரு சொன்னா?"

"முத்து தான்.. அவன் தான் இங்க சினிமாவுக்கு மொபைல் லைபரரி.. வந்த உடனே பிரண்டு புடிச்சிட்டேன்"

"அவனை பாக்கனுமே"

"பாக்கலாம்.. அப்புறம் இன்னொரு கேசு.. இங்க டான்ஸ் மாஸ்டர் மாலான்னு ஒருத்தி இருக்கா .அவ இங்க ரொம்ப  பேமஸ்., பெரிய ஸ்டார்ஸ்க்கு தான் கோரியோகிராப் பண்ணுவா. அவ தம்பி. அவன் ஒரு பொறுக்கி.  பேரு தாச பிரகாஷ். கூட ஆடற பொண்ணுங்க யாரா இருந்தாலும் அவன் கூட படுத்து தான் ஆகனும்.. திடீர்னு ஒரு பெரிய படத்துல சோலா டான்ஸ் ஆடற சான்ஸ் கிடைச்சது. பையன் எங்கேயோ போயிட்டான். அதுக்கப்பறம் அவன் கூட  பொண்ணுங்களை தொந்தரவு பணறதில்ல.. "

"வெரிகுட்"

"நடிகைகளை தான் தொந்தரவு பண்ண ஆரம்பிச்சான். நிறைய நடிகைகள் வேற வழியில்லாம ஒத்துகிட்டாங்க.. அப்படி ஒத்துக்காத பொண்ணுதான். ரேஷ்மிகா சென்.  ஹிந்திகாரி. அவ அக்காவும் இங்க ஒரு நடிகைதான். அவந்திகா. “

ம்ம்ம்

“ஒரு பார்ட்டில ஒயின் குடிச்சி மட்டையான ரேஷ்மிகாவை இவன் கெடுத்துட்டான். அதை வீடியோ எடுத்து வெச்சு அதையே காட்டி அவன் ரேஷ்மிகாவை பலமுறை அனுபவிச்சான்,.வயித்துல கரு உண்டாகி., அதை கலைக்க முடியாம அவ அழுது., அக்கா கிட்ட சொல்ல., அக்காவும் தங்கையுமா அந்த பொறுக்கியோட அக்கா கிட்ட போய் அழுதாங்க."

"அந்த  டான்ஸ் மாஸ்டர் மாலா?"

"யெஸ்.. அவ எனக்கு தெரியாதுன்னு. கை விரிச்சுட்டா. தாச பிரகாஷ் கிட்ட போயி., ' இப்படி பண்ணிட்டியேன்னு" அந்த பொண்ணு நியாயம் கேட்க.,  நீயும் உங்க அக்காளும் எனக்கு ஒன்னா வேணும்னு கேட்டிருக்கான்"

"அடப் பாவி."

"வீட்டுக்கு வந்த ரேஷிமிகா கயித்துல தொங்கிட்டா?"

"இசிட்?"

"பீல்டுல எல்லாருக்கும் தெரியும் ., அவ அஞ்சி மாச கர்ப்பம்னு., பிரகாசை அரஸ்ட் பண்ன சொல்லியாச்சு. ஆனா அவனோட அக்கா போயி இந்த ரங்கராஜன் கால்ல போய் விழ., ஒரே போன் தான்.. கர்ப்பம் .. கட்டியாகிடுச்சு.."

"அச்சச்சோ"

"ஆமா  பாஸ்.. அப்படி ஒன்னு இல்லன்னுட்டாங்க.. வயித்து வலில.,தான் செத்துட்டான்னு கேஸ் பதிவாச்சு. இப்படி எவ்வளவோ கேசு.. என்னத்தை சொல்ல. ? இது ரண பூமி"

" ரங்கராஜனை  எப்படியாச்சும் நம்ம பட விழாவுக்கு கூட்டி வந்து டஸ்ல வெச்சுக்கனும்.."

'அப்படில்லாம் ஒரேயடியா அவரை நம்பிட முடியாது. அவரு பொண்ணுக்கே ஒரு பிரச்சனை வந்துடுச்சி.. அவரால எதுவும் பண்ண முடியல.."

"என்னடா அது?"

"அதை அப்புறம் சொல்றேன்.. இப்ப உங்களுக்கு இருக்க வேன்டிய ஒரே யோசனை நடிப்பு.. நடிப்பு தான்..கதை ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு... வில்லேஜ் டூ சிட்டி.. சேசிங், ரொமான்டிக்.. ஆக்சன் லாம் இருக்கு.. கூப்பிடறப்பலாம் போங்க.. லேட் பண்ணாதீங்க... கேரவான்ல படுத்து தூங்க்கிட்டு இருக்காதீங்க.. பேப்பர்ல தப்பா எழுதிடுவானுங்க..."

"புரியுது..."

 ஷியாம் எப்படியாவது தமிழ்சினிமாவில் உச்சத்தை தொட வேண்டும் என நினைத்தான் . பயபக்தியுடன் கதையை கேட்டு நடித்தான் .கேரவனில் தங்காமல் எப்போதும் வெளியவே பிளாஸ்டிக்  சேரில் உட்கார்ந்திருந்தான்.  ஷூட்டிங் பிரேக்கிங் போது இரண்டு ,மூன்று சேர்களை ஒரே வரிசையில் அடுக்கி வைத்து அதன் மேல் படுத்து உறங்கினான்.

 அதை யாரோ படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றஆஹா இப்படி ஒரு ஸ்டார் நடிகனா? என மக்கள் வியந்தார்கள்.

 சினிமாக்காரன் என்றாலே அவனது செய்திக்கு முக்கியத்துவம் தந்து போடும் பல பத்திரிகைகளும் ஊடகங்களும் வரிசையாக அவனை பேட்டி எடுக்கச் சென்றார்கள். அவனது எளிமையும். அர்ப்பணிப்பும் பற்றி ஒரு முக்கியமான பத்திரிகையை அவர் எழுதியது.

ஷியாம் ஆதரவு ஊடகங்களும் ரசிகர்களும் பெருக தொடங்கினார்கள். அவனது முதல் படம் வெளிவருவதற்கு முன்பே, அந்த நேரடி தமிழ் படத்தை பற்றிய பல எதிர்பார்ப்புகள் அதிகரிக்க தொடங்கி விட்டன.

அந்த படத்தை எடுக்கும் டைரக்டரும் முன்னணி வெற்றிப்பட இயக்குனர். அவரும் அந்த படத்தை பெரிய அளவில் கிடைக்க வேண்டுமென துடிப்பாக இருந்தார். அவர் என்ன கேட்டாலும் செய்து தர , பணத்தை செலவழிக்க  புரட்யூசரும் அவரை நம்பி ஃபைனான்சியரும் தயாராக இருந்தார்கள்.






MAYATHIRAI FULL NOVEL 670 Pages : Original Cost Rs.360

Now only Rs.290 
Get Coupon code : mtpart35
L
imited days Only

BUY FULL VERSION