"சரி கோவமா வரானா? இல்ல
நார்மலா இருக்கானா?" செல்வராஜா தனக்கு தகவல் சொன்னாடியம் கேட்டான்.
"ஆடி வெளிறி போய் வரான்"
"சரி பொண்ணு கிட்ட என்ன பேசினான்?.
பொண்ணு என்ன பேசிச்சி?"
"அது தெரில . எல்லாரையும்
அனுப்பிட்டாங்க.. கால்ல விழறேன்னு அவரு சொன்னது
மட்டும் காதுல விழுந்தது..."
" சரி.. விடு.."
செல்வராஜா .,தணிகாவை பார்த்தான்.
மாதேஷ் எங்க இருக்கான் இப்ப ?”
"கோவா ஷூட்டிங்க்
முடிச்சிட்டு மும்பை போறான்"
அவர்கள் பேச.,
அதற்குள் ரங்காவின் கார் செல்வராஜாவின் வீட்டின் காம்பவுண்டில் வாசலிலேயே நிறுத்தப்பட்டது.
" ஹிந்தி நஹி மாலும் "
என்றான் காவலாளி.
" யோவ்வ் தமிழ்.
தமிழ்யா .."
" மாப் கரோ ஜி... நஹி "
" டேய்ய் நாங்க யார் தெரியுமா? ஹிந்தி படவா?'
" சாப்.. மாப் கரோ
ஜி..."
"டேய்ய் உன் முதலாளிய கூப்பிடுறா.." நாகு கத்தினான்.
" ஹாப் போன் மே ஹெயின்
சாப்"
"என்னடா சொல்றான்.?"
ரங்கராஜு எரிச்சலாக கேட்க.,
" அப்படி எல்லாம் அவன் கூப்பிட மாட்டனாம். நம்மளை போன் பண்ண சொல்றான். " என கேட்டபோது ரங்கராஜுவுக்கு
ஆத்திரம் பல மடங்காகியது என்றாலும் பல்லை கடித்துக்கொண்டு .
"நாகு கொஞ்சம் பொறுமையா இரு. போன் பண்ணாம வந்தது நம்ம தப்பு. நீ செல்வராஜாவுக்கு போன் அடி" என்றான் ரங்கராஜு.
அவர்களி தூரத்தின் நின்று கண்ணாடி
கதவின் பின்புறமிருந்து செல்வராஜா சிரித்தான்.
"உன்னால் நம்ப முடிதா.,
தணிகா. சினிமா உலகத்தோட பரம்பிரம்பம்.
நம்ம வீட்டு வாசல் கேட்டுல..ஹஹஹஹா"
"போதும்.. மாயாண்டி.., போய்
உள்ள கூப்பிடு.. மகாலட்சுமி வெளிய போயிட போகுது"
கேட்டில் நாகு ஆத்திரமாக கார்
ஹார்ன் அடிக்க., சத்தம் கேட்டு வருபவன்
போல செல்வராஜா வீட்டை விட்டு கூப்பிய
கையோடு ஓடி வந்தான்
" சார் சார் வாங்க வாங்க., வாங்க வாங்க சார் சார் " எனக் கும்பிட்டான்.
காலில் விழப் போனவனை ரங்கராஜு தடுத்து நிறுத்தினர் .
"என்ன செல்வராஜா ? விவகாரம் தெரியுமில்ல "
"அய்யோ தெரியுங்க..சாமி வீட்டுலய கை வெச்சுட்டானே.. அவன் உருப்படுவனா? இனிமே
வீட்டுக்கே வரகூடாதுன்னு சொல்லிட்டோமுங்க.."
அவன் நடிக்கிறான் என்பது
நாகுவுக்கு தெரிந்தது.
“ பிரஸ்ஸுக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சின்னா. இனி அவனுக்கு
சினிபீல்டுல எதிர்காலமே இல்லங்க...இனிமே நான் என்ன பண்றதுன்னு தெரியல, பாவி பையன், இப்படி பண்ணிட்டா. நான் என்னன்னமோ திட்டம் வைச்சிருந்தேன் .."
"....................."
"எங்க வீட்ல காலையிலிருந்து அழுதபடியே இருக்கிறாங்க. வீட்டை விட்டு வெளியே கூட வரவில்லை . அய்யோ வெளிய நிக்க வெச்சி
பேசறேனே..உள்ள வாங்க சார் “ என்றபடியே வீட்டுக்குள் நுழைய..
தணிகா எதிர்ப்பட
"இவன் தணிகா..என் அசிஸ்டென்ட்
.. பிரண்ட் எல்லாம்"
"த்.தெரியும்.. எப்படி
இருக்கே தணிகா"
" இருக்கேங்க." உடல்
வளைத்தான்.
" செல்வராஜா நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல, மிஸ்டேக் பொண்ணு பக்கமும், உன் பையன் பக்கமும் நடந்திருக்கு.
அடுத்து என்ன செய்யணும்னு நமக்கு
தான் தெரியும். நாம தான் பேசி முடிக்கனும் . "
"ஐயோ எவ்ளோ பெரிய ஆளு நீங்க வீடு தேடி வந்து இருக்கீங்க வந்தவுடனே ஒரு காபி ஜூஸ் போட்டு கொடுக்க கூட வீட்டு பொம்பளைங்க தயாராயில்லை . மூலையில உக்காந்து அழுதுட்டு இருக்காங்க.”
‘..............”
“ரங்கா சார்.. நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் . பரவால்ல அஞ்சு வயசு பெருசுன்ன என்னா? கல்யாணம் பண்ணி தொலைச்சிடலாமுன்னு சொன்னா ஒத்துக்கவே மாட்றாளுங்க"
"................." நேரடியான தாக்கு.
அவன் மனைவி தலைவிரி கோலமாக
வந்தாள்.
" நாங்க யார்.. இவங்க யார்.. உங்க வீட்டு
விசேஷத்துல நலுங்கு வெக்க கூட அருகதை
இல்லாதவங்க.. நாங்க...உங்க வீட்டுல போயி
இந்த சண்டாளன் இப்படி செஞ்ச்சுட்டணே? விளங்குவானா?" இரண்டாவது தாக்கு.
நாகு ,.செல்வராஜாவை முறைக்க,.
அய்யோ பாதகத்தீ., அழுது புலம்பியே நம்பளை போட்டு கொடுத்துருவா
போல..
செல்வராஜா சுதாரித்து,.
" ரங்கா சார் . நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க சார் . நான் எப்படியாச்சும் பேசி சம்மதிக்க வைக்கிறேன். ஊர் உலகத்துல வயது மூத்த பொம்பளைங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டு இல்லையா ? வீட்டுல பேசி அழைச்சிட்டு வாங்க சார் " என்றான்
மாதேஷ் தங்கை வித்யா வெளியே வந்தாள் . அவள் அழுததன் அடையாளமாக கண்கள் வீங்கி இருந்தன.
" என் பிரெண்ட்ஸ் எல்லாம் ரொம்ப கேலி பண்ணுவாங்க . சுஷ்மிதா ரொம்ப நல்ல பொண்ணு நினைச்சு தான் எங்க வீட்டில விட்டோம் ."
"ஏம்மா என்ன பேசுறே நீ? உன் தம்பி யோக்கியமா?" நாகு எகிற.
" என் தம்பி கூட ரொம்ப ப்ரீயா பேசுவா,. ஆனா கடைசில இப்படி நடக்கும்னு நான் கனவு காணலை' என சொல்ல
செல்வராஜாவின் கிராமத்து மனைவியும் " ஊர்ல உலகத்துல காதல் பண்ணாம எல்லாம் இல்லைங்க. ஆனா இப்படி கண்மூடித்தனமாக காதல் பண்ற ஆளுங்கள இங்கே தான் பார்க்கிறேன் . அவன் தான் சின்ன பையன் . இவ பெரியவ
தானே." அவள் பங்கிற்கு ஊளையிட.,
‘அய்யோ இன்னும் நான் உயிரோடு இருக்கேனே.. ரங்கராஜு நெளிந்தார்.
" சங்கடபடாதீங்க.. உங்க பொண்ண நாங்க குறை சொல்ல. ஆனா என் பையனுக்கு தான் கண்ணு தெரியல, எந்த இடத்தில் கை வைக்கணும் வெக்க கூடாதுன்னு எங்க வீட்டு நாய்க்கு தெரியலைங்க " என்ன சொல்ல நாகுவும் ரங்கராஜுவும் கடுமையாக அதிர்ந்து போனார்கள் .
"நீங்களே சொல்லுங்க . இப்ப எப்படி என் கடைசி பிள்ளைக்கு கல்யாணம் பண்ண முடியும் ? இவனுக்கு மேல ஒரு அக்கா இருக்கா ? அப்புறம் அண்ணன் இருக்கான்?
அவங்களுக்கு கல்யாணம் ஆகாம எப்படி உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது ? பாக்கறவங்க என்ன நினைப்பாங்க ? எங்க ஊரு ஆளுங்களுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன் ? நீங்க பெரிய மனுஷன் தானே நீங்களே ஞாயம் சொல்லுங்க" என அந்தம்மா கண்ணீர்விட,.
ராஜ்குமாருக்கு தர்மசங்கடமாகி விட்டது. தனது வாழ்க்கையில் தன் சினிமாதுறையில் எத்தனையோ எத்தனையோ பேருடன் பயம் இல்லாமல் மோதிய ரங்கராஜுவுக்கு இப்போது தனது பெண்ணை மட்டமாக பேசுகிற ஒரு கிராமத்துப்
பெண்ண்டிடம் எப்படி மோதுவது? என தெரியாமல் விழித்தார்.
நாகுவுக்கும் மாமவின் நிலை
புரிந்தது.
இந்த மாமா மட்டும் என்னிடம் ' இதுங்களை
கழிச்சி வுடு நாகு' என ஒரு வார்த்தை சொன்னால் போதும். ஒட்டு மொத்த பங்களாவையே கொளுத்தி விடலாம். அந்த மாதேஷை கோவாவில்
இருந்து திரும்பும் வழியில் சாலையிலேயே சமாதி செய்துவிடலாம்,
தனது பொண்னுக்காக , பெண்
ஆசைப்பட்டாள். அவனுடன் படுத்து விட்டாள் என்பதற்காக கல்லு மாதிரி நிக்கறாணே மனுசன்?
அடங்கி போனால் ஒவராக
பேசுகிறார்களே..
பாவம் மாமா எந்த பெண், தன்னை தலைநிமிர வாழ வாழவைக்கும் நினைத்தாரோ, அதே பெண்தானே தலைகுனிய வைத்து விட்டாளே.
வயிற்றில் 40 நாள் கர்ப்பம் என
தெரிந்தும், இப்ப எப்படி கல்யாணம் பண்ணி வெக்கறது? என அர்த்தமில்லாமல் என இந்த அம்மாள் பேசுகிறாள்.
சுஷ்மிதாவுக்கு வெறும் காதல். வெறும் ஆசை என்ற அளவில் இருந்திருந்தால், இந்த குடும்பத்தை உருத்தெரியாமல் அழித்து விடலாம்
ஆனால் , சுஷ்மிதாவின் வயிற்றில் உண்டான கரு என்னை , மாமாவை பேச விடவில்லை. கரு வயிற்றில் தங்கி உண்டாகி இருக்கிறது என்றால் , நிச்சயம் இது ஒரே தடவை செய்த கூடல் இல்லை .
பல தடவை அக்காவின்
மகள் அவனிடம் மானமிழந்து போயிருக்கிறாள். எப்படியாவது
மாதேஷ் சுஷ்மிதாவை
ஏற்றுக் கொண்டால் போதும்.
விஷயம் இப்போது பத்து பேருக்கு தெரிந்திருக்கிறது. இந்த குடும்பத்தை சரியாக கையாளாமல் போனால், இது இன்னும் பெரிய சிக்கலாகும் , 40 நாள் கர்ப்பம் , எனவே உடனடியாக முடிவு எடுத்து விட வேண்டும் . மாமா மனது
நொறுங்கி போயிருக்கிறார். நாம் தான் பேச வேண்டும்.
நாகு கைகூப்பினான் .
" ரெண்டு பேர் சம்மதத்தோடு தான் இது நடந்திருக்கு என்றதால, உங்க கிட்ட
மரியாதையா பேசிகிட்டு இருக்கோம். எங்க பொண்னு மட்டும் தப்பா கை காட்டியிருந்தா ..
"
" அய்யோ இவ்ளோ கோபம்
ஏன்?" செல்வராஜா மனைவி பின்வாங்க.
"தணிகா உனக்கு தெரியுமில்லே..
எங்களை பத்தி..?"
" அய்யோ.., ஒரு தப்புமில்ல
சார்.. அவங்க அவங்க நிலைமையை சொன்னாங்க.."
"..ஒரே ஒரு போன் போதும் .,
உங்க எல்லாருக்கும் நான் பதில்
சொல்லிடுவேன்..": நாகு விரல் நீட்டி பேச.,
" நீ இரு நாகு.. “
கையமர்த்தினார் ரங்கா
“செல்வராஜா இந்த சூழ்நிலையில் நான் எதுவும் பேச தயாராக இல்லை, நீ என்ன பண்ண நினைக்கிறாயோ அதை மட்டும் சொல்லு போதும்,. நான் எதுவும் உன்கிட்ட கேட்க தயாராக இல்லை., அப்புறம் நடந்து பத்தி பேசி பிரச்சினையை மேலும் மேலும் பெருசாக்காதீங்க " என முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு சொன்னார்.
" பொம்பளங்க பேச்சை விடுங்க. நீங்க அவங்க பேச்சை பெருசா எடுத்துக்காதீங்க .வயசு எல்லாம் பெரிய விஷயமே கிடையாது .நீங்க நல்ல நாள் பாருங்க . சன்டே நிச்சயதார்த்தம்
பண்ணிக்குவோம். அன்னிக்கே நாள் குறிப்போம். ஒரு வாரத்துல மேரேஜ் முடிச்சிடலாம்."
என்றான் செல்வராஜா உள்ளுக்குள் வெற்றிப் புன்னகையுடன்.