பல பேரின்
வாழ்க்கையை திருப்பி போட தயாராக இருந்த.,
ஆகஸ்ட் 10 மாலை 6 மணி சுரேஷ் தனது அறையில் இருந்து, கோர்ட்டூர்புரம் ரேகாவின் வீட்டுக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தான்.
அவன் போன் அடிக்க., எடுத்துப்
பார்த்தான் நீலாங்கரை பரந்தாமன் சாஸ்திரி. போனை எடுத்தான்.
“ஹலோ சுரேஷ் தம்பியா?”
“சொல்லுங்க சாஸ்திரி, நான் அங்க தான் வந்துட்டு இருக்கேன். ஆஃப் அன் ஹவர்ல ரேகா வீட்டுக்கு போய் எல்லாரையும் அழைச்சிட்டு வந்து விடுவேன். அந்த சற்குணம் கிட்ட போன்
பண்ணி சொல்லிட்டேன். அவனும் அங்க
கரெக்டா வந்துடுவான்.அதே மாதிரி அந்த ஆர் ஏ புரம் இடத்த பறிகொடுத்த அந்த பெரியவரோட பசங்களையும் தேடி கண்டுபிடிச்சு, அவங்க கிட்ட, நாம பண்ண போற யாகத்தை பத்தி சொல்லிட்டேன். அவங்களும் இந்நேரம் கிளம்பி இருப்பாங்க. இனிமேல ஒரு
சிக்கலும் இல்லை” என சுரேஷ், தான் இந்த ஒருவார காலம் செய்த வேலையை விவரிக்க.,
பரந்தாமன் சாஸ்திரி “ஓ நல்லதுப்பா”
என்றார். ஆனால் அவரது குரல் மிகவும் பதட்டமாக , சோர்வாக இருக்க.,
“ என்னாச்சு
சாஸ்திரி., சொல்லுங்க”
“ இல்ல சுரேஷ் இப்போ ஒரு புது பிரச்சனை வந்திருக்கு.,”
“என்ன சார் சொல்லுங்க நான் என்ன பண்ணனும்?” என கேட்டான்
“அந்த ஈஸ்வர சந்திரன் இப்போ சமீபத்துல ஒரு பெண்ணை குறிவைத்து அவளையே
சேஸ் பண்ணிட்டு இருக்கான் அப்படின்னு நான் சொல்லியிருந்தேன் இல்லையா?”
“ ஆமா சார் சொல்லுங்க “
“அந்தப் பெண்ணை அவன் இன்னிக்கி ராத்திரி எப்படியாச்சும் ஸ்தூல ரூபமா நெருங்க போறான். அப்படி நடக்க கூடாது. ”
“ ஐயோ என்ன சார் சொல்றீங்க? யார் அந்த பொண்ணு?”
“இது சமரன் மூலமா எனக்கு கிடைச்ச
தகவல். ஆனா அந்தப் பெண் யார்? எந்த ஊர் அப்படியெல்லாம் என் உள்ளுணர்வால் கிரகிக்க முடியல. ஆனா அந்தப்
பெண்ணோட பெயர் சந்தியா, சம்யுக்தா சஞ்சனா அப்படிங்கற பேர்ல தான் வரணும். அது மட்டும்
இல்லாம அந்த பெண்ணை ஈஸ்வர் சந்திரன் அடைவதற்கு அந்த பெண்ணோட அம்மாவே உதவி பண்ணி
இருக்குற கொடுமை நடந்துகிட்டு இருக்கு”
“அப்படியா?”
“ஆமாம். அந்த பெண்மனியை
அவன் தன்னோட இச்சைக்கு ஆட்படுத்தி சிக்க வெச்சி.. இப்ப அவங்க மூலமா இந்த பொன்ணை அடைய போறான்.
அது மட்டும் நடக்க கூடாது. ஏன்னா? அந்த பொண்ணொட ஜாதகம் அப்படி. அதுக்கபற்ம் ஈஸ்வரின் அக்கிரமங்க
அதிகமாகிடும்”
“சரி அந்த பொண்ணோட அம்மா பேரையாச்சும் சொல்லுங்க”
“ம் அவங்க பேரு சந்திரா, சுஜாதா, சுமித்ரா அப்படின்னு இருக்கலாம் .அந்த பொண்ணு நகை போன்ற உலோகம் அதான்
மெட்டல் சம்பந்தமான வேலையில இருக்கணும். அதே மாதிரி அந்த
பொண்ணோட அம்மா நீதிமன்றம், பத்திரப்பதிவு போன்ற இடங்களில் பணிபுரியக்கூடிய அதிகாரியா
இருக்கணும். ஏன் வக்கீலாக கூட இருக்கலாம். இதுதான் என்னால கிரகிக்க முடிஞ்ச தகவல்கள். இதை வச்சு அவங்க யாருன்னு கண்டு பிடிக்கனும். அவங்கள அவன் கிட்ட இருந்து நாம
இன்னிக்கி காப்பாத்தி ஆகனும். குறிப்பா அந்த பொண்ணோட ஜாதகம் அந்த மாதிரி இருக்கு. இப்படிப்பட்ட ஜாதக அம்சம் இருக்கிற பெண்ணை ஈஸ்வர் அடைறது மூலம் அவனுக்கு கிடைக்கக்கூடிய யோகபலம் இன்னிக்கு நாம செய்யுற யாகத்தை தோல்வி அடைய செய்றதற்கு வாய்ப்பு இருக்கு” என சோகமாக சொன்னார்.
“சாஸ்திரி! நீங்க சொன்ன தகவல்களை வெச்சி நாம எப்படி அந்த ஃபேமிலிய கண்டுபிடிக்க
முடியும்? குறைந்தபட்சம் நீங்க எந்த ஊர்? ஏரியா சொன்னாக்கூட ரேகாவோட அப்பா ஆளுங்கள வச்சி என்னால கண்டுபிடிக்க முயற்சி பண்ணலாம். ஆனா அதுக்கு கூட,
நமக்கு இப்போ நேரம் ரொம்ப குறைவா இருக்கே சார்” என்றான்
“சாரிப்பா என்னால இந்த விஷயத்துல உனக்கு உதவும் முடியல. ஆனா அந்த பேமிலி யாருன்னு கண்டு பிடிச்ச, அவங்கள இன்னிக்கு யாகம் நடத்துற அந்த நேரத்துல காப்பாத்தி, அவனை அங்க அண்டவிடாமல் நீ செஞ்சா மட்டும்தான் நம்மளோட யாகம் பலிக்கும்.இல்லன்னா அவனுக்கு கோபம் அதிகமாகிஇதுல சம்பந்தப்பட்ட எல்லாரையுமே ஒரு
கை பார்த்துடுவான்.
ரொம்ப ஜாக்கிரதையா இதை செய்யனும். நியாயமா அவனை முடக்கி போடுற
இந்த யாகத்தை இந்நேரம் அவன் மோப்பம் புடிச்சி இருக்கனும். ஆனா இது வரைக்கும் அவனுக்கு
இது தெரியலன்னா., அவன் மூழ்கி இருக்குற மோகம் தான் காரணம்.
அது தான் அவனோட வழக்கமான உள்ளுணர்வை குறைச்சி இருக்கு..”
“கேக்கவே பதட்டமா இருக்கு “
“சுரேஷ்., எனக்கு அவனைப் பத்தி தெரியும் அதனால நான் சொல்றேன்”.
“சரிங்க சாஸ்திரி. நீங்க சொல்ற விவரங்கள் வெச்சி நான் எப்படி அந்த பேமிலியை கண்டுபிடிக்க முடியும்னு யோசிக்கிறேன்” என்றான்.
வீட்டைவிட்டு கிளம்ப இருந்த அவன்
மறுபடியும் வீட்டுக்குள் நுழைந்து படுக்கையில் பொத்தென்று படுத்தான்.
ஒரு சராசரி ஆள் என்றால் அவன் எத்தனை
வலிமையான ஆள் என்றாலும் அவனுடன் நாம் மோதி ஜெயிக்க முடியும். நம்முடைய உம்முடைய அதிகாரங்களை வைத்து
அவனை நெருங்க முடியும். பந்தாட முடியும். ஆனால் இதுபோன்ற உளவியல் எண்ணங்களில் விளையாடுகிற வித்தை தெரிந்தவனை என்ன செய்வது? என யோசித்தான்.
ஒரு ஆள் எந்தப் பெண்ணை குறி வைக்கிறான்
என்பதை எப்படி கண்டுபிடிப்பது? யோசித்தான் அவனது முகநூல் பக்கம் இருக்கா?
இல்லை அவனெல்லாம் முகநூலில் வர வாய்ப்பில்லை. அப்படி என்றால்
ஒருவன் ஒரு பெண்ணிடம் எந்தெந்த வழிகளில் தொடர்பு கொள்வான் மெயில்? அப்புறம் போன்? யெஸ் போன்? கரெக்ட் போன்
ஈஸ்வர் சந்திரன் நம்பர் தெரிந்தால் கடந்த ஒரு மாத காலமாக அவன் யாரெல்லாம் யாருடன எல்லாம் அடிக்கடி பேசி இருக்கிறான். என்பதை கண்டு
பிடித்தால், அதில் பரந்தாமன் சாஸ்திரி சொன்ன பேருடையை நம்பர் ஏதேனும் இருந்தால் அவன் டார்கெட் வைத்திருக்கும் பெண்ணின் நாம் ஈசியாக
கண்டுபிடித்து விடலாமே!
அவன் துள்ளிக் குதித்து எழுந்தான். ஈஸ்வர் பிரைய்ன் டெவலப்மன்ட் சென்டர் என நெட்டில் தேடினான். அவன் அலுவலகத்திற்கு போன் செய்து ஈஸ்வர் சந்திரனின் நம்பரை வாங்கினான்.
அதன்பிறகு பெங்களூர் கிரான்டனி பில்டர் அலுவலகத்தில் கண்ணன் சாருக்கு போன் செய்தான்.
“சார் என்ன?ஏது?ன்னுலாம் எல்லாம் கேட்காதீங்க.
நான்
அப்புறமா ஃபுல் மேட்டர் சொல்றேன். நான் ஒரு நம்பர் கொடுக்கிறேன் . அந்த நம்பர்லருந்து லாஸ்ட் ஒரு மாசத்துல பேசியிருக்கிற ‘கால் லாக் லிஸ்ட்’ உடனே என் மெயிலுக்கு அனுப்பனும்.சரியா? உங்களுக்கு அதிகபட்சம் அரை மணி நேரம்
டைம் தரேன் “
“சுரேஷ் சுரேஷ் ஏன் என்ன ஆச்சு?”
“ யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ் “என சொல்லிவிட்டு போனை வைத்து விட்டான்.
அடுத்த 40-வது நிமிடத்தில் கண்ணன் சாரிடம் இருந்து சுரேஷிற்கு ‘மெயில் செண்ட் ‘ என போனில் மெசேஜ் வந்தது.
உடனே சுரேஷ் லேப்டாப்பை ஆன் செய்து மெயிலை லாகின் செய்தான். அதில் வந்திருந்த எக்ஸெல் அட்டாச்மென்ட் ஐ டவுன்லோட் செய்து பார்க்க., ஈஸ்வர் சந்திர
கால் லிஸ்ட்டினை முழுவதையும் நோட்டமிட்டான்.
அதில் நான்கைந்து நம்பர்களுக்கு
மட்டும் அதிக முறை அழைத்திருந்தான், அழைப்பையும் பெற்றிருந்தான், ஆனால், அந்த எண்களில் ஒரு குறிப்பிட்ட எண் மட்டும் அதிகமுறை பதிவாகியிருந்தது.
அந்த எண்ணை மட்டும் எடுத்து ட்ரூகாலர்ரில் போட்டு பார்க்க சுஜாதா அட்வகேட் என என்று இருந்தது. சுஜாதா
அட்வகேட்டா?’ எங்கேயோ கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே? என யோசித்தான்.
அட மலரின் சித்தியா? என ஒரு கணம் யோசித்தவன், ‘இல்லை இல்லை இந்த சென்னையில் ஏகப்பட்ட சுஜாதாக்கள் இருக்கிறார்கள். நாம் அப்படி அவசரப்பட்டு விட முடியாது என நினைத்தவன் உடனே பரந்தாமன்
சாஸ்திரி சொன்ன பெயர் பட்டியலில் சுஜாதா இருக்கிறதா? என்று பார்த்தான் இருந்தது. கூடவே அவர் தந்த பெயர் பட்டியலில் ‘சஞ்சனா’ என்ற பெயர்
இருக்கிறதா? என பார்த்தான்.
அட இருந்தது. அவன் நெஞ்சு படபடத்தது. உடல்
நடுநடுங்கியது. அந்தப் பெண் நகை மற்றும் உலோகம் சம்பந்தமான வேலைகளை செய்வதாக
பரந்தாமன் சாஸ்திரி சொல்லி இருந்ததும்
அவனுக்கு உடனே நினைவுக்கு வந்தது.
‘அம்மா மூலமாக பெண்ணை குறி வைக்கிறான்’ என்றாரே. சுஜாதா மூலமாகத்தான் இந்த ஈஸ்வர் டிரை செய்கிறானா?
அப்படியெனில் சுஜாதா, சஞ்சானாவுக்கு எதிராக வேலை செய்கிறாளா?
என்ன கூத்து இது?
ஒரு வேளை ஈஸ்வர் சுஜாதாவை
முதலில் வீழ்த்தி பின் அவள் மூலமாக சஞ்சனாவை அடைவதற்கு முயற்சி
செய்கிறானோ? குடும்ப பெண் ,பேரழகி சஞ்சனாவை பலமுறை
சுரேஷ் பார்த்திருக்கிறான். அழகான குடும்ப மங்கை. எந்த உடை போட்டாலும் அழகாக இருப்பாள். இரு குழந்தைகளுக்கு தாய் என நம்ப முடியாத
கல்லூரி பெண் தோற்றம். இவள் ஈஸ்வரை கவர்ந்த்தில் ஆச்ச்சரியமில்லை.
கண்டிப்பாக அப்படித்தான் இருக்க
வேண்டும். ஏனென்றால் இவர்கள் சமீபத்தில்தான் குழந்தை வர்ஷாவை அழைத்துக்கொண்டு ஈஸ்வரின் சென்டருக்கு அடிக்கடி போய் வந்திருக்கிறார்கள்.
அப்படி என்றால் சுஜாதா,
சஞ்சனா தான் அந்த பேமிலியா? ஆம் என எனது உள்ளுணர்வு சொல்கிறது.
சுஜாதாவின் போன் நம்பர் இந்த காலத்தில்
இருப்பது போல சஞ்சனாவின் நம்பரும் ஈஸ்வரின்
கால் லிஸ்டில் இருந்தால் நிச்சயம் கன்ஃபார்ம்
செய்துவிடலாம்’ என நினைத்தபடியே அவன் சஞ்சனாவின் என் அந்த கால் பட்டியலில்
இருக்கிறதா? என்று பார்த்தான்.
சஞ்சனாவின்
எண் அந்த பட்டியலில் இல்லை . ஒருவேளை அவன் இன்னும் சஞ்சனாவிடம் பேசாமால் இருக்கலாம்’ என ஒரு முடிவுக்கு வந்தான்.
அட இந்த ஈஸ்வர் நாய் திரும்பத் திரும்ப எனக்கு தெரிந்த ஆட்களின்
வட்டாரத்தில் தான் தனது வேலையை காட்டிக் கொண்டிருக்கிறானே?.
சுரேஷ் கோபமானான்.
-------------