மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, May 18, 2023

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 33 Episode No. 2063 ( திபூவை இறுதி பாகம்)

 

ஹரீஷ் தலையில் அடித்துக்கொண்டு அ.

நல்லா அழுவுங்கஇப்ப

ஐயோ உங்க தம்பிக்கு எதனாச்சும் ஒன்னுனா நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்றாள்.. பவி,.  அவன் புரியாமல் விழிக்க.,

எங்க அப்பாவுக்கு ழி வந்தா. எனக்கும் வந்த மாதிரி.. ஐயோ அந்த சுரேஷ்ஷை எப்படியாச்சும் காப்பாத்து கடவுளே .. காப்பாத்தி.., கொடுங்க என்றாள்

உங்கப்பனுக்கு அறிவே கிடையதுடி..”

எல்லாம் உங்களாலதான். பணம் பணம் பணம் னு  இப்படி அலையறீங்க. நான்தான் அன்னிக்கே சொன்னேனே சுரேஷ் தேவையான பங்கை கொடுத்துடுங்க . அவருக்கு என்ன சேரனுமோ அதை கொடுத்துடுங்கன்னு., கம்பெனியில அவருக்கு என்ன போஸ்டிங் இருக்கோ கொடுங்க,. அப்படின்னு சொன்னேன் நீங்க கேட்கவே இல்லை.. கண்ணன் சார் சொல்றாரு., பெரியப்பா சொல்றாரு., பெரியம்மா சொல்றாங்க., நான் சொல்றேன்..  ஆனா யார் சொல்றதையும் நீங்க கேக்க மாட்டீங்க., உங்க இஷ்டம் போல் நடந்துகிட்டீங்க., என்ன தான் இருந்தாலும், அவர் உங்க தம்பி தானே. “

“.  பவி…..அய்யோ எல்லாத்தையும் குடுத்துடறேன்….”

நீங்க இப்பதான் உங்க வாயால சொல்றீங்க., அப்போ ஷேர் குடுக்கறதுதுல உங்களுக்கு என்னங்க பிரச்சனை?  ஒத்துக்குறேன் கம்பெனி நீங்க தான் கஷ்டப்பட்டு நிலைக்கு கொண்டு வந்தீங்க,. ஆனால் அந்த விதை யார் போட்டது? உங்க அப்பா போட்டுத்தானே இந்த தோட்டமே கிடைச்சது? எதுவா இருந்தாலும்  நீங்க ரெண்டு பேர் தானே. உங்க ரென்டு பேருக்கும் உரிமை இருக்குல்லே. அதை விட்டு அவரை போய் சென்னைக்கு அனுப்பி.. ஆப்டர் ஆல் உங்க ரீஜனல் மேனஜர் வீட்டுல போய் தங்க வெச்சு., இந்த ஒன்னரை வருஷம் கஷ்டப்பட வெச்சு கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்க வெச்சி.. ச்சே யாராச்சும் இப்படி செய்வாங்களா?…”

“..இல்ல பவி.. அவன் சிவில், ஆர்கிடெக்சர்,, எம்பிஏ  ன்னு எந்த குவாலிபிகேஷன் படிப்பும் இல்லாத்தால தான்..”

ச்சீ கூச்சம் இல்லாம பொய் பேசாதீங்க….அவனை அப்படி தேவையான படிப்பை எல்லாம் படிக்க விடாம., உதவாத படிப்பை படிக்க வெச்சு., அவனை கெடுத்து குட்டி சுவராக்கினது நீங்க தானே

“……………………..”

மனோ பொன்டாட்டிகிட்ட., நீங்க வம்பு வச்சிகிட்ட மாதிரி., அவனும் வம்பு வெச்சி அவமானப்பட்டு., அப்புறம் அது பெரியப்பா வரைக்கும் போயி.,அவர் கோபத்துக்கு ஆளாகி., அதனால அவன் கிரான்டனி குரூப்லருந்து வெளிய போகனும்.. இதானே உங்க பிளான்.”

“……………..”

இப்ப உங்க பெரியப்பா கோவத்துக்கு ஆளானது  யார்? அவனா? நீங்களா? பேராசை பெரு நஷ்டம்..ஹரீஷ்.,  கெடுவான் கேடு நினைப்பான்

என பவித்ரா கோபத்துடன் திட்ட.,

பவித்ரா இப்போது ஆளே மாறி விட்டிருப்பதாக .,ஹரீஷ் நினைத்தான்,. முன்பெல்லாம்  ஆபீஸ் நிர்வாகத்தில் மட்டுமல்ல ., கிரான்டனி வீட்டில் சேர்க்க கூட  சுரேஷ்க்கு., ஏகப்பட்ட கட்டுப் பாடுகளை போட்டவள் இந்த பவித்ரா தான்.

உங்க தம்பி என்னிடம் தப்பாக நடக்கிறான் என எங்கள் அண்ணன் தம்பி பகைக்கு தூபம் போட்டவள் இவள்.  இப்போது சுரேஷுக்கு பயங்கரமாக சப்போர்ட் செய்கிறாள்.

 ஆனால் யார் எப்படி நடந்து கொண்டாலும், என்ன சொன்னாலும் நியாயம் என்று ஒன்று இருக்கிறது, அதை நாம் தவறி விட்டதால் தான் இப்போது எல்லோரும் நம்மை கைகாட்டி பேசுகிறார்கள்.

 

நேற்று கூட ஒரு டைரக்டர் மீட்டிங்கில் என்ன சார் உங்க தம்பிய ஜே எம் டி சீட்டில் உட்கார வைக்காம சின்ன பசங்க மாதிரி எஸ் ஏ பி சர்ட்டிஃபிக்கெட் வாங்கிட்டு வா டீ வாங்கிட்டு வான்னு சொல்லி அவரை கொடுமை பண்றீங்க ?” என கூட்டத்தில் நேருக்கு நேராக கேட்டுவிட்டார்கள்.

நாளையே .எல்.எஃப் நிறுவனத்தின் பெண் நம் வீட்டு மருமகளாக நுழைந்துவிட்டால்,  சுரேஷ் நம்மை விட மிகப்பெரிய வலிமையானவன் ஆக மாறி விடுவான்.  நிச்சயம் அவன் கை மேலோங்கினால், நம்மை பழிவாங்குவான். அதற்காக மட்டும் இல்லை ஒரு தம்பியாகிய அவனுக்கு என்ன வேண்டுமோ அதை கொடுத்து விட வேண்டும் .

சுரேஷ் நம் கை பிடித்து மேலே வரட்டும் அல்லது நாம் நமது கையை தட்டி விட்டு மேலே கொண்டு போகட்டும்., நடப்பது நடக்கட்டும் பவித்ரா சொல்வது போல இந்த நிறுவனத்தின் விதை எனது தந்தை போட்டது. அது சுரேஷுக்கும் சொந்தமானது தான் நாம் கூடப்பிறந்த தம்பியையே மிகக் கேவலமாக நினைத்து ஒதுக்க நினைத்ததால் தான், எங்கிருந்தோ வந்த ஒரு மாமா அவனை ஆளை வைத்து கொள்ளும் அளவிற்கு போயிருக்கிறார்.

நாம் உண்மையில் சுரேஷுக்கு ஆரம்பத்திலிருந்தே தப்பான வழியை காட்டி கொண்டு விட்டோம். வீணாவின் மூலமாக பெண் சுகத்தை அவனுக்கு அறிமுகப் படுத்தினோம். ஒரு உதவாத படிப்பை உதவாத கல்லூரியில் படிக்க வைத்து அவனது எதிர்காலத்தை பாழாக்க நினைத்தோம்.

இப்போது எனது தம்பி பயங்கரமாக அடிபட்டு மருத்து வமனையில் கிடக்கிறான் கடவுளே அவனை மட்டும் காப்பாற்றி விடு எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடு என வேண்டிக் கொண்டே இருந்தான். கார் ஓசூரை நெருங்கியது.

No comments:

Post a Comment