மதனை வாசலிலேயே வந்து வரவேற்றான் சர்குணம்..
" பழசை
எதுவும் மனசில் வெச்சுகாதே " என கூப்பிட்டான்
வீட்டுக்குள் அழைத்து சென்றான்.
அது பெரிய வீடு. நந்தினிகாக சற்குணம்
கட்டித்தந்த புத்தம் புதிய வீடு. சற்குணமும் மதனும் தனி அறையில் போய் நிறைய நேரம்
பேசினார்கள் ..
மதன் சொன்ன எல்லா கண்டிஷனுக்கு
சற்குணம் பணிவாக ஒத்துக்கொண்டான்.
எல்லோருக்கும் பரம திருப்தி .ஒரு பெரும்
தொகைக்கான அட்வான்ஸ் செக்கை சற்குணம் மதனிடம் தந்தான் "சாப்பாடு ரெடி
ஆயிடுச்சு. அதுக்கு முன்னாடி " என சொல்லி ஒரு சிறிய மதுவிருந்தையும் தந்தான்
சற்குணம் . மதன் ஒரே ரவுண்டாக நிறுத்திக் கொண்டான்.
அவனுக்கு எல்லாமே பிரமிப்பாக இருந்தது. சென்ற வருடம் வரையில் டீக்கடையில் அக்கவுண்ட்
சொல்லி டீ பிஸ்கட் சாப்பிட்டவன் இன்று இத்தனை பெரிய வீட்டில் நமக்கு முதல் மரியாதை
கிடைத்திருக்கிறது .
இந்த ஆளும் லேசு பட்டவன் இல்லை.
காசுக்காக தான் நம் முன் பணிவாக உட்கார்ந்திருக்கிறான். நம்மையே படத்தில் இருந்து தூக்கி எறிந்து
விடுவதாக தான் அன்றூ சவால் விட்டான். எனது
திறமை அப்புறம் எனக்கு கிடைத்த முதல் வெற்றி இவனது வாயை கட்டி உட்கார
வைத்திருக்கிறது.
இவனுடன் வேலை பார்த்த அந்த நான்கு
மாதமும் பெரிய மன உளைச்சல் தான். இப்போது
மறுபடியும் வேலை செய்ய கூப்பிட்டு இருக்கிறான். ஆனால் இந்த முறை நான்தான் முதலாளி
.நான் சொல்வதைத் தான் இவன் கேட்க
வேண்டும். சற்குணம் போதையில்
சரிந்தபடிமதிய உனவை எடுத்து கொண்டான்.
மதனுக்கு பசிக்கவில்லை. மதன் வெளியே
வந்து பார்த்தான் அவளது டீமில் பல பேரும் மது விருந்தில் திளைத்து கும்மாளம்
போட்டுக் கொண்டிருந்தார்கள....ஆடட்டும்.எத்தநை நாள்கள் வறூமையில்
உழன்ரார்கள். அனேகமாக எல்லாரும் மதனின்
டீம் ஆட்கள் தான் .மது குடித்துக் கொண்டும் சிகரெட் பிடித்துக் கொண்டு ஜாலியாக
இருந்தார்கள்..
அவன் வீட்டைச் சுற்றிக் கொண்டு கார்டன் பக்கம்
சென்றான். காற்று ரம்யமாக சுழன்று அவன் மீது அடித்தது பிற்பகல் காற்று என்பதால்
வெம்மை தணிந்து குளிர்ச்சி இருந்தது. ஏசி காற்று விட இந்த காற்று அவனுக்கு மிகவும்
பிடித்தமாக இருந்தது.
லைப்பில் எல்லாமே செட்டில் ஆகி விட்டது. இந்த
படம் வெளியாவதற்கு முன்பு மதன் என்றால் யாருக்குமே தெரியாது இப்போது ரோட்டில்
சென்றால் அடையாளம் கண்டுபிடித்து விடுகிறார்கள் .ஓரளவு புகழ் கிடைத்துவிட்டது
.வயது முப்பதை தாண்டி விட்டது. உடனே கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்.
பெண் எப்படி இருக்க வேண்டும் .
அவனுக்கு பத்மா தான் ஞாபகத்துக்கு வந்தாள். இந்த பத்மா மாதிரியா? பத்மா பேரழகி .
ஆனால் சினிமா நடிகை குடும்பத்திற்கு ஏற்றவள் இல்லை.
நடிகையை நடிகை தான் பார்க்க வேண்டும் அதிகபட்சம்
போனால் கட்டில் வரை கூட்டிப் போகலாம் ஆனால் அவளையே கல்யாணம் செய்து குழந்தை பெற்று
அவள் ஒரு சராசரி மனைவியாக இருப்பாளா? அந்த பெண் ஃபீல்டில் பெரிய ஸ்டாரக வலம் வருவாள்.
நாமே நினைத்தாலும் அவளை தொட முடியாது..
கிட்டத்த்தட்ட அவளது வளைவுகள்
அவனுக்கு அத்துப்படி.. முயன்றிருந்தால் பத்மா இன்னேரம் கிடைத்திருப்பாள் .ஆனால், தன்னை குரு ஸ்தானத்தில் வைத்திருக்கிறாள் .
வேண்டாம்.
மணிசார் ஆபிசில் இருந்து அவளிடம்
பேசி இருப்பதாக கேள்வி...போகட்டும்...
நமக்கு மனைவி என்றால் எப்படி இருக்க
வேண்டும்? காமமும்
அன்பும் எந்த புள்ளியில் சந்திக்கிறதோ
அந்தப் புள்ளி தான் மனைவி என்பதால் அவனுக்குள் ஒரு வரி ஓடியது..
" ஹலோ
ஹீரோ சார் என்ன இப்பவும் வாழைப்பழம் தான் தேட வந்தீங்களா ?" குரல் கேட்டு
திடுக்கிட்டு திரும்பினான். பழக்கப்பட்ட
குரல் அங்கே சற்குணத்தின் மனைவி நந்தினி நின்றுகொண்டிருந்தாள் .
கருநீல ஊதாப்பூ புடவையில் அதே நிறத்திலான
ரவிக்கையில் அலங்காரம் என்ன ஒயிலாக நின்றுகொண்டிருந்தாள்..
அவனைப் பார்த்ததும் அடக்கமாய் சிரித்தாள்//
" நீங்க
..?" என
அவன் இழுக்க
"நான் தான் நந்தினி .சற்குனம் சாரொட ஒய்ஃப் ..ஏன்
பெரிய ஆளானதும்... என்னை மறந்துட்டீங்களா?"
என கேட்டாள்.
" ஆமா
ஒரே தடவ ஒரு தடவை தான் நமது பார்த்தோம்...
ஆனா உங்கள என்னால மறக்க முடியாது நீங்க தான் என்னை முதல் முதலா ஹூரோன்னு
ஒத்துகிட்டீங்க ...மறப்பேனா?"
" ஹா
ஹா ஹாஆ ஹா " என சிரித்தாள்..
"பரவாயில்ல
நலலவே பேசறீங்க. நான் உங்களை ஹீரோன்னு
முதல் நாளே ஒத்துக்கிட்டேன் ஆனா இப்போ தமிழ்நாடே உங்களை ஹீரோன்னு
ஒத்திக்கிச்சி.. இல்லே.."
"................கிண்டல் பண்னதீங்க மேடம்"
"கிண்டல்
இல்ல நிஜம் தான்..மதன்..ஹீரோ மட்டும் இல்ல சூபர டூப்பர் டைரக்டர் நீங்க இப்ப"
அவள் சொல்ல .,
"ஆமாங்க
ரொம்ப தேங்க்ஸ் நீங்களும் உங்க வீட்டுக்காரர் சற்குணம் சாரும் என் மேல ரொம்ப
நம்பிக்கை வச்சு இருந்தீங்க.."
" அவர பத்தி எனக்கு தெரியாது ஆனால் நான் உங்க மேல
ரொம்ப நம்பிக்கை வச்சு இருந்தேன். இப்போ நீங்க ஹீரோ மட்டுமில்லை
டைரக்டர்..காங்க்கிராட்ஸ் .." என்றாள்
நந்தினி..
"தேங்க் ஸ் ..ரொம்ப பாசிட்டிவான வார்த்தைகள் உங்க கிட்ட இருந்து."
To Read Full Story திரும்புடி பூவை வைக்கனும் 24 ஆம் பாகம்