மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, June 1, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1761

 இந்த உலகில் எதையுமே புதிதாக ஆராய்ந்து கண்டுபிடிப்பது தான் கடினம். ஆனால், ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவுகளை ஆய்வுகளை அபகரித்துக் கொள்வது மிகவும் எளிது. அதுதான் காலங்காலமாக நடந்து கொண்டிருக்கிறது. ஓர் அற்புதமான் ஸ்காலரின் ஒட்டுமொத்த வாழ்க்கை  யையும் செலவு செய்து கண்டுபிடிக்கப்பட்ட ஆய்வுகளை ஒரே நொடியில் தூக்கிக் கொண்டு வந்து விட்டான் ஈஸ்வர்.

திருவொற்றியூரில் இருந்து கிளம்பி நிறைய பஸ்கள், ஆட்டோக்கள் மாறி வேளச்சேரியில் தனது ரூமுக்கு வந்து சேர்ந்தான். வந்தவுடனே தனது கட்டிலில் படுத்து எல்லாவற்றையும் பரப்பிக்கொண்டு ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பித்தான். ஆனால், இதெல்லாம் சாதாரணமான ஆட்கள் படித்தால் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு, சமரனால் அனைத்தும் எழுதப்பட்டு இருந்தது. ஆனால். ஈஸ்வருக்கு அந்த எழுத்துக்கள் அனைத்தும் புரிந்தது. அதில் சொல்லப்படிருந்த விஷயங்கள், வரைபடங்கள் அனைத்தும் புரிந்தது.

அவனால் எந்த புத்தகத்தையுமே, பாதியில் படித்து வைக்க முடியவில்லை. ஒரே மூச்சாக படித்துக் கொண்டிருந்தான். கிட்டதட்ட 10 நாட்களாக எல்லா புத்தகங்களையுமே, அவன் படித்து முடித்தான்.

சமரன் அவனைப் பார்த்த போது நேரில் சொல்லாத பல விஷயங்கள் அவனுக்கு புரிந்தது.

சாவு வீட்டிற்கு சென்றால் தானாகவே ஏன் அழுகை வருகிறது?. சாவு வீட்டுக்கு சென்றுவிட்டு ஏன் நேராக கோவிலுக்கு செல்லக்கூடாது?. வீட்டில் ஒரு மூலையில் உப்புகல்லை ஒரு டப்பாவில் போட்டு வைத்தால், அந்த வீடு சுபிட்சமாக விளங்கும்ஒரு வீட்டில் எப்போதும் அமைதியின்மை நிலவுவற்கான காரணம் என்ன?, என எல்லாமே ஆய்வும் ஆதாரத்தோடும் எழுதியிருந்தார் சமரன்.

ஒவ்வொரு மனிதனை சுற்றி இருக்கக் கூடிய ஆன்மா என்கிற ஒளிவட்டம்  ஏன் படைக்கப்பட்டிருக்கிறது?, அதற்கான பின்னணி என்ன என்பதை இன்னொரு புத்தகத்தில் விலாவாரியாக சொல்லியிருந்தார்

கடவுள் ஒரு மனிதனை படைத்த பிறகு அந்த மனிதன் சர்வசாதாரணமாக என்ன செய்து கொண்டிருக்கிறான்?. அவன் நல்லது செய்கிறானா?, கெட்டது செய்கிறானா? என்பதை எல்லாம் அவரால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பதற்காக ஒவ்வொரு உயிரையுமே, அதன் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஆன்மா  என்கிற வளையம். அது நல்லது செய்திருந்தால் வலுப்பெறும். தொடர்ந்து தீய செயலை செய்து இருந்தால் வலு குறைந்துவிடும். பிறகு, அதுவே அந்த உயிரை அழித்துவிடும். அதாவது ஒவ்வொரு உயிருக்கும் அந்த உயிரை சுற்றியிருக்கும் ஆன்மா வளையமே அதன் மேலதிகாரி. அதாவது, கடவுளின் பிரதிநிதி.

நல்லது செய்தால் அணைத்து கொள்கிறது. கெட்டது செய்தால் அழித்துவிடுகிறது. சுருங்கச் சொல்லப்போனால் ஒவ்வொரு உயிருக்குமான சிசிடிவி கேமராவாக அந்த ஆன்மா வளையம் இருந்தது. அந்த ஆன்மா ஒவ்வொரு மனிதனையுமே  சுற்றிக்கொண்டு இருக்கிறது.

அப்படியென்றால் உள்ளுணர்வு?. அந்த ஆன்மாவில் இன்னொரு ஆன்மா குறுக்கிடும் போது ஏற்படுகிற அசாத்தியமான உணர்வுதான் உள்ளுணர்வு. அப்படியென்றால்,   சிறுவயதில் ஊரில் நம் வீட்டில் இன்னொருவன்; இருக்கிறான் என்பதை எப்படி புரிந்து கொண்டோம். ஏற்கனவே, அங்கே அம்மாவின் அனுமதிக்கப்பட்ட ஆன்மா இருக்கிறது. கூடவே எனது ஆன்மா வளையம் இருக்கிறது. ஆனால், இது இல்லாத இன்னொரு புதிய ஆன்மா வளையம் அந்த வீட்டிலிருந்து இருந்திருக்க அது எனக்கு உறுத்தலாக இருந்திருக்க எனவேநான் உள்ளுணர்வு ஊன்றப்பட்டு இன்னொரு ஆள் இருக்கிறான் என முடிவுக்கு வந்தேன். அப்படியென்றால் எல்லாவற்றிற்குமே காரணம் இந்த உள்ளுணர்வும், உள்ளுணர்வால் நிரப்பப்பட்ட ஆன்மாவும்; தான். அப்படியென்றால் ஒவ்வொரு மனிதன் தோல்வியடைவது தொடர்ந்து சோம்பேறியாக இருப்பது, ஊதாரித்தனம் செய்வது இதற்கெல்லாம் காரணம் அவனது ஆன்மா சீரழிதல் தான். ஒருவன் தொடர்ந்து தரித்திலிருந்து இருந்து கொண்டிருப்பான் என்றால், காமம், பொறாமை, கோபத்தில் என்று இருந்தால் அவனது ஆன்மா மிகவும் சீர்கெட்டு இருக்கிறது என்றுதான் பொருள்.

அப்படியென்றால் இதை இயற்கையான முறையில் எந்த வகையில் ஆன்மாக்களை மேம்படுத்தலாம் என்பதை பற்றி இன்னொரு புத்தகத்தில் படித்திருந்தான்.

அதில் ஏகப்பட்ட உபாயங்கள் சொல்லப்பட்டிருந்தன. அனைத்துமே சமரனால் பல்வேறு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து எழுதப்பட்ட புத்தகங்கள் ஆகும். அனைத்துமே கண்களில் ஒற்றிக் கொண்டான்.

இதை வைத்து இதை வைத்து... ஆம் காசு பண்ணலாம்.. பெரும் காசு பண்னலாம். யெஸ் சொல்லி கொடுப்பதற்கு காசு. அவன் அந்த புத்தகங்களுடனே வாழ்ந்தான்.

அன்றிலிருந்து எட்டாம் நாள் இரவு சமரனின்

குரல் அவனது ரூமின் வெளியே கேட்டது.

 --------------------------

வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்

 

No comments:

Post a Comment