கீர்த்தனா சருகாக சோபாவில் சாய்ந்தாள். அவளுக்கு கண்ணீர் வழிந்த்து. ராஜிக்கு போன் போட்டாள்.
‘அடிப்பாவி என்னடி
சொல்றே? இப்ப போய்.. நாங்க ., இங்க ., திரு னின்றவூர் வந்திருக்கோம். லேன்ட் வாங்கற விஷயமா”
“சரி எப்ப வர முடியும்…?”
“ராத்திரி ஆகிடுமே.. ரஞ்சிதா இல்ல?’
“இல்ல., அவ அவங்க அம்மா வீட்டுல இருக்கா?”
‘சரி ஊன் ஃபிரன்டு
ரம்யாவை வர சொல்லடும்மா?’
“வேணாம் விடு. நான் பாத்துக்கறேன்” போனை வைத்தாள்
அவளுக்கு ரம்யா இங்கே வருவது ஏனோ பிடிக்கவில்லை. வந்தாள் சுரேஷ்ஷை சைட் அடிக்கதான் வருவாள்
கொஞ்ச நேரம் சோபாவில் படுக்கலாம். சாதாரண ஜொரம் மாத்திரை போட்டு அவள் படுக்க.,
அவள் காதில் என்னென்னமோ பேச்சு குரல் கேட்க., கும்பலாய் ஒலிக்க., கனவா? நனைவா” என தெரியாமல்.. அவள் மனம் சஞ்சரிக்க. அவள்; உடல் தீண்டப்பட்ட.. தலை நெற்றியில் ஏதோ அழுத்த திடுக்கென கண்விழிக்க.,
சுரேஷ் பக்கத்தில் நின்றிருந்தான். நெற்றியில் இருந்து கை எடுத்தான்.
“ழேஸ்ஸ்ழேழே” அவள் பயந்து போய் சோபாவில் சரிந்து உளற
என்னை தொட்டானா? ராஸ்கல்….
“என்னங்க ஆச்சு… கீர்த்தனா.. உடம்பு இப்படி சுடுது?”
அவள் எதுவும் பேசவில்லை.
“எப்பவும் இப்படி
சோபாவில படுக்க மாட்டீங்களே? அதுவும் நாண் மேல
இருக்கும்போது., அதான் கிட்ட வந்து பாத்தேன்.. நீங்க படுத்த விதமா ஏதோ அப் நார்மலா பட்டுது. ரொம்ப நேரம் குரல் கொடுத்தேன் நீங்க எழுந்துக்கல. அதான் நெத்தியில கை வெச்சி பாத்தேன்.. உங்கள தொடனுமுன்னு தொடல.. சாரி.. வாங்க ஒரு பிளட் டெஸ்ட் எடுத்துடலாம்”
“ நோ” அவள் அவன் கண்னை பார்க்காமல் பேசினாள்.
“ஹலோ.. அர்ஜென்ட்டுக்கு ஒரு ஹெல்ப் பண்றது தப்பும் இல்ல , காமமும் இல்ல. மண்ணாங்க்கட்டி காதலும் இல்ல…கிளம்புங்க ஆஸ்பத்திரிக்கு”
“வே..வேணாம்,,:’
“எ..எதுக்கு வேனாம்”
“அவர் ஈவ்னிங்க்
ஆஸ்பிடல் கூட்டி போவாரு.. இப்ப அவருக்கு லஞ்ச்
செய்யனும்” அவள் உதடு முனுமுனுக்க
“உனக்கு அறிவு இருக்கா? இல்ல. அறிவு இல்லாத மாதிரி
நடிக்கிறியா? மரியாதையாய் எழுந்து வா ஹாஸ்பிடலுக்கு…”
“இ…இப்ப எனக்கு ஒன்னுமில்ல”
“ஒன்னுமில்லயா? கன்ணாடியை பாத்தியா நீ? கீர்த்தனாவா இது ? ஒரே நாள்ல எவ்ளொ சேஞ்ச்? எதையுமே பெரிசாகும் முன் பாத்திடனும்”
“…….” அவள் முறைக்க
“அம்மா தாயே., நான் டபுள் மீனிங்க்ல சொல்லல.., ஹெல்த்தை தான் சொன்னேன். என்னை புடிக்கலன்னா பரவாயில்ல., மூஞ்சியை திருப்பி உக்காருங்க”
“ப்ளீஸ் லீவ் மீ.. என்னால வர முடியல.. “
“அதான் ஏன்?”
“என்னால ., காலை கீழ வைக்க முடியல”
“வெச்சா”
“உடம்பு நடுங்குது.. மூச்சு விட முடியல.. “ அவள் சொல்லும் போதே அவள் நா தழுதழுக்க..,கண் கலங்க
“ஹேய்ய் என்னாச்சு?”
சுரேஷ் பயந்து போனான். அவளை இந்த கோலத்தில் அவன் ஒரு நாளும் பார்த்த்தில்லை..
“ச்சீ என்ன இது குழந்தை
மாதிரி,. இதுக்கா அழுவாங்க.. நான் இல்ல.? ”
“இல்ல சுரேஷ்..நீங்க போங்க அவர் வரட்டும்”
“பளார்னு அடிச்சிடுவேன். மனோ கார் இல்லன்னா என்ன? உன் கார் இருக்கு ..காரை வீட்டு படிக்கட்டு வரைக்கும் எடுத்து வரேன்.. நீ., பத்தடி தானே நடந்து வந்துடு,.ஹாஸ்பிட்டல் போகலாம் . அடம் பிடிக்காதே. ரெடி ஆகு..
அவன் மேல் போய்,. டிரஸ் செய்து கொண்டு.. கீழே வந்தான்..
கீர்த்தனா சோபாவில் இருந்து எழ முயல.,
“வெயிட்..வரேன் இரு.. அதுக்கு முன்னாடி ஒரு சின்ன விஷயம்” சொன்னபடி கிச்சன் போய் பிளாஸ்கில் வென்னீர் சுடவைத்து ஊற்றிக் கொண்டான்.
இன்னொரு பாத்திரத்தில் .. பத்து லிட்டர் வென்னீரை ஊற்றி தைலைம் போட்டான்.
டீபாயில் வைத்தான்.. வாசலில் காய்ந்த
ஒரு பெட்ஷீட்டை கொண்டு வந்து அவள் மீது போட்டான்..
“சீக்கிரம் நீராவி
பிடிங்க.. ஹாஸ்பிடல் போறதுக்குள்ள கொஞ்சம் தெம்பா இருக்கும்” சில நிமிடத்தில் அவளுக்கு இந்த முதலுதவியை செய்ய., பத்து நிமிடம் அவள் நீராவி பிடித்தாள்.
நீராவி பிடித்து முடித்த்தும் அவளுக்கு கொஞ்சம் ஜூரம் குறைந்தாற்போல இருந்தது. சுரேஷை நன்றியுடன் பார்த்தாள்.
“சுவாசம் பிரச்சன்னையின்னா. தலைவலி ஜூரம் முதல்ல வரும். அதான் முதல்ல நீராவி புடிச்சிடனும்.. இப்ப உள்ளங்காலை., இந்த பாத்திரத்துக்கு மேல காட்டுங்க”
அவன் டீபாயில் இருந்த பாத்திரத்தை எடுத்து அவள் காலின் கீழ் வைத்தான். அவள் போட்டிருந்த புடவையை, பவாடையோடு சேர்த்து முழங்கால் வரை தூக்கி பாத்திரத்துக்கு மேல் காட்ட ., இப்போது அவன் பார்த்த பார்வையில் எந்த காமமும் இல்லை. மெல்ல மெல்ல அந்த சுடு நீர் சூடு குறைய உள்ளங்காலை பாத்திரத்துக்குள்
மாறி மாறி முக்கினாள்.
“ இப்ப பெட்டரா இருக்கா?”
“…………………..ம்”
“சரி வா.., ஆஸ்பிடல் போலா.ம்”
“இ இ ப்ப கொஞ்சம்
பெட்டரா இருக்கு…ஈவ்னிங்க் போறேன்
அவர் கூட’
“கடுப்பேத்தாதீங்க.. சுடுதண்ணியை மேல கொட்டிடுவேன். எழுந்திருங்க..”
அவன் கார் கீ எங்கே?’ என கேட்டு எடுத்து
காரை ஓட்டி படிக்கட்டு வாசலில் கொண்டு வந்தான்.. அவன் பதட்டத்தில் பரிதவிப்பு இருக்க.,
“எ…என்னால தரையில் கால் வைக்க முடியல…”
“இ ருங்க வரேன்.. அவன் ஹால் சோபாவிலிருப்ந்து படிக்கட்டு வரை. சோபா துணி., பெட்ஷீட் பரப்பினான்…
“இது மேலேயே பாதம்
வெச்சு வாங்க.. நான் புடிச்சிக்கறேன்”
அவள் சோபாவில் இருந்து எழுந்து நடக்க தடுமாற. அவளை தொட்டும் தொடாமலும்., தாங்கி பிடித்தவாறேவ கதவை திறந்து காரில் ஏற்றினான். அப்போது அவள் அடிக்கடி அவனிடமிருந்து விலகப் பார்க்க.,
“இங்க பாரு இதெல்லாம்
ஒரு சான்சா எடுத்துக்கற சீப்பான ஆள் நான் இல்ல., நீ ஜொரம்னு ., அழுதே பாரு.. ஆடி போய்ட்டேன்.. நீ அழுது நான் பாத்ததே இல்ல.., அய்யோன்னு ஆகிடுச்சி எனக்கு … அதை மீறி எங்கிட்ட இப்படி சீன் போட்டேன்னு வெச்சுக்க” அவன் கர்ஜிக்க.,
“பிரிஜ்ஜில இருந்து
ஐஸ் கட்டியிய எடுத்து உன் தலைல கொட்ட்டிடுவேன்”
“அய்யோ.,! உனக்கு ஏன் இவ்ளோ கோபம்? நான் அதுக்கு சொல்லல”
“பின்ன எதுக்கு? என்னை தள்ளி தள்ளி விடறீங்க”
“ம்ம்ம் வேணாம்..வண்டியை எடுங்க”
“சொல்லு., அப்ப தான் வண்டி எடுப்பேன்…”
“இல்ல… எனக்கு ஒருவேளை கொரானாவா இருக்குமோன்னு”
“யார் சொன்னா?”
“இல்ல எனக்கு அப்படி
இரு எண்ணம்”
“எல்லா ஜொரமும் கொரானாவா
இருக்காது.. இருந்தாலும்., சரியான டைமுல போய் சிகிச்சை எடுத்துகிட்டா., இதுல பயப்பட்ட என்ன இருக்கு?” அவன் வண்டியை ஸ்டார்ட் பண்ண..,
“அதுக்கில்ல”
“வேறென்ன?’
“ஒருவேளை கொரானா
எங்கிட்ட இருந்து உனக்கும் தொத்திகிச்சுன்னா?’
அவன் காரை ஆப் செய்தான். திரும்பினான். “கொரானா இப்படி தொட்டா எல்லாம் வராது. “
“பின்னே?”
“ரொம்ப நேரம் கிஸ் அடிச்சா வரும்”
“ஏய்..பாத்தியா? அதுக்கு தான் உன்
கூட வரமாட்டேன்னு சொன்னேன்” அவள் கோபமாகி கார்
கதவை திறக்க.,
“சரி சாரி… வா. நீ என் வாய கிளறாதே”
“நான் என்ன கிளறுனேன் ?”
“பின்னே.. உன் கொரனா எனக்கும் வந்தான்னு என்னை பிரிச்சி பாக்குறே? அது மட்டும் உங்கிட்ட வந்துச்சுன்னா அதை விட சந்தோஷம் எனகென்ன?”
“ஏன் உங்களுக்கு
என்ன தலையெழுத்து?”
“அய்யோ அதில்ல. உன் மூலமா எனக்கு எது வந்தாலும் சம்மதம்” அவன் சொல்லும் போது கார் தெருவில் இறங்க
அடடா.. இவன் நெஞ்சை நக்க ஆரம்பிச்சிட்டான்.. என அவள் நினைக்க., சோர்வு அதிகமாக கார் பின் சீட்டில் படுத்து கொண்டாள்.
“ஹலோ.. ஹலோ.. என்னாச்சு…? கீர்த்தனா?”
அவள் மயக்கத்தின் விளிம்பில் இருந்தாள். எதுவும் பேசவில்லை.
சுரேஷ் கவலையானான்.
---------------
சுரேஷ் + கீர்த்தனா டிராக் மற்றும் திபூவை கிளைமாக்ஸ் மட்டும் ( 400 பக்கங்கள்) இப்போதே படிக்க..