மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, March 1, 2025

கள்ளம், கபடம், காமம் எபிசோடு : 6

 

எபிசோடு : 6

 

ரம்யா திருமணமாவதற்கு முன் டிகிரி முடித்து முதல் முதலாக திருச்சியில் ஒரு லாஜிஸ்டிக் நிறுவனத்தில் வேலைக்கு சென்றாள். அங்கே எச். ஆர் அதிகாரிக்கு உதவியாளராக போய் சேர்ந்தாள். போய் சேர்ந்த  கொஞ்ச நாளிலேயே எச்.ஆர் அதிகாரி  முத்துலிங்கத்துக்கு ஆப்பு வைத்தாள். அந்த 45 வயதான ஈன பிறவி எச். ஆர் அதிகாரி  என்ற பெயரில் அங்கு வேலை செய்யும் பெண்களின் பயோடேட்டாவில் இருந்து செல்போன் எண்களை ,போட்டோக்களை எடுத்து அவர்களிடம் நேரம் கெட்ட நேரத்தில், வெவ்வேறு பெயரில்  எண்ணில் இருந்து யாரோ பேசுவது போல பேசி கடலை போடுவதை கண்டுபிடித்து நிர்வாகத்திடம் தெரியப்படுத்த,  உடனே அந்த அதிகாரியை வேலை விட்டு துரத்தினார்கள் .

அவனும் இந்த வாட்ச்மேன் போலவே அன்று வன்மம் கக்கிய பார்வை உதிர்த்து விட்டு போனான்

முத்துலிங்கம் போன இடத்தில் காலியாக இருந்த சீட்டில் , அதிரடியாக ரம்யா அந்த சீட்டில் உட்கார வைக்கப்பட்டாள். சம்பள் உயர்வும் கூட,  22  வயது நிரம்பிய  இளம்பெண் ரம்யாவிற்கு அந்த பதவி கிடைக்க அவளுடைய ஒழுக்கம், கண்டிப்பு பெரிய காரணமாக இருந்தது.

 தான் உட்கார வைக்கப்பட்டிருக்கும் சீட்டு எப்பேற்பட்டது என்பதை புரிந்து கொண்ட ரம்யாவும்,  உடனே அது தொடர்பான நிறைய படிப்புகளை படித்தாள். மனித வள மேலாண்மையை கரைத்து குடித்தாள்.  அலுவலகம் மேலாண்மை, நிர்வாக மேலாண்மை எல்லாவற்றையும் தேடி தேடி படித்தாள். அவளிடம் எச்.ஆர் மட்டுமன்றி, அவள் கணக்கு வழக்குகளில் சூரப்புலி என்பதால் அக்கவுண்ட்சையும்  ஒப்படைத்தார்கள். அவளும் கணக்கியலை முறைப்படுத்தி, ஏற்கெனவே இருந்த பல முறைகேடுகளை சரி படுத்தினாள்.

ஆறே மாதத்தில் நல்ல பெயரை எடுத்தாள். சிக்கன நடவடிக்கைகள் பல எடுத்தாள். எல்லா பில்களுக்கும் கணக்கு கேட்டு பேமென்ட் கொடுத்தாள்.

எப்போதோ ஆபிஸ் வந்து போகும் முதலாளி கூட வெகுவாக பாராட்ட, ஏற்கெனவே இருந்த சக ஊழியர்கள், அதிகாரிகள் நெஞ்சில் தேவையே இல்லாமல் வஞ்சினம் பரவ ஆரம்பித்தது.

ஆனால், ரம்யாவுக்கு ஒரு முதிர்ச்சியான நிறுவன அதிகாரிக்குரிய அத்தனை தகுதியையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவளுடைய முக்கியமான இலக்காக இருந்தது.

“நாளைக்கே கல்யாணம் ஆன கூட , இந்த வேலையை விட்டுடக்கூடாது, திருச்சியிலேயே எனக்கு மாப்பிள்ளை பாருங்கப்பா., “ என அவள் வீட்டில் தீர்மானமாய் சொல்லி இருந்தாள்.

“உன் திறமைக்கும் அழகுக்கும் நீ அமெரிக்காவில வேலை செய்யனும்டி”

மெத்த படிப்பும், மற்றவர்களது பாராட்டும் தந்த கர்வம் அவளை இன்னும் பல படி மிதப்பில் கொண்டு போய்விட்டது .அது ஒரு மிகப்பெரிய ஆபத்தின் தொடக்கப் புள்ளியாக ஆனது தான் வேதனை .­­

அந்த லாஜீஸ்டிக்  நிறுவனத்தில் பேக்கிங்கில் பிரிவில்  மூன்று இளைஞர்கள் வேலைக்கு சேர்க்கப்பட்டிருந்தார்கள்.  அவர்கள் அங்கே இரு ஆண்டுகளாக இருக்கிறார்கள்.  சப் காண்டிராக்ட் ஆட்கள். அவர்களுக்கு. பளு தூக்கும் வேலை, காண்ட்ராக்ட் வேலை என்பதால் அதை அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளே வேலைக்கு எடுத்து விட்டார்கள். எச். ஆருக்கு தெரிவிக்க அவசியமில்லை.


இப்படி கம்பெனிக்கு ரெகுலராக வரும் சப் காண்ட்ராக்ட் ஆட்கள் என அவர்களை ரம்யாவுக்கு அறிமுகப்படுத்தவே இல்லை. இது பற்றி எச்.ஆர் அதிகாரி  என்றமுறையில் ரம்யாவுக்கு தெரிவிக்கவில்லை. அவர்கள் கட்டடத்தின்  கிடங்கில் பின்பகுதியில் தான் வேலை செய்வார்கள்.

எப்போதும் பொதுவாக அவர்கள் ரம்யாவின் கண்ணில் படுவதில்லை.

ஒருமுறை மட்டும் , உதவி மேலாளர் மைதிலி, லாஜீஸ்டிக் லோடிங்க் அன்லோடிங்க் ‘ பில்லை நீட்ட.,

“என்னது பாண்டியன் என்ற பேர்ல, லோடிங்க் பில் கேக்கறீங்க?.. பாண்டியன் வென்டார் கோட் எங்கே? டிடிஎஸ் பிடிக்கலையா?” ரம்யா கேட்க,

“இது சப் காண்டிராக்ட் பில் மேடம். இதுக்கு முன்னாடி நம்ம ஆள் தான் பிரைவேட் வண்டி பிடிச்சி,   நம்ம  ஆளுங்களை வெச்சி ,லோடு ஏத்தி அனுப்பினோம். ஜி. எம் தான் தனியா சப் காண்டிராக்ட் போட்டுக்கன்னுட்டார். டூ இயர்ஸா பில் போடுறோம். நீங்க புதுசுங்கிறதால இது தெரியல” மைதிலி விவரமாக எடுத்துரைத்தாள்.

“ நம்ம பில்டிங்ல தான் பேக்கிங்க் &  லோடிங்க் நடக்குதா?”

“யெஸ் மேடம்”

“எத்தனை பேர்?”

“மூனு பேர். ஒரு டெம்போ”

“ஆளுங்க எப்படி? நான் பாக்கனும்”

“பாக்கலாம் மேடம். முதல்ல இந்த பில்லை பாஸ் பண்ணுங்க”

ஆனால், மைதிலி அவர்களை அதன் பின் கூட்டி வரவில்லை.

அப்படி ஆட்கள்  இருப்பதை தெரிந்து கொள்ளாதது தான் பெரிய பிசகாய் விட்டது.


கள்ளம் கபடம் காமம்- 1 - 6

கள்ளம், கபடம், காமம் எபிசோடு : 5

 

எபிசோடு : 5

 

“இப்போ என்ன அக்கா செய்யறது?” வீட்டுக்கு வந்ததும்  இந்து ரம்யாவிடம் கேட்டாள்.

“இந்த பொம்பள சொல்றத பார்த்தா, ரேகா பேச்சைக் கேட்டு அவ தம்பிக்கு தான் ஜிம்முல வேலை போட்டு கொடுப்பா போல இருக்கு .அது எப்படி கீழ் ஃபிளாட்டு ஷில்

ஷில்பா , மதுமிதால்லாம் ஆம்பளை கோச்சுக்கு ஒத்துக்கிட்டாங்க?”

“தெ தெரிலடி”

அவங்க எல்லாத்தையும் தான் ஒத்துப்பாங்க,  அவங்களை மாதிரி நம்ம இருக்க முடியுமா?.இத்துணூன்டு ஷார்ட்ஸ் போட்டுகிட்டு அந்த ஷில்பா  மொட்டை மாடியில துணி காய வைக்க வர்ரா தெரியுமா?”

“ம்ம்ம்”

‘ அட வீட்டுல புருஷனோட ஜனம் இருக்கேன்னு மரியாதை வேணாம். வீட்டுல மச்சினன் இருக்கான்னே கூச்சம் வேனாம்..”

“ஏய்ய் அவன் வாரம் ஒன் டைம் தான் வருவான்., போவான்.. சின்ன பையன்டி.,”

“சின்ன பையனா? காலேஜுக்கு போறான். என்னையே எப்படி பாப்பான் தெரியுமா? அப்ப அண்ணிகாரி எப்படி வீட்டுல இருக்கனும்.? சே  ஜிம்ல எஸ்தர் இருக்கறப்ப, ஷில்பா ஷார்ட்ஸ் போட்டுக்கிட்டு வருவா.. இனி எப்படி வருவா? பாக்கத்தானே போறேன்”

“ உனக்கு இதாண்டி பிரச்சனை இப்ப?”

‘அதில்லக்கா.,  அவங்க வீட்ல அதெல்லாம் கேட்க மாட்டாங்க . நம்ம வீட்டுல அப்படியா? பேசாம வீட்டிலேயே திரட் மில்லு அது இதுன்னு வாங்கி செய்ய வேண்டியதுதான்

என்னடி சொல்ற ?” யோசனையாக கேட்டாள் ரம்யா .ஏனென்றால் ரம்யா வீட்டிலேயே திரெட் மில் எல்லாம் இருக்கிறது.  ஜிம் உபகரணம் என்பது முக்கியமல்ல. ஜிம் எங்கிற இடம் தான் முக்கியம்.  

ஜிம் என ஒரு இடம் இருந்தால் தான் ,சுற்றிலும் ஆட்கள் இருந்தால் தான் ஜிம்மிற்கு போகவே பிடிக்கும். ஒர்க்  அவுட் செய்ய பிடிக்கும் .என்ன இருந்தாலும்  நேரடியாக ஜிம்முக்கு போகும் வழி வராது. பேசாமல் எந்த ட்ரையினரும் வேணாம் நாங்களாக செய்து கொள்கிறோம் என சொன்னால்? ம்கூம் அதற்கு, இந்த சங்கீதா விட மாட்டாள்.  என்ன செய்வது ? என ரம்யா யோசித்துக் கொண்டே வந்தாள்.

இந்த சங்கீதா,  ரேகா இருவரும் எலியும் பூனையாக சண்டை போட்டாலும் கூட,  ரேகா சொல்வதை தான் சங்கீதா கேட்கிறாள். சப்போர்ட் செய்கிறாள். போதாதுக்கு மரியா வேற.

‘நல்ல பையன், அடக்கமான பையன் ‘என ரேகாவின் தம்பிக்கு சர்டிபிகேட் கொடுக்கிறாள்.

இதெல்லாம் என்னிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் மேல் பிளாட் ரம்யா என்றாலே ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது. இப்படித்தான் கொஞ்ச நாளைக்கு முன்னால் வாட்ச்மேன் என்ற பெயரில் பரட்டை தலையாக ஒருத்தன்  அழுக்காய் வந்து நின்றான் . வாயில் கூலிங்க் லிப்பை போட்டு எச்சிலை துப்பில் கொண்டிருந்தான்.

அவன் அருகே போய் பார்க்க, அங்கே ஷில்பா கடன்காரி நைட்டி அணிந்தபடி, குனிந்து கார் கதவை துடைத்துக் கொண்டிருக்க, அவளின் இளமை கனங்களை இந்த ப்ராடு நாய் வெறீத்து பார்த்துக் கொண்டிருந்தான். ரம்யாவுக்கு கோபம் தலைக்கு மீது ஏறிவிட்டது.

“ஏய்ய்..”

அதை பார்த்த உடனே ரம்யா கடுமையாக சத்தம் போட்டாள். அவன் ஏதும் பேசாமல், பார்வையை அசால்ட்டாக ரம்யாவின் மீது திரும்பியது. அவள் பேசும் பாஷை அவனுக்கு முக்கியமில்லை.  அவளது உதடுகளையே  பார்த்தான். த்தா பாக்க ஆரஞ்சு சுளை மாதிரியே இருக்கே.,

ஷில்பா விட இவ இன்னும் கும்முன்னு இருக்காளே.

“ஏய்ய் அறிவில்ல உனக்கு.. ? வெளிய போ...” ரம்யா கத்த., அவளை அவன

முறைத்துக் கொண்டே, கை உயர்த்தி போசும் ரம்யாவின் ஈர அக்குள் வட்டத்தை ரசித்து  காமத்துடன் பார்த்தான். அவனுக்கு எல்லாம் பெண்களுமே போகத்திற்கான களம் போல., அவன் பார்வை அவளை பதட்டப்படுத்த,

அவளுக்கு முதுகுத்தண்டு சிலீரென ஆகி நா குழறி கத்த., “ழேஏஏய்ய்’   சத்தம் கேட்டு, எல்லாரும் விதிர்த்து போய்விட்டார்கள்.

செக்ரட்டரி  சங்கீதா ஓடி  வந்து கேட்க ,

 என்ன மேடம்? இதுபோல ஒரு சுத்தம், ஒழுக்கம் இல்லாத வாட்ச்மேனை டியூட்டியில் ஏன் வைச்சிருக்கிங்க? அவன் பார்வையை பாருங்க”

“ஏய்ய்ய் ரம்யா ஆள் கிடைக்கலடி. இவன் ஒன் வீக்கா வரான் ”

“ஆள் கிடைக்கலன்னா தெருவுல் போற ஆள கூட்டி வெச்சிப்பீங்களா? அவன் மூஞ்சும் முகரையும்? முதல்ல துரத்துங்க. வயசாளியா பாத்து போடுங்க” என சத்தம் போட்டாள்.

யோவ் நீ போப்பா., வேலையில இருந்து நின்னுக்கப்பா” அந்த வாட்ச்மேன் அன்றே விரட்டப்பட்டான் . வன்மம் கக்கிய பார்வை உதிர்த்து விட்டு போனான் அந்த வாட்ச்மேன்.

 

சுத்தம், பணிவு, ஒழுக்கம் இது தன்னிடம் பேணிய போதே, மற்றவரிடமும் இருக்க வேண்டும் என்பது அவளது அடிப்படை எதிர்பார்ப்பாகி விட்டது.  

இது ரம்யாவிற்கு இன்று, நேற்று அல்ல. சிறுவயதிலிருந்தே பழக்கம்.

அவளுக்கு சுற்றிலும் இருக்கும் ஆட்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.

இதெல்லாம் அவளுக்கு சிறுவயது பாடம்.

‘மார்ல துணிய போடு,’

‘முழங்கால் தெரியற மாதிரி பாவாடை தூக்காதே,.

‘எவ்வளவு தூரமானாலும் ஓடாதே., நடந்து போ.,

‘தொப்புளுக்கு மேல பாவாடை கட்டு.,

‘ஆம்பளைங்க  இருந்தா தெரு பெருக்காதே.,’ அப்பப்பா.. எத்தனை கவனம்?.

இந்த ஆண்கள்  மத்தியில் வாழ்வதென்பது எத்த்னை கடினம்?

அவள் பருவம் வந்த போது, வீட்டு சமையல்காரன் ஒருவர், ‘ இது என்ன பாப்பா? முடியை முன்னாடி போட்டு வெச்சிருக்கே?” என சொல்லியபடி அவள் முடியை ரொம்ப உரிமையாக தூக்கி பின்னால் போட., அவள் அவனது கையை பிடித்து , அடுப்பில் இருந்த சூடான தவாவில் அவனது கையை வைத்து அழுத்த..,

“சொய்ன்ங்க்க்க்க்”

“அய்யோ...” அவன் கத்தினாலும், அவள் வீட்டார் வந்து கேட்ட போது அவன் ஏதும் சொல்லவில்லை.. அன்றிலிருந்து “ரம்யா பாப்பா’ , ‘ரம்யா அம்மா ‘   ஆகிவிட்டாள். அவ ஒரு நெருப்பு மாதிரிப்பா., என்னும் அந்த பயம்., அவளை தனித்து நிற்கும் ஒரு அடையாளமாக காட்டியது என்றாலும் பின்னாளில் அதிக ஆபத்தையும் தரத் தான் செய்தது. அவளது திருமணத்துக்கு முன்பு நடந்தது அது.

அய்யோ எவ்வளவுசித்திரவதை அது? ஒரு ஆளை அவசரப்பட்டு சொறி நாய் ‘ என திட்டியதால் கிட்டத்தட்ட அவள் வாழ்க்கையே முடங்கி விட்டதே?

 இது போல ஒர் வாழ்க்கை, ஒரு குடும்பம், சென்னையில் பிளாட் என வருவதற்கு முன்பு ஒரு திடுக் கண்டம் அது.

 

இப்போது நினைத்தாலும் ரம்யாவைன்  நெஞ்சம் அடித்துக் கொள்ளும். ஏதாவது ஒரு நடு இரவில் முழிப்பு வந்தாலும், இருட்டு, புகை படிந்த அந்த பாழ் மண்டபம், பாத்ரூமி சுவற்றில் சாய்ந்து, ஈர தரையில் உட்கார்ந்து பகல் முழுக்க அழுத., அந்த கொடுமையான தருணம். அடுத்து என்ன செய்வது என யோசிக்க முடியாத பதட்டமான தருணம்.

யப்பா யாருக்கும் வரவே கூடாது. அவளுக்கு வந்தது.


 

கள்ளம் கபடம் காமம்- 1 - 6