" சுரேஷ் நீயா நீ எப்படி இங்க வந்தே? நீ போகலியா?"
மலர்விழி சடாரென டாப்சை இறக்கி உடலை மறைத்தாள் .
"நான் போகலை..இந்தாங்க உங்க சுடி பாட்டம், கார்ல இருந்து எடுத்து வந்தேண். இதையும் போட்டுக்குங்க "
என்றான்.
போனில் எதிர்முனையில் இருந்த சாரதி திடுக்கிட்டுப் போனான்.
" ஏய் என்னடி மேல் வாய்ஸ் கேக்குது, யாருடி உன் கூட இருக்கிறது? நாயே உன் புத்திய காட்ற இல்லை . செத்தேடி
இன்னிக்கு நீ?" என அவன் கத்த போனை வாங்கிய சுரேஷ்
"ப்ரோ ப்ரோ கொஞ்சம்
வெயிட் பண்ணுங்க மேடம் டிரஸ் பண்ணிட்டு இருக்காங்க அதுக்கப்புறம் நாங்க ரெண்டு
பேரும் மேல வரோம்.. யாரு சாகப் போரது
பாப்போம்.. ஓடி போயிடாதீங்க.."
"டேய் யாருடா நீ யாருடா நீ... யார்டா ஓடறது..வாடா...இங்க
இருந்து முண்டமா போறியா ? இல்லியான்னு.
பாக்காலாம்"
"அப்படியா வீரரே.. ரொம்ப நல்லது நேரில் பேசுவோம் "
என்று சொல்லி முடிப்பதற்குள்ளாகவே சுரேஷின் தலை ரெண்டாம் தளத்தில் தெரிந்தது.
சுரேஶ் ஐந்தாறு பேரை எதிர்பார்த்திருந்தான். ஆனால்., ரெண்டரை பேர்தான். ஆம் .அந்த வயசாளி கரை வேட்டி போதையில்
இருந்தான்.
" ஏய் யாருடா இந்த மேடத்தை போன்ல இவ்ளோ நேரம் மிரட்டி டிரஸ்
அவிழ்க்க சொன்னது?” சுரேஷ் குரல் கொடுக்க அவனது குரல் அந்த தளம் முழுக்க மிரட்ட.,
அங்கே நின்றிருந்த மூன்று ஆண்களை சுரேஷ் பார்த்தான். அவன்
பின்னால் ஒளிந்து கொண்டு மலர் விழியும் பார்த்தாள்.
ஜீவா, சாரதி, சற்குணம்... அடப்பாவி
நீங்களா? என கேட்க
ஜீவா தலையில் கை வைத்துக்கொண்டு "போச்சு..எல்லாம்
சொதப்பிடுச்சி ' என்றான்
"ராஸ்கல் இவ்வளவு நாளும் என்னை டார்ச்சர் பண்ணியது... நீங்க
மூணு பேர் தானா ? என கேட்க.,
" ஆமாண்டி இப்ப
என்னடி?' டேய் தம்பி மரியாதை யா இந்த இடத்தை விட்டு ஓடிப் போயிடு .இல்ல போன இந்த இடத்தை விட்டு பொணமாதான் போவே"
என்றான் சாரதி..
"உங்கள பார்த்தா கண்டிப்பா அப்படித்தான் செய்ற ஆள் மாதிரி
தெரியுது . நீங்க யாரு மிஸ்டர்? " என சுரேஷ் கேட்க,
மலர்விழி உடனே
"இவன் பேரு சாரதி. பெரிய கவிதை மன்னன். பொறுக்கி.. என்ன ரொம்ப
நாளாக டிஸ்டர்ப் பண்ணிட்டு இருந்தான்.
அந்த குடிகாரன் சர்குணம் எம்எல்ஏ.
பயங்கரமான பொறுக்கி . இதோ நிற்கிறானே இவன் பேரு ஜீவா என்னுடைய எக்ஸ்-
ஹஸ்பெண்ட் இந்த மூணு பேரும் சேர்ந்துதான்
டார்ச்சர் பண்ணி என்னை வாழவிடாம செய்யறாங்க ..என் பாத் வீடியோ எடுத்து வச்சிருக்கேன்னு சொல்லி அதை
நெட்டுல விட்டுருவேண்னு சொல்லி....என்னை டெய்லியும் அழ வெச்சு...துடிக்க
வெச்சி..என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கி..."
மலர்விழி ஓ வென வெடித்து அழ ஆரம்பிக்க.
"டேய்ய் வீடியோ
எவன்டா எடுத்து வைத்திருக்கிறது? வீடியோ யார்கிட்டடா இருக்கு? " சுரேஶ் உறும " " "டேய்ய் தம்பி இதெல்லாம் உனக்கு தேவை இல்லாத விஷயம்
மரியாதையா போறியா இல்ல உயிரை விடப் போறியா?" என சாரதி கேட்க
"இனிமேல் இவன் திரும்ப போகக்கூடாது . இங்கேய புதைச்சிடனும். "என சொன்னான் சற்குனம்.
" ஹாஹா ஏண்டா
யாருடைய இடத்தில் யாருடா புதைக்கிறது? இது யார் பிராப்பர்டி
தெரியுமாடா? கிராண்டனி பில்டர்ஸ் .
என்னுடைய ப்ராஜெக்ட் என் கம்பெனி இடத்துல
நீங்க என்னடா என்னை புதைக்கிறது? " என்று கத்த மூன்று
பேரும் ஸ்தம்பித்துப் போய் நிற்க., அந்த ஒரு வினாடி திகைப்பை பயன்படுத்திக் கொண்டு ஓங்கி போய்
ஜீவாவௌ பளாரென அறைந்தான்
சாரதி கத்தி ஒன்றை கையில் எடுக்க.., சுரேஸ் அருகிருந்த இரும்பு பைப்பை கையில் எடுத்தான்.
சாரதி முன்னால் பாய, சுரேஷ் லாவகமாய் விலகி அவன் கையை பலம் கொண்ட மட்டும்
அடிக்க.. கை பலமாய் அடிபட்டு கத்தி எங்கோ போய் விழ.. கத்தி எடுக்க ஜீவா ஓட அவன்
காலில் பைப்பால் அடித்தான்...
தரையில் விழுந்த இரண்டு
பேரையும் ஒரு சில வினாடிகளில் ஆக்கிரமித்து மாறி மாறி முதுகிலும் காலிலும் அடித்தான்
சுரேஷ்..
‘ஸாஸாஸ்ழீழெழீழ்"
‘அய்யோயீயீ..."
அவர்களின் ஓலங்கள் அந்த அடுக்கு மாடி கட்டடம் முழுக்க
எதிரொலிக்க.,
கையெடுத்து கும்பிடும் அந்த மூன்றுபேரை பார்த்ததும்
மலருக்கு பயம் போய் கோபம் வந்தது .
"எல்லாரையும் சாகடி சுரேஷ்.. ஒருத்தனையும் விடாதே." மலர்விழி ஆங்காரத்துடன் அழுதாள்.
சற்குணம் ஓடி போய் கீழே கிடந்த கத்தி எடுத்து வர..அவனை பிடித்து அப்படியே சுவற்றில் வீசினான்
சுரேஷ் .
“அய்யோ '
அடுத்த வினாடி சற்குணத்தை அலேக்காக தூக்கிக்கொண்டு போய்
பால்கனி பக்கம் தொங்கவிட்டான் .
'அய்யோ சார் என்னை
காப்பாத்துடா சாரதி " என கத்திக் கதற
நிலைமை கை மீறி போவதை உணர்ந்து உடனே ஜீவா மண்டியிட்டு "சார்
சார் அவரை ஒன்னும் பண்ணிடாதீங்க சார்..
" என மண்டியிட்டு அழுதான்
சாரதி மிச்சம் மீதி சக்தி திரட்டி சுரேஷை தாக்க நினைத்தான். ஆனால் சுரேஷ் பால்கனி பக்கம் தருணத்தை அலேக்காக
தூக்கி தொங்கவிட்டு இருக்கிறான். ஏற்கனவே சற்குணம் அரை போதையில் இருக்கிறான்
இப்போது இவனுடன் சண்டையிட முடியாது. இவன் பலவானாக இருக்கிறான்.. அசரமால்
அடிக்கிறான். நம்ம பக்கம் வீக்காக இருக்கிறது.
அது மட்டும் இல்ல, இவன் கிராண்டனி பில்டர்ஸ் என்கிறான். அப்படி என்றால் ஹரிஷியின் தம்பியா? ஹரிஷியோட தம்பியை
கொன்று விட்டால் அது எவ்வளவு பெரிய பிரச்சனயாகிவிடும். இந்த இடத்தை விட்டு ஓடி விடுவது நல்லது . ஆனால்
அப்படி ஓடிவிட்டால் , ஒரு காலத்திலும் நம்மை
மலர்விழி மதிக்க மாட்டான் என அவன்
யோசித்து திகைத்துப் போய் நிற்க.,
"டேய் எல்லாரும் முட்டி போடுங்கடா.. டேய்ய்ய்ய் "
அவர்கள் தரையில் தள்ளாடி நிற்க, அவர்களை சுரேஷ் எட்டி
உதைத்தான்..
"த்தா முட்டி போடுரா
மயிறு...."
ரெண்டு பேரும் முட்டி போட்டு தலை குனிய. . பால்கனியிலிருந்து சற்குணத்தை தூக்கி தரையில் போட்டு
உருட்டினான்...
'அய்யோ....ம்ம்மமம"
"த்தா...என்னாடா? லேடீஸை ட்ராப் பண்ணி தூக்குறீங்களா?" மறுபடி புட்பால் போல காலால் உதைத்தான்.
அவனது ஒரே உதையில் மூவருக்குமே அவர்களின் மனஉறுதி பொடி பொடியாகி விட்டது.
------