மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, April 8, 2025

அடுத்த நாவல்?

 நீண்ட நாள்களுக்குப் பின் எனது அடுத்த நாவல்.

இரு பெரிய பாகங்களாக வெளியிடலாம் என நினைக்கிறேன். முதல் பாகம் மட்டும் இப்போது.

இந்த  நாவல் இரண்டு, மூன்று குடும்பங்களுக்கு இடையே மாறுபட்ட  சுவாரசிய மற்றும் நெருக்கடியான  சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி இருக்கிறது.

நாவலில் வரும் தங்கராஜ் , லோகேஷ், பத்ரி, முருகேசன், ரங்கசாமி கதாபாத்திரங்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டது.  நியாய , அநியா, பரிதாபங்களை உள்ளடக்கியது,

அதுபோலவே பெண்களின் கதாபாத்திரத்தில்  ஜெயந்தி, சரண்யா, பவித்ரா, ஸ்வாதி, புனிதா, தனலட்சுமி  ஆகியோரின்  இறுதியான தேவை  ஒன்றாக இருந்தாலும் ஒருவருக்கொருவர்  தங்களது வாழ்வியல் குணாதிசயத்தில் மாறுபட்டவர்கள். அவர்களின் கடந்த கால பின்னணியும், நிகழ்கால நெருக்கடியும் ஒப்பிட முடியாத வகையில் வெவ்வேறானது.

இவர்கள் நடுவே காமம் பிரதானமாக இல்லாமல் போக வாய்ப்பே இல்லை தான். ஆனால், அதை எப்படி? யார்? எப்போது? தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்? நிராகரிக்கிறார்கள் என்பது தான் விஷயமே..

காமம் போல பெண்களுக்கு மறுக்கப்படுபவைகள்,  எப்போதும் ஆண்களால் மறைக்கப்படும். அவை அலுமாரிகளில் ஒளிக்கப்பட்டிருக்கும் எலும்புக்கூடுகள் போல ., துணிந்து அவற்றை  வெளியில் தூக்கிப் போட்டால் இதைப்போல் பல  நாவல்கள் வெளிவரும். 


 நாவலில் உலவும் ஜெயந்தி, சுவாதி, சரண்யா, தனலட்சுமி, சுந்தரி என யாருமே தவறானவர்கள் அல்ல., அவர்களுக்கான நியாயங்கள் வெளியில் சொல்லப்படவில்லை என்பதை  இந்த  நாவல் சித்தரிக்கிறது.

 கலவி, கூடலை யார் வேண்டுமானாலும் எழுதலாம், ஆனால் அதன் பின்னால்  நிறைந்து இருக்கக் கூடிய  உயிர்ப்பு,    நாவலின் உயிரோட்டமான ஜீவன் ,  லாஜிக்காக நிகழக் கூடிய சந்தர்ப்பங்கள் ,  கதாபாத்திரங்களின்  மாறும் மனநிலை,  அவர்களுக்குள் நிகழும் கிறங்கடிக்கும் வசனங்கள், படிக்கும் வாசகர்களே அந்தந்த  இடத்தில் பாத்திரங்களாய் உருமாறி படிக்கக் கூடிய  கிறக்கம் இதெல்லாம் இருந்தால் தான்  சாதாரண காம நாவல்  என்பது, என்றென்றும் நெஞ்சில் குடியிருக்க கூடிய முத்திரை நாவலாக அமையப் பெறுகிறது. அதற்காகத் தான் இத்தனை மெனக்கெட வேண்டியதாக இருக்கிறது.

இந்த  நாவலில் வரும் ரயில் சம்பவமும், ஜன்னல் சாளரத்தில் அவ்வப்போது எட்டிப் பார்த்து கதறும் ஆணின் வெறித்தனமான ஆதங்கமும், முதிர்ந்த  இரு பெண்களின் தீரா காமமும், சுந்தரி, சரண்யா  போன்ற இளம்பெண்களின்  சந்தர்ப்ப சூழ்னிலையும்., சேர்ந்து அடங்கிய மெகா தொகுப்பு இது.

அசரடிக்கும் மூன்று தனித்தனி திரைக்கதைகளை   இணைத்து,  ஒரே நாவலாக கொடுத்திருக்கிறேன். மற்றதெல்லாம்   நாவலுக்கு சுவாரசியம் கூட்டும்,  இணைப்பு கிளை கதைகள். 

எந்த ஒரு சூழ்நிலையிலும் எனது வாசகர்களின் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி விடக் கூடாது என்ற  எனது நிலைப்பாடு காரணமாகவே  நாவலை கொஞ்சம் தாமதமாக்கி விடுகிறது. 

இந்த நாவலில் வரும்  வாழ்வில் விளிம்பு நிலையில் தவிக்கும் பெண் கதாபாத்திரமான தனலட்சுமி எந்த சூழ்னிலையிலும் தன் ஒழுக்க நிலையில் இருந்து தவறாமல் வாழ போராடி, ஒரு கட்டத்தில் அதை சமாளிக்க முடியாமல் தோற்பது ஆகட்டும்., 

அவள்  தனக்கு நேர்ந்ததை சொல்லும் கதையில் சம்பவங்களை  மட்டும் சரியாக சொல்லி பின் ஆண் பாத்திரத்தின் பேரை மட்டும் மாற்றி சொல்லி மனசை ஆற்றிக் கொள்வாதகட்டும்.., 

அந்த  நிஜ பின்னணி  அவளின் மருமகன ரங்கசாமியின் கண்ணொட்டத்தில் விரிவதாக இருக்கட்டும். மாமியாரையெ விட்டுக் கொடுக்காதவன் மனைவியை விட்டுக் கொடுக்கும் சூழ் நிலைக்கு தள்ளப்படுவதாகட்டும்., 

இந்த  மாறுபட்ட புதுமையான கதையமைப்பினை எந்த சினிமாவிலும், நாவலிலும் வாசகர்கள் படித்திருக்க மாட்டார்கள்.

நீங்கள் நீண்ட நாள் காத்திருந்ததற்கு இந்த  நாவல் மூலம் நியாயம் செய்ய முயன்றிருக்கிறேன்.

மொத்தத்தில் இந்த நாவல் உங்களுக்கு மாறுபட்ட புதுமையான ஒரு அனுபவத்தை நிச்சயம் தரும் என்பது உத்தரவாதம்.

இந்த நாவலுக்கு நான் ஒரு தலைப்பினை மனதில் வைத்திருந்தேன். ஆனால்., சிங்கப்பூரில் வசிக்கும்  ஞானசேகரன் அவர்கள் ஒரு சூப்பர் தலைப்பினை சொல்லி இருக்கிறார்.

அதையே இந்த நாவலுக்கு தலைப்பாக  தேர்வு செய்கிறேன்.

அது..

" வெல்ல முடியாத வேட்கைகள்"

உண்மையில் இந்த  நாவல் சொல்ல வருவதும் அதையே தான். அதையே நாவலை படம் பிடித்து டைட்டில் சொல்கிறது.

சூப்பரான டைட்டில் வழங்கிய  சிங்கப்பூர்   ஞானசேகரன் அவர்களுக்கு " வெல்ல முடியாத வேட்கைகள்" நாவலின் இரு பாகங்களும் அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்படுகிறது.

 இந்த  நாவலின் முதல் பாகம் ஏப்ரல் 12 ஆம் தேதி  வெளியாகும்.

- Author  NV


REGISTER TO BUY