மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, March 16, 2023

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 32 Episode No. 2017 ( திபூவை இறுதி பாகம்)

  

மறுநாள் மனோ டிபன் முடித்து ஆபீஸ் போனான். மதியம் ராஜி அக்கா, பிள்ளைகளோடு வந்து விட்டாள்.

இப்ப எப்படி இருக்கு உடம்பு?” அவள் கேட்க., கீர்த்தனா எல்லாம் சொன்னாள்.

என்னமோ போ.. தெய்வம் போல அந்த பிள்ளை இல்லன்னா, என்ன ஆகி இருக்கும்? யாரு அவன் ஹரீஷா? நரேஷா?”

சுரேஷ்கா

ரொம்ப  நல்ல பிள்ளை தான் போ.., அந்த ரம்யா கடங்காரியும். உங்க வீட்டுல இருக்காளே மனோவுக்கு சித்தி பொண்ணு..”

ரஞ்ச்சிதா?”

ஆமா அந்த குஞ்ச்சிதா தான். அந்த சுரேஷ்க்கு ஆளா பறந்தாளுங்க..”

“……………”

நான் வந்து தங்கி இருந்தேனே அப்போ தான்., பாத்தேன் அந்த கூத்தை. .விட்டா அவுத்து போட்டு காட்டுவாளுங்க போல

அய்யோ அக்கா

நிஜாமாதான்டி.,  உன் பிரண்ட் ரம்யா இருக்காளே. ரொம்ப மோசம்டிஎப்படியாச்சும் அவனை கவுக்க தான் உங்க வீட்டுக்கே., வந்து நைட்டு தங்க்கினா.. ஆனா அந்த பையன் சொக்க தங்கம்டி.. கொஞ்சம் கூட மசியல., ‘ சொலிவிட்டு தங்கை முகத்தை பார்த்தாள். அவள் முகம் மாறுவதை கண்டு இன்னும் தூபம் போட.,

ம்கூம்..அவன் மனசில என்ன இருக்கோ. யார் இருக்காங்களோந்னு தெரியலை.. அவன் என்ன தெருவில கிடைக்கிறதை தின்ற ஜந்துவா? படையல்ல கிடைக்கிறதை மட்டும் தொடற பணக்காரானாச்சே? “

“…………’

அவன் பவிஷூம், அழகும்.. ஸ்டலும்., ம்ம்.. ஆக்டர் கெட்டான் போ

அய்யோ இப்ப எதுக்கு சுரேஷ் புராணம்

இல்லடி ..அவனுக்கு இங்க எவ்ளோ வேலை இருக்கும்., அதெல்லாம் விட்டுட்டு உன் கூடவே முந்தானை புடிச்சி நாள் முழுக்க  ஹாஸ்பிடல்ல இருந்திருக்கானே..அதை சொன்னேன்.. ம்ம்ம் எல்லாருக்குமா கிடைக்கும்

அதான் அவருக்கு போனை போட்டா வரலையே?”

மனோ  கிடக்கான். போய்  வேலையை பாரு., உன் அருமை அவனுக்கு எங்கே தெரிய போவுது?”

“…………….”

எங்கே எவ கிடைப்பாளோன்னு அலைஞ்சி., இருக்கறத விட்டு பறக்கறதை புடிக்கிற.., சராசரி ஆம்பளை புத்தி…”

என்னக்கா மனோ பத்தி இப்படி சொல்றீங்க?”

ம்ம் என் வாழ்க்கையும்..,சீரழிச்சிஎன்னையும் சீரழிச்சி

“....அக்கா என்ன சொல்றீங்க

ம்ம் என்னத்தை சொல்றது? அவன் ஒரு முறை தெரியாதவன்., விடு வேற பேசுவோம்..”

முடியாது எனக்கு இப்பவே சொல்லுங்க..” கீர்த்தனா உக்கிரமாக., தனது திட்டம் சரியான வழியில் தான் போகீறது என்பதை உணர்ந்தவளாக.,

கீர்த்தனா சொல்றதுக்கே நாக்கு கூசுது..  நாலு மாசம் முந்தி கடைசியா அன்னிக்கி உன் வீட்டுல வந்து இருந்தேன்ல..,”

ஆஆமா

அதான் ரம்யாவும் வந்து இருந்தாளே

ஆஆமா.. அப்ப ரம்யாவுக்கும்., மனோவுக்கும் ஏதாவது?” கீர்த்தனா சந்தேகமாய்  கேட்க.,

அவகிட்ட போயிருந்தா நான் ஏன் பேச போறேன்?”

அப்ப?” கீர்த்தனா  கலவரமாக.,

‘’ச்சீ சொல்லவே வெக்கமாயிருக்குடி.” ராஜி முகத்தை தொங்கப் போட

அக்காகீர்த்தனா அதிர,.

அவள் முகத்தை தன் முந்தானையால் பொத்தி கொண்டாள்.

அக்கா ராஜி எதையோ தனக்கு அதிர்ச்சியானதை சொல்லப் போகிறாள்  என்பதை உணர்ந்த கீர்த்தனா திகைத்து போனாள்.

அன்னிக்கு  நைட்டு மனோ வீட்டுக்கு வந்தப்ப கரன்ட் இல்ல., ஞாபகம் இருக்கா கீர்த்தனா?”

அவள் கேட்க., கீர்த்தனா விழிகள் விரிய யோசிக்க., அந்த சமப்வத்தை விவரிக்க ஆரம்பித்தாள் ராஜி.


பார்ட் 32 இறுதி பாகம் 

சுரேஷ் + கீர்த்தனா டிராக் மற்றும் திபூவை கிளைமாக்ஸ் மட்டும் ( 400 பக்கங்கள்) இப்போதே படிக்க..

TPV Suresh - Keerthana & Climax (400 பக்கங்கள்)