அடுத்த இரண்டு நாட்கள் அவன் ரூமிலேயே இருந்தான். பெரிய இரும்பு பெட்டி வாங்கி எல்லா புத்தகங்களையும் வைத்து பத்திரமாக பூட்டினான். இந்த சமரன் எழுதிய புத்தகங்களை எல்லாம் நாம் எழுதி புத்தகமாக வெளியிட்டால் அதிகபட்சம் ஒரு ஆண்டிற்கு ஒரு லட்சம் விற்றால் பெரிய விஷயம். நாமும் சமரனை போல அக்குளில் புத்தகத்தை வைத்துக்கொண்டு தெருத்தெருவாக போய் கொண்டிருக்க வேண்டியதுதான். அப்படியென்றால் என்ன செய்வது என்று யோசித்தான்.
இதை ஏண் எல்லாருக்கும் சொல்லி கொடுகவேண்டும். மானுடத்தை உய்விப்பதா நம் வேலை? நோ..நெவர்,
ஓர் புதிய சக்தி என்னிடம் இருக்கிறது என அவனுக்கு தோன்றியது.
மாதத்தில் ஆயிரக்க்கணக்கில் வரக்கூடிய வருமானங்கள் அவனுக்கு போதவில்லை. அவனுக்கு அவன் மிகப்பெரிதாக வர ஆசைப்பட்டான். லாட்டரி சீட்டில் வரக்கூடிய எண்களை, நாளை வரக்கூடிய எண்களை ஜெயிக்கமுடியும், எந்த ஐ பி இல் அணி தோற்கும், எந்த அணி ஜெயிக்கும் என முன்னாடியே சொல்ல முடியும், எந்த பாலில் எப்போது விக்கெட் சொல்ல முடிந்தாள். பவுன்டரியா? சிக்சரா சொல்லட்டுமா?
எனது பிரய்ன் டெவலப்மென்ட் சென்டர் வேற மாதிரி..அவன் முடிவெடுத்தான். ஊருக்கு போனன். அப்பா அம்மாவிடம் பேசி பெரும் பணம் வாங்கினான்.. வீட்டின் பாகத்தில் தமக்கு வரவேண்டிய தொகையை கேட்டு சண்டைபோட்டு வாங்கினான். நண்பர்களிடம் உதவி கேட்டான். சென்னை அரும்பாக்கத்தில் அலுவலகம் பார்த்து ஒரு ஹால் இருக்கக் கூடிய அலுவலகத்தை லீசுக்கு எடுத்தான். ஈஸ்வர் மனவளக்கலை மையம் என்று ஒன்றை துவங்கினான். வகுப்புகள் எடுத்தான்.
இறந்து போன சமரனின் ஆதர்ஷ சிஷ்யன் என விளம்பரப்படுத்தி கொண்டான். அவனுக்கு நல்ல மரியாதை கிடைத்தது.
பிரெய்ன் இம்ப்ரூவ்மெண்ட் செண்டர் என பலகை வைத்தான். வந்த சிலரை சுறுசுறுப்பாக்கினான். பரீட்சையில், விளையாட்டில் தேர்வு பெற வைத்தான். புத்தி மேம்பட ஒரு கோச்சிங்க் செண்டரா ? எல்லோருக்கும் அதிசயமாக இருந்தது.. கூட்டம் வர பிரபலமனான்..
அவனது மையத்துக்கு வந்தவர்களின் ஆன்மாவை சுத்தமாக்கினான். எண்ணங்களை சுத்தமாக்கினான். அயராது உண்மையாக உழைத்தான்.
அந்த மனவளக்கலை மையத்தை. கணவன், மனைவிக்கு இடையிலான பிரச்சினைகள், குடும்ப உறவில் ஏற்படக்கூடிய தகராறுகள், படிப்பில் பின்தங்கியவர்களை அவர்களது அறிவை மேம்படுவதற்கான வழிமுறைகள், விளையாட்டில் இன்னும் ஆர்வத்துடன் விளையாடுவதற்கான யோசனைகள் என பல்வேறு கோச்சிங்க்குளை தொடங்கினான். மனபிறழ்வு கொண்டவர்களை குறுகிய காலத்தில் குணப்படுத்தினான். நேரடியாகவே பயிற்றுவித்தான். பலபேர் அவனிடம் பயிற்சி பெற்றார்கள். பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. காசு ஓயாமல் வந்தது. ஆனால் குறைவாக வந்தது. அவன் இன்னும் பெரிதாக சம்பாதிக்க ஆசைப்பட்டான்.
கெட்ட விஷயங்களை செய்தால் காசு அதிகம் என கணித்தான். நல்வினைகளுக்கு பதிலாக எதிர்வினைகள் செய்ய மக்கள் அலைந்தார்கள்.
அப்படித்தான் மாஜி எம் எல் ஏ சற்குனம் அவனிடம் வந்தான்.
"தம்பி. .ஈஸ்வரு. .,எதிர்கட்சி ஆளுங்க கூட பிரச்சனையில்ல. இப்பல்லாம் எங்க கட்சி ஆளுங்க தான் தொல்லை. இவன் பேரு சம்பத்து.." போட்டோ காட்டினான். சற்குணம்
" பெரிய பணக்காரன்.பெரிய பேச்சாளன்.. மைக்கை புடிச்ச ஒன்னரை மனி நேரம் பேசுவான். இவன் இருக்கத்தான் எனக்கு இங்க சீட் கிடைக்க மாட்டேங்குது. துட்டு கொடுத்தாலும் எனக்கு கிடக்கல. இந்த சமபத்தை காலி பண்னனும்..பசங்க கிட்ட சொன்னா போட்டு தள்ளிடுவாங்க..ஆனா நான் தான் செஞ்சேன்னு எல்லாருக்கும் ஈஸியா தெரிஞ்சிடும்.. என்ன செய்யலாம்."
"நீங்க சொல்லுங்க"
"சாமியார்ங்க,.முஸ்லீம் பாய்ங்க கிட்ட எல்லாம் போனேன்.. நீலாங்கரை பரந்தாமன்னு ஒரு சாஸ்திரி அவர்கிட்டயும் போனேன்.. அவன் ரொம்ப யோக்கியமா இதெல்லாம் முடியாதுன்னு சொல்லிட்டான்... பசங்க உங்களை பத்தி சொன்னாங்க..சொல்லுங்க ஈஸ்வர் சந்திரன்....சம்பத்தை முடமாக்கனும்.."
"சார் சம்பத்துக்கு பெரிய பலம் எதுன்னு சொன்னீங்க?"
"காசு... “
"சரி வாயை கட்டிடலாம்...." என்றான் ஈஸ்வர் சந்திரன். அவன் தடம் மாறியது இப்போது தான்.
--------------------------
வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்.,
Very detailing..
ReplyDelete