அடுத்த நாள் கண்ணன் சார் வீடு ரெண்டுபட்டது. ஆளாளுக்கு தலையில் அடித்துக் கொண்டி அழுதார்கள். ஆஃபீசுக்கே போய் திவ்யா ஹரிஷின் சட்டையை பிடித்து உலுக்கி நியாயம் கேட்டாள்.
“ இங்க பாரு திவ்யா சில விஷயங்களை கண்டுக்காம
விட்டுட்டா உனக்கு நல்லது. இப்படி முரண்டு பிடிக்காத?’
‘……….உங்கள கேக்க யாருமே
இல்லையா.. பெரியம்மா கிட்ட போறேன்” என சொல்ல பளீரென அடித்தான்
“நம்ம எல்லாருடைய நன்மைக்காகத்தான் நான் இதை செய்றேன். புரிஞ்சுக்கோ. என்றான்
“என்னங்க எல்லாரும் நன்மைக்காகவும் செய்ய போரீங்க. அவுத்து போட்டு கூத்தடிக்க போரீங்க?”
“ஏய்”
“ பவி போதாம., நான் போதாம,. சென்னைல ஒரு பொண்ணை வெச்சு இருக்கீங்க., இப்போ அது போதாதுன்னு
என் தங்கச்சியும் படுக்க கூப்புடுறீங்க. இது நியாயமா ?”
“சரிடி. இப்ப உன்
தங்கச்சி இல்ல, வேற ஏதாச்சும் ஒரு பொண்ணு கூப்பிட்டு குடும்ப நடத்தினா. நீ சும்மா தானே இருப்பே?”
“…………..”
“ அப்படியே நினைச்சுக்கோ. ஆர்த்தியை உன் தங்கச்சியா நினைக்காதே..ஏதோ ஒரு பொண்ணு கூட நானு சந்தோஷமா இருக்கறன்னு நெனச்சுக்கோ.. “
“ என்ன சொல்றீங்க ஹரிஷ், நீ ஒரு மனுஷனா?”
“இங்க பாரு. உனக்கு கல்யாணம் ஆகி இந்த நாலு வருஷத்துல
நான் எந்த குறையும் வைக்கல. வீடு , கார். வசதின்னு தான் இருக்கே. அதேபோல ஒரு குறையும் இல்லாமல் உன்
தங்கச்சியும் பாத்துக்குறேன். உங்களுக்கு ஓகேன்னா ரெண்டுபரும் ஒரே வீட்டுல
இருங்க. இல்லனா பக்கத்திலேயே வீடு பாத்து அவளையும் வச்சிக்கிறேன். எனக்கு எனக்கு ரெண்டு பேருமே வேண்டும்” என்றான்.
“ச்சீ…என்னங்க நீங்க?”
“ஏன்டி”
“ நீங்க பேசறது உங்களுக்கு அபத்தமா தோணலயா? நல்ல குடும்பத்துல தான் வந்தீங்க? நாங்க என்ன அவ்வளவு கேவலமான குடும்பத்தில் இருந்த
பிறந்துட்டோம்? இப்படிப்பட்ட ஒரு கல் மனசு காரணா நீங்க இருப்பீங்கன்னு., நான் கொஞ்சம் கூட நினைச்சே பார்க்கலை.,”
“ ஆமாண்டி நான் கல் மனசுக்காரன்தான். நேத்து உன் தங்கச்சியை இழுத்துப்போட்டு மேட்டர்
பண்ணி இருந்தா, என் கால்ல விழுந்து
அவளை கல்யாணம் பண்ணிக்கனும்’னு உங்க குடும்பமே என் கிட்ட கெஞ்சி இருக்கும்”
“…………”
“ அதை பண்ணாம நியாயமா அவகிட்ட என் காதலை
சொன்னேன் பாரு அதான் தப்பு. வெளிய போடி”
“ ஆமா காதல் வந்துச்சு? உங்க
வயசு என்ன? வயசு என்ன?”
“ என்னடி பொல்லாத வயசு? எனக்கு 32 .அவளுக்கு இருபத்தி மூணு .ஏன் அதுல உனக்கு என்ன பிரச்சனை ? மரியாதையா அவளை என் கூட சேர்த்து வை. இல்ல குறுக்க நிற்காத. இந்த விஷயத்தை நான் எப்படி ஹாண்டில் பண்ணனும்னு எனக்கு தெரியும் .எனக்கு ஒன்னும் சொல்ல வேணாம் . ஆபீசை விட்டு போ.. கெட் லாஸ்ட்”
“மீறி இதுக்கு குறுக்க வந்து நின்னா என்ன பண்ணூவீங்க”
“கொலை பண்ணிடுவேன் “என்றான்.
“உங்களுக்கு ஏன் சிரமம்?” அவள் திரும்பி போக அவன் கல்லாக நின்றான். ஆர்த்தியின் மீதிருந்த மோகம் அவனை அப்படி
இருக்க செய்த்து.
வினாச காலம் விபரீத புத்தி என்பார்கள்.
திவ்யா அதற்கு மேல் அவனிடம் ஏதும் பேசாமல், வீட்டிற்கு போனாள். அவனுக்கு வீடியோ காலில் போனை போட்டு மறுபடியும் அழுதாள். அவள் கோரிக்கையை அவன் கேட்கவில்லை.
அவள்
கிச்சனில் போய் ஒரு கத்தியை எடுத்து தனது மணிக்கட்டை காட்டினாள்.
“ஹரீஷ்., இங்க பாருங்க. நான் கையை அறுத்துக்க போறேன்”
“சரி நான் என்ன பண்ணனும் இப்போ?”
“ஆர்த்தியை விட்டுடனும்”
“முடியாது.”
“அப்ப நான்
சாகப் போறேன். இனிமேல் நான் ஒரு நிமிஷம் கூட உங்களுக்கு பொண்டாட்டியா., இல்ல உங்க வைப்பாட்டியா கூட என்னால வாழ முடியாது. குடும்பம் குடித்தனம் பண்ண முடியாது.” என சொல்ல அவன் பயப்பட்வே இல்லை. சிரித்தான்.
“வெரிகுட். சீக்கிரம் நீ இப்படிப் பண்ணா தான் எனக்கு
எனக்கு வழி கிடைக்கும்” என சொல்லி போனை துண்டித்தான் . திவ்யா உடைந்து போய் அந்த சொகுசு வீடு, அவளுக்கு சுடுகாடாக தோன்றியது.
அளவுக்கதிகமான வசதி, கூப்பிட்ட குரலுக்கு வேலைக்காரர்கள், ஆனால், ஒரு சொறி நாயை விட கேவலமாக அந்த வீட்டில் தான் வாழ்வதாக அவள் உணர்ந்தாள்.
இவனுக்காக
நான் ஏன் சாக வேண்டும்?. கொஞ்ச நாள் அவனை விட்டு பிரிந்து இருக்க முடிவு செய்தாள்.
குழந்தையை கூட்டிக் கொண்டு அப்பாவின் வீட்டில்
சென்று விட்டாள். இன்றோடு ஒரு வாரம் ஆகிறது.
திரும்புடி பூவை வைக்கணும் 31.32 ஆம் பாகம் நிறைவு பாகம் பிளாக்கரில் இடைவெளி விட்டு அவ்வபோது வெளிவரும் .
உடனே படிக்க பாகம் 31 & பாகம் 32