அங்கே
லிங்கப்பா வீட்டில் ..
‘ தன்னுடைய
ஆட்கள் மாட்டி கொண்டார்கள்’ என
கேள்விப் பட்டவுடன், லிங்கப்பா உஷாரனார். தனது டிரைவரின்
பேரில் வாங்கிய அவர்களுடன் பேசிய போன்., சிம்
எல்லாவற்றையும் கழட்டி போட்டி கொளுத்தினார். தன்
பேர் வந்துவிடக் கூடாது என சொல்லி பெரிய அதிகாரிகளுக்கு கோடி கணக்கில் பணத்தை
டிரான்ஸ்பர் செய்தார்.
காரில் சென்று கொண்டிருந்த ஹரீஷ்க்கு
போன் செய்தார்.
“ஹேய்ய்
மாமாடி…” ஹரீஷ் காரில் கத்த
“டிரைவ்
பண்னிகிட்டே போன் பேசாதீங்க”
“சரி ஸ்பீக்கர்
போடு..”
அவள் போட்டாள்.
“ஹலோ… மாமா”
“‘என்ன
மாப்பிள்ளை… ஆர் யூ ஹாப்பி?”
“ஹாப்பியா?” அவன்
அதிர்ந்து போக.,
“என்ன
மாப்பிளை உங்களுக்கு சர்பிரைஸ் கிப்ட்.”
“என்ன
மாமா?”
“என்னப்பா
பெங்களூரே அல்லோகலப்படுது. உனக்கு தெரியாதா?”
”…………………”
“உங்க தம்பியை ஆளை
வெச்சு முடிக்க
தான் டிரை பண்ணினேன். இன்னும்
இழுத்துகிட்டு இருக்கு,. ஹாஸ்பிடல்ல நம்ம ஆள் ஒருத்த
இருக்கான் ”
“அப்பா…..” பவித்ரா
அதிர்ச்சி ஆக.,
“ மாமா
என்ன சொல்றீங்க?” ஹரீஷும் கத்த
“என்னப்பா இவ்ளோ
ஷாக் ஆகறீங்க? இது உன்
நல்லதுக்கு தான்பா. “
“ நல்லதா?”
“உனக்கு போட்டியாக இருந்த ஒரே
ஒரு தடுப்பை ரிமூவ் பண்ணிட்டேன் ஹரீஷ்.. “
“என்ன மாமா சொல்றீங்க? இது உங்க வேலையா?”
“அய்யோ,ம்
அப்பா நீங்களா இப்படி பண்ணீங்க?”
“பவி நீ பயப்படாதே ., நம்ம
பேர் எங்கயும் வெளிய வராது. “
“அப்பா..”
“அய்யோ
பவி… சுரேஷ்., ஆல்ரெடி
மங்களூர்ல அவனுங்க கூட சண்டை போட்டிருக்கானுங்க.. அந்த
விரோதத்துக்காக அவனுங்க தான் இதை செஞ்சானுங்க… நான்
செலக்ட் பண்னி இவனுங்க கிட்டே இந்த வேலையை கொடுத்தேன். நான் காசு கொடுக்கலன்னாலும் இதை
பண்ணி இருப்பானுங்க”
“அப்பா
நீங்களா இப்படி பேசறீங்க?”
“பவி
இது பிசினஸ்மா.. போனை மாப்பிள்ளை கிட்ட கொடு.. என்ன
ஹரீஷ் நீ சொல்லு.. ஹாப்பி தானே?”
“யோவ்….”
“………………”
“ அவன் என் தம்பிடா.” அவன்
கோபத்தில் சீற.,
“ மாப்பிள்ளை?” அவர் அதிர்ச்சியாக.,
“என்
தம்பியை கொல்றேன்னு எங்கிட்டயே சொல்றியே நீ?”
“என்ன
ஹரீஷ் ? இப்படி உல்டாவாக பேசுற? உன்னால தான் அவனுக்கு ஏகப்பட்ட பிரச்சனை? கம்பெனில ஷேர் போகும் . உனக்கு ரொம்ப லாஸ்னு சொன்னியே?”
“ஆமா யார் இல்லைன்னு
சொன்னா . அந்த நாயை எனக்கு
பார்த்தாலே பிடிக்காது. அவன் பேரை
சொல்ல எனக்கு
துளிகூட விருப்பம் இல்லை. எனக்கு
அப்ப்ப்போ டிரபுள் கொடுத்திருக்கான். பர்சனலாவே எனக்கு ரொம்ப
பிராப்ளம். டில்லி, சென்னை’ன்னு
எல்லா ஊர்லயும் அவன் எனக்கு கொடுத்த அவமானம் நிறைய…. எல்லாம் கரெக்டுதான். ஆனா
அதுக்காக அவனை கொல்ல முடியுமா? அவன் என் தம்பிடா
ராஸ்கல்.. “
“……………..”
“மாமாம்,. அவன் என் தம்பி
இல்லைனா கூட ஒரு உயிரை என் சுய நலத்துக்காக ஒருத்தனை கொல்ல முடியுமா? அறிவு கெட்டவனே….”
“ஹரீஷ்
என்ன வாய் நீளுது., நான் உன் மாமா”
“அதுக்காதான்
போன்ல் பேசிகிட்டு இருக்கேன்.
இல்லன்னா என் எஸ்கார்டசை உன் வீட்டுக்கு அனுப்பி.. இருடா
முதல்ல பெரியப்பா கிட்ட சொல்றேன்.. அவர் என்னமோ, இதை
நான் பண்ண மாதிரி சட்டையை புடிச்சி
உலுக்குறார்’
“அய்யோ
ஹரீஷ்.. விட்டுடு.. அவர்
கிட்ட சொல்லாதே”
“அப்பா
ஏம்பா இப்படி பண்ணீங்க? ச்சீ..”
“……………….”
“எப்படிப்பா இப்படி நீங்க யோசிச்சீங்க? நீங்க யாரை கேட்டு இதெல்லாம் பண்றீங்க?’
“………….”
“ஹேய்ய் என் தம்பியை கொல்றேனு நீ என்கிட்டே சொல்றே? உனக்கு எவ்வளவு திமிரு?”
“ஹய்யோ ., ஹரீஷ் உனக்கு நல்லது செய்ய போயி
தான்பா.. உனக்கு வர வேண்டிய ஷேர் குறைய
கூடாதுன்னு தான்பா” அவர் அழுதார்.
“என் தம்பியை
ஏதாச்சும் பண்ணுன்னு உங்க கிட்ட சொன்னேனா? அவன் எங்க கிராண்ட்டனி வாரிசு. அவனுக்கு 500 கோடி இல்ல 50 கோடி இல்ல ,. 5 கோடி இல்ல 5 லட்சம் கூட கொடுத்தாச்சும் நான் எங்காவது அனுப்பிடுவேன் . ஆனா அவனை சாகடிக்க நான் யார்?” கூடப்பிறந்த தம்பிய போய் இப்படி பண்ணுவாங்களா? அந்தளவுக்கு நான் கல்நெஞ்சக்காரனா? உங்களுக்கு அறிவே கிடையாதா? இனிமேல் என் மூஞ்சில முழிக்காதிங்க? என் தம்பிக்கு ஏதாவது
ஆச்சுன்னா., உங்க
மக கூட நான் வாழரது பத்தி யோசிக்கனும்
மாமா. “
“மாப்பிள்ளை”
“அப்பா., அவரு மங்களூர்ல ஹோட்டல்ல பிரச்சனை பண்ணாதால தான்
அவரை ஓசூர்ல வெச்சி போட்டாங்கன்னு சொல்றீங்களே? அது
என்ன பிரச்சனைன்னு தெரியுமா உங்களுக்கு”
“பவி..”
“அன்னிக்கு
நைட்டு இவனுங்க குடிச்சிட்டு எங்கிட்ட வம்பு பண்ணாங்க..என்
மேல கை வைக்க வந்தாங்க., இவரு குடிச்சிட்டு பார்ல
விழுந்து கிடந்தார். “
“……………’
“அப்ப
மேரேஜுக்கு வந்த சுரேஷ் தான் கரெக்ட்டான டைமுல வந்து அவங்களை அடி, அடின்னு
அடிச்சி போட்டு . போலீசில புடிச்சி கொடுத்து
என்னை காப்பாத்தி என் ரூம்ல பத்திரமா சேத்தார்.”
“அய்யோ
என்னம்மா சொல்றே?” அவர் நிஜமாகவே அதிர்ந்தார்.
“இப்ப
அவங்களுக்கு காசை கொடுத்து அந்த சுரேஷையே கொல்ல ஆளை அனுப்பீருக்கீங்களே”
“அய்யோ .இ இ
தெல்லாம் எனக்கு தெரியாதே?”
‘அவரு
இல்லனா ., அந்த மூனு பேரும் என்னை. ஹோட்டல்
ரூமுல வெச்சி… அன்னிக்கு நைட்டு..”
“அய்யோ
பவித்ரா” அவர் அலற.,
“ ராஸ்கல்” என
ஹரீஷ் பல்லை கடிக்க., போன் கட் ஆக.,
அந்த காருக்குள்ளே நிலைமை தர்ம சங்கடமானது.
ஹரீஷ்
மீண்டும் அழுதான்.
No comments:
Post a Comment