அவன் தன்னையும், தனது முகத்தையும், தன் பேரையும் இன்னும் மறக்காமல்
இருக்கிறான் என்பது ஆர்த்திக்கு சந்தோஷமாக இருந்தது. அவன் மெல்ல எழ முயற்சிக்க., “ இருங்க இருங்க .,அப்படியே படுங்க., கொஞ்சம் கண்ணை மூடிக்கங்க,.
நான் டிரஸ் இல்லாம இருக்கேன்” என்று சொன்னபடி போர்வையை
விலக்கி, அப்படியே தன் மீது போர்த்தி
கொண்டு, நகர்ந்து., அவள் அவன் மீதீருருந்து எழுந்து
கொண்டாள்.
கட்டிலில் இருந்து கீழே குதித்தாள்.
இதுவரை அவன் உடல் முழுக்க தாயின் கர்பப்பை
சுவற்றில் பரவி இருந்த சிசு போல
அவன் இருந்தான் என்பதை அவன் உணர்ந்து கொண்டான்.
ஆர்த்தி உடை அணியும் சத்தம் வளையல் சத்தம் கேட்டது. அவனுக்கு கண் திறக்க வேண்டும் என்று தோன்றவில்லை. வேகவேகமாய்
ஆர்த்தி
முழுவதும் உடை அணிந்து கொண்டு .,
“ம்ம் கண் இப்ப திறக்கலாம் “ என
சொல்லி திரும்பி சிரிக்க
கொஞ்ச நேரத்தில் கதவு தட்டப்பட்டது.
“யெஸ் வாங்க டாக்டர் “என்றாள். அவள் முழு உடையுடன்
இருப்பதையும் சுரேஷ் கண் விழித்திருப்பதையும் பார்த்த டாக்டர் ராமனுஜம்
சந்தோஷப்பட்டார். ஓடிவந்து ஆர்த்தியை கட்டி அணைத்துக் கொண்டார்.
“ ஐ லவ் யூ மை சைல்ட்”
“ட்ட
டாக்டர்”
“யூ டன் இட். யூ டன்
இன் மை சைல்ட்” என்றார். சுரேஷ்ஷையும் அணைத்துக் கொண்டார். அந்த நர்ஸ் கூட சம்பந்தமே
இல்லாமல் அழுதாள்.
மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்த
பேர்களுக்கு விஷயம் சொல்லப்பட்டது.
விசிலடித்து ஆரவாரத்தார்கள். ஒருவரையொருவர்
கட்டிப்பிடித்து தங்கள் சந்தோஷத்தை தெரிவித்துக் கொண்டார்கள்
“ ஒன்டர்,.. ஜஸ்ட்
ஆசம்.. எங்களது மருத்துவ வாழ்க்கையில் எத்தனையோ
விசித்திரமான கேஸ்களை பார்த்திருக்கிறோம். கிட்டத்தட்ட எல்லோரும் கைவிட்ட பலரையும் நான்
காப்பாற்றி இருக்கிறேன். ஆனால், இன்று உன்னை காப்பாற்றி இங்கே கொண்டு வந்தது உங்களது
முன்னோர்கள் செய்த புண்ணியம், “
சுரேஷ் அசையாமல் டாக்டர்
சொல்வதை கேட்டான்.
“அத்தோடு இந்த பெண்
இருக்கிறாளே.. இவள்
தான்… கொஞ்சம்
கூட கூசாமல் யோசிக்காமல்., நாங்க சொன்ன உடனே உன்னை
கட்டி கொண்டு படுத்து கொண்டு படுத்தாள். யங்க்
லேடி.. வாவ் கிரேட்.. திஸ் லேடீ
ஆல்வேஸ் கிரேட்… மை
காட் .. பாருங்க புல்லரிக்குது. இப்ப
கூட என்னால நம்ப முடியல….” என
வின்சென்ட் ஆர்ப்பரிக்க.,
ராமனுஜம்..” யூ
யுங் லேடி.. யூ ஆர் சார்மிங்க் டிரடிஷ்னல் லேடி.. இந்த மனசு யாருக்கும் வராது. இவளை கட்டிக்கிற ஆண் எவனாக
இருந்தாலும், அவன் கொடுத்து
வைத்தவன்” என சொல்ல
“யெஸ் டாக்டர்,. நான் ரொம்ப கொடுத்து வைச்சவன்” என்றான் சுரேஷ்.
ஆர்த்தி அதிர்ச்சியாகி அவனை
திரும்பி பார்க்க.,
‘யெஸ் … ஆர்த்தி
என்னை கல்யாணம் கட்டிப்பியா ஆர்த்தி…?.”
“அ..அத்தான்…”
“ சொ… சொல்லு
ஆர்த்தி…..”
“ ம்
முடியாது போ…” அவளுகு அழுகை வெடித்தது
“ஆர்த்தி
வி யூ மேரி.. மீ ..?”
“ச்சீ
போடா….”
“ஏன்
ஆர்த்தி..? ”
அவள் பதில் ஏதும் சொல்லவில்லை. அவன்
மார்பில் விழுந்து அழ தொடங்கினாள்.