மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, April 6, 2021

திரும்புடி பூவை வைக்கனும் - 1377

மறுனாள்  எங்காவது வெளியே போனால் தேவலாம் என இருந்தது அகல்யாவுக்கு.
 மலர்விழியை அகல்யா கூப்பிட்டாள் 
"
"விளையாடறியா?  இப்போ என்னுடைய பேஸ் எல்லா டிவியிலும் வந்து இருக்கு அதனால வெளிய போனா என்ன யாராச்சும் பாக்குறதுக்கு சான்ஸ் இருக்கு .. நீங்க மூணு பேரும் மதுரை போய் சுத்தி பார்த்துட்டு வாங்க " என்றாள் 
"
"ஐயோ உங்கள தண்ணியா விட்டுட்டா ?" என்றான் பாபு
" சரி அம்மா என்கூட இருக்கட்டும். நீங்க ரெண்டு பேரும் எங்கயாச்சும் போயிட்டு வாங்க"
" நாங்களா?"  அவர்கள் இருவரையும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள் 
மலர்விழி சிரித்தாள் .
"
"ரொம்ப நடிக்காதீங்க வெளியே போயிட்டு வாங்க" ஆனா சீக்கிரம் வந்துடுங்க" என்றாள் 
பாபு அகல்யாவை கூட்டிக் கொண்டு காரில் வெளியே கிளம்பினான் .
அகல்யா காரில் பாபுவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்.
 அவர்கள் இருவரும் பரஸ்பரம் தங்கள் காதலை சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் இருவர் மனதிலும் காதல் நிரம்பி கிடந்தது.  இப்படி பத்தே பத்து நாளில் ஒரு ஆணைப் பார்த்து நாம் காதல் வயப்படுவோம் என அவள் நினைத்து பார்க்கவே இல்லை. இவன் அழகன். வசீகரன் .கம்பீரமானவன். மென்மையானவன் .நாகரீகமானவன். பெண்களிடம் மரியாதையாக பேசக்கூடியவன்.
 மலர்விழி மேடத்தின் சொல்லுக்கு கட்டுப்பட கூடியவன். தன்னை விட ஓரிரு வயது தான் இவனுக்கு அதிகமாக இருக்கும். இன்னும் பேச்சில் லேசாக விடலைத்தனம் தெரிகிறது. இவனையா நாம் காதலிப்பது?  இவன்னிடமா நமது வாழ்க்கையை கொடுப்பது?  இவனை கட்டி கொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்குமா?


இவனுக்கா நம்மை கொடுப்பது? இவன் தானா என் காதலன்?
 
 முதன் முதலாக அவனுடன் தனியாக இருக்க கூடிய சந்தர்ப்பம் அவளுக்கு கிடைத்தது. அவன் அவளை மதுரை முழுக்க சுற்றி வந்தான். பகலெல்லாம் அவர்கள் மதுரையை சுற்றினார்கள் .மதியம் ஹோட்டலில் சாப்பிட்டார்கள் .அடிக்கடி அவன் மலர்விழி இடம் போன் செய்து எங்கே இருக்கிறோம் என தெரிவித்துக் கொண்டே இருந்தான் பாபு. 


அகல்யாவும் அவளது அம்மாவிடம் பேசிக் கொண்டே இருந்தாள். அகல்யா ரொம்ப சந்தோஷமாக இருந்தாள். மதியம் சாப்பிட்ட பிறகு அவளுக்கு பிடித்த ஒரு சினிமாவிற்கு சென்றார்க.ள் தனது பக்கத்திலேயே உட்கார்ந்தும்  கூட தன் ஆடை மீதும் தன் மீதூம் ஒரு சிறு ஸ்பரிசம் கூட இல்லாமல் அவன் கம்பீரமாக அமர்ந்திருந்த விதத்தை பார்த்து அவன் மேல் அவளுக்கு மிகுந்த ஈர்ப்பு உருவானது . .
தன்னிடம் வலிய வந்து குழைந்து பேசும் எத்தனை ஆண்களை அகல்யா கண்டிருக்கிறாள்.  ஆனால் இவன் எத்தனை நளினமாக நாகரிகமாக நடந்து கொள்கிறான் .
எனக்கு நீயும் உன் அழகும் .இளமையும். உடம்பும் முக்கியமே இல்லை என்பது போல அல்லவா நடந்து கொள்கிறான்?  பதட்டமான நேரத்தில் எப்படி விவேகமாக முடிவுகளை எடுத்தான் நாம் சொல்லும் ஆலோசனையைக் கூட காது கொடுத்து கேட்டான் .
இவன் மிக சாதாரண ஆள் தான்.  மலர்விழி மேடம் இவனை உருப்படியான ஆளாக மாற்றி இருக்கிறார்கள் . ஆனால் இவன் சற்குணத்திடம் போய் சேர்ந்து இன்னும்  பெரிய ஆள் ஆகி விட்டான். பாபு  என்னிடம் வந்து சேர்ந்தால் நான் இன்னும் பெரிய ஆளாக மாற்றுவேன்.
 இது போல ஒரு ஆள் இருந்தால் இந்த உலகத்தையே ஜெயித்து விடலாம் என்று அவளுக்கு அவன் மேல் நம்பிக்கை வந்தது.  அந்த நம்பிக்கைக்கு என்ன வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று கூட அவளுக்கு தோன்றியது . 
அடுத்தடுத்து வந்த மூன்று  நாட்களும் மதுரையில் அவளுக்கு சொர்க்கமாக கழிந்தன . 
"
" நாளைக்கு அதிகாலையில் நாம காரில் இருந்து கிளம்பிடலாம் . பாபு பெட்ரோல் எல்லாம் ஃபுல் பண்ணி வச்சுக்கோ என்றாள் மலர்விழி 


மலர்விழி இந்த நான்கு நாட்களுமே ஹோட்டல் ரூமில் அடைந்த கிடந்தாலும்,  தனது அலுவலக வேலைகள் தனிப்பட்ட வேலைகள் மக்கள் தொடர்பான பிரச்சினைகள் எல்லாவற்றையுமே லேப்டாப்பில் செய்து கொண்டிருந்தாள் .  அவ்வளவு அறிவும் ஆற்றலும் அகல்யாவிற்கு  பெரிய ஆச்சரியமாக இருந்தது.
 தானும் மலர் விழி மேடம்  போல பெரிய ஆளாக வேண்டும் என்பதையும் நினைத்துக்கொண்டாள்.  "மதுரையில நாம இருக்கிறது இன்னைக்கு தான் கடைசி நாள்.  நாளைக்கு காலைல நாம ஊருக்கு போறதுக்கு ரெடியா இருங்க" என்றாள்
 இரவு உணவு சாப்பிட்டு பிறகு எல்லோரும் தூங்கப் போனார்கள் . பாபு தனது அறைக்கு வந்தான்.  அவன் வயிற்றுக்குள்ளூம்  ஒரு பட்டாம்பூச்சி படபடத்துக் கொண்டிருந்தது. 


முதன்முதலாக அகல்யாவின் குரலிலை போனில்தான் கேட்டான்.  அப்போதே அந்த குரல் அவனுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு குரலாக அவனுக்கு ஒலித்தது. அவளை நேரில் பார்க்க ஆசைப்பட்டான்.  நேரில் பார்த்ததும் அந்த மொத்தஅழகில் அவன் மொத்தமும் விழுந்துவிட்டான்.  அகல்யாவின் மாசு மருவில்லாத முகம் அப்பாவித்தனமான பேச்சும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
 அழகான பெண்கள் எல்லாம் மக்காக இருப்பார்கள். 
ஆனால் இவள் மிக அறிவாக இருக்கிறாள் வசதியான குடும்பத்து பெண்ணை விட,  ஏழைப் பெண்ணை விட வாழ்ந்து கெட்ட வசதி தொலைத்த ஏழைப் பெண்கள் எப்போதுமே ஒரு படி மேல் என நினைத்தான். அவர்கள் செல்வ செருகு அற்றவர்களாக இருப்ப்பர்கள்..
 இது போல ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டால் காலம் முழுதும் சந்தோஷமாக இருக்கும் ஆனால் இந்த பெண் தனக்கு கிடைப்பாளா? என்று தான் அவன் நினைத்திருந்தான்.
 காலமோ நேரமோ தெரியவில்லை  இந்த ஒரு வாரமும்  அகல்யா உடன் இருப்பது போல வைத்துவிட்டது அதிலும் குறிப்பாக இந்த நான்கு நாட்கள் மறக்க முடியாது ஒவ்வொரு நிமிடமும் அகல்ய அகல்யா என கழிந்துவிட்டது.
அவளுக்கும் என் மேல் ஒரு காதல் இருந்திருக்க வேண்டும்.  அத்துடன் அந்த தனியறையில் அவள் சிக்கி இருந்த போது, சற்குணம் வரும் முன்  என்னுடன் பேசிய போன் காலில்  கூட , அவள் அந்த காதலை தான் சொல்லி இருப்பாள் . 
அப்போது சொல்லாவிட்டால் என்ன? இத்தனை நாட்கள் அவளுடன் தனியாகத்தான் இருந்தும் பல இடங்களுக்குச் சென்றோம் .ஒரு சந்தர்ப்பத்தில் கூட அவள் தன்னுடைய காதலை சொல்ல வேண்டுமென தோன்றவில்லையே .ஒருவேளை நான் சொல்ல வேண்டும் என நினைக்கிறாளோ? என நினைத்தான் .
உடைமாற்றிக்கொண்டு தூங்கப் போனான்.  தூக்கம் வரவில்லை . போனை எடுத்து அகல்யாவை அவன் எடுத்த புகைப்படங்களை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டிருந்தான் .
அவனுக்கு அந்த நேரத்தில் போன் வந்தது.  போனில் அகல்யா


  To Read  Full Story   

திரும்புடி பூவை வைக்கனும் 24 ஆம் பாகம்

-----------------------------------------------------------------------------

Amazon.in
கிண்டில் ஸ்டோரில்...வாங்க.., பக்கங்களை படிக்க.

திரும்புடி பூவை வைக்கனும் 26
திரும்புடி பூவை வைக்கனும் 25
திரும்புடி பூவை வைக்கனும் 24
திரும்புடி பூவை வைக்கனும் 23
திரும்புடி பூவை வைக்கனும் 22
திரும்புடி பூவை வைக்கனும் 21

திரும்புடி பூவை வைக்கனும் 20

திரும்புடி பூவை வைக்கனும் 19

திரும்புடி பூவை வைக்கனும் 18

திரும்புடி பூவை வைக்கனும் 17

திரும்புடி பூவை வைக்கனும் 16