மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, April 3, 2021

திரும்புடி பூவை வைக்கனும் 1374

 மலரும் அகல்யாவும் சென்று கார் திருச்சி மாநாட்டு பந்தலை தாண்டிச் செல்ல பாபு  எதிரில் வந்து  நிற்க அகல்யா பெருமூச்சு விட்டாள்.

அவன் காரில் ஏறிக்கொண்டான்.
"
ஒன்னும் பிரச்சனை இல்லையே "என்றான் 
"
ஹோட்டல்ல அவன் கிரவுட் பயங்கரமா இருக்கு. மீடியா வந்துட்டாங்க .லோக்கல் டிவி ல கூட சற்குனம் வீடியோவை டக்குனு டெலிகாஸ்ட் பண்ணிட்டாங்க"
"
ம்ம் நானும் கேள்விபட்டேன்"
"
ஜட்டியோட பிரமாதமா அவன் வீடியோ வந்து இருக்கு  லே" என்றாள் மலர்
 
அவன் அகல்யாவை பார்த்தாள் .
"
எனக்கு ஒன்றும் இல்லை " என அகல்யா  அழகிய கண்ணால் பதில் சொன்னாள்.
"
நீயும் எங்க கூட வரியா பாபு?" என்றால் மலர் 
'
பின்ன நீங்க எப்படி தனியா நைட்ல அவ்ளோ தூரம் போக முடியும்?" என்றான்  பாபு..
"
நோ..நீ எங்க கூட வந்தா சற்குணத்துக்கு உன் மேல டவுட் வரும். பாபு நீ சர்குணம் கூட தான் இருக்கணும் " என்றாள் 
"
நீங்க சொல்றது கரெக்ட் தான் ஆனா திருச்சி ஃபுல்லா உங்க காரை அவனுங்க  வலைவீசி தேடி கிட்டு இருக்காங்க.  சற்குணம் ஆளுங்க உங்க கார் ஹைவேஸ் தொட்ட உடனேயே எப்படியும் உங்கள புடிச்சிட்டு வாங்க"
"
அப்போ என்ன பண்ணுறது சர்குணம்?"  மலர் நிஜமாகவே பயந்து போயிருந்தாள்.
'
அதுக்குத்தான் நான் இந்த வீரதீர செயல் எல்லாம் வேணாம்னு சொன்னேன் .நீங்க கேட்கவே இல்லை அகல்யா வெச்சி இங்கே கேம் ஆடி இப்ப  மாட்டீகிட்டோம்.  இப்போ அகல்யாவுக்கும் பிராப்ளம்" என்றான் "ஆனா நம்ம நல்லதுதானே பண்ணி இருக்கோம் ."
"
நல்லது தான் பண்ணி இருக்கோம் .ஆனா சர்குணம் ரொம்ப கோவமா இருப்பான். என் கணக்கு சரியா இருந்தா திருச்சி டோல்கேட்ல சற்குணத்தோடு ஆளுங்க உங்க காருக்காக வெயிட்டிங். நாம இப்ப சென்னைக்கு போக முடியாது"  என்றான் 
"
அய்யோ "என அகல்யா விழிக்க.,
 
அகல்யாவின் அம்மா தலையில் கை வைத்துக் கொண்டாள்.
 
அகல்யாவின் குடும்பத்தை இந்த நிலையில் பார்க்க அவனுக்கு வருத்தமாக இருந்தது.
"
இன்னிக்கு நைட்டு நாம  சேஃபா இருந்துட்டோம்ன்னா, விடிஞ்ச்ச  பிறகு நமக்குத் தேவையான பாதுகாப்பு கிடைச்சுடும்., ஆனால் எப்படியும் சற்குனம் ஆளுங்க நம்மள சுத்தி வளச்சு விடுவாங்க."
".............."
"
ஆனா ஆறுதலான விஷயம் நான் உங்க கூட இருக்கிறேன் என்று அவனுக்கு தெரியாது அது தெரிஞ்சா அவ்வளவுதான் . நா இன்னும் சென்னையில் தான் இருக்கேண்னு நினைச்சிட்டு இருப்பான் "
"
ஆமா.. அதுக்குத்தான் நான் உன்ன மாநாட்டு பந்தலுக்கு போய் வேலையை கவனின்னு சொன்னேண்.."
"
ஆனா., மூனு லேடிஸ் தனியா விட்டு நான் எப்படி போறது?" என்றான் 
"
இதெல்லாம் முன்னமே யோசிச்சு இருக்கணும்" என முணுமுணுத்தான்.
 
அவனுக்கு மலர்விழியின் மீது நிறைய மதிப்பு இருந்தது.  அவன் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பையனாக இருக்கும்போது அவனது அவனது அப்பா தவறிப் போனார்.  அவனது அம்மா மலர்விழி  வீட்டில் வீட்டு வேலை செய்ய போக., என்  பையனுக்கு எங்காவது வேலை கிடைக்குமா?' என மலரை கேட்க,  அவனை நேரில் வர சொன்னாள் பையன் பேச்சு கண்ணியமாகவும் நேர்மையாக இருக்க மலர்விழிக்கு  மிகவும் பிடித்துவிட்டது. 
 
கொஞ்ச நாள் தனக்கு கார் டிரைவராக,  கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரக்கூடிய வேலையாளாக வைத்திருந்தாள் அதன்பின் சர்குணம் கேசை கையில் எடுத்தவுடன்,  அவனிடம் போய் வேலைக்குச் சேர்ந்து நம்பிக்கைக்கு உரியவனாக மாறி அவனுக்கு எதிராக செய்ய வேண்டிய வேலையை அவனுக்கு எடுத்துச் சொன்னாள் 

மலர்விழி மேடம் எது சொன்னாலும் அதில் சமூகநலம் இருக்கும் என்பதை நம்பிய பாபு மறுபேச்சு பேசாமல் சற்குணத்துக்கு வேலை செய்தான்.  மலர்விழி என்ன சொன்னாலும் அதை தட்டாமல் செய்யக்கூடியவன்தான் பாபு.
இன்று இவ்வளவு பணமும் மரியாதையும் இந்த சமூகத்தில் பாபுவுக்கு நமக்கு கிடைக்கிறது என்றால் அதற்கு மலர்விழி மேடம் தான் காரணம் என்பது அவனுக்கு தெரியும்.
 
மலர்விழியும் அவனது வளர்ச்சியை பார்த்து பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டாள்.  தனது சொந்த சகோதரனாக நினைத்து அவனுக்கு வேண்டிய உதவிகளை செய்து வந்தாள்.,  ஆனால் இந்த பையன் அகல்யா மீது இவ்வளவு காதல் கொண்டிருக்கிறானே அவளுக்கு ஏதாவது ஒன்று என்றால் இவன் பதறி துடிக்கிறான் நானும் தானே?  பெண் நான் எப்படி இந்த இரவை முன்பின் தெரியாத திருச்சி மாநகரில் கழிக்க முடியும் எனது நிலையையும் யோசிக்கவே இல்லையே இவன்? என்று லேசாக வருத்தப்பட்டாள் 
அவளது முக வாட்டத்தை புரிந்துகொண்ட பாபு கூட" எனக்கு எல்லாருடைய சேஃப்ப்பும் தான் முக்கியம்" என பொதுவாக சொன்னான்.
"
சரி இப்ப என்ன பண்றது சொல்லு" 
"
இப்ப இருக்கும் நிலைமை இல்ல நாம சென்னைக்கு போக முடியாது.  அதே போல திருச்சியில எந்த ஹோட்டலிலும் நாம தங்க முடியாது.  இப்பவே மணி ஒன்பதாவுது .என்ன பண்றது ஒன்னும் புரியல. சரியா லாக் ஆகிட்டோம்.."  என சொல்ல 
அகல்யா" நான் வேணா ஒரு ஐடியா சொல்லட்டுமா?"  என்றாள் 
"
என்ன?"
"
நாம எப்படியும் சென்னைக்கு போகும் தான் அவங்க நினைப்பாங்க.  அங்க தான் நமக்கு ஆள் போட்டிருப்பாங்க நாம ஏன் சென்னைக்கு போவாம ஆப்போசிட் டைரக்சன் போக கூடாது?"  என கேட்டாள்.
"
அப்படின்னா?"
"
சென்னைக்கு நார்த் சைட் போகாம ., சௌத் சைட் போலாமே?"
"
தஞ்ச்சாவூர், சிவங்ககையா"
"
இல்ல மதுரை போவோம். " என்ராள் மலர்விழி..
"
கரெக்ட்..இங்க இருந்து  ஒரு மிதி மிதிச்சோம்னா., ஒன்னரை மணி நேரம் தான்..வாங்க போலாம்..எனக்கு ஷார்ட் கட் தெரியும்"
அது நல்ல ஐடியாவாக இருந்தது . 
"
இந்த சற்குணம் ஒரு முட்டாள் அவன் இதை யோசிக்க மாட்டான் . நாம் மதுரைக்கு போவோம்.  அங்கு ஏதேனும் ஹோட்டல் ரூம் எடுத்து இரண்டு மூன்று நாள் இருந்துவிட்டு பிரச்சனை எல்லாம் அடங்கிய பிறகு பாதுகாப்பாக சென்னைக்கு போகலாம் "என்றான் 
ஆம் இதுதான் நல்ல ஐடியா" என்றார்கள் அவன் காரில் ஏறி உட்கார்ந்து கொண்டான்.
"
நான் டிரைவ் பண்றேன்  மேடம்.  நீங்க இந்த பக்கம் வாங்க " என்றான்
அவன் காரை  விருட்டென்று  சந்து பொந்துகளில் செலுத்தி ஹைவேசை தொட்டான்.. கார் தெற்கு  திருச்சி டூ மதுரை  நெடுஞ்சாலையில் பயணித்தது..


   To Read  Full Story   

திரும்புடி பூவை வைக்கனும் 24 ஆம் பாகம்

-----------------------------------------------------------------------------

Amazon.in
கிண்டில் ஸ்டோரில்...வாங்க.., பக்கங்களை படிக்க.

திரும்புடி பூவை வைக்கனும் 26
திரும்புடி பூவை வைக்கனும் 25
திரும்புடி பூவை வைக்கனும் 24
திரும்புடி பூவை வைக்கனும் 23
திரும்புடி பூவை வைக்கனும் 22
திரும்புடி பூவை வைக்கனும் 21

திரும்புடி பூவை வைக்கனும் 20

திரும்புடி பூவை வைக்கனும் 19

திரும்புடி பூவை வைக்கனும் 18

திரும்புடி பூவை வைக்கனும் 17

திரும்புடி பூவை வைக்கனும் 16