"என்ன தம்பி சொல்றே? ஏதாச்சும்
செய்வினையா?" சற்குணம் கேட்க.,
"இல்ல சார் , எலுமிசை பழம், குங்கும், ஆட்டு ரத்தம் சமாச்சரம் , அமாவாசை பூஜை இல்ல., இது விர்ச்சுவல் சயின்ஸ்., “
“புரியலப்பா”
“சார் யோசிக்கறதுக்கும், மனசுல வார்த்தைகலை
உரு போட்டு அதை கோர்வையா
பேசறதுக்கும் எல்லாத்துக்கும் புத்தி தான் ஆதாரம்.,
அந்த புத்தியில் சதா எந்த நேரமும் குறுக்கீடு செஞ்சுகிட்டிருந்தா., பேச்சே கோர்வையா இருக்காது ..ஈஸியா அவனை உளற வைக்கலாம்., எல்லாம் அவனை கேலி
பண்ணுவாங்க.,"
"என்னய்யா சொல்றே?"
"ஆமா. எனக்கு அவன் யூஸ் பண்ன துண்டு, கைக்குட்டை.,ஏதாச்சும்
கொடுங்க.,"
கட்சியின் ஆஸ்தான பேச்சாளன்
சம்பத்து குடித்த எச்சில் டம்ளரை எடுத்து
வந்தார்கள்.
'இதான்
கிடைச்சது.'
‘இது போதும்.,’
அவன் முக்கால் மணி நேரத்தில் மதுரையை
நெருங்கி கொண்டிருந்த., சம்பத்துவின் காரில் போய் மையமாக உட்கார்ந்தான்.
சம்பத்துக்கு கார் முழுக்க
மரிக்கொழுந்து வாசம் அடித்தது. மூச்சை முட்டுகிறார் போல என்ன வாசனை இது..?
காலையிலேயே சரக்கு அடித்த போதை
அவனுக்கு தலை வலியை கொடுக்க.,
"ஹேய்..ஏசி ஆப் பண்ணிட்டு., கார்
கதவை திறங்கப்பா..."
‘சரி தலைவரே”
“காரை நிறுத்தேன்”
சம்பத்து சொல்ல., காரை
நிறுத்தினார்கள்.,
"என்ன சார்.."
"இரு பாத்ரூம் போய்ட்டு வந்துடறேன்..."
“தன்னி?”
“வேணாம்..”
வனாந்திர காட்டில் உச்சி வேளையில்., சிறு
நீர் கழிக்க கூடாது. ஆனால் சம்பத்
போனான்... ஓரிரு மூத்திர சொட்டுக்கள் உள்ளங்காலில் ., பாதத்தில்
பட ...கெட்ட பைபாசங்கள் நெருங்கி வந்து அவன் மது போதையை வாசம் பிடித்தன.
அவனுக்கு இன்னும் தலை வலித்தது.
உடலில் அசதியாக இருந்தது.
மதியம் மதுரையில் போன உடன் சாப்பிட்டு லாட்ஜில் போய் படுத்தான்.
இந்த மரிக்கொழுந்து வாசம் ஏன் இப்படி அடிக்குது? எம்
மேல..தூத்தெறீக்க ., என்ன இது ரூம் ஸ்பிரேவா? எவனாச்சும்
கட்டில்ல கீழ ஒளிஞ்சுக்கிட்டு இருக்கற
மாதிரியே இருக்கே.. கட்டில் கீழ் பார்த்தான். உடம்பு குனியவே வயிறு.. கடகட வென இருந்தது., மீண்டும்
படுத்தான்
படுத்த உடனே.. நெஞ்சு பொங்கி எழுந்து அவன் சாப்பிட்டதை யெல்லாம், வாய்
வழியே எடுக்க வைத்தது.. திருச்சியிலே இருந்து
கார்ல ஏறுன உடனே தண்ணி அடித்தது தப்பாய் போய் விட்டது.
லேசான மயக்கத்தில் படுத்தான்.
மாலை ஐந்து மணிக்கு கதவை தட்டினார்கள்.' திறந்தான்.
"என்னண்ணே? ஈவ்னிங் கூட்டத்துல தலைவர் முன்னாடி பேசப் போறீங்க... இன்னும்
தூங்கிட்டு இருக்கீங்க"
"வரேன் போ.."
போனான். ஆனால் மனது ஒரு நிலையில்
இல்லை. படபடப்பாக இருந்தது. ஏதோ தவறாகி விட்டது.. எதையும் கோர்வையாக யோசிக்க
முடியவில்லை.'
தான் கூட்டத்தில் பேச வேண்டியதை
மனதில் சொல்லி பார்த்தான்., எதுவுமே வசமாகவில்லை. தமிழர் வரலாறு, மொழியின்
அருமை.., கட்சியின் வளர்ச்சி., தலைவரின்
நிர்வாகம்., எதிர்கட்சிகளின் அராஜகம்..உலக அரசியல் என பலமணி
நேரம் ஆயிரம் கூட்டங்களில் பேசிய சாதனைக்கு சொந்தக்காரனுக்கு மனம் முழுக்க இருண்டு
இருந்தது..
--------------------------
வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்.,