ஹலோ வணக்கம்!
நமது அடுத்த நாவலுக்கான டைட்டில் கேட்டிருந்தோம்.
திருத்தணியைச் சேர்ந்த சணுமுக சுந்தரம் என்பவர் ஒரு சூப்பர் டைட்டிலைச் சொல்லி இருந்தார். ஜெனரிக்காக இருந்தாலும் அது நல்ல டைட்டிலாக எனக்கு படவே, அதை நான் உறுதி செய்திருந்தேன்..
ஆனால் , நேற்று பெல்ஹாம், ஹரி கிருஷ்ணன் அதை மிஞ்சும் வகையில் ஒரு டைட்டிலை சொல்லி அசத்திவிட்டார். இது தான் நான் கொண்ட திரைக்கதைக்கு பொருத்தமான டைட்டிலாக இருக்கும் என நினைக்கிறேன்.
அந்த' டைட்டில் என்ன?, அட்டைபடம் எப்படி? ' எல்லாம் ஓரிரு நாளில்..,
முதல் வெளியீடே இரண்டு பாகங்களை ஒரே சமயத்தில் வெளியிட திட்டமிட்டேன்., ஆனால், வழக்கம் போல நேரம் கை கொடுக்கவில்லை. அடிக்கடி பயணங்களால் கணினியை திறக்க கூட முடியவில்லை.
ஆனாலும், இந்த வார இறுதியில் முதல் பாகம் ரெடி செய்து விடுவேன். அது நிச்சயம். சோ, இவ்வார வெள்ளி அல்லது சனிக்கிழமையில் முதல் பாகத்தை எதிர்பார்க்கலாம்.
மற்றபடி, பெல்ஹாம், ஹரி கிருஷ்ணனுக்கு புதிய நாவலுக்கான அனைத்து பாகங்களும் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.
திருத்தணி, சண்முக சுந்தரம் அவர்களுக்கு முதல் பாகம் மட்டும் அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்படும்.
இதற்கு 500க்கும் மேற்பட்ட டைட்டில்களை ஆர்வமுடன் அனுப்பிய வாசக நண்பர்களுக்கு உளாமார்ந்த நன்றிகள்!
- ஆத்தர் என்.வி