சுஜாதா வெளியே போய் குழந்தை வர்ஷாவை
அழைத்து உள்ளே வந்தாள். அவன்
முன் நிற்க வைத்தாள். குழந்தை முகத்தை
காட்டாமல் திரும்பி கொண்டது.
" உங்க
குழந்தை உங்கள மாதிரியே க்யூட்டா இருக்கு மேடம்" என்றான்
"தேங்க்ஸ்"
என்றாள்
அவன் பக்கத்தில் இருந்த பெரிய சிறிய
ஸ்டூலில் குழந்தையை உட்கார சொல்ல குழந்தை உட்காராமல் சுஜாதாவை கட்டி
பிடித்துக்கொண்டது.
"செல்லம்
பயப்படாதம்மா உட்காரு அங்கிள் ஒன்னும் பண்ண மாட்டேன் "என்ற குழந்தை உட்காரவே
இல்லை.
சுஜாதா ' வர்ஷா ஒழுங்கா சொல்றத கேளு., நீ
கேக்கல உங்க மம்மி கிட்ட சொல்லிடுவேன்"
என சுஜாதா சொல்ல திடுக்கென்று நிமிர்ருந்தான் ஈஸ்வர்
"என்ன
மம்மி கிட்ட சொல்வீங்களா? அப்ப இது யாரோட பேபி ?" என
அவன் திகைப்பாய் கேட்க
"என்
பெண்ணோட குழந்தை இது" என சுஜாதா
சொல்ல ,.
அடங் கொக்கமக்கா இப்படி அசிங்கபட்டுட்டேமே.
இவளுக்கு கல்யாண வயசுல ஒரு பொண்ணு இருக்கிறதே. பெரிய ஷாக்ன்னா, அவ
பொண்ணுக்கே நாலு வயதில் குழந்தை இருக்கே..
என்ன கூத்து?
இது எப்படி நாம ஏமாந்தோம்?
ஒருவேளை, இந்த
பொம்பள மேல இருக்கிற மோகத்துல எதையுமே சரியாக கணிக்காம விட்டோமோ என தன்னைத்தானே
நொந்தான்.
ஆனாலும் கட்டுக்கலையாமல், இளமை
செழிப்புடன் பூரித்து நிற்கிறாள் அவள் அங்கங்களை உற்றுப்பார்த்தான்.
பார்க்கும் போது மெல்ல நாணுகிறாள் .
நத்தை ஓட்டுக்குள் சுருங்குவது போல சுருங்குகிறாள் . அவளது கண்ணில் தெரியும்
பயமும் மிரட்சியும் அவளை பேரழகியாக நமக்கு காட்டுகின்றன.
சுஜாதா உண்மையை சொன்ன பிறகும் அவனால்
சுஜாதாவின் மீது வைத்த கண்ணை எடுக்க முடியவில்லை.
நன்றாக இம்ப்ரஸ்
செய்துவிட்டாள்.
இவள் ஹஸ்பண்ட் நீண்டநாளாக வெளிநாட்டில்
இருக்கிறார்
என்றால்,
இவள் தன்னந்தனி கட்டை தான் அதுவும் செழிப்பான கட்டைதான். முயன்று
பார்ப்போம்., கிடைக்கிறதா என்று என்று மனதிற்குள்
நினைத்தான் .
வர்ஷாவை உட்கார வைத்து கண்களை,நெற்றியை
தடவிப் பார்த்தான். குழந்தையின் நெற்றியில் அவனுக்கு தெரிந்த சில கோடுகள்
ஈஸ்வருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.
குழந்தைக்கு சமீபத்தில் மொட்டை அடித்து
இருந்தார்கள் அவள் உச்சந்தலையில் கை வைத்து கொஞ்ச நேரம் கண்மூடி நான் பிறகு
பின்னந்தலையில் கை வைத்தான்.
அங்கே அதிக வெப்பம் இருந்தது.
பதறிப்போய் கையை எடுத்தான்.
மறுபடியும் குழந்தையின் பின்னந்தலையில் கைவைத்து ஆராய சட்டென அவனுக்கு அந்த
குழந்தையின் முழு பின்னணியும் புரிந்துவிட்டது .
பலவீனமான கரு அது, உண்டான
நேரமும் சரி இல்லை, ஆனால்
சுஜாதா மற்றும் இந்த குழந்தையின் அம்மா செய்த பூஜை, புனஸ்காரம் தெய்வ பலன் விளைவாக
கருவறையில் கரு உருவாகி விட்டது . அதற்கு மேலாய் குழந்தை கருவாகி உருவான பிறகு
இன்னொரு அசம்பாவிதம் நடந்து இருக்கிறது. அதான் இந்த குழந்தையின் மந்த புத்திக்கு
காரணம்.
பெல் அடித்து பணிப்பெண்ணை அழைத்து 'இந்த
குழந்தையை வெளிய வச்சுக்குங்க' என்றான்
.
அவள் குழந்தையை கொண்டு போன பின்பு
சுஜாதாவை பார்த்து சிரித்தான்.