அவள்
கோபம் கண்டு முதல் தடவையாக காமினி அதிர்ச்சியானாள். அவன் வித்யவை
கண்டு பயத்தில் பின்வாங்க, அவனை ஒரு உஷ்ண பார்வை பார்த்தாள் வித்யா.
“ஏன்யா. உனக்கு பல தடவை சொல்லிட்டேன் நீ தோட்டம் பக்கமா வந்து அதே
தோட்டப் பக்கம் தான் போகணும்னு.”
‘இ.இ..இல்லம்மா”
“என்ன இல்லம்மா. எக்காரணத்தை கொண்டும் வீட்டுக்கு முன் பக்கம் வர கூடாதுன்னு சொல்லி
இருக்கேனா? இல்லையா”
“ இல்லம்மா … ரொம்ப தாகம் எடுத்தது. சும்மா தான்மா.. “
“ஏய்ய் தண்ணி தாகம் எடுத்தா, பம்பு செட்டு தண்ணி குடிக்க முடியாது உன்னால?. உனக்கு எங்க வீட்டு தண்ணி தான் தேவைப்படுதா சீ போ “என விரட்டினாள்.
“ஐயோ என்னை மன்னிச்சிடுங்க” என சொல்லி அவன் அந்த அலுமினிய சொம்பை
எடுத்துக்கொண்டு தலி
தெறிக்க ஓடினான்.
காமினி ஜாதிய வேறுபாடுகள் பற்றி எவ்வளவோ
நிகழ்வுகளை சரித்திரங்களை கேள்விப்பட்டு இருக்கிறாள்.
ஆனால் இப்படி ஒரு ஜாதிய அத்துமீறலை
நேரடியாக இப்போதுதான் பார்க்கிறாள். இந்த அம்மா எத்தனை கொடூரமாக இருக்கிறாளே. இந்த தண்ணீரை கொடுத்து விட்டால்
அவனுக்கு என்ன ஆகிவிடப்போகிறது? இந்தத் தண்ணீரை நம் சொம்பில் அவன் குடித்து
விட்டால் என்ன ஆகப்போகிறது? கழுவி கொண்டால்
போச்சு.
அப்படி இல்லை என்றாலும் அவன் எடுத்து
வந்து இருக்கும் அலுமினியம் சொம்பிலாவது
நம் தண்ணீர் ஊற்றி இருக்கலாமே. அதற்கு கூட இவள் ஒத்துக்கொள்ள மாட்டாள்
என்றால் ,எத்தனை ஜாதி திமிர் இவளுக்கு பிடித்திருக்க வேண்டும்?’ என அவள்
நினைக்க
“இங்க பார் காமினி உனக்கு கிராமத்து பழக்க வழக்கம் எதுவும்
தெரியாது. இவங்களெல்லாம் ஊருக்கு
வெளிய இருக்குற ஆளு இவங்க அப்பா, தாத்தா எல்லாருமே காலம் காலமாக இந்த மஞ்சள் ரோஜாவை பயிரிட்டு
பதப்படுத்த, பராமரிக்கிற வேலை செய்றதில கில்லாடி. ரோஜா தோட்டத்துல வேலை செய்ய இந்த ஊரிலேயே இப்படி ஒரு
குடும்பம் தான் இருக்கு. மத்த யாருக்கும் இந்த வேலை தெரியாது அப்படிங்கற அதனாலதான் இந்த ஆளுக்கு நம்ம வேலை கொடுத்து
இருக்கிறோம்.
இவங்களுக்கு தண்ணி மட்டும் இல்ல, அவங்க மூச்சுக்காற்று கூட நம்ம மேல படாமல் பார்த்துக்கனும் சரியா? அதே மாதிரிதான் தோப்பு ஆட்கள் கூட யாருக்கும் நீ பேசக்கூடாது, வீட்டிலிறுந்து என்னை
கேக்காம எதையும் கொடுக்கக்கூடாது. ஏன் உங்க மாமா வீட்டுல இல்லியா? எங்க போய் தொலைஞ்சார்? ” அவள் இயல்புகு மீறி கத்த காமினி நிஜமாகவே
வித்யாவின் விஸ்வரூபம் கண்டு நடுங்க்கித்தான் போனாள்.
இவளது குரலைக் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்தார் பெரியவர்
சோம் தேவ்.
“ஏன்டி., இப்படி சலிச்சுக்கற..? அன்னிக்கு எனக்கு உடம்பு சரியில்லாதப்ப இவன்
தானே தொட்டு தூக்கினான்.
அப்ப எங்க போச்சு ஜாதி
வித்தியாசம்?’
“இங்க பாருங்க.. நீங்க எப்படி வேணா இருங்க. எனக்கு அனாவாசியம். எனக்கு குலம் கோத்ரம். ஆச்சாரம், அனுஷ்டம் இருக்கு. வெளியாளு வந்து நம்ம சொம்புல தண்ணி குடிகிறான். இவளும் வந்து கொடுக்கிறா. நீங்க வீட்ல இருக்கீங்களா இல்லையா? அந்த தோட்டக்காரன் அழுக்கு பய சோனு , அவன் பாட்டுக்கு ஆளில்லாத
நேரம் வந்து இவ கிட்ட நம்ம வீட்டு சொம்புல தண்ணி கேட்கிறான். இவளும் கொடுத்துட்டு இருக்கா. நீங்க இதெல்லாம் கேப்பீங்களா? கேட்க
மாட்டீங்களா? அவ தான் புதுசு , உங்களுக்கு தெரியாதா? ” என வித்தியா சத்தமாக இரைய, காமினிக்கு அயர்ச்சியானது.
காமினிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. ஒரு சொம்பு
தண்ணிக்கு ஏன் இவ்ளொ கூத்து?
என அவளுக்கு தோன்றியது. அவமானமாக இருந்தது. அவள் பிறந்தது முதல் இந்த நாள் வரை அவளை யாரும் இதனை கடுமையாக திட்டியதில்லை. அவள் மனம் வாடி
எப்படி இருக்க. அன்று இரவு அவள்
கோபாலிட்ம சொல்ல .
“விடு அம்மா தானே சொன்னாங்க. ஒரு விஷயம் நல்லா கேட்டுக்க., அம்மா ரொம்ப ஆச்சாரமானவங்க. நீ வேற ஜாதியாக இருந்தாலும் எங்களை விட உயர்ந்த சௌராஷ்டிரா ஜாதி
என்றதால் தான் பொண்ணு எடுக்க சம்மதிச்சாங்க, மத்தபடி
இன்னிக்கு நடந்த போல சம்பவம் மறுபடியும் நடக்காம பார்த்துக்க.. அம்மா இந்த விஷயத்துல ரொம்ப சென்சிடிவ்..
பொதுவா நம்ம வீட்டில் இருந்து
வேலைக்காரர்களுக்கு எந்த பொருளும் நேரடியாக கொடுக்க கூடாது, அது மட்டும் நீ ஜாக்கிரதையாக
பார்த்துக்கோ பூஜை, புனஸ்காரம் விஷயத்துல அம்மா ரொம்ப ஆச்சாரம் பார்ப்பாங்க, மத்தபடி எங்கம்மா சொக்கத்தங்கம்” என சொல்லி அவனை சமாதான படுத்தினான். தன் சித்தியை விட்டு கொடுக்காமல் பேசிய கோபால்
மீது அவளுக்கு வெறுப்பானது.
இந்த சம்பவத்திற்கு பிறகு மறுநாள் வித்யாவுடன் அவளுக்கு பேசக்கூட பிடிக்காமல் இருந்தது.
அதை புரிந்து கண்ட வித்யா “ என்ன காமினி அத்தை திட்டினதுக்கு கோச்சிக்கிட்டியா? “
“இ..இல்லத்தை”
“இங்க பாரு . எனக்கு இந்த மாதிரியான அபச்சாரங்கள்
பிடிக்காது. அவங்க ஜாதி, குலம்
பாத்து நான் தள்ளி நிக்கல . எப்பவுமே அவங்க வேலை செய்யக்கூடிய
இடத்திலிருந்து அவங்களுக்கே தெரியாம சில நச்சுக்கள், கிருமிகள் அவங்க மேல கெட்ட
விஷயங்கள் ஒட்டிக்கிட்டிருக்கும்.
அதனால தான் நம்ம வீட்டு கிட்ட அவங்களை
சேக்க்க்கூடாது ண்னு சொல்கிறோம். மத்தபடி அவங்க வாழ்க்கைக்கு என்ன
தேவையோ அதுக்கு பணத்தையோ பொருளையோ நாம கொடுத்துவிட்டு தான் இருக்கோம். நான் ஒன்னு மோசமானவ இல்லை. முதல் நீ என்ன தப்பா நினைச்சுக்காதே.
நீ நகரத்து பொண்ணு போகப்போக புரிஞ்சுக்குவ” வித்யா என்ன சமாதானம்
சொன்னாலும் அவளுக்கு சமாதானமாகவில்லை.
அவளுக்கு இன்னும் கோபமாகவே இருந்தது.
-------
ஆனால்,
அமர்தான் திண்னையில் உட்கார்ந்திருந்த காமினியை நெருங்கி வந்து பேசினான்.
“அண்ணி
இங்க உக்காந்திருக்கீங்களா?’
“ஆங்.. வா அமர் உக்காரு…” அவன் படிக்கட்டில் காற்றில் கைகலை
வீசி தடவி தட்டு தடுமாறி வர.,அவன்
கை பிடித்து உட்கார வைத்தாள்.
“அண்ணி
யாராச்சும் நம்ம பக்கத்துல இருக்காங்களா?”
“இ.இல்ல ஏண்?”
“ஏன்
அண்ணி., அம்மா
திட்டுனதுக்கு கோச்சுகிட்டீங்களா?”
“..இல்ல
அமர்”
“அட
உங்க குரலே சொல்லுதே”
“அந்த
தோட்டக்காரனை பாவம் ரொம்ப விரட்டிட்டாங்க.,
தண்ணி கேக்க வந்த ஆளை போய்..
பாவம் அவன் நமக்காகத் தானே வேலை செய்யறான்”
“இந்த
சோசலிசம் எல்லாம் அம்மாகிட்ட பேச கூடாது. அவங்க
உங்களை மாதிரி சிட்டியில வாழ்றவங்க இல்ல..அது
அவங்க அறியாமை. நானும்
கூட பலதடவை அவங்க கிட்ட சொல்லி பாத்துட்டேன்,.,
ஒரு தடவை சோனு மனைவி ,
ஜமுனா தேவி கிட்ட நான் பேசிட்டேன்னு என்னைக் கூட அம்மா
இப்படித்தான் கோச்சுகிட்டாங்க., அவங்க
மாதிரி வில்லேஜ் ஆளுங்க கிட்ட கேஸ்ட் டிஸ்டன்ஸ் இன்னும் போகலை. ”
“அதுக்காக…..?”
“அண்ணி, அம்மாவுக்கு ஜாதி பெருமை ஜாஸ்தி., ஆனா அது ஒன்னு தான் அவங்க மைனஸ்., மத்தபடி..
எங்க அம்மா மோசமானவங்க இல்ல அண்ணி..
நீங்க மனசுல வெச்சுக்காதீங்க.
ப்ளீஸ்”
அமர் பெரிய மனுஷன் போல பேசியது அவளுக்கு ஆதரவாக மகிழ்ச்சியாக இருந்தது. அடலீஸ்ட் இந்த குணம் கூட கோபாலுக்கு இல்லையே.,
--------------
வாசகர்கள் மஞ்சள் ரோஜாவை இப்போதே முழுதாக படிக்க..
( பாகம் 29 & 30) இங்கே கிளிக் செய்யுங்கள்..
குறிப்பு 1. முழு வெர்சன் மெயிலில் மட்டுமே அனுப்பப் படும்)
2. பாகம் 29 இடைவேளை வரை ( 55 Episodes)
3. பாகம் 30 இடைவேளைக்குப் பிறகு ( 78 Episodes)