அன்பு நண்பர்களே!
என்னைப் போன்ற பல எரோடிக் எழுத்தாளர்கள் இந்த ஒரு வருடத்தில் ஆதர் என்.வி இணையதளத்தில் தங்களது கதைகளை அனுப்பி வெளியிட சொல்கிறார்கள். ( ராயல்டி கூட தேவையில்லை என சொல்கிறார்கள்) எனக்கும் அவற்றை அனைத்தும் வெளியிட ஆசைதான்.
ஆனால், அவற்றில் உள்ள நடைமுறை சிரமங்கள் சில :,
1. அது முழுக்க அவர்கள் கதையா என்கிற சரிபார்ப்பை எப்படி நான் தனி ஆளாக செய்வது?
வேறொரு இணையதளத்தில் யாரோ எழுதிய கதையை தலைப்பை மட்டும் மாற்றி சில விஷமிகள் அனுப்புகிறார்கள். இதை தணிக்கை செய்ய என்னால் முடியவில்லை.
2. ரென்டாவது , அதை படிக்க எனக்கு போதுமான அவகாசமில்லை.
3.பல கதைகள் 20,30 பக்கங்களில் முடிகிற சாதாரண கதையாக இருக்கிறது. ஆதர் என் வி இணையதளத்தில் வெளியாக வேண்டுமென்றால் குறைந்தது 100 பக்கங்களாகவாவது இருத்தல் வேண்டும் ப்ரண்ட்ஸ்...
4. கதைகள் பலவற்றில் இயல்பான நடை இல்லாமல், , ஒழுங்கற்றதாகவும் படிப்போரை ஈர்க்கும் வல்லமை இல்லாமலும், ஆபாசம் , அருவெறுப்பு போன்றவை மிகுந்து இருந்தால் எப்படி வெளியிடுவது? " வேங்கை மகன்" என்ற 260 பக்க கதையை அதனாலாயே நிராகரித்தேன். வெரி சாரி. அதே போல், எந்தக் கதையாக இருந்தாலும் ஒரு மாரல் இருக்க வேண்டும் . போதாதற்கு எழுத்து பிழைகள் நிறைய..
6. அதே போல் இன்செக்ட் உறவு கதைகளை எப்போதும் நான் வரவேற்பதில்லை.
அதனால் தான் ஆர்.ரமனியன் என்பவர் தெள்ளிய நடையில் எழுதிய " மஞ்ச குருவி" 400 பக்க கதையை என்னால் அங்கீகரிக்க முடியவில்லை. மன்னிக்கவும் . " சில நேரங்களில் பல மனிதர்கள்" கதை கூட காமம் தூக்கலானது தான். ஆனால், அது தகாத உறவு கதை. இவற்றிற்கு இங்கே இடமில்லை.
7. அதே போல உங்க கதைகளை திரும்ப திரும்ப அனுப்ப தேவையில்லை. ஒரு முறை அனுப்பினால் போதும். எனது லைப்ரரியில் கண்டிப்பாக அது சேர்ந்து விடும்.
8.நீங்கள் ராயல்டி வேண்டாமென்றாலும் அதை கொடுப்பது என் கடமை. சோ வங்கி விவரம் அனுப்ப தயார் இல்லை எனில் கதையே அனுப்ப வேண்டாம்.
9. அப்புறம் முகப்பு அட்டை ( ரேப்பர் டிசன்) கண்டிப்பாக அனுப்ப வேண்டும்.
10. கதையில் லேசான அப்யூஸ், டீஸிங்க் இருந்தால் அது கிளர்ச்சியை தூண்டுவதாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் ஒரேயடியாக பெண்களை மட்டமாக சித்தரித்து இழிவுபடுத்தும் கதையாக இருந்தால் அது ஏற்கபடமாடாது.
600 பக்க நாவல்" ராஜ கோபுரம்" எழுதிய வள்ளிகண்ணன் கதையை என்னால் ஏற்கமுடியவில்லை. மன்னிக்கவும்
-----------------
என்ன தான் இப்படிப்பட்ட குறைகள் இருந்தாலும், எனக்கு பிடித்த எழுத்தாளர்களும் அவர்களின் கதைகளும் நிறைய இருக்கின்றன. அதை மட்டும் வெளியிடுவேன்.
உதாரணத்திற்கு.,
இனியவள் இன்பவல்லி : ( கட்டில் கதைகள் சீரிஸ்)
முரட்டுக் காளை ( 88 கே குன்றத்தூர் பேருந்து, டிபன் பாக்ஸ், கொதிக்கும் தேகம்)
விமலா தீனதயாளன் ( " காமம் துய்க்க தானே கட்டில்? " "மெல்ல துளிர்த்த கள்ள காமம்")
கண்மணி மணவாளன் : ( காமம் வெட்கமறியாது)
VERONICA SEXANA ( Many Novels)
இன்னும் சிலரின் நாவல்கள் & படைப்புகள் அசாத்தியமானவை.. இங்கே நான் குறிப்பிட்டதெல்லாம் அவர்களின் ஒரே ஒரு படைப்பு தான் . அவர்கள் நிறைய படைப்புகளை எழுதி இருக்கிறார்கள்.
1. இனியவள் இன்பவல்லி : இவரது கதைகள் பெரும்பாலும் குறு நாவல் டைப், ஆனால் காமம் அதிகம். லாஜிக் பார்க்காத செக்ஸ் கதை படிக்கும் ரசிகர்களுக்கு இவர் ஒரு வராது வந்த மாமணி. அவரது இயல்பான நடையும் கிறங்க வைக்கும் வர்ணனைகளும் அவரது எழுத்து அனுபவத்தை சொல்கிறது..
2. முரட்டுகாளை? சொல்லவே வேண்டாம். அவரது எழுத்தின் வன்மை அவரது விமர்சனத்திலேயே நன்கு தெரியும். இவர் ஒரு ரேர் கிரியேட்டர். இவருக்காகவே ஒரு முன்னுரையை கூட இந்த நாவலுக்கு எழுதி தந்திருக்கிறேன்.
இந்த நெடு நாவலுக்கு அவரது உழைப்பெல்லாம் கொட்டி இருக்கிறார். இந்த கதை வெளிவந்த பின் இந்த நாவல் உங்கள் பேவரிட் லீஸ்டில் " 88 குன்றத்தூர் பேருந்து "கண்டிப்பாக இருக்கும். உண்மையில் படித்து முடித்து பிரமித்து விட்டேன்,
3. விமலா தீனதயாளன் : எனக்கு மிகவும் பிடித்த பெண் எழுத்தாளர், ஆம்.. இவர் 'ஒரு ஆணாகத்தன இருக்க வேன்டும் 'என நான் சொல்ல, நான் நம்புவதற்காகவே தனது அடையாள அட்டை& பேசி எண் ஆகியவற்றை என்னை நம்பி என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
பல புனைபெயர்களில் பல ஜானரில் கேடிபி யில் எழுதுகிறார். பெண்ணுக்குரிய தயக்கம் இல்லாமல் சகட்டு மேணிக்கு எழுதும் முப்பதை தொடாத துணிச்சலான பெண் எழுத்தாளர். எரோடிக் ஜானரில் வெகுவாக கவனிக்க வேண்டியவர். இவரது சில கதைகள் என்னையே அசரடித்து விட்டது.
4.கண்மணி மணவாளன் : இவரை எக்சோசிப் காலத்திலே இருந்து பழக்கம். ரசிகர்களின் நாடி பார்த்து எழுதும் வல்லமை படைத்தவர். என்னுடைய தீவிர வாசகர். இவரது கலெக்ஷ்னும் நமது வாசகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். எதிர்பாரத கதையும் காமமும் தான் இவரை எரோடிக் ரைட்டராக அடையாளப் படுத்துகிறது.
5. Veronica Sexana ( Many Novels) : இவர் வட இந்தியாவில் போய் செட்டில் ஆனவர், தமிழர். ஆனால் ஆங்கிலத்தில் மட்டும் எழுதுபவர். நிறைய எரோடிக் கதைகளை என்னை நம்பி , எனக்கு அனுப்பி இருந்தார். எல்லாமே அருமை.
புரியாத வார்த்தைகளை போட்டு சாகடிக்காமல் மிக எளிமையான சொற்களால் நுணுக்கமான காமத்தை விவரிக்கும் பேராற்றல் உடையவர். இந்தியாவில் மட்டுமல்ல எந்த நாட்டிலும் இப்படிப் பட்ட ஆளுமை பெற்ற எழுத்தாளர் இருப்பார்களா? என்பது சந்தேகம். மூன்றே மூன்று பாத்திரங்களை வைத்து அவர் எழுதிய ஒரு ஆங்கில நாவல் மனித மனங்களின் அந்தரங்க உணர்வுகளை அள்ளி இறைக்கிறது..
அதே போல் மோனிகா சார்லஸ், வீரகாமன், வேதா, சுதா ரங்கநாதன் , யுவ கிருஷ்ணா என பல பல எழுத்தாளர்களின் கதையும் , படைப்புகளும் என்னிடம் நிலுவையில் இருக்கிறது.
இவர்கள் எல்லாருமே எனது தீவிர வாசகர்கள் என்பது எனக்கு பெருமையாக இருக்கிறது.
ஆனால் இவர்களின் சிறந்த கதைகளை முழுமையாக படித்து வெளியிட இன்னும் கொஞ்சம் அவகாசம் எனக்கு தேவைப்படுகிறது.
மேலும், இவர்களில் பல பேர் பிடி எஃப் பைலாக அனுப்பி இருக்கிறார்கள். அவை வேர்ட் பைலாக அனுப்பினால் தான். ரீ எடிட் செய்ய என்னால் முடியும். பேங்க் டீடெய்ல்ஸும் வேண்டும்.
இதெல்லாம் முடிந்தால் ஒருவர் பின், ஒருவரது படைப்பை ஆதர் என்வி இணையதளத்தில் வெளியிட முயல்கிறேன்.
அதுவரை ரிமைன்டர் மெயில்களை தவிருங்கள் ப்ளீஸ். உங்களை மறந்தாலும் உங்களது படைப்புகளை மறப்பேனா?
- என்.வி