மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, July 30, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1810

 

இவர்கள் பிரச்சனையை சொல்லும் முன்னே அவர் எல்லாவற்றையும் தானாகவே ஒப்பித்தார். அவர்களின் முகத்தை பார்த்து பெயர்களைச் சொன்னார். கொஞ்ச நேரம் தியானித்தார். எல்லோருக்கும் குளிந்த மோர் வழங்கப்பட்டது.  

ரந்தாமன்  எல்லோரையும் அனுப்பிவிட்டு ரேகாவை உட்காரவைத்து முழுதும் பரிசோதித்தார்.

ரேகாவின் வீட்டின் ஆன்மாவும், ரேகாவின் ஆன்மாவும் ஈஸ்வர் சந்திரனால் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதைப் புரிந்துகொண்டார். ரேகாவை அனுப்பிவிட்டு சுரேஷ் , ரேகாவின் அப்பாவை மட்டும் உள்ளே கூப்பிட்டார்.

சுரேஷிடம் இந்த பெண் உங்களுக்கு என்ன வேணும் தம்பி என கேட்க, இந்த பெண் என்னோட தங்கை என்றான் சுரேஷ்.

ஓ அப்படியா நீங்க அப்பாவா? சரி நான் சொல்றதை நல்லா கவனமா கேட்டுக்கோ.,  ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஒரு ஆன்மா இருக்கு,  ஒரு புத்தி இருக்கு, நாம எல்லாம் என்ன நினைச்சுக்கறோம். நம்முடைய புத்தி தான் நம்மை யோசிக்க வெச்சு வழி நட்த்துன்னுஆனா நம்முடைய செயல்களை  நம்ம புத்தி தீர்மானிப்பது இல்லை., புத்தியை தீர்மானிக்கறது அவங்கவங்க  ன்மா தான்

ஆன்மா தான் உங்களுடைய புதிய தீர்மானிக்கிறது. அந்த ஆன்மா நல்லதா? கெட்டதா ? வலிமையானதா? பலவீனமானதா?  என்பதெல்லாம் உங்களுடைய வழிவழியாக வந்த பாவம், புண்ணியம் ,அப்புறம் நீங்க செய்கிற செயல்கள், இதை பொறுத்துதான் அமையுது

புரியுது சார்

ஒவ்வொரு புத்தியையும் அவங்க ஆன்மாதான் கட்டுப்படுத்துவது என்பது ஒரு பொதுப்படையான அறிவியல் . ஆனால் யாராச்சும் பலம் வாய்ந்த ஆன்மா இன்னொரு ஆன்மாவுக்குள்ல  புகுந்து அதை பலவீனப்படுத்தி அவங்க புத்தியை தடுமாற வைக்கும்.,  தன் இஷ்டத்துக்கு ஆட்டிப்படைக்கும்,  அதாவது நான் நினைக்கிற காரியங்களை உங்கள வச்சு என்னால ஈசியா செய்யமுடியும்

வசியம்னு சொல்வாங்களே அந்த மாதிரியா?”

வசியம் என்ற வார்த்தை சொல்லாதீங்க. அதெல்லாம் மந்திரவாதிகள் மாயாவிகள் செய்கிற அரைவேக்காடு சில்மிஷங்கள். நான் சொல்றது விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் கலந்த உள்ளீடுகள்.’

சரிங்க சார் என் பொன்னுக்கு என்ன ஆச்சு?”

ஒரு பலமான மோசமான ஆன்மாவுக்கு சொந்தக்காரன் உங்க பொண்ணோட புத்திய கலைச்சி அவளையுமறியாமல் அவளது உள்ளத்தால் ஊடுருவி.. அவளை தொடாமல அனுபவிச்சு வரான்அவன் தான் ஈஸ்வர் சந்திரன். ”

“…………………”

சொல்லப்ப்போனா பத்து வருஷம் முன்னாடி என் கிட்டதான் இருந்தான் இங்க சம்பாதிக்க முடியாதுன்னு தெரிஞ்சி வெளியில போய்ட்டான். இப்ப மோசமான ஜந்தாகிட்டான். அவனால பாதிக்கப்பட்டவங்க வாரம் ரென்டு பேர் எங்கிட்ட வராங்க

“………”

அவன் எண்ணத்தாலும் உள்ளத்தாலும் உன் பொண்ணை அனுபவிச்சிட்டு அவளை சீரழிச்சி., கூடிய சீக்கிரம் அவளை உடலையும் நேரடியாகவும் அனுபவிக்க தயாராக இருக்கிறான்.  பொதுவா சில நாள்லயே விர்ச்சுவலா தொட்ட ஒரு பொண்னை தானாவே, தன்னை தேடி  வர செஞ்சிடுவான். ஆனா உன் பொண்ணு விஷயத்துல அவனுக்கு ரொம்ப நாள் தாமதம் ஆகி இருக்குஅதுக்கு காரணம்.. உன் பொண்ணு அவ கல்யாண முஹூர்த்த்துல செஞ்சிருக்கிற யாகத்தோட பலம்., அப்புறம் நீ இத்தனை வருஷம் செஞ்சிகிட்டு வர தர்ம காரியங்களோட பலன். அதனால தான் இன்னும் அவன் மடியில விழாம உன் பொண்ணு மதில் மேல பூனையா இருக்கா.,”

ரேகாவின் அப்பாவுக்கு நா தழுதழுத்து கண்ணீர் பெருக,

ஆனா அதுக்காக ஈஸ்வர் உங்க பொண்ணை தொடாம விடாமாட்டான்னு சொல்ல முடியாது. அவன் தீவிரமா முயற்சி பண்னிகிட்டு தான் இருக்கான். என்னிக்கவது ஒரு நாள் அவன் நீங்க எல்லாம் தூங்கறப்ப உங்க வீட்டுல நுழைவான்

அய்யா?”

ஆமாம். இப்ப ஸ்தூல வடிவமா வரவன், அப்புறம் தேகமா வருவான். இப்ப அவன் வேற ஒரு பொண்ணை குறிவைச்சி போய்கிட்டிருக்கான். அதனால தற்காலிகமா அவன் கவனம் உன் பொண்ணு மேல விழாம இருக்கு.  அதனாலதான் உங்க பொண்ணுகிட்ட அவன் நெருங்காம இருக்கான். ஆனா என்னைக்காவது ஒருநாள் நேரடியா அவளை அவனை கூப்பிட்டு அனுபவிக்கும் அவன் திட்டம் போட்டிருக்கான்.”

அய்யோ., இந்த களவாணி பயல் யார் சார்? பேசாம அவனை குத்தி பீஸ்., பீசா பீச்சு மாங்கா மாதிரி வெட்டி ஈசிஆர் ரோட்டில் போட்டுட்டுமா? “ ரேகா அப்பா கர்ஜிக்க.,

ப்படில்லாம் அவனே போடமுடியாது.  சொல்லப்போனா இவ்ளோ பலம் பொருந்திய ஆள் உடம்பா உலவுற வரைக்கும் தான் மனுஷ சக்திக்கு கட்டுப்பட்டு ஓரளவு அவனை கட்டுப்படுத்த முடியும். அதுவே அவன் ஆன்மா உடலை விட்டு போய்ட்டா.. பிரபஞ்ச சக்தியாகி அப்புறம் யாரும் அவனை நெருங்க கூட முடியாது. அவனுக்கு தோணுறதை செய்வான். அதுவுமில்லாம அவன் உயிரை கொன்னுட்டா அது மோசமான சக்தியா மாறிடும். அவனை மனுஷ ஜென்மத்துலயே டம்மியாக்கிடனும் அதான் சரி.

அப்ப என்ன தான் இதுக்கு முடிவு? பணம் கொடுத்துடனுமா பத்மா விவகாரத்துல கொடுத்து செட்டில் பண்ண மாதிரி?” சுரேஷ் கோபத்துடன் கேட்க., பரந்தாமன் சாஸ்திரி நிமிர்ந்து  அவனை பார்த்தார்.

ஓ உனக்கு பத்மா விவகாரம் தெரியுமா? ‘

“…………..”

அந்த சமயத்துல அது  தான் சரியான முடிவு. அப்படி செஞ்சோம். ஆனா இப்ப அப்படி செய்ய வேணாம். நேரம் நமக்கு சாதகமா இருக்கு. இப்படி பணம் கொடுத்துகிட்டே இருந்தா அவன் கொட்டம் நாளுக்கு நாளு அதிகமாயிடும். “

வேற?”

அவனை கனிய வைத்து ஒண்ணுமே இல்லாம ம்மியாகி, அவன் புத்தியை நிர்மூலமாக்கி அவனை முடமாக்கனும்ஒரு பெரிய சாத்வீக யாகம் செய்து அவன் வாயை கட்டனும். அது ஒன்னு தான் அவனை அழிக்க சரியான வழி. தயவுசெய்து இதை கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க, நாம உணர்ச்சி வசப்பட்டாலும்வேப்பட்டாலும் அதனுடைய பலன் அவனுக்கு தான் கிடைக்கும்.

எங்கள மாதிரி ஆட்கள் கூட அவன் பண்ற அநியாயத்தை தட்டிக் கேட்க முடியாமல் முடக்கிப் போடவும் முடியாம  இருக்கோம்..அவன் இந்த மாதிரி எத்தனையோ பொண்ணுங்களை அவன் கெடுத்திருக்கான். அவங்க வாழ்க்கையையே சீரழிச்சிருக்கான். பலபேர் வெளியே சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளேயே நினைச்சுக்கிட்டு இருக்காங்க, பலபேர் அவன் உத்த்ரவு படி நடந்துகிட்டு இருக்காங்க, வெளிப்படையா சொல்லனும்னா அவனை யாருமே எதுவும் செய்ய முடியாது.  அதுதான் ஈஸ்வர் சந்திரனோட பலம்.”

“…………………..”

னா காலம் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்கிறது இல்லை . எப்படிப்பட்ட மோசமான அரக்கனுக்கும் ஒரு இந்தக்காலம் முற்றுப்புள்ளி வெச்சி இருக்கு. ஈஸ்வர் சந்திரன்லாம் எம்மாத்திரம்?”

என்ன சார் பண்ணலாம்?”

ஈஸ்வர் அப்படிங்கிறவன் ஒரு தனிப்பட்ட ஆளுதான். இதுவரைக்கும் அவன் தனிப்பட்ட முறையில் எந்த எந்த புண்ணிய காரியம் செய்யலை என்பதுதான் னமக்கு சாதகம்,.னா நிறைய பாவம் பண்ணி இருக்கான்.  இதயெல்லாம் ஒரே புள்ளியில் நிறுத்தி  அவனுக்கு எதிராக திசை திருப்பலாம்.  ஏன்னா.,  இப்போ ஈஸ்வர் சந்திரனுக்கு எதிரா நேரம் கூடி வந்து இருக்கு.,”

சார் எங்களுக்கு ஒன்னும் புரியல சார்

அதாவது ஈஸ்வர் சந்திரனால் யாரெல்லாம் இதுவரைக்கும் பாதிக்கப் பட்டாங்களோ அதுல சிலபேரை ஒன்னு சேர்த்து., அந்த கூட்டு முயற்சியா ஒரு புள்ளியா எதுத்தா ஈஸ்வர் சந்திரனை நாம ஒரு மூலையில் முடக்கி போடலாம்.”

அது எப்படி சார் நம்ம கண்டுபிடிக்கிறது?”

அது ரொம்ப ரொம்ப சுலபம்.னால ரொம்ப அதிகமாக பாதிக்கப்பட்டு இந்தநாள் வரைக்கும் அழுதுகிட்டு இருக்கிற ஒரு சுத்தமான ஆன்மா இருக்கு. அது நம்ம பக்கம் இருக்கு.  அதுக்கு பேரு மரன் என்றார்.

யார் சார் சமரன்?” ரேகாவின் அப்பா கேட்க. பரந்தாமன் சாஸ்திரி சமரனின் முழுக்கதையும் சொல்லி முடித்தார்.

அந்த சமரன் மட்டும் இப்போ உயிரோட இருந்து அவனுடைய ஆய்வுகள் புத்தகங்கள் எல்லாம் மக்கள் படிக்க ஆரம்பிச்சிருந்தா இந்த நேரம் உலகமே சமாதானமாக இருக்கும்.

அதெல்லாம் கெடுத்துட்டான் இந்த ஈஸ்வர் சந்திரன்”.

சார் இறந்துபோன சமரன் நமக்கு எப்படி சார் உதவி செய்வார்?”

கண்டிப்பா உதவி செய்வார் என்னால அவரை வரவழைக்க முடியும். நான் அவர் கிட்ட பேசுறேன் . அவர் துணை இருந்தால் போதும் அவர் தலைமையில் மத்த எல்லாரையும் நம்ம ஒன்னு சேத்துடலாம். ரொம்ப முக்கியமா ஈஸ்வர சந்திரன் ஒரு பெரியவரோஇடத்தை  அபகரிச்சி அந்த இடத்துல தான்.,அவர்  வீட்டோட நிலத்தில் தான் இப்போ அவனோட சென்டைரை கட்டி இருக்கான்., ந்த பெரியவர் அதனாலயே மனசு நொந்து செத்துட்டார். இப்ப அவர் பிள்ளைங்க கோர்ட்ல போய் இருக்காங்க. ஈஸ்வர் மேல கோபாமாகவும், ஆத்திரமாகவும் இருக்கற அந்தப் பெரியவரோட கையாலாகாத ஆன்மா நமக்கு துணை செய்யும். அதே சமயம் அந்த பெரியவர் பசங்களை  நம்ம வீட்டுக்கு அழைச்சட்டு வந்து யாகத்துல உட்கார வைச்சா அதுக்கு பலன் நிச்சயம் கிடைக்கும். எனக்கு தெரிஞ்சு பூஜையை ஆரம்பித்து 48 நிமிஷத்துலே அவனை நாம முடமாக்கி கட்டிடலாம். அதுக்கு நீங்க எல்லாம் உதவி பண்ண தான் முடியும் .

நிச்சயம் பண்றேன் அய்யா. அந்த பசங்களை நான் கூட்டிட்டு வந்து உக்கார வெச்சிடறேன் அது என் பொறுப்பு..” சுரேஷ் சொல்ல.,

அது மட்டும் இல்ல தம்பி , அவன் கூட இருந்த ஒரு ஆளு ஹெல்ப் வேணும், அவன் தோஸ்தும் இந்த யாகத்துல அவனுக்கு எதிரா வேலை செய்யனும். அப்படி ஒரு நம்ம கூடவே இருந்தா அதுவும் நிச்சயம் நம்ம யாகத்துக்கு யூஸ் ஆகும். அப்படி ஒருத்தன் இருக்கான் அவனை உங்களால கூப்பிட்டு வர முடியுமா?”

சொல்லுங்க சார்?”

அவன் பேரு சற்குனம் மாஜி எம் எல் ஏ. அவனும் இந்த யாகத்துல பங்கேற்கனும்என கேட்க ரேகாவின் அப்பா தலையை சொரிந்தார்.  ஏற்கனவே அவருக்கும் சற்குணத்துகும் அவருக்கும் ஒரு நில விஷயத்தில் பெரிய தகராறு ஆகியிருந்தது.

மறுபடியும் அவனிடம் நாம் எப்படி போய் பேசுவது? இப்போ ஒரு ஹோட்டல் அடிதடி கேஸில் கைதாகி ஜாமீனில் வந்திருக்கான் என யோசிக்க சுரேஷ் சிரித்தான்.

சார் இதெல்லாம் ஒரு மேட்டரா? யாகத்துல சற்குணத்தை டிரஸ்ஸோட உக்கார வைக்கனுமா? டிரஸ் இல்லாம உட்கார வைக்கனுமா? அதை மட்டும் சொல்லுங்க சார்..”

.. நீங்க சொன்னா சற்குனம் கேப்பானா?”

கேப்பானா? உக்காருன்னா உக்காருவான். நில்லுன்னா நிப்பான்..”

ஓ அப்படின்னா இந்த யாகத்துல நா ரொம்ப சுலபமா பெரிய வெற்றி அடைய முடியும் என்றார்.

சரிங்க சார் நீங்க சொல்ற தேதியில யாகத்தை வெச்சுக்கலாம்

என்னைக்கு வெச்சுக்கலாம்கிறதை சொல்லிடுங்க.” ரேகாவின் அப்பா கேட்க

வர்ற பௌர்ணமி முடிந்து எட்டாம் நாள் தேய்பிறையில் எட்டாவது நாள் அந்த ஈஸ்வரனுக்கு ஜாதகத்திற்கு மோசமான டைம் ஆரம்பமாகுது., அப்போதிலிருந்து சுமார் 10,  14 நாழிகை நேரம் அவனுக்கு மோசமான ட்டம் தான். அதற்குள்ளாக நா இந்த  யாகத்தை செய்தால் சுலபமாக நாம் அவனை ஜெயிச்சிடலாம்.”

அப்படின்னா தேதி எப்ப வருது சார்?”  என கேட்க

ஆகஸ்ட் 10. நைட்டு 10 மணிக்கு ஆரம்பிச்சா 11 மணிக்குள்ள முடிச்சிடலாம்

ஓகே சார் ஆகஸ்ட் 10 ஆம் தேதி சாயந்திரம் 8  மணிக்கே ரேகா, ரேகா ஃபேமிலி , அந்த லேண்ட் ஓனர் பெரியவரோட  பசங்க,  மாஜி எம்எல்ஏ  ற்குணம் மொத்த பேரையும் கூட்டிட்டு வந்துடறேன் என்றான் சுரேஷ்.

அப்ப சரி . நம்பிக்கையோடு போயிட்டு வாங்க, மீண்டும் சந்திக்கலாம். .நான் யாகத்துக்கான ஏற்பாட்டை செய்யறேன்ரேகாவின் அப்பா அவரிடம் ஒரு தொகையை கொடுத்து விட, அனைவரும் பரந்தாமன் சாஸ்திரியின் வீட்டை விட்டு வெளியே வந்தார்கள்.

எல்லோரும் காரில் ஏறதம்பி உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல தம்பி., யாரோ ஒருத்தரா என் வீட்டுக்கு வந்தீங்க.,  இந்த அளவுக்கு ஆர்வமா உள்ளே இறங்கி வேலை செய்றீங்க.  என்னோட பொண்ணுக்கு நீங்க அண்ன்னு சொல்லும்போது நான்  நெகிழ்ந்த்துட்டேன். ரொம்ப நன்றி தம்பி என்றார் ரேகாவின் அப்பா.

அட பவாயில்லை சார் நீங்க வீட்டுக்கு போங்க., ஆகஸ்டு பத்து ஈவ்னிங்க் பாப்போம்என்றான் சுரேஷ்


வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்

1 comment: