மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, June 1, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1762


 ஈஸ்வர் திடுக்கிட்டு போனான். எப்படி வீட்டை கண்டுபிடித்தான்?. கதவை திறக்காமல் ஜன்னலை மட்டும் திறந்திருந்தான். அங்கே அவனால் எந்த உருவத்தையுமே, எந்த நிழலையுமே பார்க்க முடியவில்லை.

ஆனால், அங்கே சமரன் இருப்பதாக நம்பினான்.  சமரனி ஆன்மா அது.

உண்மையில் ஆன்மாக்களுக்கு ஒளி இல்லை, ஓசை இல்லை, மொழி இல்லை, முப்பரிமான உடலும் இல்லை.  உள்ளுணர்வு மட்டுமே .

எனவே தன் மனதை நிலைநிறுத்தி, கடினப்படுத்தி, திடப்படுத்தி கூர்ந்து கவனித்தான். அங்கே ஜன்னலுக்கு வெளியே நின்றிருந்த சமரனின் ஆன்மா பேசும் மொழியை கேட்க முயன்றான். கேட்டது. அந்த உள்ளுணர்வை அவன் புரிந்து கொண்டான். அதிர்ச்சி அடைந்தான். எப்படியோ தன்னை தேடிக் கொண்டு வந்துவிட்டது. மாமிச உடம்பாக இருந்தால் என்னை கண்டுபிடிப்பது கடினம். ஸ்தூல வடிவமாக வந்திருக்கிறது. அவன் கதவை திறந்து பார்த்தான். அது எந்த வடிவமும் இல்லாமல் படிக்கட்டிலிருந்து பாதரச துளி போல  நழுவிக்கொண்டிருந்தது. அதன் அமைப்பும் நகர்வும் பார்த்து அதிர்ச்சியானான். இது..இது....உயிரற்ற உடலில் இருந்து வெளியேறியா ஆத்மா போல் இருக்கே? அட...

அட சமரன் இறந்துவிட்டாரா என்ன?.  அட பாவமே

மறுநாள் அதிகாலை ஒரு ஷேர் ஆட்டோவைப் பிடித்து சமரன்  வீட்டு வாசலில் இறங்கி நிற்க தெருவின் வாசலில் சாந்தமாக சமரனின் ஆன்மா எங்கோ வெறித்து பார்த்து கொண்டிருக்க., அவன் அதைக் கடந்து அந்த  நீள் சந்தில் போனான்,. சமரனின் உடல் அவன் வீட்டு ஹாலில் கிடத்தப் பட்டிருந்தது. சுற்றிலும் பத்து பதினைந்து பேர் நின்று கொண்டிருந்தார்கள்.

சமரனின் உயிரற்ற உடலுக்கு மாலை அணிவித்தான்.

"இந்த ஆளோட பொண்டாட்டி பத்து வருஷம் முன்னாடியே தனியா போயிடுச்சு. இந்த ஆளு தனியாளா தான் இருந்தான். ஏதோ ஆவிகளை பற்றி, பேய்களை பத்தி புக் எழுதுகிறேன் என சொல்லிட்டு இருந்தான். ரென்டு மூனு வாரம் சாப்பிடாம கொள்ளாம வெறிச்ச மாதிரி இருந்திருக்கான்.

 அப்புறம் பார்த்தா திடீர்னு நேத்து என்ன பண்ணிட்டு இருக்கான்னாவீட்டை விட்டு வெளிய வந்து,  திறந்திருக்கிற பாதாள சாக்கடையில் இறங்கிட்டான். எதுக்கு இறங்கினான்?, என்ன பண்ணனானே தெரியல. எடுத்து எடுத்து சேத்தை வாறி இறைச்சுக்கிட்டே இருந்தான்.. அப்புறம் உள்ளே போய்ய்டான்... ரொம்ப நேரம் வரல..."

"அய்யோ"

"காப்ர்பரேசன் காரன் வந்துதான் வெளிய தூக்கி போட்டான்..இவன் பைத்தியமா, லூசா, முக்கால் லூசா, முழு லூசா தெரியல, பொண்டாட்டிக்கு செய்தி சொல்லி இருக்கு., அவ வர மாட்டென்னுட்ட்டா " என விசாரித்தபோது சொன்னார்கள்.

ஈஸ்வர் வருத்தப்பட்டான்., அநியாயமாக நம்மால் ஒரு உயிர் போய்விட்டதே? நம்மோட பேராசை காரணமாக சமரன் இறந்துவிட்டாரே.. பேசாமல் அவரோட இணைந்தே நாம் இதை பண்ணியிருக்கலாமோ..

இல்லை அவர் சரியாக வரமாட்டார்.

கையில் பெரிய பொக்கிஷத்தையே வைத்து கொண்டு காசாக்க தெரியாத அப்பாவி அமம்ஞ்ச்சி அவர். யார் ஜெயிப்பார்கள்? ஜெயிக்க என்ன தேவை? எங்கே மழை வரும்? எங்கே விபத்து நடக்கும் இதெல்லாம் நமக்கே நமக்கு மட்டும் தான் தெரியவேண்டும். எல்லோருக்கும் சொல்லி கொடுத்து விட்டு  பிறகு,  நான் என்ன செய்வது? இந்த சமரன் பிழைக்க தெரியாதவர்.  நாம் செய்தது தான் சரி.

அவன் மெதுவாக கிளம்பி வந்தான். தெருமுனையில் சமரனின் ஆன்மா சுவற்றோடு சுவராக உருவம் இல்லாமல் நின்று கொண்டிருப்பதை அவனது உள்ளுணர்வு கவனித்தது. சமரனின் மரணத்திற்காக வருத்தப்பட்டான்.

ஆனால், அதற்காக நான் ஒன்றும் செய்ய முடியாது. இது மிகப்பெரிய பொக்கிஷம். இந்த பொக்கிஷத்தை அக்குளில் வைத்துக் கொண்டு இந்த ஆள் பைத்தியக்காரன் போல் அலைந்து கொண்டிருக்கிறான். இந்த உலகத்தில் எதையுமே விற்க வேண்டுமென்றால், மார்க்கெட்டிங் தேவை. கடவுளுக்கே மார்க்கெட்டிங் தேவைப்படுகிறது. கோவில்களுக்கும் மார்க்கெட்டிங் தேவைப்படுகிறது. இந்த ஆளுக்கு மார்க்கெட்டிங் தெரியவில்லை.

அப்பப்பா எப்பேர்பட்ட உழைப்பு.?, கணிப்பு.., உண்மையில், இந்த உலகத்தால் தூக்கி கொண்டாட பட வேண்டியவன் இந்த சமரன். ஆனால், நல்ல தேர்ந்த மொழியறிவும், படிப்பறிவும், உலக ஞானமும் தெரியாததால் இந்த சமரன் ஒரு சாக்கடை மூடிக்குள் இறங்கி விழுந்துவிட்டான் என்பது தான் ஈஸ்வருக்கு நினைக்க தோன்றியது.

தனது வித்தைகளை விற்கும் வித்தை  தெரியவில்லை. எனக்கு தெரிந்திருக்கிறது.  நான் மார்கெட்டிங்க் ஆள். இனி நான் இதை விற்பேன் என்ன கிளம்பி வந்தான்.

"போய் வருகிறேன்" என்றான் மௌனமாக

"என்னை ஏமாத்திட்டேல்ல.." அது பின்னாலயே வந்தது. அதற்கு ஆதங்கம் தீரவில்லை.,

".சாரி..ஆனா எனக்கு வேற வழிதெரில்ல ...' அவன் நடந்து கொண்டே அதனிடம் முனுமுனுத்தான்.

"உன்னை முழுசா நம்புனேன். என் பிள்ளை போல ., என் தம்பி போல நம்பினேன்."

"......"

"அதான் உன மனசுல இருக்குற துரோக  எண்ணம் என் உள்ளூணர்வுக்கு உறைக்கல.. உன் கிட்ட நான் ஏமாந்துட்டேன்"

"ஆஹ்ஹஹா  இப்ப கூட உள்ளுணர்வுக்கு  ஒரு புது தியரி சொல்லி இருக்கீங்க..."

அவன் தெருமுனையை தாண்ட., ஏனோ சமரனால் எல்லையை தாண்ட முடியவில்லை.

"என் உடம்பை  தண்ணீரால் குளிப்பாட்டுகிறார்கள். நான் போகிறேன்.."

"என்னை மன்னிச்சிடுங்க  சமரன் சார்.."

சீக்கிரம் நான் உன்னை சந்திப்பேன் ஈஸ்வர். அப்போது நீ பெரிய துக்கத்தில் இருப்பாய். உன் உடம்பை நீயே நகர்த்த முடியாமல் கிடப்பாய்

அப்படியா., உங்கள் ஆசீர்வாதம் சார்

அவன் வீடு போய் சேர்ந்தான். அடுத்த கொஞ்ச நாளில் அவன் முழுதாக மாறி போனான்.. தான் செய்து வந்த வேலையை விட்டான்.


 --------------------------

வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்

1 comment: