மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, July 30, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1811

 

பல பேரின் வாழ்க்கையை திருப்பி போட தயாராக இருந்த., ஆகஸ்ட் 10 மாலை 6 மணி சுரேஷ் தனது அறையில் இருந்து, கோர்ட்டூர்புரம் ரேகாவின் வீட்டுக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தான்.

அவன் போன் அடிக்க., எடுத்துப் பார்த்தான் நீலாங்கரை பரந்தாமன் சாஸ்திரி. போனை எடுத்தான்.

ஹலோ சுரேஷ் தம்பியா?”

சொல்லுங்க சாஸ்திரி, நான் அங்க தான் வந்துட்டு இருக்கேன். ஆஃப் அன் ஹவர்ல ரேகா வீட்டுக்கு போய் எல்லாரையும் அழைச்சிட்டு வந்து விடுவேன். அந்த சற்குணம் கிட்ட போன் பண்ணி சொல்லிட்டேன். அவனும் அங்க கரெக்டா வந்துடுவான்.அதே மாதிரி அந்த ஆர் ஏ புரம் டத்த பறிகொடுத்த அந்த பெரியவரோட பசங்களையும் தேடி கண்டுபிடிச்சு, அவங்க கிட்ட, நாம பண்ண போற யாகத்தை பத்தி சொல்லிட்டேன். அவங்களும் இந்நேரம் கிளம்பி இருப்பாங்க. இனிமேல ஒரு சிக்கலும் இல்லை என சுரேஷ், தான் இந்த ஒருவார காலம் செய்த வேலையை விவரிக்க.,

 பரந்தாமன் சாஸ்திரி ஓ நல்லதுப்பாஎன்றார். ஆனால் அவரது குரல் மிகவும் பதட்டமாக , சோர்வாக இருக்க.,

என்னாச்சு சாஸ்திரி., சொல்லுங்க

இல்ல சுரேஷ் இப்போ ஒரு புது பிரச்சனை வந்திருக்கு.,”

என்ன சார் சொல்லுங்க நான் என்ன பண்ணனும்?” என கேட்டான்

அந்த ஈஸ்வர சந்திரன் இப்போ சமீபத்துல ஒரு பெண்ணை குறிவைத்து அவளையே சேஸ் பண்ணிட்டு இருக்கான் அப்படின்னு நான் சொல்லியிருந்தேன் இல்லையா?”

ஆமா சார் சொல்லுங்க

அந்தப் பெண்ணை அவன் இன்னிக்கி ராத்திரி எப்படியாச்சும் ஸ்தூல ரூபமா நெருங்க போறான். அப்படி நடக்க கூடாது.

ஐயோ என்ன சார் சொல்றீங்க? யார் அந்த பொண்ணு?”

 இது சமரன் மூலமா எனக்கு கிடைச்ச தகவல். ஆனா அந்தப் பெண் யார்? எந்த ஊர் அப்படியெல்லாம் என் உள்ளுணர்வால் கிரகிக்க முடியல. ஆனா அந்தப் பெண்ணோட பெயர் சந்தியா, சம்யுக்தா சஞ்சனா அப்படிங்கற பேர்ல தான் வரணும். அது மட்டும் இல்லாம அந்த பெண்ணை ஈஸ்வர் சந்திரன் அடைவதற்கு அந்த பெண்ணோட அம்மாவே உதவி பண்ணி இருக்குற கொடுமை நடந்துகிட்டு இருக்கு

அப்படியா?”

ஆமாம். அந்த பெண்மனியை அவன் தன்னோட இச்சைக்கு ஆட்படுத்தி சிக்க வெச்சி.. இப்ப அவங்க மூலமா இந்த பொன்ணை அடைய போறான். அது மட்டும் நடக்க கூடாது. ஏன்னா? அந்த பொண்ணொட ஜாதகம் அப்படி. அதுக்கபற்ம் ஈஸ்வரின் அக்கிரமங்க அதிகமாகிடும்

சரி அந்த பொண்ணோட அம்மா பேரையாச்சும் சொல்லுங்க

ம் அவங்க பேரு சந்திரா, சுஜாதா, சுமித்ரா அப்படின்னு இருக்கலாம் .அந்த பொண்ணு நகை போன்ற உலோம் அதான் மெட்டல் சம்பந்தமான வேலையில இருக்கணும். அதே மாதிரி அந்த பொண்ணோட அம்மா நீதிமன்றம், பத்திரப்பதிவு போன்ற இடங்களில் பணிபுரியக்கூடிய அதிகாரியா இருக்கணும். ஏன் வக்கீலாக கூட இருக்கலாம். இதுதான் என்னால கிரகிக்க முடிஞ்ச தகவல்கள். இதை வச்சு அவங்க யாருன்னு கண்டு பிடிக்கனும். அவங்கள அவன் கிட்ட இருந்து நாம இன்னிக்கி காப்பாத்தி ஆகனும். குறிப்பா அந்த பொண்ணோட ஜாதகம் அந்த மாதிரி இருக்கு. இப்படிப்பட்ட ஜாதக அம்சம் இருக்கிற பெண்ணை ஈஸ்வர் அடைது மூலம் அவனுக்கு கிடைக்கக்கூடிய யோகபலம் இன்னிக்கு நாம செய்யுற யாகத்தை தோல்வி அடைய செய்றதற்கு வாய்ப்பு இருக்கு என சோகமாக சொன்னார்.

சாஸ்திரி! நீங்க சொன்ன தகவல்களை வெச்சி நாம எப்படி அந்த ஃபேமிலிய கண்டுபிடிக்க முடியும்? குறைந்தபட்சம் நீங்க எந்த ஊர்? ஏரியா சொன்னாக்கூட ரேகாவோட அப்பா ஆளுங்கள வச்சி என்னால கண்டுபிடிக்க முயற்சி பண்ணலாம். ஆனா அதுக்கு கூட, நமக்கு இப்போ நேரம் ரொம்ப குறைவா இருக்கே சார்என்றான்

சாரிப்பா என்னால இந்த விஷயத்துல உனக்கு உதவும் முடியல. ஆனா அந்த பேமிலி யாருன்னு கண்டு பிடிச்ச,  அவங்கள இன்னிக்கு  யாகம் நடத்துற அந்த நேரத்துல காப்பாத்தி,  அவனை அங்க அண்டவிடாமல் நீ செஞ்சா மட்டும்தான் நம்மளோட யாம் பலிக்கும்.இல்லன்னா அவனுக்கு கோபம் அதிகமாகிஇதுல சம்பந்தப்பட்ட எல்லாரையுமே ஒரு கை பார்த்துடுவான்.

ரொம்ப ஜாக்கிரதையா இதை செய்யனும். நியாயமா அவனை முடக்கி போடுற இந்த யாகத்தை இந்நேரம் அவன் மோப்பம் புடிச்சி இருக்கனும். ஆனா இது வரைக்கும் அவனுக்கு இது தெரியலன்னா., அவன் மூழ்கி இருக்குற மோகம் தான் காரணம். அது தான் அவனோட வழக்கமான உள்ளுணர்வை குறைச்சி இருக்கு..”

கேக்கவே பதட்டமா இருக்கு

சுரேஷ்.,  எனக்கு அவனைப் பத்தி தெரியும் அதனால நான் சொல்றேன்”.

சரிங்க சாஸ்திரி. நீங்க சொல்ற விவரங்கள் வெச்சி நான் எப்படி அந்த பேமிலியை கண்டுபிடிக்க முடியும்னு யோசிக்கிறேன் என்றான்.

வீட்டைவிட்டு கிளம்ப இருந்த அவன் மறுபடியும் வீட்டுக்குள் நுழைந்து படுக்கையில் பொத்தென்று படுத்தான்.

ஒரு சராசரி ஆள் என்றால் அவன் எத்தனை வலிமையான ஆள் என்றாலும் அவனுடன் நாம் மோதி ஜெயிக்க முடியும். நம்முடைய உம்முடைய அதிகாரங்களை வைத்து அவனை நெருங்க முடியும். பந்தாட முடியும். ஆனால் இதுபோன்ற உளவியல் எண்ணங்களில் விளையாடுகிற வித்தை தெரிந்தவனை என்ன செய்வது? என யோசித்தான்.

ஒரு ஆள் எந்தப் பெண்ணை குறி வைக்கிறான் என்பதை எப்படி கண்டுபிடிப்பது? யோசித்தான் அவனது முகநூல் பக்கம் இருக்கா? இல்லை அவனெல்லாம் முகநூலில் வர வாய்ப்பில்லை. அப்படி என்றால் ஒருவன் ஒரு பெண்ணிடம் எந்தெந்த வழிகளில் தொடர்பு கொள்வான் மெயில்?  அப்புறம் போன்? யெஸ் போன்?  கரெக்ட் போன்

ஈஸ்வர் சந்திரன் நம்பர் தெரிந்தால் கடந்த ஒரு மாத காலமா அவன் யாரெல்லாம் யாருடன எல்லாம் அடிக்கடி பேசி இருக்கிறான். என்பதை கண்டு பிடித்தால், அதில் பரந்தாமன் சாஸ்திரி சொன்ன பேருடையை நம்பர் ஏதேனும் இருந்தால் அவன் டார்கெட் வைத்திருக்கும் பெண்ணின் நாம் ஈசியாக கண்டுபிடித்து விடலாமே!

அவன் துள்ளிக் குதித்து எழுந்தான். ஈஸ்வர் பிரைய்ன் டெவலப்மன்ட் சென்டர் என நெட்டில் தேடினான். அவன் அலுவலகத்திற்கு போன் செய்து ஈஸ்வர் சந்திரனின் நம்பரை வாங்கினான்.

அதன்பிறகு பெங்களூர் கிரான்டனி பில்டர் அலுவலகத்தில் கண்ணன் சாருக்கு போன் செய்தான்.

சார் என்ன?ஏது?ன்னுலாம் எல்லாம் கேட்காதீங்க.  நான் அப்புறமா ஃபுல் மேட்டர் சொல்றேன். நான் ஒரு நம்பர் கொடுக்கிறேன் . அந்த நம்பர்லருந்து லாஸ்ட் ஒரு மாசத்துல பேசியிருக்கி கால் லாக் லிஸ்ட் உடனே என் மெயிலுக்கு அனுப்பனும்.சரியா? உங்களுக்கு அதிகபட்சம் அரை மணி நேரம் டைம் தரேன்

சுரேஷ் சுரேஷ் ஏன் என்ன ஆச்சு?”

யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ் என சொல்லிவிட்டு போனை வைத்து விட்டான்.

அடுத்த 40-வது நிமிடத்தில் கண்ணன் சாரிடம் இருந்து சுரேஷிற்கு மெயில் செண்ட் என போனில் மெசேஜ் வந்தது.

உடனே சுரேஷ் லேப்டாப்பை ஆன் செய்து மெயிலை லாகின் செய்தான். அதில் வந்திருந்த எக்ஸெல் அட்டாச்மென்ட் ஐ டவுன்லோட் செய்து பார்க்க., ஈஸ்வர் சந்திர கால் லிஸ்ட்டினை முழுவதையும் நோட்டமிட்டான்.

அதில் நான்கைந்து நம்பர்களுக்கு மட்டும் அதிக முறை அழைத்திருந்தான், அழைப்பையும் பெற்றிருந்தான், ஆனால், அந்த எண்களில் ஒரு குறிப்பிட்ட எண் மட்டும் அதிகமுறை பதிவாகியிருந்தது.

அந்த எண்ணை மட்டும் எடுத்து ட்ரூகாலர்ரில் போட்டு பார்க்க சுஜாதா அட்வகேட் என என்று இருந்தது. சுஜாதா அட்வகேட்டா?’ எங்கேயோ கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே? என யோசித்தான்.

அட மலரின் சித்தியா? என ஒரு கணம் யோசித்தவன்,  இல்லை இல்லை இந்த சென்னையில் ஏகப்பட்ட சுஜாதாக்கள் இருக்கிறார்கள். நாம் அப்படி அவசரப்பட்டு விட முடியாது என நினைத்தவன் உடனே பரந்தாமன் சாஸ்திரி சொன்ன பெயர் பட்டியலில் சுஜாதா இருக்கிறதா? என்று பார்த்தான் இருந்தது. கூடவே அவர் தந்த பெயர் பட்டியலில்  சஞ்சனா என்ற பெயர் இருக்கிறதா? என பார்த்தான்.

அட இருந்தது.  அவன் நெஞ்சு படபடத்தது. உடல் நடுநடுங்கியது. அந்தப் பெண் நகை மற்றும் உலோகம் சம்பந்தமான வேலைகளை செய்வதாக பரந்தாமன் சாஸ்திரி சொல்லி இருந்ததும் அவனுக்கு உடனே நினைவுக்கு வந்தது.

ம்மா மூலமாக பெண்ணை குறி வைக்கிறான் என்றாரே. சுஜாதா மூலமாகத்தான் இந்த ஈஸ்வர் டிரை செய்கிறானா? அப்படியெனில் சுஜாதா, சஞ்சானாவுக்கு எதிராக வேலை செய்கிறாளா? என்ன கூத்து இது?

ஒரு வேளை ஈஸ்வர் சுஜாதாவை முதலில் வீழ்த்தி பின் அவள் மூலமாக சஞ்சனாவை அடைவதற்கு முயற்சி செய்கிறானோ? குடும்ப பெண் ,பேரழகி சஞ்சனாவை பலமுறை சுரேஷ் பார்த்திருக்கிறான். அழகான குடும்ப மங்கை. எந்த உடை போட்டாலும் அழகாக இருப்பாள். இரு  குழந்தைகளுக்கு தாய் என நம்ப முடியாத கல்லூரி பெண் தோற்றம். இவள் ஈஸ்வரை கவர்ந்த்தில் ஆச்ச்சரியமில்லை.

கண்டிப்பாக அப்படித்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் இவர்கள் சமீபத்தில்தான் குழந்தை வர்ஷாவை அழைத்துக்கொண்டு ஈஸ்வரின் சென்டருக்கு அடிக்கடி போய் வந்திருக்கிறார்கள்.

அப்படி என்றால் சுஜாதா, சஞ்சனா தான் அந்த பேமிலியா? ஆம் என எனது உள்ளுணர்வு சொல்கிறது.

சுஜாதாவின் போன் நம்பர் இந்த காலத்தில் இருப்பது போல சஞ்சனாவின் நம்பரும் ஈஸ்வரின் கால் லிஸ்டில் இருந்தால் நிச்சயம் கன்ஃபார்ம் செய்துவிடலாம் என நினைத்தபடியே அவன் சஞ்சனாவின் என் அந்த கால் பட்டியலில் இருக்கிறதா? என்று பார்த்தான்.

சஞ்சனாவின் எண் அந்த பட்டியலில் இல்லை . ஒருவேளை அவன் இன்னும் சஞ்சனாவிடம் பேசாமால் இருக்கலாம் என ஒரு முடிவுக்கு வந்தான்.

அட இந்த ஈஸ்வர் நாய் திரும்பத் திரும்ப  எனக்கு  தெரிந்த ஆட்களின் வட்டாரத்தில் தான் தனது வேலையை காட்டிக் கொண்டிருக்கிறானே?.

சுரேஷ் கோபமானான்.

-------------



திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1810

 

இவர்கள் பிரச்சனையை சொல்லும் முன்னே அவர் எல்லாவற்றையும் தானாகவே ஒப்பித்தார். அவர்களின் முகத்தை பார்த்து பெயர்களைச் சொன்னார். கொஞ்ச நேரம் தியானித்தார். எல்லோருக்கும் குளிந்த மோர் வழங்கப்பட்டது.  

ரந்தாமன்  எல்லோரையும் அனுப்பிவிட்டு ரேகாவை உட்காரவைத்து முழுதும் பரிசோதித்தார்.

ரேகாவின் வீட்டின் ஆன்மாவும், ரேகாவின் ஆன்மாவும் ஈஸ்வர் சந்திரனால் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதைப் புரிந்துகொண்டார். ரேகாவை அனுப்பிவிட்டு சுரேஷ் , ரேகாவின் அப்பாவை மட்டும் உள்ளே கூப்பிட்டார்.

சுரேஷிடம் இந்த பெண் உங்களுக்கு என்ன வேணும் தம்பி என கேட்க, இந்த பெண் என்னோட தங்கை என்றான் சுரேஷ்.

ஓ அப்படியா நீங்க அப்பாவா? சரி நான் சொல்றதை நல்லா கவனமா கேட்டுக்கோ.,  ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஒரு ஆன்மா இருக்கு,  ஒரு புத்தி இருக்கு, நாம எல்லாம் என்ன நினைச்சுக்கறோம். நம்முடைய புத்தி தான் நம்மை யோசிக்க வெச்சு வழி நட்த்துன்னுஆனா நம்முடைய செயல்களை  நம்ம புத்தி தீர்மானிப்பது இல்லை., புத்தியை தீர்மானிக்கறது அவங்கவங்க  ன்மா தான்

ஆன்மா தான் உங்களுடைய புதிய தீர்மானிக்கிறது. அந்த ஆன்மா நல்லதா? கெட்டதா ? வலிமையானதா? பலவீனமானதா?  என்பதெல்லாம் உங்களுடைய வழிவழியாக வந்த பாவம், புண்ணியம் ,அப்புறம் நீங்க செய்கிற செயல்கள், இதை பொறுத்துதான் அமையுது

புரியுது சார்

ஒவ்வொரு புத்தியையும் அவங்க ஆன்மாதான் கட்டுப்படுத்துவது என்பது ஒரு பொதுப்படையான அறிவியல் . ஆனால் யாராச்சும் பலம் வாய்ந்த ஆன்மா இன்னொரு ஆன்மாவுக்குள்ல  புகுந்து அதை பலவீனப்படுத்தி அவங்க புத்தியை தடுமாற வைக்கும்.,  தன் இஷ்டத்துக்கு ஆட்டிப்படைக்கும்,  அதாவது நான் நினைக்கிற காரியங்களை உங்கள வச்சு என்னால ஈசியா செய்யமுடியும்

வசியம்னு சொல்வாங்களே அந்த மாதிரியா?”

வசியம் என்ற வார்த்தை சொல்லாதீங்க. அதெல்லாம் மந்திரவாதிகள் மாயாவிகள் செய்கிற அரைவேக்காடு சில்மிஷங்கள். நான் சொல்றது விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் கலந்த உள்ளீடுகள்.’

சரிங்க சார் என் பொன்னுக்கு என்ன ஆச்சு?”

ஒரு பலமான மோசமான ஆன்மாவுக்கு சொந்தக்காரன் உங்க பொண்ணோட புத்திய கலைச்சி அவளையுமறியாமல் அவளது உள்ளத்தால் ஊடுருவி.. அவளை தொடாமல அனுபவிச்சு வரான்அவன் தான் ஈஸ்வர் சந்திரன். ”

“…………………”

சொல்லப்ப்போனா பத்து வருஷம் முன்னாடி என் கிட்டதான் இருந்தான் இங்க சம்பாதிக்க முடியாதுன்னு தெரிஞ்சி வெளியில போய்ட்டான். இப்ப மோசமான ஜந்தாகிட்டான். அவனால பாதிக்கப்பட்டவங்க வாரம் ரென்டு பேர் எங்கிட்ட வராங்க

“………”

அவன் எண்ணத்தாலும் உள்ளத்தாலும் உன் பொண்ணை அனுபவிச்சிட்டு அவளை சீரழிச்சி., கூடிய சீக்கிரம் அவளை உடலையும் நேரடியாகவும் அனுபவிக்க தயாராக இருக்கிறான்.  பொதுவா சில நாள்லயே விர்ச்சுவலா தொட்ட ஒரு பொண்னை தானாவே, தன்னை தேடி  வர செஞ்சிடுவான். ஆனா உன் பொண்ணு விஷயத்துல அவனுக்கு ரொம்ப நாள் தாமதம் ஆகி இருக்குஅதுக்கு காரணம்.. உன் பொண்ணு அவ கல்யாண முஹூர்த்த்துல செஞ்சிருக்கிற யாகத்தோட பலம்., அப்புறம் நீ இத்தனை வருஷம் செஞ்சிகிட்டு வர தர்ம காரியங்களோட பலன். அதனால தான் இன்னும் அவன் மடியில விழாம உன் பொண்ணு மதில் மேல பூனையா இருக்கா.,”

ரேகாவின் அப்பாவுக்கு நா தழுதழுத்து கண்ணீர் பெருக,

ஆனா அதுக்காக ஈஸ்வர் உங்க பொண்ணை தொடாம விடாமாட்டான்னு சொல்ல முடியாது. அவன் தீவிரமா முயற்சி பண்னிகிட்டு தான் இருக்கான். என்னிக்கவது ஒரு நாள் அவன் நீங்க எல்லாம் தூங்கறப்ப உங்க வீட்டுல நுழைவான்

அய்யா?”

ஆமாம். இப்ப ஸ்தூல வடிவமா வரவன், அப்புறம் தேகமா வருவான். இப்ப அவன் வேற ஒரு பொண்ணை குறிவைச்சி போய்கிட்டிருக்கான். அதனால தற்காலிகமா அவன் கவனம் உன் பொண்ணு மேல விழாம இருக்கு.  அதனாலதான் உங்க பொண்ணுகிட்ட அவன் நெருங்காம இருக்கான். ஆனா என்னைக்காவது ஒருநாள் நேரடியா அவளை அவனை கூப்பிட்டு அனுபவிக்கும் அவன் திட்டம் போட்டிருக்கான்.”

அய்யோ., இந்த களவாணி பயல் யார் சார்? பேசாம அவனை குத்தி பீஸ்., பீசா பீச்சு மாங்கா மாதிரி வெட்டி ஈசிஆர் ரோட்டில் போட்டுட்டுமா? “ ரேகா அப்பா கர்ஜிக்க.,

ப்படில்லாம் அவனே போடமுடியாது.  சொல்லப்போனா இவ்ளோ பலம் பொருந்திய ஆள் உடம்பா உலவுற வரைக்கும் தான் மனுஷ சக்திக்கு கட்டுப்பட்டு ஓரளவு அவனை கட்டுப்படுத்த முடியும். அதுவே அவன் ஆன்மா உடலை விட்டு போய்ட்டா.. பிரபஞ்ச சக்தியாகி அப்புறம் யாரும் அவனை நெருங்க கூட முடியாது. அவனுக்கு தோணுறதை செய்வான். அதுவுமில்லாம அவன் உயிரை கொன்னுட்டா அது மோசமான சக்தியா மாறிடும். அவனை மனுஷ ஜென்மத்துலயே டம்மியாக்கிடனும் அதான் சரி.

அப்ப என்ன தான் இதுக்கு முடிவு? பணம் கொடுத்துடனுமா பத்மா விவகாரத்துல கொடுத்து செட்டில் பண்ண மாதிரி?” சுரேஷ் கோபத்துடன் கேட்க., பரந்தாமன் சாஸ்திரி நிமிர்ந்து  அவனை பார்த்தார்.

ஓ உனக்கு பத்மா விவகாரம் தெரியுமா? ‘

“…………..”

அந்த சமயத்துல அது  தான் சரியான முடிவு. அப்படி செஞ்சோம். ஆனா இப்ப அப்படி செய்ய வேணாம். நேரம் நமக்கு சாதகமா இருக்கு. இப்படி பணம் கொடுத்துகிட்டே இருந்தா அவன் கொட்டம் நாளுக்கு நாளு அதிகமாயிடும். “

வேற?”

அவனை கனிய வைத்து ஒண்ணுமே இல்லாம ம்மியாகி, அவன் புத்தியை நிர்மூலமாக்கி அவனை முடமாக்கனும்ஒரு பெரிய சாத்வீக யாகம் செய்து அவன் வாயை கட்டனும். அது ஒன்னு தான் அவனை அழிக்க சரியான வழி. தயவுசெய்து இதை கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க, நாம உணர்ச்சி வசப்பட்டாலும்வேப்பட்டாலும் அதனுடைய பலன் அவனுக்கு தான் கிடைக்கும்.

எங்கள மாதிரி ஆட்கள் கூட அவன் பண்ற அநியாயத்தை தட்டிக் கேட்க முடியாமல் முடக்கிப் போடவும் முடியாம  இருக்கோம்..அவன் இந்த மாதிரி எத்தனையோ பொண்ணுங்களை அவன் கெடுத்திருக்கான். அவங்க வாழ்க்கையையே சீரழிச்சிருக்கான். பலபேர் வெளியே சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளேயே நினைச்சுக்கிட்டு இருக்காங்க, பலபேர் அவன் உத்த்ரவு படி நடந்துகிட்டு இருக்காங்க, வெளிப்படையா சொல்லனும்னா அவனை யாருமே எதுவும் செய்ய முடியாது.  அதுதான் ஈஸ்வர் சந்திரனோட பலம்.”

“…………………..”

னா காலம் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்கிறது இல்லை . எப்படிப்பட்ட மோசமான அரக்கனுக்கும் ஒரு இந்தக்காலம் முற்றுப்புள்ளி வெச்சி இருக்கு. ஈஸ்வர் சந்திரன்லாம் எம்மாத்திரம்?”

என்ன சார் பண்ணலாம்?”

ஈஸ்வர் அப்படிங்கிறவன் ஒரு தனிப்பட்ட ஆளுதான். இதுவரைக்கும் அவன் தனிப்பட்ட முறையில் எந்த எந்த புண்ணிய காரியம் செய்யலை என்பதுதான் னமக்கு சாதகம்,.னா நிறைய பாவம் பண்ணி இருக்கான்.  இதயெல்லாம் ஒரே புள்ளியில் நிறுத்தி  அவனுக்கு எதிராக திசை திருப்பலாம்.  ஏன்னா.,  இப்போ ஈஸ்வர் சந்திரனுக்கு எதிரா நேரம் கூடி வந்து இருக்கு.,”

சார் எங்களுக்கு ஒன்னும் புரியல சார்

அதாவது ஈஸ்வர் சந்திரனால் யாரெல்லாம் இதுவரைக்கும் பாதிக்கப் பட்டாங்களோ அதுல சிலபேரை ஒன்னு சேர்த்து., அந்த கூட்டு முயற்சியா ஒரு புள்ளியா எதுத்தா ஈஸ்வர் சந்திரனை நாம ஒரு மூலையில் முடக்கி போடலாம்.”

அது எப்படி சார் நம்ம கண்டுபிடிக்கிறது?”

அது ரொம்ப ரொம்ப சுலபம்.னால ரொம்ப அதிகமாக பாதிக்கப்பட்டு இந்தநாள் வரைக்கும் அழுதுகிட்டு இருக்கிற ஒரு சுத்தமான ஆன்மா இருக்கு. அது நம்ம பக்கம் இருக்கு.  அதுக்கு பேரு மரன் என்றார்.

யார் சார் சமரன்?” ரேகாவின் அப்பா கேட்க. பரந்தாமன் சாஸ்திரி சமரனின் முழுக்கதையும் சொல்லி முடித்தார்.

அந்த சமரன் மட்டும் இப்போ உயிரோட இருந்து அவனுடைய ஆய்வுகள் புத்தகங்கள் எல்லாம் மக்கள் படிக்க ஆரம்பிச்சிருந்தா இந்த நேரம் உலகமே சமாதானமாக இருக்கும்.

அதெல்லாம் கெடுத்துட்டான் இந்த ஈஸ்வர் சந்திரன்”.

சார் இறந்துபோன சமரன் நமக்கு எப்படி சார் உதவி செய்வார்?”

கண்டிப்பா உதவி செய்வார் என்னால அவரை வரவழைக்க முடியும். நான் அவர் கிட்ட பேசுறேன் . அவர் துணை இருந்தால் போதும் அவர் தலைமையில் மத்த எல்லாரையும் நம்ம ஒன்னு சேத்துடலாம். ரொம்ப முக்கியமா ஈஸ்வர சந்திரன் ஒரு பெரியவரோஇடத்தை  அபகரிச்சி அந்த இடத்துல தான்.,அவர்  வீட்டோட நிலத்தில் தான் இப்போ அவனோட சென்டைரை கட்டி இருக்கான்., ந்த பெரியவர் அதனாலயே மனசு நொந்து செத்துட்டார். இப்ப அவர் பிள்ளைங்க கோர்ட்ல போய் இருக்காங்க. ஈஸ்வர் மேல கோபாமாகவும், ஆத்திரமாகவும் இருக்கற அந்தப் பெரியவரோட கையாலாகாத ஆன்மா நமக்கு துணை செய்யும். அதே சமயம் அந்த பெரியவர் பசங்களை  நம்ம வீட்டுக்கு அழைச்சட்டு வந்து யாகத்துல உட்கார வைச்சா அதுக்கு பலன் நிச்சயம் கிடைக்கும். எனக்கு தெரிஞ்சு பூஜையை ஆரம்பித்து 48 நிமிஷத்துலே அவனை நாம முடமாக்கி கட்டிடலாம். அதுக்கு நீங்க எல்லாம் உதவி பண்ண தான் முடியும் .

நிச்சயம் பண்றேன் அய்யா. அந்த பசங்களை நான் கூட்டிட்டு வந்து உக்கார வெச்சிடறேன் அது என் பொறுப்பு..” சுரேஷ் சொல்ல.,

அது மட்டும் இல்ல தம்பி , அவன் கூட இருந்த ஒரு ஆளு ஹெல்ப் வேணும், அவன் தோஸ்தும் இந்த யாகத்துல அவனுக்கு எதிரா வேலை செய்யனும். அப்படி ஒரு நம்ம கூடவே இருந்தா அதுவும் நிச்சயம் நம்ம யாகத்துக்கு யூஸ் ஆகும். அப்படி ஒருத்தன் இருக்கான் அவனை உங்களால கூப்பிட்டு வர முடியுமா?”

சொல்லுங்க சார்?”

அவன் பேரு சற்குனம் மாஜி எம் எல் ஏ. அவனும் இந்த யாகத்துல பங்கேற்கனும்என கேட்க ரேகாவின் அப்பா தலையை சொரிந்தார்.  ஏற்கனவே அவருக்கும் சற்குணத்துகும் அவருக்கும் ஒரு நில விஷயத்தில் பெரிய தகராறு ஆகியிருந்தது.

மறுபடியும் அவனிடம் நாம் எப்படி போய் பேசுவது? இப்போ ஒரு ஹோட்டல் அடிதடி கேஸில் கைதாகி ஜாமீனில் வந்திருக்கான் என யோசிக்க சுரேஷ் சிரித்தான்.

சார் இதெல்லாம் ஒரு மேட்டரா? யாகத்துல சற்குணத்தை டிரஸ்ஸோட உக்கார வைக்கனுமா? டிரஸ் இல்லாம உட்கார வைக்கனுமா? அதை மட்டும் சொல்லுங்க சார்..”

.. நீங்க சொன்னா சற்குனம் கேப்பானா?”

கேப்பானா? உக்காருன்னா உக்காருவான். நில்லுன்னா நிப்பான்..”

ஓ அப்படின்னா இந்த யாகத்துல நா ரொம்ப சுலபமா பெரிய வெற்றி அடைய முடியும் என்றார்.

சரிங்க சார் நீங்க சொல்ற தேதியில யாகத்தை வெச்சுக்கலாம்

என்னைக்கு வெச்சுக்கலாம்கிறதை சொல்லிடுங்க.” ரேகாவின் அப்பா கேட்க

வர்ற பௌர்ணமி முடிந்து எட்டாம் நாள் தேய்பிறையில் எட்டாவது நாள் அந்த ஈஸ்வரனுக்கு ஜாதகத்திற்கு மோசமான டைம் ஆரம்பமாகுது., அப்போதிலிருந்து சுமார் 10,  14 நாழிகை நேரம் அவனுக்கு மோசமான ட்டம் தான். அதற்குள்ளாக நா இந்த  யாகத்தை செய்தால் சுலபமாக நாம் அவனை ஜெயிச்சிடலாம்.”

அப்படின்னா தேதி எப்ப வருது சார்?”  என கேட்க

ஆகஸ்ட் 10. நைட்டு 10 மணிக்கு ஆரம்பிச்சா 11 மணிக்குள்ள முடிச்சிடலாம்

ஓகே சார் ஆகஸ்ட் 10 ஆம் தேதி சாயந்திரம் 8  மணிக்கே ரேகா, ரேகா ஃபேமிலி , அந்த லேண்ட் ஓனர் பெரியவரோட  பசங்க,  மாஜி எம்எல்ஏ  ற்குணம் மொத்த பேரையும் கூட்டிட்டு வந்துடறேன் என்றான் சுரேஷ்.

அப்ப சரி . நம்பிக்கையோடு போயிட்டு வாங்க, மீண்டும் சந்திக்கலாம். .நான் யாகத்துக்கான ஏற்பாட்டை செய்யறேன்ரேகாவின் அப்பா அவரிடம் ஒரு தொகையை கொடுத்து விட, அனைவரும் பரந்தாமன் சாஸ்திரியின் வீட்டை விட்டு வெளியே வந்தார்கள்.

எல்லோரும் காரில் ஏறதம்பி உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல தம்பி., யாரோ ஒருத்தரா என் வீட்டுக்கு வந்தீங்க.,  இந்த அளவுக்கு ஆர்வமா உள்ளே இறங்கி வேலை செய்றீங்க.  என்னோட பொண்ணுக்கு நீங்க அண்ன்னு சொல்லும்போது நான்  நெகிழ்ந்த்துட்டேன். ரொம்ப நன்றி தம்பி என்றார் ரேகாவின் அப்பா.

அட பவாயில்லை சார் நீங்க வீட்டுக்கு போங்க., ஆகஸ்டு பத்து ஈவ்னிங்க் பாப்போம்என்றான் சுரேஷ்


வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்