ஹோசூர்
சந்திரசேகர் மருத்துவமனை.,
சுரேஷ்க்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்திருந்தது.
ஐ சீ யூ அறையின்
வெளியே, மலரின் குடும்பம் கவலையாக
நின்று கொண்டிருந்தது. மனோ, கீர்த்தனாவுக்கும்
தகவல் சொல்லப்பட அவர்கள் அலறியடித்து ஓசூருக்கு விரைந்து வந்து
கொண்டிருந்தார்கள். கீர்த்தனா தன் வரலட்சுமி கயிறை
விடாது பிடித்து கொண்டிருந்தாள். ரஞ்சிதா
அழுதபடியே இருந்தாள். மனோ உறைந்து போயிருந்தான்.
ஐ சி யூ அறையில் சுரேஷ் மெல்ல தனது
நினைவை இழந்து கொண்டிருந்தான். அவனுக்கு இந்த பூமியுடன் இருந்த தொடர்புகள்
மெல்ல அறுபட்டுப் போய் கொண்டிருந்தன. அவனால் இப்போது உடல் எது? உயிர் எது? என
தனித்து பிரித்து பார்க்க முடிந்தது
அவன் மெல்ல சிரித்தான்.
இந்த பூமி ஒரு காடு., இல்லை, இல்லை. இந்த மனம் தான் ஒரு காடு. இந்த காட்டில் மனம் இருக்கிறது. நரியும் இருக்கிறது. எல்லாம் அறிந்த ஒன்று உள்ளே இருக்கிறது., அதை தெரிந்து கொள்ள நினைக்கும் போது அதெல்லாம்
வேண்டாம் என காமம். கோபம், ஆசை, இச்சை போன்ற விஷயங்கள் நரிகள் போல பின்னால்
இருக்கிறது.
பவானி சங்கர் கோயிலில், நான் என்னை அறிந்து
கொள்ள என் மனதை திடப்படுத்திக் கொள்ள முயற்சி செய்ய நினைத்தேன். அதற்குள் என்னை குற்றுயிராய் படுக்கையில் கிடத்தி
விட்டார்கள். என்னை சரியாக்கி
கொள்ள முயலும் போது தான் இப்படி ஒரு விபத்து.
காலம் காலமாய் சரியே செய்ய முடியாத
தப்புகளை செய்தேன். எப்படியாயினும் சரி
ஆகலாம் என நான் முயல ஆரம்பிக்க ., ஆரம்பித்த உடனே
இப்படி ஒரு பெரிய அடி.
‘எனக்கு ஏன்? ஏன் ? இது நடந்தது. வேனில்
இருந்து இழுத்து போட்டு ஓங்கி அறைய வருபவனை நோக்கி, கைகளை
தடுக்க கூட முடியவில்லை. யாரையோ அடிப்பது போல வேடிக்கை
பார்த்து கொண்டிருந்தேன்.
அவனது எண்ணங்கள் தாறுமாறாக மோத ஆரம்பித்தது. நம்மை ஏன் தாக்கினார்கள்? அந்த ஆளுக்கு எனக்கு ஞாபகம் இருக்கிறது. ‘மங்களூர் திருமண விழாவில், பவித்ராவை தொட வந்தார்கள் என்பதற்காக அவனை
முதல் மாடியில் இருந்து தூக்கி எறிந்து விட்டோம். தவறான் செயல். ஒரு அறை விட்டு
அனுப்பி இருக்கலாம், அல்லது எச்சரித்து
இருக்கலாம்.
அதை விடுத்து அவனை தூக்கி முதல் மாடியில் இருந்து தூக்கி போட்டது என்பது பெரும்
தவறு. நம்முடைய பலத்தைக் காட்டுவதற்காக செய்த செயல். பலத்தை யாருக்கு காட்டுவதற்காக ? பவித்ராவிற்கு காட்டுவதற்காக., அப்படி
பலத்தை காட்டி அவளை உள்ளே அழைத்து கொண்டு படுக்கையிலும் அதே
பலத்தை காட்டினோம். இப்போது அசைய கூட தெம்பில்லாமல்
படுத்திருக்கிறோம்.
செய்த பாவங்கள் என்னை கட்டி
போட்டு விட்டது. வீட்டின் குல விளக்கு பவித்ராவை
பழிவாங்க., நண்பன் ஒருவனை அனுப்பி நெருக்கமாக பழகி படங்கள் எடுக்க அனுப்பிய.,
மாபாதாக செயலை என்னை தவிர வேறு யாரும் செய்ய முடியாது.
செய்தேன். ஆனால்
வெறுமனே அவளை ஒரு ‘டிராப்” பில்
சிக்க வைக்க அஜய்யை அனுப்பினால், அவன் அவளிடம் அத்துமீறி நடந்து கொண்டான்.
அது பெரிய தவறு என்பது எனக்கு
உறைக்கவில்லை. ஹரீஷின் மீதன கோபத்தில் அவனை
பழிவாங்க இப்படி ஒரு ஈன செயலை செய்த நான் உண்மையிலேயே கிரான்டனி வாரிசா? இல்லை. நான்
இங்கே எதுவும் இல்லை.
என அழகு என் அம்மா கொடுத்தது. இந்த
செல்வம், இந்த பேர் என் அப்பா கொடுத்தது. நான்
இங்கே எதுவும் இல்லை. போவது தான் சரி.
அவன் உள்ளுக்குள் முனகினான்.
அவனது காதுகளில் ஓயாத ரீங்காரமும் கேட்டது.’ இதுதான் என் மூச்சா இதுதான் என் சுவாசமா? தன் சுவாசத்தை அதன்
ஒலியை தேடிப்
பிடிக்க முயற்சி செய்தான்.
ஆனால் சுவாசம்
வெறுமையாகவே இருந்தது. அவன்
நாடி அடங்க ஆரம்பித்தது.