மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, October 25, 2023

அனுமதிக்கப்பட்ட துரோகங்கள் : பாகம் 34 – எபிசோடு எண் : 32

 

இனிமேலும் இந்த காட்சியை பார்ப்பதா ? வீணாவிழிகள் துளிர்த்த கண்ணீர் துளிகளை துடைத்துக்கொண்டாள். கனத்த மனதோடு ஓசைப்படாமல் பின்வாங்கினாள். நாம் சுமதிக்கு துரோகம் செய்துவிட்டோமா?  சுமதி நமக்கு துரோகம் செய்தாளா? தெரியவில்லை.  நாம் சிவாவை  கதலிப்பது சுமதிக்கு தெரியுமா? அவன் சொல்லி இருப்பனா? மாட்டான். ஆனால், நாங்கள் இருவரும் தோழிகள் என்பது அவனுக்கு தெரியாதா? கண்டிப்பாக தெரியும்.

 

பெண்கள் எங்கள் இருவருக்குள் எப்படியாவது போகட்டும். ஆனால் சிவாவுக்கு மிக நன்றாக தெரியும். நாங்கள் இருவரும் தோழிகள் என்பது.  எல்லாம் தெரிந்தும் அவன் இப்படி செய்து விட்டானே? பெண்ணின் உடம்பு என்றால் இப்படி அலைகிறார்களே இந்த ஆண்கள்? அவளுக்கு வெறுத்து போயிற்று..

இன்று மாலை 6 மணிக்கு நம்மை இங்கே வரச் சொல்லிவிட்டு. அதே டைமில்  இவளை வரவழைத்து இந்த தகர கொட்டகையில் ஆட்டம் போடுகிறான் என்றால் , என்ன அர்த்தம்?

வெயிட் வெயிட் நாம் வருகிறோம் என்று சொல்லவில்லை , யெஸ். ‘ நான் இன்று வரமாட்டேன்., கோயிலுக்குப் போறேன்என்றுதான் சொன்னேன் .

அதன்பின் தன பிளான் மாறி நான் இங்கே வரும்படி ஆச்சு;.

சோ., நான் வராததை பயன்படுத்தி சிவா, இவளை வர வைத்திருக்கிறான்.  அப்படியானால் அவளுக்கு இப்போது தான் எல்லாமே தெள்ளத் தெளிவாக புரிய ஆரம்பித்தது. இந்த ஒரு வாரம் அவன் சுமதி கூடத்தான் சுற்றுகிறான். அவனுக்கும் அவளுக்கும் எப்போதோ காம நெருப்பு பற்றிக் கொண்டு விட்டது. அவளை இந்த நாள் இந்த நேரம் டியூசன் சென்டரில் வரவழைத்து அவளை போடுவதுதான் அவனுக்கு திட்டம்.  அதனால்தான் அவன் இந்த ஒன் வீக்காக நம்மீது விருப்பம் இல்லாமல் இருந்தான் போல. இந்த  வாரம் வேணாம்.. கோயிலுக்கு போ.. அடுத்த வாரம் வாஎன்று அழைத்தான்.

அவளுக்கு யோசிக்க  யோசிக்க தலை வலித்தது.

நாம்தான் முதலில் வலுக்கட்டாயமாகஇன்று வருகிறோம் என காலையில் சொன்னோம்’  நான் சொன்னதற்காக அவன் திட்டத்தை மாற்றி இருப்பான் போல.,,  மறுபடியும் போன் செய்து நான் வரமுடியாது என சொன்னதும் , அவனுக்கு எளிதாக விட்டது.  நம்மை கோபத்துடன் திட்டுவது போல திட்டிவிட்டு,  நம்மை கழட்டி விட்டான்.

நான் நேரில் வரமாட்டேன் என்ற தைரியத்தில், சுமதியை வரவழைத்து… ச்சீ… என்ன மாதிரி ஆள் இவன்? பணக்காரி என்றதும் பல் இளித்து விட்டானே.,

இந்த காட்சியை நான் பார்க்காத போனால் ஒருவேளை நான்  குடும்பத்துடன் கோயிலுக்கு போயிருந்தால்,  மறுபடியும் என்னிடம் நைச்சியமாக பேசி அடுத்த வாரம் வர வழைத்திருப்பான். அனுபவித்து சக்கையாய் பிழிந்து ருசித்திருப்பான். நல்லவன் போல் நடித்து இரண்டு அழகான தோழிகளை மாறிமாறி அனுபவிப்பது திட்டம் போல .

எல்லாம் சரி சுமதி எப்படி அவனுக்கு கிடைத்தா? அதுதான் புரியவில்லை . அவளுக்கு மண்டையை பிய்த்துக்கொண்டு போனது . கோபத்துடன் அவள் படிக்கட்டில் வேகமாக இறங்க அடக்கி வைத்திருந்த அழுகை எல்லாம் பயங்கரமாக வெளிப்பட்டது . னோ.. அழக்கூடாது.. அவள் தொண்டை உலர்ந்து, உலர்ந்து மெல்லிய விசும்பல் அவள் மனதுக்குள்ளேயே ஒலித்தது.

 ஐயோ அப்பாவை ஏமாற்றி, அம்மாவை ஏமாற்றி வீட்டில் எல்லோரையும் ஏமாற்றிநான் படிக்கிறேன் என்று சொல்லி இவனுடன் படுக்க வந்தால்?  இவன் எல்லோரையும் ஏமாற்றி விட்டானே ? என்ன உலகம் இது?  என்ன மனிதன் இவன் ? ‘ என அவள் மனம் உடைந்து போனாள்.

வேகமாக அந்த வீட்டைவிட்டு வெளிப்பட்டாள்.

கடுமையான சோகத்திலும் தாங்க முடியாத அதிர்ச்சியில் இருந்த வீணா தான் வந்த ஸ்கூட்டியை கூட எடுக்க மறந்து விட்டாள். அந்த தெருவில் ஆள் அரவமற்ற அந்த தெருவில் ஓட்டமும், நடையுமாக பாதி தூரம் ஓடிவந்தாள். அதன் பின்புதான் அவள் தனது வண்டியை சிவாவின் வீட்டின் வாசலில் விட்டு வந்தது தெரிய வந்தது. மறுபடியும் வண்டியை எடுக்க, ஓட.,  அந்த காட்சியை அந்த  லுங்கி ஆசாமி முனியன் பார்த்துக்கொண்டே இருந்தான்.

 ஒரு அழகான பெண் அத்தனை அசத்தலாக டிரஸ் செய்து கொண்டு இந்த தெருவில் மலை வேலையில் சிவாவின் வீட்டில் நேரம் கெட்ட நேரத்தில் போனதே அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

அதெப்படி இவ்ளோ சில்பான்ஸ் அந்த சிவா வீட்டு மொட்டை மாடியில்? அவன் போதையில் இருந்ததால் வீணா அவனுக்கு கூட்டமாக தெரிந்தாள்.

டேய்ய்ய் சிவா..என் கத்த முயன்றான்..  போதையில் தலை சுற்ற வாயிலிருந்து காற்று மட்டுமே வர, அவன் அப்படியே சுருண்டு வீடு வாசலில் படுத்தவன் தான். இப்போது மீண்டும் தலை எக்கி பார்க்க., அழகான ஒரு இளம்பெண் கொலைய பார்த்தது போல் சிவா வீட்டிலிருந்து ஓடி வருகீறாளே?. திரும்ப அவன் வீட்டுக்கு ஓடுகிறாளே? சம்திங்க் ராங்க்

இவளை போட்டானா? இல்லை. போட கூப்பிட்டனா? ‘ அவனால் அது மட்டும் தன யோசிக்க முடிந்தது.

‘மேலே மாடியில், என்னமோ நடந்திருக்கக் கூடும்என அவன் நினைத்தான்.

 அவன் சிவா படித்த அதே பள்ளியில் படித்த சீனியர் மாணவன்.  அதனாலேயே அவனுக்கு சிவாவின் மீது ஒரு தாங்கமுடியாத பொறாமை இருந்தது. அவனால் பள்ளிப் படிப்பைக் கூட முடிக்கவில்லை. ஆனால் சிவா மாவட்டத்திலேயே முதலாவதாக வந்தான்.  காலேஜில் சேர்ந்து நன்றாக படிக்கிறான்.  இப்போது டீயூஷ்ன கூட வைத்திருக்கிறான். நன்றாக சம்பாதிக்கிறான். நிறைய அழகான இளம் பெண்கள் பணக்கார பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு அந்த தகர கொட்டகைக்கு.,  மொட்டைமாடியில் போவதும் வருவதுமாக இருக்கிறார்கள்.அவர்கள் வருகையால் அந்த தெருவே அழகாய் விட்டது.  அதனால் அதை கொஞ்சம் கூட பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை .

நேற்று கூட பைக்கில் ஹாரன் அடித்த ஒரு பையனோடு சண்டை போட்டான்.

இதே சிவா. இந்த தெருவில் நம்மிடம் கிரிக்கெட் ஆடி அடி வாங்கி அழுதுகொண்டே ஓடியவன். இப்போது அவன் பவிஷூ என்ன? திமிர் என்ன?

 

போன் வாரம் கூட இந்த முனியன் ஆட்டோவில் ப்ரன்ட்ஸ்களோடு உட்கார்ந்து சினிமா பாட்டு பாடி ஆட்டோவின் சைடு பாடியில் தாளம் போட்டு கொண்டு இருந்தார்கள்.

தண்ணி அடிக்க காசு இல்லாது போனால் சினிமா பாட்டுதான் அவர்களுக்கு சுகம்.  நமக்கு நல்ல பாட வருதே என நினைப்பது ஒரு தனி போதை. நாட்டில் பல பேர் இப்படித்தான்,  செய்வதற்கு ஒரு வேலை யுமில்லாமல்., சோம்பி திரிந்து விட்டு., நமக்கு கை தூக்கி விட யாருமில்லை என புலம்பி திரிகிறார்கள். அன்று செலவுக்கு காசு கொடுக்க அம்மா வீட்டில் இல்லை. கூடுதல் சோகம்.

“பொன்மானை தேடி பூவோடு வந்தேன்..

நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்ல”

முனியன் உருக்கமாக பாடினான்..

அவர்களை பார்த்து அருகே பைக்கில் வந்த சிவா

“டே..ய்ய் முனியா? இன்னுமாடா அந்த பொன்மானை தேடிகிட்டு இருக்கே?”  என கவுண்டர் கொடுக்க.,

கூட்டம் கொல்’லென  சிரிக்க.

“ஹேய்ய் மச்சி.. இவனை ஏதாச்சும் செய்யனும்டா” ஒரு தோஸ்த் மட்டும் சொன்னான்.

அவனும் “ஏதேனும் ஒரு தருணத்தில் சிவா நம்மிடம் மாட்டுவான்என எதிர்பார்த்து கொண்டிருந்தான். இதோ இந்தப் பெண் பதட்டமாக ஓடி வருகிறாள். நிற்கிறாள். பிறகு வண்டி எடுக்கிறாள். நிச்சயம் அவளுக்கு ஏதோ பிரச்சனை . ஆமாம்.

கடவுளே அந்த பிரச்சனை அந்தப் பையனால் ஏற்பட்டதாக இருக்க வேண்டும். சிவா தான் அதற்கு காரணமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவனை பிடிச்சு துவைக்க முடியும் . நல்ல சான்ஸ்.. அவன் பரபரப்பாக இருந்தான். எழுந்து லுங்கியை கட்டினான்.

“பாப்பா..இந்தாம்மா.. நில்லு பாப்பா  என்ன ஆச்சு?”

“ஒ ஒன்னுமில்ல”

“ஏண்மா அழுவறே?”

“ஒ..ஒ..ஒன்னுமில்ல..”

“என்னமா ஆச்சு?  ஏன் மா என்னமா பிரச்சினை ? சொல்லுமா ?”

இ..இஇல்லைண்னே”  என அவள் ஏதோ சொல்லி சமாளிக்கபரவால்ல சொல்லும்மா என்னமா பிராப்ளம்? எதுக்கு அழுவுற?” என சொல்ல வீணாவின் அந்த ஒரு வீணாடி விபரீதமாக வேகமாய் திட்டம் போட்டது.