மறு நாள் காலை எட்டு மணிக்கு பாபுவிடமிருந்து சுரேஷ்க்கு போன்.
“சார் மலர்
மேடம் உங்க நம்பர்,
அட்ரஸ் கொடுத்தாங்க. அர்ஜென்டா உங்களை பாக்க சொன்னாங்க. நான் உங்க வீட்டுல கீழ
தான் நிக்குறேன்” என்றான் பாபு .
“ஐ சீ. வந்துட்டீங்களா? மேல வாங்க ஃபர்ஸ்ட்
புளோர்”
அதற்கு முன்பு சுரேஷ் பாபுவை ஒன்றிரண்டு முறை பார்த்து இருக்கிறான், எனவே பாபு மேலே
வந்ததும் சுரேஷ் சினேகமான புன்னகை உதிர்த்து விட்டு அவனிடம் பேசினான். ரேகாவின்
பிரச்சனையை சுருக்கமாக சொன்னான்.
“சார் அந்த ஈஸ்வர், இதை
செய்யக் கூடியவன் தான் சார்..
அந்த பொண்ணோட கல்யாணத்துக்கு அவனும் வந்து
இருக்கான்னா., அந்த பொண்ணுக்கு நைட்டு விர்சுவலா செக்சுவல் டார்சர் ஆகுதுன்னா., இதுல நீங்க வேற எதுவும் நினைக்க சான்சே இல்ல சார்., கண்டிப்பா இது அவன் வேலை தான் இதுல யோசிக்கிறது ஒண்ணுமே இல்ல சார்.”
“ஆனா ஆக்டரஸ் பத்மாவுக்கு
என்ன ஆச்சு? எப்படி சால்வ் ஆச்சு?”
‘சார். இன்டஸ்ட்ரியில யாருக்கும் தெரியாது சார்.. பத்மா
மேடத்துக்கு விர்ச்சுவலா இன்டைரக்டா டெய்லி செக்ஸ் டார்ச்சர் சார்..பயங்கரமா வெள்ளைப் படும். உடம்பே மெலினி போச்சு. ஷூட்டிங்கே போவாது. எனக்கு உண்மையில் அந்த பிரச்சினை என்னன்னு தெரியாது. பத்மாவோட அப்பா,அம்மாதான் என்னை கூப்பிட்டு மேட்டரை பாலிஷா சொன்னாங்க, பத்மா மேடம் அவன் பேரை சொன்னாங்க. அவன் தான்னு கன்பார்மா சொன்னாங்க”
“யாரு?”
“அதான் ஈஸ்வர் சந்திரன். ஜெகஜ்ஜாலன் சார் அவன். நான் போய் அவன் முன்னாடி நின்னவுடனே ‘ பத்மா அனுப்பினாளா?ன்னு கேட்டான் சார்…எனக்கு தூக்கி வாரி போட்டுடுச்சி.. அவ்ளோ பெரிய ஆளு. ஆனா நான் கூப்டவுடனே வந்தான்.
மேடம் கிட்ட ‘நான் எதுவும் உங்களை பண்னலன்னு’ சொன்னான்.. போய்ட்டான். ஆனா திரும்ப திரும்ப நைட்டுல டார்ச்சர் பண்னான். நாங்க நிறைய மாந்திரீக இடங்கள் டிரை பண்னிட்டு
அப்புறம் நீலாங்கரை பரந்தாமன் சாஸ்திரி பத்தி கேள்விபட்டு
அவர்கிட்ட போனோம்..
அவரும் பத்மா மேடத்தை ஃபுல்லா அனாலிசிஸ் பண்ணிட்டு‘ இதை பண்ணது ஈஸ்வர் தான்னு சொன்னாரு. அவன பத்தி புட்டு புட்டு வைச்சாரு.”
“.ம்”
“அப்ப அவர் சொன்ன ஸ்டேட்மெண்ட் தான் ஈஸ்வர் சந்திரன் என்ற ஒரு ஆளு., இதெல்லாம் பண்ணிட்டு இருக்கான்னு.
நீங்க போய் சமரசம் பேசிட்டு வான்னு சொன்னாங்க. அதாவது சண்டைகாரன் கால்ல போய் விழ சொன்னாரு. நாந்தான் போனேன்.”
“ போயி?”
“இருவது லட்சம் கேஷா
கொடுத்தோம். அதுக்கப்பறம் அவன் மேடம் கிட்ட வரதே
இல்லை.”
“என்னய்யா இது? இவ்ளோ தொந்தரவு பண்ணியிருக்கான் அவனுக்கு போய் பணம் கொடுத்துட்டு வந்திருக்கீங்க?”
“சார் புரூப் இல்ல. இதெல்லாம் விச்சுவல் சமாச்சாரம்.
அவனை யாரும் ஒன்னும்
பண்ண முடியாது.
கிட்ட நெருங்க முடியாது..சார். மைன்டை கன்ட்ரோல் பண்ணிடுவான். நீங்க கோபமா போனா கூட, அவன் முன்னாடி பெட்டிபாம்பா அடங்கிடுவீங்க. உங்களுக்கு அரசியல் பேச்சாளர் சம்பத்து தெரியும்லே”
“…………..ம்”
“அந்த ஆளை வாயை கட்டி மூலையில ஒரு
ஓரமா உக்காரவெச்சி.,
செல்லாக்காசாக்குனது
இவன் தான்னு பேசிக்கிறாங்க..ஃபுல் பொலிடிக்க்ல சப்போர்ட் அவனுக்கு., “
“ இவ்ளோ மோசமானவனா அவன்? ஆனா அவன் நல்ல
ஸ்காலர்னு நீதான்
மலருக்கு, அவங்க தங்கை பேபிக்கு ரெகமன்ட் பண்ணியாமே?”
“ஆமா சார்.. ஈஸ்வர் சந்திரன் நல்ல ஸ்காலர்தான்.
ஆனா நல்ல மனுசனா? கெட்டவனான்னு கேட்டா தெரியாது.
சுரேஷ் சார் இங்க கெட்டவங்க, நல்லவங்க யாருமே இல்ல சார். ஈஸ்வர் இந்த மோசமான வேலை யெல்லாம் செய்யறவன்தான். இப்படி செய்தா அவனுக்கு பணம் தனியாக கிடைக்குது. சொல்லப் போனால் நல்ல வேலை செஞ்சி சம்பாதிச்ச பணத்தை விட தப்பான வேலைல சம்பாதிச்ச பணம் தான் ஜாஸ்தி. “
“…………ஓ ”
“அவனை பாக்க போனப்ப தான் எனக்கு அந்த
சென்டர் பத்தி தெரிஞ்சது
.நிறைய பேரை குணப்படுத்தறான்.”
“ஆனா நல்லதை விட கெட்டதை தானே அதிகம்
பண்றான். இவனால அந்த ரேகாவோட பேமிலியே ஸ்தம்பிச்சு
போய் நிக்குது“
“உண்மை தான். நூத்துக்கு அஞ்சு தான் நல்லது பண்றான். ஆனா, இதைப் பற்றி யாருமே புகார் கூட கொடுக்க முடியாது. இவன் ஆசைப்பட்ட பொண்ணுங்க எல்லாம் இந்த மாதிரி பண்றான்னு நான்
நினைக்கிறேன். பத்மா மேடத்தை சீரழிச்சவன்
இவன் தான். அதுல பெரிய காசை பாத்துட்டான். ஆனா நீங்க சொல்ற ரேகா பத்தி எனக்கு தெரியல
சார்… ரேகா அப்பா பெரிய பணக்காரர்னு சொல்றீங்க. பேசாம பத்மா மேடம் கேஸ்ல டொன்டி லேக் கொடுத்தாபோல. ரேகா கேஸ்க்கும் பணம் கொடுத்து அவனை ஆப்
பண்னிடலாமா?”
“..நோ… அதுக்கப்பறம் யார் வேணா என்ன வேனாலும் செய்யலாமுன்னு
ஆகிடும். இதே வேலையாதான் அவன் அலைவான்.. அவனை ஒரு பாய்ன்ட்ல ஸ்டாப் பண்னனும்..”
“அது யாராலும் முடியாது சார்.. அவன் வித்தைக்காரன்.. ஒரு பெரிய அமௌன்ட் கொடுத்தா அந்த ஈஸ்வர் விலகி போய்டுவான்.
இதை ஈஸியா சரி பண்ணிடலாம். பொண்ணோட அப்பா பணக்காரன் சொல்றீங்க ““
“நோ பாபு… தட்ஸ் ராங்க்., எல்லோருமே இந்த மாதிரி
பணத்தை கொடுத்து விட்டு வம்பு
வேணாமுன்னு விலகிட்டோம்னா., அப்புறம் வேறு யார்தான் அவனை தண்டிக்கிறது?”
“சார் நீங்க நினைக்கிற மாதிரிம் அவன் நம்மள மாதிரி சாதாரண
மனுஷன் இல்ல சார். அவன் பயங்கரமான
வித்தைக்காரன். பெரிய பெரிய அரசியல்வாதி எல்லாம் அவனுக்கு நல்லா தெரியும். ஏன் உங்களுக்கு மாஜி எம்எல்ஏ சற்குணம் தெரியுமில்லையா?”
“ஆமா “
“சற்குணம் அந்த ஈஸ்வருக்கு பயங்கரமான தோஸ்து சார். அந்த .சற்குணம் தான் அந்த இடத்தையே வாங்கி கொடுத்து, அந்தாளுக்கு
சென்டர் கட்டிக் கொடுத்திருக்கிறார் “
“அப்படியா சரி, ஓகே நான் பார்த்துக்கிறேன் எனக்கு
அந்த நீலாங்கரை பரந்தாமன் சாஸ்திரிகள் அட்ரஸ் மட்டும் கொடுக்க முடியுமா?”
“சார் நீங்க நான் சொல்றதை ஒத்துக்க
மாட்டீங்க இல்ல?.
பரந்தாமனை பாக்கறதுல
யூஸ் இல்ல சார்”
“ நீ அட்ரஸ். கொடு போதும்”
“சரி. அப்போ ஒன்னு பன்ணுங்க.. அட்ரஸ்
தரேன். அவங்களை முதல்ல நீலங்கரை பரந்தாமான் சாஸ்திரி கிட்ட கூட்டி
போய் பாருங்க. அவரே உங்களை ஈஸ்வர்கிட்ட தான் போய் கால்ல விழ சொல்வார் பாருங்க..” அவன் உறுதியாக சொல்ல., சுரேஷ் யோசித்தான்.
அன்று மதியமே ரேகாவின் வீட்டிற்கு சென்றான் சுரெஷ்
விஷயத்தை விலாவாரியாகச் சொல்லாமல், அவர்களை பயமுறுத்தாமல், மிக சாதாரணமாகவே சொன்னான் சுரேஷ்
“சார் உங்க பொண்ணுக்கு நடந்திருக்கிறது உளவியல் ரீதியான ஒரு தாக்குதல். இதை எங்குமே பதிவு பண்ண முடியாது. புகார் கொடுக்க
முடியாது. ஆனால் இதை யாரோ.. அவர்களுக்கு பண்ணி இருக்காங்க நம்ம கண்டுபிடிக்கணும்”
“அதான் அந்த ஈஸ்வர் சந்திரன்னு நேத்தே
தெரிஞ்சிடுச்சே..ராஸ்கல். மாயவித்தை காட்டியா மயக்குறான்? ஆளுங்களை அனுப்பி கை, காலை கட்டி தூக்கி வந்த்துரட்டுமா? சொல்லு., உனக்காக தான் வெய்டிங்க..”
“ நோ. அப்படி அவனை ஈஸியா எதுவும் அவனை பண்னிட முடியாது. முதல்ல அவன் தானா இது? னு கன்பார்ம் பண்னிக்கனும். அப்புறம் இந்த விஷயத்தை எப்படி டீல் பண்றதுன்னு
யாராச்சும் பெரிய ஸ்காலர்கிட்ட அடவைஸ் கேக்கனும்..”
“என்னப்பா சொல்றே?”
“யெஸ் அவசரப்படாதீங்க?”
“இதை சாதாரண சாமியார்கள் கிட்ட கொண்டு போக முடியாது. யாராச்சும் பெரிய ஸ்காலர் கேட்டு போனா குணப்படுத்தலாம். எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் நீலாங்கரையில் இருக்காரு. நீங்க உங்க பொண்ணு எல்லாரும்
கிளம்புங்க..’என்றான்.
அவன்
அப்பாவும் அம்மாவும் அக்காவும் காரில் கிளம்பினார்கள்.
சுரேஷ் பைக்கில் அவளுக்கு முன்னே
சென்றான். உச்சிவெயிலில்
நீலங்கரை பரந்தாமன் சாஸ்திரி வீட்டை கண்டுபிடித்து அவன் அவர்கள் முன்னே போய்
உட்கார்ந்தார்கள்.
வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்.,